யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/3/18

ட்ரக்கிங் என்றால் என்ன?ட்ரக்கிங் பற்றிய ஒரு முழுமையான தகவல் .ட்ரக்கிங் எதற்க்காக செல்கிறார்கள் :

தேனி மலைப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்று ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், டிரெக்கிங் என்றால் என்ன, இளைஞர்களும், இளம் பெண்களும் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருப்பது ஏன் என்பதை பார்க்கலாம்.

டரக்கிங் என்பது, கால்நடையாக, மெதுவாக, கடினமான வழிகளில், குறிப்பாக மலைப் பகுதிகளில் பயணம் செய்வதைக் குறிப்பதாகும். ட்ரக்கிங் என்பது மிகவும் கடினமான, சவாலான செயல்பாடாகும். கடினமான, மலைப் பகுதிகளில் செல்ல வேண்டும் என்பதால் ட்ரக்கிங் செல்வதற்கு உடல் வலுவும், தாக்குப்பிடிக்கும் திறனும் வேண்டும்.

அதேநேரத்தில், குறிப்பிட்ட பகுதிகளை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்தபடியே கால்நடையாகச் செல்வதையும், இதற்காக ஆள் அரவமற்ற வனப்பகுதிகளை தேர்வு செய்வதும் ட்ரக்கிங் வகையிலேயே சேர்கிறது. டரக்கிங் என்பதை மலையேற்றம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மலையேற்றம் என்பது தனித்ததொரு செயல்பாடாகும். இயற்கையிலிருந்து விலகி, எந்திர கதியில் நகரச் சூழலில் வாழ்பவர்கள் இயற்கையை ரசிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் டரக்கிங், ஹைக்கிங், மலையேற்றம் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர்.

அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களிள் ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களது பணிச்சுமையில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் வார விடுமுறையை கழிக்க டிரெக்கிங் செல்வது வழக்கம். போடி, கொடைக்கானல், மூணாறு, நீலகிரி, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கும், இதேபோல இமயமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ட்ரக்கிங் செல்பவர்கள் உண்டு. இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைக்கும் டரக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன. முறைப்படி செயல்படும் ட்ரங்கிங் கிளப்புகள் உரிய பயிற்சிகளைக் கொடுத்து, உடல் வலுவை சோதித்த பிறகே, ட்ரக்கிங் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.

முதலில் எளிமையான ட்ரக்கிங், பின்னர் சற்று கடினமான ட்ரக்கிங், அதன் பிறகு கடினமான ட்ரக்கிங் என படிப்படியாகவே அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும். இதேபோல, வனப் பகுதிகளுக்கு செல்லும்போது வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, அறிவும் அனுபவமும் பெற்ற வழிகாட்டிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரக்கிங் சென்றவர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி நேர்ந்த துயரச் சம்பவம் என்பது, ட்ரக்கிங் கிளப்புகளை அரசு முறையாகக் கண்காணித்து, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

டரக்கிங் என்பதை மலையேற்றம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மலையேற்றம் என்பது தனித்ததொரு செயல்பாடாகும். இயற்கையிலிருந்து விலகி, எந்திர கதியில் நகரச் சூழலில் வாழ்பவர்கள் இயற்கையை ரசிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் டரக்கிங், ஹைக்கிங், மலையேற்றம் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர். அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களிள் ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களது பணிச்சுமையில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் வார விடுமுறையை கழிக்க டிரெக்கிங் செல்வது வழக்கம்.

போடி, கொடைக்கானல், மூணாறு, நீலகிரி, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கும், இதேபோல இமயமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ட்ரக்கிங் செல்பவர்கள் உண்டு. இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைக்கும் டரக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன. முறைப்படி செயல்படும் ட்ரங்கிங் கிளப்புகள் உரிய பயிற்சிகளைக் கொடுத்து, உடல் வலுவை சோதித்த பிறகே, ட்ரக்கிங் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். முதலில் எளிமையான ட்ரக்கிங், பின்னர் சற்று கடினமான ட்ரக்கிங், அதன் பிறகு கடினமான ட்ரக்கிங் என படிப்படியாகவே அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும். இதேபோல, வனப் பகுதிகளுக்கு செல்லும்போது வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, அறிவும் அனுபவமும் பெற்ற வழிகாட்டிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரக்கிங் சென்றவர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி நேர்ந்த துயரச் சம்பவம் என்பது, ட்ரக்கிங் கிளப்புகளை அரசு முறையாகக் கண்காணித்து, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக