யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புரளியை நம்ப வேண்டாம்: ஆர்பிஐ

 500 ரூபாய்நோட்டுகள் கடந்த ஒரு சிலநாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால்டிசம்பர் மாதத் துவக்கத்தில்
கடுமையானபணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று புரளி பரவுகிறது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் போதுமானஅளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும்சொல்லப்போனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்பணி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனவே, புரளிகளை நம்பவேண்டாம் என்று ரிசர்வ் பேங்க்ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பினால், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம்முற்றிலுமாக நின்றது. இதனால், மக்களின் பணப்பரிமாற்றம், பொருட்களை வாங்குதல் போன்றவை பெரிய அளவில்பாதிக்கப்பட்டது. 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது பெரும்சிரமமாக இருந்தது.

ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகுசுமார் 20 நாட்களுக்குப் பின், ஒரு சிலஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், அவையும் போதிய அளவில்இல்லை.

அதே சமயம் சில 500 ரூபாய்நோட்டுகள் சரியாக பிரிண்ட் ஆகாததாலும்மக்களுக்கு பீதி ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், ஆர்பியை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவில் சுமார் 1,660 கோடி மதிப்பிலான 500 ரூபாய்நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் தற்போது ரூ.8.3 லட்சம்கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்இருப்பதாகவும் கூறியுள்ளது.

தற்போது2000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகளே வங்கிகளுக்குஅதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் வங்கிஅதிகாரிகளும் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக