யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/6/18

அரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...

சேலம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 650 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறாம் வகுப்பில் உள்ள 80 இடங்களுக்கு 260 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் படிக்காத பெற்றொர்களின் குழந்தைகள், ஏழை, எளியவர்களின் குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் சேர்க்க தேர்வு செய்யப்பட வேண்டும்.

மீதமுள்ளவர்களுக்கு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறும் மாணவ - மாணவிகளை தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், தன்னிச்சையாகவும், தகுதியற்றவர்களையும் முறைகேடாக தேர்வு செய்து பள்ளி திறக்கும் முன்பே பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று பள்ளி திறக்கப்பட்டதும், மாணவ - மாணவிகளின் சேர்க்கை குறித்த பட்டியலைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்களுடன், மாணவ - மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "நான் இந்த பள்ளிக்கு தற்போதுதான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவில்லை. எனினும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாணவ - மாணவிகள் பட்டியலை கிழித்து எறிந்ததுடன், "மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே. முறையாக விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்" என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி நிர்வாகத்தினர் இது தொடர்பாக நாளை (அதாவது இன்று) உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை விவாதம்:

அரசு பள்ளி இல்லாத இடங்களில் மட்டும் தனியார் பள்ளிகளில் 25% சேர்க்கை நடத்துவது, நிதி வழங்குவது குறித்தும் அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கும் வகையில் அங்கன்வாடி மையங்களை துறைமாற்றம் செய்வது குறித்தும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பை வரவேற்போம். மழலையர் வகுப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
---------------------------------------------------------

அ.தி.மு.க., - செம்மலை:

பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர், பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.சில தனியார் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல், இரண்டு ஆண்டுகள், பிளஸ் 2 பாடங்களை படிக்க வைத்தனர். இதை தடுக்க, பிளஸ் 1 பொதுத்தேர்வை, அமைச்சர்அறிமுகப்படுத்தி உள்ளார்.ஜெ.,வின் எண்ணங்களுக்கு, இந்த அரசு, செயல் வடிவம் கொடுத்து வருகிறது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம், நலிவுற்றப் பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நாமே மாணவர்களை, தனியார் பள்ளிக்கு அனுப்புவதால், அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது.எனவே, அரசு பள்ளி இல்லாத இடங்களில் மட்டும், இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள் இருந்தால், அங்கு மாணவர்களை சேர்க்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

இந்த சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு, மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு நிதி தரவில்லை.எனினும், சட்டத்தை அமல்படுத்தி வருகிறோம். உறுப்பினர் கூறியது, கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

செம்மலை:

அரசு பள்ளிகள் இல்லாத இடங்களில் மட்டும், தனியார் பள்ளிகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, முழு மானியம் வழங்க வேண்டும். தனியார் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,வகுப்புகள் உள்ளன.குழந்தைக்கு இரண்டரை வயதானாலே, பள்ளிக்கு அனுப்ப நினைக்கின்றனர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள், சீருடை, 'டை, ஷூ' அணிந்து செல்வதைக் கண்டு, செலவு அதிகமானாலும், தங்கள் குழந்தைகளை, அங்கு அனுப்புகின்றனர்.இதை பயன்படுத்தி, அப்பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இதை தவிர்க்க, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க வேண்டும். மெட்ரிக் பள்ளி மோகத்தை தவிர்க்க, அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையிலே, ஆங்கிலம் கற்பிக்க வேண்டும்.மெட்ரிக் பள்ளிகள் என்பதை மாற்ற வேண்டும். முன்னர், தனி பாடத்திட்டம் இருந்தது. தற்போது, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மெட்ரிக் பள்ளி என, தனியாக இருக்க வேண்டியதில்லை. 'தனியார் சுயநிதிப் பள்ளி' என, பெயர் மாற்றினால், அந்த மோகம் குறையும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

அங்கன்வாடி மையங்கள், 90 சதவீதம், அரசு பள்ளி வளாகங்களில் தான் உள்ளன. எனவே, அங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்குவது தொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், ஆலோசனை நடந்து வருகிறது.அங்கன்வாடி மையங்களை, துறை மாற்றம் செய்வது, ஆசிரியர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆலோசித்து, விரைவில், நல்ல முடிவு எடுக்கப்படும்.எதிர்காலத்தில், தனியாரால் பள்ளிகள் நடத்த முடியுமா... என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளை மேம்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.
செய்தி: தினமலர்.

தமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.

தமிழக அரசு அறிவிப்பு:

ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.


முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.A

2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்*:

ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தபின் செய்யவேண்டியவை:
🔹SABL இல்லை.               

🔹படிநிலை(Ladder) இல்லை                          

🔹 அடைவுத்திறன் அட்டவணை இல்லை.   


🔹1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.                       

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.           

 🔹ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர்      4-5 வகுப்புகள்-ஒருவர்           

🔹மூன்றாசிரியர் பள்ளிகள்                      1-2 வகுப்புகள் ஒருவர்        3-4 வகுப்புகள் ஒருவர்   5 ம் வகுப்பு ஒருவர்.        3ம் வகுப்பில் மட்டும்  எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர்                            4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.                     

🔹 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)                         

🔹9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை                 

🔹11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை                 

🔹1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்

🔹2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை                 

🔹3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.             

🔹    ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவிகள் கட்டாயம்.                        

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.  

ஆசிரியர்பாடத்திட்டம் எழுதும் முறை.....

பாடத்திட்டம் எழுதும் முறை :
வகுப்பு:
பாடம்:
பாடத்தலைப்பு:
திறன்: ( மொழிப்பாடம்)

பாடப்பொருள்:(பிறப்பாடம்)
கற்றல் விளைவுகள்:
ஆசிரியர் செயல்பாடுகள் :
ஆர்வமூட்டுதல்
கற்பித்தல்
இணைச்செயல்பாடுகள்:
தனிநபர் செயல்பாடுகள் :
மதிப்பீடு:
வலுவூட்டுதல்:
மேம்படுத்துதல்:
வீட்டுப்பாடம்:

Flash news: EMIS website open now 02.06.2018 at 8.00 am.


இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும். *C. E. O. உத்தரவு.*

அனைத்து *வட்டாரக் கல்வி அலுவலர்கள்* மற்றும் அனைத்து *மேற்பார்வையாளர்கள்* கவனத்திற்கு:

 *மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள்* :


இந்தக் கல்வியாண்டு
*(2018-2019)* முதல்...
இனிவரும் காலங்களில் இந்த *Whats Appல்* இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று *C.E.O.* அவர்கள் தெரிவித்துள்ளார்.

 *தகவல் பின்வருமாறு* :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை,

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. *இல்லை* எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம்.

மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.

*-தகவல் C.E.O.*A

LESSON PLAN (FIRST STANDARD)

Lesson plan:
Class :1
Subject : English


Topic : Crossing the road safely
Concepts : Leaning traffic signals for road crossing the road safely.

Learning out come :
Listens and learning about traffic signals,
Follow the traffic roles, Reads simple sight words,Associate pictures with words.

Teacher activity : Using with Proper TLM.
Motion ;Introduce the topic though pictures,songs, stories, discussion etc,,

Teaching activity :
The practice activity is based on the textual content with a motive to revice the text,
Students do the activity as a whole class with the activity with help of the teacher.

Peer support activity :
Teacher can help the students thought simple explanation and model,
Each member shares their ideas in group.
Peer group activity with book exercises .

Individual activity :Teacher or peer support can be given if needed,The students to complete the book activites, the teacher helps and facilitates.

Evaluation :Choose questions accordingly to test the students, Using for teacher manual book.

Reinforcement:
The reinforcement activities ensure understanding of concepets to the slow learners.Using with work book

Enrichment:The enrichment activities for the above average students.Using with loop material.

Home work :

Lesson plan or Notes of lesson :( SALM 4,5 Standards)

Class :
Subject :
Topic :
Concept or Content
Concept :(Language)

Content :(Other subject)
Learning outcomes:
Motivation:
Reading :
New words :
Concept map:
Consolidation :
Thinking activity :
Evaluation :
Reinforcment :
Enrichment:
Home work :A

Lesson plan or Notes of lesson :(1,2,3Standards)

Class :
Subject :
Topic :
Concept or Content

Concept :(Language)
Content :(Other subject)
Learning outcomes:
Teacher activities:
Motivation
Teaching activities
Peer group activities :
Individual activities :
Evaluation :
Reinforcment :
Enrichment:
Home work :

அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளிலும் தேவையான எண்ணிக்கையில் மின்விசிறிகளைப் பொருத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாததால், பள்ளிகள் திறப்பை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் 41 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாத நிலையில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலை சமாளிப்பதற்கான மின்விசிறி வசதி கூட பல பள்ளிகளில் இல்லாத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது சரியானதல்ல.


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறை சார்பில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கும் முறையே ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளிலிருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கம் போலவே கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதத்தின் முதல் வேலைநாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும், குறிப்பாக தென்மேற்கு பருவமழையின் எல்லைக்கு அப்பால் உள்ள வட மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக உள்ளது.

கத்திரி வெயில் முடியும் வரை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையைத் தாண்டாத சென்னையில் கத்திரி வெயில் முடிவடைந்த பிறகு 100 டிகிரிக்கும் கூடுதலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை தமிழக அரசு ஒத்திவைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் வரும் 11 ஆம் தேதி முதல்தான் திறக்கப்படவுள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளிகளும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் இம்மாத இறுதியில் தான் திறக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அரசுப் பள்ளிகள் மட்டும் அவசர, அவசரமாக திறக்கப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனியார் பள்ளிகளில் மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால், அரசுப் பள்ளிகளில் மின்விசிறிகள் கூட இல்லை. சில நகர்ப்புற அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாகவும், நன்கொடையாளர்கள் மூலமாகவும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான ஊரகப் பள்ளிகளில் மின்விசிறி வசதி இல்லை. மின்விசிறி உள்ள அரசு பள்ளிகளில் கூட ஆசிரியர்களும், முன்வரிசை மாணவர்களும் மட்டும் தான் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதை பயிற்றுவிப்பதற்கு வசதியாக பள்ளிகளின் வேலை நாட்கள் 210-லிருந்து 225 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க வேண்டியிருப்பதாக அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் வாதத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதேபாடத்திட்டத்தை பின்பற்றவுள்ள தனியார் பள்ளிகள் இம்மாத மத்தியில் தான் திறக்கப்படவுள்ளன என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு இன்னும் முழுமையான பயிற்சி அளிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பள்ளிகளை திறப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

பாடத்திட்டத்தை முடிப்பதை விட மாணவர்கள் கோடை வெயிலில் பாதிக்கப்படாமல் இருப்பதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். எனவே, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு சீருடைகளும், பாடநூல்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரை பெற்று கோடை வெயில் தணிந்த பிறகு அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க அரசு ஆணையிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளிலும் தேவையான எண்ணிக்கையில் மின்விசிறிகளைப் பொருத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று(சனிக்கிழமை) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்வெழுதிய விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை ஜூன் 2-ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 2 நகல்கள் எடுத்து ஜூன் 4 முதல் 6-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு ஜூன் 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

                         

புதுச்சேரி: புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு ஜூன் 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்குள் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ள 6 புதிய அம்சங்கள்.!

                                              

உலகின் மிக பிரபலமான உடனடி-செய்தி (இன்ஸ்டென்ட் மெசேஜிங்) பயன்பாடான வாட்ஸ்ஆப், சுமார் 1.5 பில்லியன் தினசரி பயனர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வாட்ஸ்ஆப் புதிய மேம்படுத்தல்களை உருட்டிய வண்ணம் உள்ளது.
உலகின் மிக பிரபலமான உடனடி-செய்தி (இன்ஸ்டென்ட் மெசேஜிங்) பயன்பாடான வாட்ஸ்ஆப், சுமார் 1.5 பில்லியன் தினசரி பயனர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வாட்ஸ்ஆப் புதிய மேம்படுத்தல்களை உருட்டிய வண்ணம் உள்ளது.

அப்படியாக, அடுத்த ஒரு வாரத்திற்குள் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ள 6 புதிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. சோதனை கட்டங்களை தாண்டி வெகுஜன மக்களின் கைகளுக்கு செல்லும் அந்த 6 புதிய அம்சம் தான் என்ன.?



01. கிளிக் டூ சாட்.!
இந்த வாட்ஸ்ஆப் அம்சமானது, உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்டில் சேமிக்க படாத ஒரு எண்ணிற்கு கூட மெசேஜ் செய்ய அதுவும். இந்த புதிய அம்சம் அந்த தேவையற்ற எண்களை சேமிப்பதற்கான தேவையை குறைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சுருக்கமாக சொன்னால், ஒரு சேமிக்கப்படாத எண்ணுடன் உரையாடலை தொடங்க ஒரு இணைப்பை உருவாக்க இந்த அம்சம் அனுமதிக்கும். இது தொழில் வல்லுனர்களுக்கு மிகவும் எளிதான அம்சமாக இருக்கும்.


02. பேஸ்புக் உடன் உடனடி லின்க் பரிமாற்றங்கள்.!
வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை நாம் அறிவோம். அதனால் இந்த புதிய அம்சம் அறிமுகம் ஆவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது பயனர்களுக்கு 'Send To Whatsapp' விருப்பத்தின் மூலம் உடனடியாக ஒரு இணைப்பை பகிர அனுமதிக்கும். இனி டிராப் டவுன் மெனுவில் உள்ள ஷேர் விருப்பத்தை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.


03. க்ரூப் ஆடியோ கால்ஸ்.!
க்ரூப் வீடியோ கால்களுடன் சேர்த்து வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் ஆடியோ அழைப்புகள் சார்ந்த அம்சத்திலும் கவனம் செலுத்தியது. அதன் விளைவாக, வரும் வாரம் இந்த அம்சம் வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இந்த புதிய அம்சம் ஒரே நேரத்தில் பலருடன் வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் நிகழ்த்த அனுமதிக்கும்.


04. செலெக்ட் ஆல்.!
ஆண்ட்ராய்டுக்கான இந்த அம்சம். ஒரே நேரத்தில் அனைத்து மெசேஜ்களை தேர்ந்தெடுக்க உதவும். இனி ஒவ்வொரு மெசேஜாக செலெக்ட் செய்து அவற்றை மார்க் தெம் ஆஸ் ரீட் அல்லது அன்ரீட் என்று குறிக்க வேண்டிய அவசியம் இருக்காது. உடன் இந்த அம்சம் அனைத்து சாட்களையும் ஒரே நேரத்தில், விரைவாக டெலிட் செய்ய அனுமதிக்கும்.


05. மீடியா விசிபிலிட்டி.!
வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் காணப்பட்டுள்ள இந்த அம்சமானது, வாட்ஸ்ஆப் வழியாக கிடைக்கும் மீடியாக்களை போன் கேலரியில் காட்சிப்படுத்தலாமா அல்லது வேண்டமா என்கிற அதிகாரத்தை பயனர்களுக்கு வழங்கும். 
அறியாதோர்களுக்கு, இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்ஆப் ஐஓஎஸ் பதிப்பில் உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு.

அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக 2,283 திறன் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
 நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு சீரிய முறையில் பயிற்றுவிக்க ஏதுவாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடைப் பயிற்சி அளிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் அவர்களது தலைமைப் பண்பினை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியும், ஆய்வு அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் மேற்கொள்ளப்படும்.

 மாதிரிப் பள்ளிகள்: மாவட்டத்துக்கு ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இந்தப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாகச் செயல்படும் வகையில், ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்.


 திறன் அட்டை திட்டம்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டை வழங்கும் திட்டம் ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள், ஆதார் எண் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக நிகழ் கல்வியாண்டில் வழங்கப்படும். இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

CM CELL REPLY- TET-TEACHER APPOINTMENT- REGARDING :

பணி நிறைவு பாராட்டு*

பணி நிறைவு பாராட்டு* இன்று 31-5-2018-ல் அரசுப்  பணிநிறைவு பெறும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர்  *திருமதி .வ.மண்டோதரி*  அவர்களுக்கும்,                        மாநில பொருளாளர்       *திரு. சீனிமோகன்* அவர்களுக்கும்,            மாநில இணை செயலாளர் *திரு. கிரிதரன்* அவர்களுக்கும், தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ள              வட சென்னை                          மாவட்ட தலைவர்              *திரு. கண்ணியப்பன்* அவர்களுக்கும் தென்சென்னை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் தங்களின் ஓய்வுக்காலத்தில் எல்லா வளங்களும் , பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.
அன்புடன் எஸ்மா. *எஸ்.கே.சரவணன்*       தென் சென்னை மாவட்ட அமைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், த.நா. சட்டதிட்ட விதிகள்குழு .
[ *பணி நிறைவு பாராட்டு* இன்று 31-5-2018-ல் அரசுப்  பணிநிறைவு பெறும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர்  *திருமதி .வ.மண்டோதரி*  அவர்களுக்கும்,                        மாநில பொருளாளர்       *திரு. சீனிமோகன்* அவர்களுக்கும்,            மாநில இணை செயலாளர் *திரு. கிரிதரன்* அவர்களுக்கும், தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ள              வட சென்னை                          மாவட்ட தலைவர்              *திரு. கண்ணியப்பன்* அவர்களுக்கும், திருச்சி மாவட்ட தலைவர்                                           *திரு. அ மதி* அவர்களுக்கும் தென்சென்னை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் தங்களின் ஓய்வுக்காலத்தில் எல்லா வளங்களும் , பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.
அன்புடன் எஸ்மா. *எஸ்.கே.சரவணன்*       தென் சென்னை மாவட்ட அமைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், த.நா. சட்டதிட்ட விதிகள்குழு .

உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??

ஆசிரியர்பாடத்திட்டம் எழுதும் முறை!!!

FLASH NEWS:-தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை!!


பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர் கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர் விவரங்கள் கோருதல்-சார்பு.

TNPSC-TET


English Current Affairs 01 To 02 June 2018 ENGLISH CURRENT AFFAIRS MATERIAL 2018 Latest English...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Group 2 Exam | Jahangir History Audio Study Materials The post TNPSC Group 2 Exam |...

To get more details about this articles kindly visit our maanavan.com

Lok Sabha Speaker TNPSC UPSC RRB Exam Audio Study Materials The post Lok Sabha Speaker TNPSC UPSC...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Group 2 Exam Tamil Video Study Materials | Tamil Videos     The post TNPSC...

To get more details about this articles kindly visit our maanavan.com

List Of RBI Governors In English | Exam Study Materials The post List Of RBI Governors In...

To get more details about this articles kindly visit our maanavan.com

Taxes Of India In English | General Knowledge Study Materials The post Taxes Of India In...

TNOSC-TET


TNPSC Tamil Group 2 Current Affairs In June 2018 The post TNPSC Tamil Group 2 Current Affairs In...

To get more details about this articles kindly visit our maanavan.com

List Of Important Summits In English | Exam Study Materials The post List Of Important...

To get more details about this articles kindly visit our maanavan.com

RPF Recruitment 2018 | 8619 Constable Posts | Govt Jobs RPF Recruitment 2018 8619...

To get more details about this articles kindly visit our maanavan.com

Group 1 Exam Chief Minister’s Notice Raising The Age Limit The post Group 1 Exam Chief...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Recruitment 2018 For 16 Translation Officer & Translator Posts | Jobs   Tamil...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Translation Officer And Translator Posts Apply Now    The post TNPSC Translation...

To get more details about this articles kindly visit our maanavan.com
TNPSC Recruitment 2018 For 16 Translation Officer & Translator Posts Notification Download...

To get more details about this articles kindly visit our maanavan.com

2450 Posts Will Be Filled Up By Direct Appointment In Tamil Nadu Electricity –...

To get more details about this articles kindly visit our maanavan.com

3,392 Assistant Workers Will Be Filled Soon By TRB The post 3,392 Assistant Workers Will Be Filled...