யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/3/18

சட்ட கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!!!

சென்னை;மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, சட்டக் கல்லுாரிக்கு 
காலவரையற்ற விடுமுறை அளித்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லுாரி இயங்கி வருகிறது. 2008 நவ., 12ல், சட்டக் கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி, சண்முகம்தலைமையிலான கமிட்டி, சென்னை சட்டக் கல்லுாரியை, வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்என, தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.இதையடுத்து, காஞ்சிபுரம்மாவட்டம், புதுப்பாக்கம் கிராமம்; திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதுார் உள்ளிட்ட இடங்களில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு, கல்லுாரி இடம் மாற்றம் செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது.இதற்கு, சட்டக் கல்லுாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிப்., 26ல், கல்லுாரி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, 15வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.ஏற்கனவே, கடந்த, பிப்., 27 - மார்ச் 7ம் தேதி வரை, கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின், விடுமுறை, 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறையளித்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.உண்ணாவிரத போராட்டம்சட்டக் கல்லுாரி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, மாணவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, ஐகோர்ட் வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், கையெழுத்து இயக்கத்தையும், நேற்று துவங்கினர். 10ம் தேதியில் இருந்து, 10 மாணவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் நாடு அரசு ஊழியர் & ஆசிரியர்களின் CPS பிடித்தம் ஏ. . . .ப். .பமா?

ரூ.18,016 கோடி இருக்கு. . .! ஆனா இல்ல!


2003-ற்குப் பிறகு தமிழ் நாடு அரசு, அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் CPS பிடித்தமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து  ரூ.18,016,00,00,000/-யை ஓய்வூதியப் பொதுக்கணக்கில் வைத்திருப்பதாக சட்டமன்றத்தில் 2017-18
 *கோரிக்கை எண்.50-ல்* தெரிவிக்கப்பட்டிருந்தது.

31.3.2017 நிலவரப்படி அரசின் பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ள தொகை,

எந்தந்த கணக்குத் தலைப்புகளில் இருந்து வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம்

எந்தந்த கணக்குத் தலைப்புகளில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம்

பொதுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை பிறவகையில் முதலீடு செய்யப்பட்ட விபரம் ஆகியவை குறித்து

*தகவலறியும் உரிமைச் சட்டத்தில்,*
 ஊழியர்களின் ஊதியப் பிடித்தங்களைச் செய்துவரும் கருவூலக் கணக்குத்துறையிடம் கேட்கப்பட்டது.

ஆனால், கருவூலக் கணக்குத்துறையோ பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை எவ்வளவு? எந்தத் தலைப்பில் வரவாக்கப்பட்டது? செலவாக்கப்பட்டது? உள்ளிட்ட எந்தக் கேள்விக்கும் தன்னிடம் பதில் இல்லை என அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தை (GOVT. DATA CENTRE)  கைகாட்டி ஒதுங்கிக் கொண்டது.

கருவூலம் தரும் ஊழியரின் ஊதிய ஓய்வூதியப் பிடித்தம் & நிலுவை விபரங்களை இணைய தளத்தில் வெளியிடும் அமைப்பான தகவல் தொகுப்பு விபர மையம் இக்கேள்விகளெல்லாம் தனது துறை தொடர்புடையது அல்ல எனக் கூறி நிதித்துறைக்கு அனுப்பிவிட்டது.

ஊழியருக்கான ஊதியம் வழங்கல் & தலைப்பு வாரியாகப் பிடித்தங்களை மேற்கொள்ளும் கருவூலக கணக்குத்துறையிடமே ஊழியர்களின் CPS பிடித்தங்கள் பற்றிய தகவல்கள் இல்லாதது ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

*திண்டுக்கல் எங்கெல்ஸ்*

BREAKING: ஆதார் எண் இணைப்பு- மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!

வங்கி கணக்கு, மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
*சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை சற்றுமுன் நீட்டித்தது உச்சநீதிமன்றம்.
*மார்ச் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது, அடுத்த தீர்ப்பு வரும் வரை காலக்கெடுவை காலவரையின்றி நீட்டிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட வற்றுடன் ஆதார் எண்-ஐ இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நல உதவிகளை பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் மட்டுமே மத்திய அரசு ஆதார் எண்-ஐ கேட்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆதார் இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
எனவே, ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைக்க அவசியமில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்.

ட்ரக்கிங் என்றால் என்ன?ட்ரக்கிங் பற்றிய ஒரு முழுமையான தகவல் .ட்ரக்கிங் எதற்க்காக செல்கிறார்கள் :

தேனி மலைப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்று ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், டிரெக்கிங் என்றால் என்ன, இளைஞர்களும், இளம் பெண்களும் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருப்பது ஏன் என்பதை பார்க்கலாம்.

டரக்கிங் என்பது, கால்நடையாக, மெதுவாக, கடினமான வழிகளில், குறிப்பாக மலைப் பகுதிகளில் பயணம் செய்வதைக் குறிப்பதாகும். ட்ரக்கிங் என்பது மிகவும் கடினமான, சவாலான செயல்பாடாகும். கடினமான, மலைப் பகுதிகளில் செல்ல வேண்டும் என்பதால் ட்ரக்கிங் செல்வதற்கு உடல் வலுவும், தாக்குப்பிடிக்கும் திறனும் வேண்டும்.

அதேநேரத்தில், குறிப்பிட்ட பகுதிகளை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்தபடியே கால்நடையாகச் செல்வதையும், இதற்காக ஆள் அரவமற்ற வனப்பகுதிகளை தேர்வு செய்வதும் ட்ரக்கிங் வகையிலேயே சேர்கிறது. டரக்கிங் என்பதை மலையேற்றம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மலையேற்றம் என்பது தனித்ததொரு செயல்பாடாகும். இயற்கையிலிருந்து விலகி, எந்திர கதியில் நகரச் சூழலில் வாழ்பவர்கள் இயற்கையை ரசிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் டரக்கிங், ஹைக்கிங், மலையேற்றம் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர்.

அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களிள் ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களது பணிச்சுமையில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் வார விடுமுறையை கழிக்க டிரெக்கிங் செல்வது வழக்கம். போடி, கொடைக்கானல், மூணாறு, நீலகிரி, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கும், இதேபோல இமயமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ட்ரக்கிங் செல்பவர்கள் உண்டு. இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைக்கும் டரக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன. முறைப்படி செயல்படும் ட்ரங்கிங் கிளப்புகள் உரிய பயிற்சிகளைக் கொடுத்து, உடல் வலுவை சோதித்த பிறகே, ட்ரக்கிங் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.

முதலில் எளிமையான ட்ரக்கிங், பின்னர் சற்று கடினமான ட்ரக்கிங், அதன் பிறகு கடினமான ட்ரக்கிங் என படிப்படியாகவே அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும். இதேபோல, வனப் பகுதிகளுக்கு செல்லும்போது வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, அறிவும் அனுபவமும் பெற்ற வழிகாட்டிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரக்கிங் சென்றவர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி நேர்ந்த துயரச் சம்பவம் என்பது, ட்ரக்கிங் கிளப்புகளை அரசு முறையாகக் கண்காணித்து, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

டரக்கிங் என்பதை மலையேற்றம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மலையேற்றம் என்பது தனித்ததொரு செயல்பாடாகும். இயற்கையிலிருந்து விலகி, எந்திர கதியில் நகரச் சூழலில் வாழ்பவர்கள் இயற்கையை ரசிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் டரக்கிங், ஹைக்கிங், மலையேற்றம் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர். அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களிள் ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களது பணிச்சுமையில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் வார விடுமுறையை கழிக்க டிரெக்கிங் செல்வது வழக்கம்.

போடி, கொடைக்கானல், மூணாறு, நீலகிரி, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கும், இதேபோல இமயமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ட்ரக்கிங் செல்பவர்கள் உண்டு. இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைக்கும் டரக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன. முறைப்படி செயல்படும் ட்ரங்கிங் கிளப்புகள் உரிய பயிற்சிகளைக் கொடுத்து, உடல் வலுவை சோதித்த பிறகே, ட்ரக்கிங் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். முதலில் எளிமையான ட்ரக்கிங், பின்னர் சற்று கடினமான ட்ரக்கிங், அதன் பிறகு கடினமான ட்ரக்கிங் என படிப்படியாகவே அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும். இதேபோல, வனப் பகுதிகளுக்கு செல்லும்போது வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, அறிவும் அனுபவமும் பெற்ற வழிகாட்டிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரக்கிங் சென்றவர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி நேர்ந்த துயரச் சம்பவம் என்பது, ட்ரக்கிங் கிளப்புகளை அரசு முறையாகக் கண்காணித்து, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

தேர்வுக்குத் தயாரா? - 10-ம் வகுப்பு - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் - தயாராவது எப்படி ?

பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.
ஆங்கிலம் முதல் தாள்
தவிர்க்க வேண்டிய தவறுகள்
ஒரு மதிப்பெண் வினாக்களில் பதில்களை எடுத்து எழுதும்போது சரியான தெரிவை (option) a,b,c அல்லது d எனக் குறிப்பிட்டுப் பதில் எழுதுவதும் கடைசியாக அவற்றைச் சரிபார்ப்பதும் நல்லது. கேட்கப்பட்ட எண்ணிக்கைக்கு அப்பால் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்தல், மனப்பாடப் பாடல் எழுத நன்றாகத் தெரியும் என்பதற்காக முழுப் பாடலையும் எழுதுதல் போன்றவை நேர விரயம்.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து விடையளிக்கும் Comprehension பகுதியில் (வி.எண்.51), முதல் வினாவுக்கான விடையைப் பத்தியின் தொடக்க வரிகளிலும், கடைசி வினாவுக்கான விடையைப் பத்தியின் கடைசி வரிகளிலுமாக, மாணவர்கள் தவறான தேடல் மேற்கொள்கிறார்கள். பத்தியையும் குறிப்பிட்ட வினாவையும் முழுமையாக வாசித்துப் புரிந்துகொண்ட பின்னர், பத்தியில் சரியான இடத்திலிருந்து விடையை அடையாளம் கண்டு எழுதப் பழக வேண்டும்.
அதிக மதிப்பெண்களுக்கு
இலக்கணப் பகுதி வினாக்களுக்கு (வி.எண்.15-30) முந்தைய வருடங்களின் வினாத்தாள்களில் இருந்து பயிற்சி பெறுவது நல்லது. கணிதப் பாடம் போன்றே இலக்கணத்துக்கென அமைந்த சில எளிய சூத்திரங்களை நினைவில்கொள்வதும் நல்லது.
வி.எண்.52, Spot and Correct the Error எளிதான பகுதி என்று பிழைகளை அடையாளம் காட்டுவதுடன் விடையை முடித்துவிடுகிறார்கள். பிழைகளை நீக்கி வாக்கியங்களை எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். வி.எண்.53, (Picture Comprehension) படத்தின் கீழுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதில், இலக்கணப் பிழைகளைத் தவிர்த்தால் மட்டுமே 5 மதிப்பெண் கிடைக்கும்.
ஓரிரு வார்த்தைகளைப் பார்த்ததும் அவசரப்பட்டு விடையை முடிவு செய்தல் கூடாது. குறிப்பாக, வி.எண்.14 இம்மாதிரியான தவறுகளுக்கு இடமளிக்கிறது.
சரியான விடையை, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வரிகளில் மட்டும் எழுதுங்கள். 2 மதிப்பெண் வினாக்களை அதிகபட்சம் 30 வார்த்தைகளுக்குள்ளும், வி.எண்கள் 38, 50 ஆகியவற்றை 120 வார்த்தைகளுக்குள்ளும் எழுதினால் போதும்.
தேர்ச்சி எளிது
இப்போதிருந்து படிக்கத் தொடங்கினால்கூட ஆங்கிலம் முதல் தாளில் 35 முதல் 50 மதிப்பெண்கள் எடுத்துவிடலாம்.
Prose, Poem ஆகியவற்றின் தலா முதல் மூன்று பாடங்களில் இருந்து 5 மதிப்பெண்களுக்குரிய Paragraphs படிப்பதுடன், அவற்றைப் பிழையின்றி எழுதிப் பழகுங்கள். இதேபோல முதல் 2 மனப்பாடப் பாடல்களில் பயிற்சி இருந்தால், அப்பகுதிக்கான மதிப்பெண்ணைப் பெற்றுவிடலாம். இலக்கணப் பகுதியில் If Clause, Degrees of Comparisons, Combining the sentences, Punctuation ஆகியவற்றைப் படித்தால் 6 முதல் 11 மதிப்பெண்கள் எளிதில் பெறலாம்.
முதல் 3 பாடங்களின் இரண்டு மதிப்பெண் வினாக்களைப் படித்தாலே 4 அல்லது 6 மதிப்பெண்கள் உறுதி. எஞ்சிய பாடங்களின் 2 மதிப்பெண் வினாக்களை ஏற்கெனவே படித்த Paragraphs பகுதியிலிருந்தே எதிர்கொள்ளலாம். Rhyming words, Rhyme scheme, figure of speech ஆகியவற்றில் ஆசிரியர் அல்லது நன்றாகப் படிக்கும் சக மாணவர் உதவியுடன் ஓரிரு மணி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலே முடித்துவிடலாம்.
ஓரளவு பயிற்சியின் மூலமே Language Functions (வி.எண் 51-53) பிரிவில் 10-லிருந்து 15 மதிப்பெண்கள்வரை எடுக்கலாம்.
தேர்வறைக் கவனக் குறிப்புகள்
தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இன்றி எழுதுதல், அடுத்தடுத்த விடைகளுக்கிடையே போதிய இடைவெளியிட்டு எழுதுதல் அவசியம். வி.எண். 38, 50 ஆகியவற்றில் விடைகளின் தொடக்கத்தில் Synopsis எழுதுவதுடன், முடிவில் பொருத்தமான Proverb ஒன்றை எழுதிக் கட்டமிடுவது நல்லது. Rhyming words, Rhyme scheme, alliteration போன்றவற்றை எழுதி, பென்சிலால் அடிக்கோடிட்டும் காட்டலாம். Punctuation பகுதியில் பொருத்தமான குறிகளை, பென்சில் அல்லது கறுப்பு மை பேனாவைக் கொண்டு தனித்துக் காட்டலாம்.
வெளியிலிருந்தும் வினா
முதல் தாளில் சில வினாக்கள் பாடநூலுக்கு வெளியிலிருந்தும் கேட்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, வி.எண் 3 (Expansion), வி.எண் 5 (American/British English), வி.எண் 7 (Singular/Plural) போன்றவற்றைச் சொல்லலாம். ஆங்கில இலக்கணத்தின் பயன்பாடு, பொருளை நன்றாகப் புரிந்துகொள்வதும், விடையளிப்பதில் போதிய பயிற்சி கொண்டிருப்பதும் மட்டுமே இவ்வினாக்களுக்கு எளிதில் விடையளிக்க உதவும்.
இதுபோன்றே மாணவரின் இலக்கண அறிவு, மொழித் திறனைப் பரிசோதிக்கும் வினாக்களும் கணிசமாக உள்ளன. வி.எண் 9 (Phrasal Verb), வி.எண் 20 (Prepositional Phrase), வி.எண் 22 (Choose the correct phrase) ஆகியவை இவற்றில் அடங்கும். முந்தைய வருட வினாத்தாள்களில் இருந்து மேற்கொள்ளப்படும் திருப்புதல்கள் இவற்றுக்குக் கைகொடுக்கும்.
ஆங்கிலம் இரண்டாம் தாள்
முதல் தாளைவிட, 19 வினாக்கள் மட்டுமே அடங்கிய இரண்டாம் தாள் எளிமையாக அமைந்திருக்கும். 40 மதிப்பெண்கள்வரை இதில் சுலபமாகப் பெறலாம். ஆனால், மேலதிக மதிப்பெண்களைப் பெற விரும்பினால், முதல் தாளைவிட இதில் கூடுதல் கவனம் தேவை.
கதையும் உட்கூறுகளும்
வி.எண்.1-7, துணைப்பாடப் பகுதியில் அனைத்துக் கதைகளையும் வரிவிடாது வாசித்துப் புரிந்துவைத்திருப்பது அவசியம். கதைகள்தோறும் இடம்பெறும் கதாபாத்திரங்கள், அவர்களின் வயது, பேசும் வசனங்கள் (மேற்கோள்குறிகளுடன் உள்ளவை), கதை நிகழ்விடம் என அனைத்தையும் குறிப்பெடுத்து வரிசைப்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றில் பயிற்சி பெற்றால் முழு மதிப்பெண்களைப் பெறலாம். குறிப்பாக, (வி.எண் 6) மனவரைபடத்தைப் பூர்த்தி செய்வதில் இந்தத் தயாரிப்பு மிகவும் உதவும்.
இலக்கணப் பிழைகள் தவிர்க்க
10 மதிப்பெண்கள் அடங்கிய வி.எண்.8, Notes எழுதுகையில் Primary Notes, Secondary Notes என்றோ ஆங்காங்கே கோடிடும் குறிப்புகளாக மொத்தமாகவோ எழுதலாம். அதுவே Summary எழுதுகையில் Rough Copy முடித்து, Fair Copy எழுதும்போது ஏற்படும் இலக்கணப் பிழைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதால் அவற்றில் கவனம் தேவை. வி.எண்கள் 9,10,11,13,15 ஆகியவற்றுக்குப் பதில் எழுதும்போதும் இலக்கணப் பிழைகளைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை.
வி.எண்.12, விளம்பரம் தயார் செய்வதில் எழுதுவதற்கு நீலம், கறுப்பு நிறப் பேனாக்களையும் படம் வரைதல், அடிக்கோடு இடுதலில் பென்சிலையும் பயன்படுத்தினால் போதுமானது.
வினாத் தேர்வில் கவனம்
வினா எண் 13-ல் கொடுக்கப்பட்ட தலைப்புச் செய்திகளை விரிவாக்கம் செய்யும்போது, செய்தி நிகழ்ந்த நாள், இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலக்கணப் பிழையின்றி எழுத வேண்டும். கூடவே PM, CM போன்ற abbriviations உள்ளிட்டவற்றை முழுமையாக எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண்கள் கிட்டும். வி.எண்.15-க்கு விடையளிக்கும்போது பொருத்தமான தலைப்புடன் ஓரிரு பத்திகளில் பதில் எழுதி, நிறைவாக ஒரு பழமொழியையும் எழுதுங்கள்.
16, 17,18 வினாக்களுக்கு ஆர்வத்துடன் பயிற்சி பெற்றால் முழு மதிப்பெண் பெறலாம். வி.எண் 19-ல் இடம்பெறும் A, B என 2 வினாக்களில், மொழிபெயர்ப்பில் நல்ல திறமையும் எழுத்து, இலக்கணப் பிழையின்றி எழுதப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டும் வினா A- வைத் தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் வினா B-ஐத் தேர்வுசெய்து, கொடுக்கப்பட்ட படம் குறித்து 5- 10 வரிகளுக்குள்ளாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
பாடக் குறிப்புகளை வழங்கியவர்: முனைவர் பு.ஜெயபிரபு.
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு உயர் நிலைப்பள்ளி,
பூண்டி, தஞ்சாவூர்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி: மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.

இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது.

அதன்படி, ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்தவங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. ஆனால், ஸ்டேட் வங்கியில் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு லாபமே ரூ.1,581 கோடிதான். இந்த செய்தி வெளியான பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது, ஏராளமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.

ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குநர் பி.கே. குப்தா கூறுகையில் ‘ வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்களின் முயற்சிகள், நடவடிக்கை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே’ எனத் தெரிவித்துள்ளார். *

கிராமப்புற முகவரிகளையும் எளிதில் தேட கூகுளில் புதிய வசதிகள்:

கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் எளிதில் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், பெரும்பான்மையான புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள முகவரிகளை கூகுள் மூலம் கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள முகவரிகளையும் எளிதில் கண்டறிவதற்கான நவீன தொழில் நுட்ப வசதிகள் தேடுபொறியில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், வாய்ஸ் நேவிகேசன் (Voice Navigation) எனப்படும் குரல் மூலமாக வழிகாட்டும் தொழில்நுட்பத்தில், தமிழ், வங்காளம், குஜராத்தி, தெலுங்கு. கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு பிராந்திய மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.*

அனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 மார்ச்சுக்குள் Wifi வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டம்:

அனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 மார்ச்சுக்குள் Wifi வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டம் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வைஃபை வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அண்மையில் கூடிய ரயில்வே வாரியக் கூட்டத்தில் நாட்டில் உள்ள 8 ஆயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களிலும் இணைய வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் ரயில் நிலையங்களுக்கு வந்து இணைய வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது