யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/1/17

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

'நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு
நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்த வருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.


இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.

அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது.

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.


 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல்விடப்படும்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக