யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/1/17

CPS NEWS:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம்
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து,
ஊதிய குழு அமைத்தல்,
இடைக்காலநிவாரணம் 20%

உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்ட ம் அறிவிப்பு

TNGEA மாநில மாநாடு அறைகூவல் தீர்மானங்கள்:

1. CPS ரத்து

2. 8 வதுஊதியக்குழு அமைக்க

3. இடைக்காலநிவாரணமாக 20% வழங்க

4. சிறப்புகாலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்குவரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க

5. Outsourcing,  daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில்நிரப்ப

6. சாலைப்பணியாளர்களின்41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க

தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

மேற்கண்டகோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

02.02.2017 மாவட்டதலைநகரங்களில் உண்ணாவிரதம்

05.03.2017 மாவட்டதலைநகரங்களில் பேரணி


18.03.2017 /25.03.2017 வேலைநிறுத்த ஆயத்த மாநாடு


25.04.2017 காலவரையற்றவேலை நிறுத்தம்

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுநடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற
இணையதளத்தில் ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே7ம் தேதி இந்த தேர்வுநாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.

இதற்கானவிண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும்பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்தபிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.

இந்த தேர்வு முடிவுகள் வரும்ஜூன் மாதம் முதல் வாரத்தில்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள்தங்களின் ‘பான் கார்டு’ எண்ணைவரும் அடுத்த மாதம் பிப்ரவரி28-
ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது.


கருப்புபணத்தை தடுக்கும் விதமாக, செல்லாத ரூபாய்நோட்டு  அறிவிப்புவெளியான கடந்த ஆண்டு நவம்பர்8ந் தேதிக்கு முந்தைய வங்கி , தபால்நிலையடெபாசிட்களையும் ஆய்வு செய்ய வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில்இருந்து நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு வரை வங்கிகள், தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

நாட்டில்கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடிகடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதுஎன அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தைபிடிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் ரூபாய் நோட்டு தடைஅறிவிப்பு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளில்லட்சக்கணக்கில் திடீரென செய்யப்பட்ட டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகளில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் டிசம்பர் 30ந்தேதிவரை ரூ.2.5 லட்சம் வரைசெய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்புபணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, விரைவுப்படுத்தும் விதமாக  வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்கில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் ரூ.2.5 லட்சம்வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களின் கணக்கில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நவம்பர்9 ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்குறித்தும்ஆய்வு செய்ய வருமான வரித்துறைதிட்டமிட்டுள்ளது.

இதற்காகவங்கிகள், தபால்நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் பான்கார்டுஎண், படிவம் 60 ஆகியவற்றை கேட்டு வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும்வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தங்களின் பான்கார்டு எண்ணை அளிக்கவும் வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின் ஒருவர் கணக்கில்செய்யப்பட்ட டெபாசிட் குறித்தும், செல்லாத ரூபாய் அறிவிப்புக்குமுன் அவர்கள் கணக்கில் இருப்பில்இருந்த பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறைமுடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகள் , தபால்நிலையங்களுக்கும்கடந்த 6-ந்தேதி நிதி அமைச்சகத்தின்ேநரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வங்கி, தபால்நிலையங்களில் பான்கார்டு எண் கொடுக்காதவர்கள் தங்கள்பான்கார்டு எண்களை உடனடியாக கொடுக்கவேண்டும். சில வங்கியில் கணக்குதொடங்கும்போது, பான்கார்டு முறை அறிமுகம் இல்லாதநிலையில் இருந்தாலும், அவர்களும் இப்போது தங்களின்  பான்கார்டு எண்களை உடனடியாக வங்கியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றி ஆய்வு.

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எந்த பள்ளிகளில்
படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்ககேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 அரசு சம்பளத்தை வாங்கும், அரசு பள்ளி மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுபள்ளிகளில்தான் படிக்க வைக்கவேண்டும் என்றுஅலகாபாத்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றிகேரளாவிலும் நடவடிக்கை மேற்ெகாள்ள மாநில அரசு தீர்மானித்துள்ளது.


இதையடுத்துஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்கமாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவுக்குகேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகளை இந்த பள்ளியில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தசட்டத்தில்இடம் இல்லை. தங்கள் குழந்தைகள்எந்த பள்ளியில் படிக்க வைப்பது என்பதுபெற்றோரின் உரிமையாகும் என்று அரசு பள்ளிஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

How To » 1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

1ஜிபி தினசரி வரம்பை மீறிஜியோ ஹை-ஸ்பீட் தரவுபயன்படுத்துவது எப்படி? ரிலையன்ஸ் ஜியோவின்ஹேப்பி நியூ இயர் சலுகையின்கீழ்
மார்ச் 31 வரை இலவச டேட்டாவைவாடிக்கையாளர்கள் தினசரி பயன்பாடு எல்லையுடன்பெற்று வருகிறார்கள்.


2016- நமக்கெல்லாம்பொதுவாக நடந்த ஒரு நல்லவிடயம் தான் - ரிலையன்ஸ் ஜியோஅறிமுகம். இதுவரை ஜியோ 4ஜிசிம் கார்ட் ஒன்றை கையில்பெறாதவர்கள் தவிர்த்து பிற அனைவருமே ஜியோ2016-ஆம் ஆண்டில் நடந்த ஒருநல்ல விடயம்என்பதை ஒற்றுக்கொள்வார்கள். அதிலும் மிக முக்கியமாகஜியோ வெல்கம் ஆபர் முடிவடையும்நேரத்தில் மேலும் 3 மாதங்களுக்கான அதன் இலவச சலுகைகளைநீட்டிக்கும் (மார்ச் 31, 2017 வரை) வண்ணம் ஹேப்பிநியூ இயர் ஆபர் வழங்கியது.2017-ஆம் ஆண்டிற்க்கும் சேர்த்தேஒரு நல்ல விடயமாக அமைந்ததுஆனால் பயனர்கள் அனைவருக்கும் ஜியோவின் ஹேப்பிநியூ இயர் ஆபரில் ஒருசின்ன வருத்தம் காத்திருந்தது. அதுதான் 1ஜிபி என்ற தினசரிடேட்டா லிமிட் அதாவது ஒருநாளைக்கு இவ்வளவுதான் அதிவேக இண்டர்நெட் என்றதரவு எல்லை. ஆனாலும் கூட1ஜிபி என்று வழங்கப்பட்டுள்ள தினசரிரிலையன்ஸ் ஜியோ 4ஜி வரம்பைமீறி ஜியோ ஹை-ஸ்பீட்தரவு பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதெப்படி என்பதை பற்றிய தொகுப்பேஇது.

பூஸ்டர்பேக் 1ஜிபி என்ற தரவுஎல்லையை மீறி அதிக வேகத்தில்மீண்டும் உலவ நீங்கள் ரிலையன்ஸ்ஜியோ வழங்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்தமுடியும். இதற்கான செலவாக நிறுவனம்6ஜிபி பேக் ரூ.301/- என்றும்மற்றும் 1ஜிபி பேக் ரூ.51/- என்றும் நிர்ணயித்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்வதும்மிகவும் எளிமையே.!

வழிமுறை#01

உங்கள்மொபைலில், மைஜியோ பயன்பாட்டை திறக்கவும். உள்நுழைந்து லாக்-இன் அல்லதுரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் ஜியோ தொலைபேசிஎண் தான் உங்கள் பயனர்பெயராகும். இப்போது, நீங்கள் ஜியோ பயன்பாடுகளின்ஒரு பட்டியலை பார்ப்பீர்கள் இப்போது மை ஜியோஎன்பதற்கு அருகிலுள்ள ஓபன் என்பதை டாப்செய்யவும்.

வழிமுறை#02

யூஸேஜ்என்பதை டாப் செய்து - டேட்டாஎன்பதை டாப் செய்யவும். நீங்கள்1ஜிபி என்ற டேட்டா எல்லைகடந்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த இதைசெய்ய வேண்டும். ஜியோ வேகம் எப்போதுமேநிலையானதாக இருக்காது ஏனெனில் மெதுவான இணைப்பில்இருக்க முடியும். ஆக டேட்டா எல்லையைசோதிப்பது அவசியமாகிறது.

வழிமுறை#03


நீங்கள்வரம்பை கடந்து விட்டீர்கள் என்றால், பேக் ஐகானைடாப் செய்து மீண்டும் மெயின்ஸ்க்ரீனுக்கு திரும்பி போகவும். ரீசார்ஜ் ஐகானை டாப் செய்யவும், பின்னர் பூஸ்டர் ஐகானை டாப்செய்யவும். நீங்கள் விரும்பும் திட்டத்தைதேர்வு செய்து வலது பக்கத்தில்விலை ஆப்ஷனை டாப் செய்யவும். அதன் வழியாக நீங்கள் ஜியோமணிஆப்பிற்குகொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு கிரெடிட், டெடிபிட்அல்லது நெட் பேங்கிங் வழியாககட்டணம் செலுத்த முடியும்.வழக்கமான4ஜி வேகம் அவ்வளவு தான்இப்போது நீங்கள் வழக்கமான 4ஜிவேகத்தில் உலவ முடியும். 6ஜிபிபேக் மூலம்நீங்கள் ரூ.4 சேமிக்க முடியும், அதன் தரவு எல்லை தினமும்மறுகட்டமைக்கப்படும் மற்றும் இந்த பேக்28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

'நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு
நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்த வருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.


இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.

அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது.

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.


 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல்விடப்படும்!''

RMSA POSTS PAY ORDER FOR 6872 BT & 1590 PG POSTS FOR 3 MONTHS ( FROM JAN'17 TO MARCH'17)

13ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டு ஏற்கப்படும்: பெட்ரோல் முகவர்கள் சங்கம்!!!

கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாதுஎன்ற முடிவை பெட்ரோல்
முகவர்கள்சங்கம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

அதன்படி, ஜன., 13 ம் தேதி வரைகிரேடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்திபெட்ரோல், டீசல் பெறலாம்.

1 சதவீதவரி

ரூபாய்நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகுமத்திய அரசு ரொக்கமில்லா பரிவர்த்தனைஅதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. பெட்ரோல் பங்குகளில் வங்கி கிரெடிட், டெபிட்கார்டுகளை பயன்படுத்தினால் 0.75 சதவீதம் விலை குறைப்புஅளிக்கப்படும் என அறிவித்தது. இதற்கிடையே, ஹச்.டி.எப்.சி., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்டசில வங்கிகள் பெட்ரோல் பங்குகளின் மின்னணு பரிவர்த்தனைக்கு 1 சதவீதவரியை விதித்தன. மேலும், அவர்களின் வங்கிகணக்கில் பணத்தை தாமாதமாக பரிமாற்றம்செய்தன. இதனால், தங்கள் வருமானம்பாதிக்கப்படுவதாக கூறிய பெட்ரோல் முகவர்கள்சங்கம் இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்க மாட்டோம் எனஅறிவித்தது. இந்நிலையில், அந்த முடிவு தற்காலிகமாகஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முடிவுஒத்திவைப்பு

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க தலைவர், கே.பி.முரளி கூறியதாவது:

மின்னணுபரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் 1 சதவீத வரியால் பெட்ரோல்பங்கு முகவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பான, எங்கள்பிரச்னைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம்தெரிவித்தோம். அவர்கள் மத்திய அமைச்சருடன்பேசினார்கள். பின்னர், ஜன.,13 வரை 1 சதவீதவரி பிடித்தம் செய்யப்படாது என அவர்கள் உறுதிஅளித்துள்ளனர். அதை ஏற்று எங்கள்முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஜன.,13ம் தேதிவரை கார்டுகள் ஏற்கப்படும். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவுகாண முயற்சிப்போம். பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் கிரெடிட், டெபிட் கார்டுகள் வாங்கமாட்டோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

SERVICE REGISTER - ல் (SR) விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது

*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*
பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள
1. ந.க. எண் / தேதி
2. வரிசை எண்
3. பதிவு எண்
4. வழங்கப்பட்ட தேதி
5. தேர்ச்சி பெற்ற தேதி
6.பணியேற்ற தேதி மற்றும் மு.ப/பி.ப
7.விடுவித்த தேதி மற்றும் மு.ப/பி.ப
*மேற்கண்ட அனைத்தையும் உங்களிடம் உள்ள சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்*
💥 அதே போல் துறை சார் அலுவலரின் கையொப்பம் முத்திரை இல்லாத பதிவுகளை சுட்டிக்காட்டவும்.
💥 வாரிசுதாரர் பெயர்களை பதிவு செய்யும் பொழுது பின்புறம் இரண்டு ஆசிரியர்களிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிய பின் தங்களின் கையொப்பத்தையும் செய்யவும்.
💥 ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்றதற்கான பதிவுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதா?
💥 பணி நியமனம் பெற்றது முதல் 31.12.2016 வரை பணிப்பதிவேடு சரிபார்த்தல் என்ற பதிவு தொடர்ச்சியாக உள்ளதா...?
💥 ஈட்டிய விடுப்பு கையிருப்பை கணக்கீடு செய்ததில் தவறுகள் ஏதேனும் உள்ளதா..? (365÷21.47=?)
💥 அதே போல் உயர் கல்வி பயின்ற அனைத்து படிப்பிற்கும் பட்டயச்சான்றினை (கான்வகேசன்) பதிவு செய்வது அவசியம் ஆகும்.
📡📡📡📡📡📡📡📡
🔴 *பணிப்பதிவேட்டினை சரிபார்ப்பதற்கான check list -ஐ கொண்டு சரிபார்க்கும் பொழுது*
10th, 12th,
DTEd,
UG degree,
PG degree,
B.Ed,
M.phill/M.Ed,
போன்ற சான்றிதழ்களின் நகல்கள் (அனைத்திற்கும் பட்டயச்சான்று அவசியம்)
*{ இதுவரை பதிவு செய்யாத கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஒரிஜினல் சான்றிதழையும், பதியப்பட்டதை சரிபார்க்க நகலினையும் கொண்டுசெல்லவும் }*
🔴 துறை தேர்வு தேர்ச்சி பெற்ற ஆணை,
🔴 CPS / TPF எண்,
🔴 துறை முன் அனுமதி /பின் அனுமதி,
🔴 உண்மைத்தன்மை சான்றிதழ்கள்,
🔴 பணியேற்பு ஆணை,
பணிவிடுப்பு ஆணை,