யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

உயர்கல்வியின் அடிப்படையில் உயர்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள / போட்டித் தேர்வுகளில் பங்கெடுப்பதற்கான தடையின்மைச் சான்று படிவங்கள்






அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் இருப்புத்தொகை ரூ.5000/- பராமரிப்பு செய்ய வேண்டுமா? இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுமா? என்பது குறித்து கருவூல அலுவலகத்திற்கு "பாரத ஸ்டேட் வங்கி" அளித்துள்ள பதில்...




மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் ! தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !!



ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். பெரும் குழப்பம் நிலவுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க
வேண்டுமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வேலையில்லாத் திண்டாடம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்
மூன்று வருடங்களாக “ஆசிரியர் தகுதித் தேர்வை” நடத்தாத அதிமுக அரசு இப்போது அவசரஅவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ்
நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற ஏப்ரல் 29 மற்றும் 30ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க,
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்கு பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அரசு பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு “குற்றவாளி வழிகாட்டும்” அரசின்
நிர்வாக குழப்பங்களே காரணம் என்பதை நினைக்கும் போது தமிழக அரசு நிர்வாகம் இன்னும் எந்த அளவிற்கு மோசமாகப் போகிறதோ என்ற கவலையே ஏற்படுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும்(Aided) மற்றும் அரசு உதவி பெறாத
(non government aided) கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்திலிருந்து உச்சநீதிமன்றமே விலக்களித்துள்ள நிலையில், இந்த கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்துமா என்பது குறித்து “2017 அறிவிக்கையில்” தெளிவான விளக்கங்கள் ஏதுமில்லை TET லிருந்து பணியில் உள்ள
ஆசிரியர்களுக்கு விலக்கு பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்பது
கவலையளிக்கிறது. இதற்கு முன்பு எல்லாம் வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஏப்ரல் மாதத்திலேயே
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதி நாளான ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து 9 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 29ஆம் தேதியே தேர்வு எழுத வேண்டும் என்பது ஆசிரியர்களாக பணியாற்றும் பலருக்கும் குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும். இறுதி வேலைநாளுக்குப் பிறகு தேர்வுத்தாள் திருத்தும் பணியைச் செய்வதா அல்லது
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதா என்ற குழப்பம் ஆசிரியர்களாக
இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அவர்களால் உரிய முறையில் தயாராகி தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது.ஆகவேமூன்று வருடங்கள் காலத்தைக் கடத்திவிட்ட அதிமுக அரசு, பள்ளிக்
கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றவுடன் அவசர அவசரமாக தேர்வை .நடத்துவதில் பல சந்தேகங்கள் எழுகிறது. ஆகவே ஆசிரியர்களுக்கும் இந்த தேர்வு
பயன்படும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற வணிகவியல் பட்டதாரிகள் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் கணினிப் பட்டதாரிகளைக் கூட ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த தகுதித் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருக்கிறது.ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையில் கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” எழுத முடியுமா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஆகவே கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அதிமுக அரசு அனுமதிப்பதுதான் பட்டதாரிகள் அனைவருக்கும் சம நீதி வழங்கியதாக அமையும். ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி 5மதிப்பெண் வழங்கும் அரசு ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்கள் பெற்ற கல்வியின் அடிப்படையில் வழங்கும் 40
“வெயிட்டேஜ்” மதிப்பெண்களையும் உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தாலும்,வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு நீண்ட காலமாக காத்திருப்போருக்கு நீதி வழங்கும் பொருட்டும், சமூகநீதியின் உண்மையான நோக்கம் வேலை தேடும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் ஆசிரியர் பணி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு கொள்கை முடிவை இந்த அரசு எடுக்க வேண்டும். அதற்காக துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்கள் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அப்படியொரு ஆக்கபூர்வமான கொள்கை முடிவை எடுத்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு காத்திருக்கும் அனைவரையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டிற்கு இரு முறை நடத்துவது, மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வகுப்பு வாரியாக மதிப்பெண் உச்சவரம்பை குறைப்பது, பழைய பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கும், புதிய பாடதிட்டத்தின்படி படித்தவர்களுக்கும் இடையில் மதிப்பெண்களில் சலுகை வழங்குவது, நீண்ட காலமாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றையும் ஆராய்ந்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வரம்புகளை மாற்றி அமைப்பது குறித்து மாநில அரசு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வீட்டுக்கு அனுப்பிவிடக் கூடாது என்றும், அவர்கள் அந்த தேர்வில் வெற்றி பெற போதிய வாய்ப்புகள் மற்றும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழு விலக்கும்
வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

JIO வின் அடுத்த சலுகை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய
சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ஜியோசிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான இலவச சேவை சலுகை, வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க "மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம்" பள்ளிக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு - ஆனை

பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க ஆவன செய்யுமாறு குழந்தைகள் உரிமைகள்
பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் திரு. ஆர்.லால்வேனா இ.அ.ப அவர்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

No automatic alt text available.

முக்கியச் செய்தி-2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் 
பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Image may contain: text

சென்னை: அக்.,23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரியல் எஸ்டேட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறுகையில், 8 மாதமாக தடை நீடிப்பதால் வாங்கிய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை தெரிவிக்கப்பட்டது.
வழக்கை தொடர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், அனுமதியில்லாத மனைகளை பத்திர பதிவு செய்யவே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

மீறக்கூடாது:
இதனைதொடர்ந்து நீதிபதிகள், கடந்த 2016 அக்., 23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்யலாம். சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக்கூடாது. விளை நிலங்கள் விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறினர்.

ஒத்திவைப்பு:
தொடர்ந்து நிலங்களை வரைமுறைப்படுத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கை ஏப்ரல் 7 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Genuineness not necessary for Selection Grade..

அலுவலகத்தில் மதியம் தூங்கினால் படைப்பாற்றல் அதிகரிக்கும்

அலுவலகத்தில் மதிய வேளையில் போடும் ஒரு குட்டித்தூக்கம் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும் என இங்கிலாந்து பல்கலைக்கழக
ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தினமும் மதிய வேளையில் அலுவல்களுக்கு நடுவே ஒரு 20 நிமிடம் தூங்கினால் வேலை செய்வோரின் திறன் அதிகரிப்பதாக இங்கிலாந்து லீட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூக்கம் ஊழியர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிப்பதுடன் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது. மதிய நேர குட்டித் தூக்கங்களில் மன அழுத்தம் குறைவதுடன் இதய நோய் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவை வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போ, உங்க பாஸிடம் நல்ல பேர் வாங்க தினமும் மதியம் ஒரு குட்டித்தூக்கம் போடுங்க பாஸ்.

TNTET சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1 கல்வியியல்

1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம் 
2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது அசாதாரண உடல் வளர்ச்சி
3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது 2-3 ஆண்டுகள் 
4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா
5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை
6 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது மனவெழுச்சி அதிர்வுகள்
8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் பியாஜே
9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென்
10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100
11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் தர்ம சிந்தனை
12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று மனப்பாடம் செய்து கற்றல்
13 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் ரூசோ
14 தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு எலி
15 இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறு ஸ்கின்னர் கற்றல் விதி
16 சிக்கலான பொதுமைக் கருத்து சிறிய நீல நிற சதுர கட்டை
17 கற்றலுக்கு உதவாத காரணி தனிப்பட்ட காரணி
18 மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
19 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது மனப்பாடம் செய்வித்தல்
20 குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது 1959 நவம்பர் 20
21 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது மறுபடி செய்தல்
22 கற்றலின் முக்கிய காரணி ஒன்று கவனித்தல்
23 வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை பல்புலன் வழிக்கற்றல்
24 கற்றலின் அடைவு திறன்
25 நடத்தை கோட்பாட்டின் அடிப்படை தூண்டல்-துலங்கல்
26 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது
27 சராசரி நுண்ணறிவு ஈவு 90-109
28 ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்
29 தர்க்கரீதியான சிந்தனை என்பது விரி சிந்தனை
30 நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் எபிங்கஸ்
31 தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் கார்ல்ரோஜர்ஸ்
32 கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு
33 மனப்போராட்டங்களின் வகைகள் 3
34 கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்
35 கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் Y
36 நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? CAVD
37 தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம் புலன் உறுப்புகள்
38 குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் ஸ்டான்லி ஹால்
39 உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி
40 நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் உயிரியல் மரபு நிலை
41 ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு r = 0.87
42 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை ....... கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை
43 உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் கோலர்
44 தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றது நல்வழி காட்டுதல்
45 நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது 15-16
46 ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை 10
47 அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் யுங்
48 ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை
49 மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது 3-6
50 ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது SER = DXSHR x K - I
51 மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
52 கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது? 87.5 & 114.5
53 ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது சிக்காகோ
54 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
55 ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது 8
56 நினைவின் முக்கிய இரண்டு வகைகள் STM & LTM
57 VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நினைவு சூத்திரங்கள்
58 புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு,ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு,ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை
59 கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
60 கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
61 பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
62 தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
63 கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
64 மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
65 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்
66 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
67 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது பரிசு
68 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்
69 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென்.
70 நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு
71 புலன் காட்சிகள் அடிப்படை கவனம்
72 நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது கவனித்தல்
73 சமூக மனவியல் வல்லுநர் பாவ்லாவ்
74 உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் கான்ட்
75 சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் மெக்லீலாண்ட்
76 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது அயோவா
77 ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர் மெண்டல்
78 புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது சூழ்நிலை
79 நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை.
80 தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை ஏழு
81 அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.
82 பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது உடல் தேவை
83 ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை மூன்றாம் நிலை.
84 சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது பெரு மூளை
85 மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் மனவெழுச்சி
86 மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் அறிவுத்திறன் வளர்ச்சி.
87 ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது பால்லாவ்
88 கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் சுல்தான்
89 உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் கோஹலர்
90 ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் சோபி
91 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் டார்வின்
92 மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன மனவெழுச்சி நீட்சி
93 குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் தார்ண்டைக்
94 தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல்
95 முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் மெக்லிலாண்டு
96 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் ஃபிராய்டு
97 மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் அடிப்படைத் தேவைகள்
98 தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் மாஸ்லோ
99 முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் ஜான்டூயி
100 டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
101 புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் மாண்டிசோரி
102 ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை பரிசோதனை முறை
103 தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை பரிசோதனை முறை
104 பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் ஏ.குரோ, சி.டி.குரோ
105 வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை வினாவரிசை முறை
106 இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை
107 நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை அகநோக்கு முறை
108 எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை போட்டி முறை
109 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் குரோ, குரோ
110 உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் கான்ட்
111 ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் வாட்சன்
112 மனிதனின் புலன் உறுப்புகள் அறிவின் வாயில்கள்
113 புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை ஐந்து
114 ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்
115 ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன வளருதல்
116 பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு தற்காலச் செய்திக் கோட்பாடுகள்
117 சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை பொருள்கள் காரணிகள்
118 தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது கவன மாற்றம்
119 முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7
120 குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு
121 குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது குமாரப்பருவம்
122 ஸ்கீமா எனப்படுவது முந்தைய அறிவு
123 மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்சாட்டில்
124 குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் நெஸ் மற்றும் ஷிப்மேன்
125 தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
126 தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு
127 தன்னையே ஆராயும் முறை என்பது அகநோக்கு முறை
128 உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் சாக்ரடீஸ்
129 ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை உற்றுநோக்கல் முறை
130 மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது ஆசிரியர்
131 மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்
132 ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் நான்கு
133 நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் வெஸ்ச்லர்
134 பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் ஒத்திருக்கும் விதி
135 ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் கிரிகோர் மெண்டல்
136 ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது வேற்றுமுறை விதி.
137 மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
138 கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை 1260
139 அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
140 அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை
141 ஆரம்பக் கல்வி வயதினர் பின் குழந்தைப் பருவம்
142 ஒப்பர் குழு என்பது சமவயது குழந்தைகள்
143 அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம்.
144 உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
145 குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது பாராட்டும், ஊக்கமும்
146 தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல்
147 சிக்கலான மனவெழுச்சி பொறாமை
148 மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை மனவெழுச்சி
149 மிகை நிலை மனம் ஏற்படும் வயது 3-6
150 அடிப்படை மனவெழுச்சி சினம்
151 அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
152 வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது பேசுதல்
153 மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
154 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
155 குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
156 மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
157 வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
158 குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
159 சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
160 குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
161 அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர் பியாஜே
162 அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
163 அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.
164 மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
165 உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
166 தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005
167 மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
168 சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
169 குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
170 பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்
171 பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்
172 குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
173 கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை
174 ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்
175 குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
176 குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
177 குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது. தன்னடையாளம்
178 தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
179 குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
180 உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
181 நடத்தையைப் பற்றி ஆராயும் இயல் உளவியல்
182 வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றவை
183 பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்
184 புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி
185 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல்
186 தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது
187 பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
188 செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
189 மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
190 இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் கற்றல்
191 கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்
192 ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்
193 நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
194 கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்
195 வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
196 மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
197 உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
198 உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
199 முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
200 தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
201 மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
202 அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
203 நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon
204 கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
205 மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
206 சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
207 முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல. கெஸ்டால்ட் Gestalt.
208 ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov பாவ்லவ் Irvan petrovich Pavlov
209 முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
210 நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
211 உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
212 உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
213 நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
214 நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
215 நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
216 நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
217 நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
218 நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
219 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
220 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
221 பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
222 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
223 மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
224 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
225 அடைவூக்கம் டேவிட் மெக்லிலெண்ட்
226 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
227 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
228 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo)
229 பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்
230 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
231 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
232 குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
233 கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
234 பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
235 மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
236 பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்
237 தனி நபர் உளவியல் - ஆட்லர்
238 உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
239 வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்
240 வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
241 அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்
242 வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
243 மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
244 தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி
245 தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்
246 தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)
247 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
248 படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ
249 அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
250 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
251 மறத்தல் சோதனை - எபிங்காஸ்
252 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
253 பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
254 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
255 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
256 குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
257 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
258 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
259 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
260 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
261 ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12
262 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா
263 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
264 தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
265 உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் - சிக்மண்ட் பிராய்டு.
266 உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
267 பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் - ஆன்மா.
268 பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
269 மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
270 வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
271 உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
272 அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
273 கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
274 சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
275 உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - நீந்துதல்.
276 அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
277 மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
278 வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
279 கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு கல்வி உளவியல்
280 பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.
281 தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
282 உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
283 உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
284 உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
285 வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.
286 மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
287 அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
288 குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
289 அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
290 குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
291 குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
292 திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை
293 ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
294 புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். மனபிம்பம்
295 பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
296 புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை - மூன்று நிலைகள்.
297 ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
298 புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
299 குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
300 கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
301 ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
302 நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
303 ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை
304 எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
305 கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
306 வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
307 தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
308 கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
309 உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
310 உற்று நோக்கலின் படி - நான்கு
311 லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
312 சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
313 சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
314 உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
315 கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
316 பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
317 மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
318 வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
319 கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
320 அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
321 அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
322 மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
323 எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
324 எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
325 குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
326 மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
327 சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
328 உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
329 உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
330 வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
331 பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
332 முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
333 மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
334 தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
335 குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
336 தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
337 எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
338 வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். குமரப் பருவம்.
339 மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
340 பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
341 பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
342 மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
343 மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
344 உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
345 கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
346 முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
347 சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
348 ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
349 தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
350 ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.
351 காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
352 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
353 சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
354 மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
355 பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
356 குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
357 ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
358 ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.
359 பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமா?

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.
நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர்கள்:

சர்டிபைடு எதிகல் ஹாக்கர்ஸ் பிரிவில் 2,சைபர் பாரன்சிக் அனலிஸ்டில் 2,அப்ளிகேஷன் செக்யூரிடி டிஸ்டம்சில் 4,மேனேஜர் (சி.ஏ.,)வில் 27,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 5,டேடா அனலிடிக்ஸ் மேனேஜரில் 4,பினான்ஸ் அனலிஸ்டில் 3,எகனாமிஸ்டில் 2,அப்ளிகேஷன்/வெப் செக்யூரிடி பெர்சானல் இன்பர்மேஷன் செக்யூரிடி அட்மினிஸ்ட்ரேடரில் தலா 1,பிஸினஸ் அனலிஸ்ட் டேடா வேர்ஹவுஸ் ஸ்பெஷலிஸ்டில் இ.டி.எல்., ஸ்பெஷலிஸ்ட்பி.ஐ., ஸ்பெஷலிஸ்டில் டேடா மைனிங் எக்ஸ்பர்டில் 2,செக்யூரிடி மேனேஜரில் 19,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 11,சீனியர் மேனேஜர் (பினான்ஸ்)-2 

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவம் தேவை. விபரங்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.


தேர்வுசெய்யும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் சமர்ப்பிக்கலாம்.


 விண்ணபிக்க  கடைசி நாள்: 05.04.2017


மேலூம் கூடுதல் விபரங்களுக்கு   https://www.canarabank.in/ என்ற இணையதள முகவரி பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எஞ்சினீயரிங் பட்டதாரிகளுக்கு INDBANK-ல் பணி



இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கி சென்னைக்கு நிரப்பப்பட உள்ள பொறியியல் செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 12

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Secretarial Officer - 11

பணி: Dealer - 01
தகுதி: 01.01.2017 தேதியின்படி பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு 2.63 லட்சம்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://corporate.indbankonline.com/Advertisement%20for%20recruitment%20of%20System%20Engineer%20and%20Dealer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
1.தமிழச்சி'- என்ற நூலை எழுதியவர்? வாணிதாசன்
2.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை


16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்

Psychology Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

கற்றலும் அறிவும் 



1. தேசியக் கல்வி கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1986

2. குழந்தை மையப்படுத்திய கல்வி முறையின் தந்தை எனப்படுபவர; - ரூஸோ

3. கற்றல் என்பது ........ ஆகும் - செயலுறு நிலை

4. திறந்தவெளிப் பல்கலைக்கழகம் செயல்படும் தத்துவம் - வாழ்நாள் முழுவதும் கல்வி

5. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன்

6. யுடிளவசயஉவ வாiமெiபெ என்பது - கருத்தியல் சிந்தனை

7. குருகுலக் கல்வி முறையில் கல்வி பயின்றோர் - அரசர்

8. தேசிய கலைத்திட்ட கல்வி பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு எது? - 2005

9. ஆயத்த நிலை .......... எனப்படுகிறது - பழுத்த நிலை 

10. கற்றலைத் தீர்மானிக்கும் காரணி எது? - மகிழ்ச்சியான வகுப்பறைச் சு+ழல்

11. அறிவு வளர்ச்சிக்கு உதவும் திறன் - புலன்காட்சித் திறன், மொழித் திறன், நினைவாற்றல்

12. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன் 

13. இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்தவர் - அபுல் கலாம் ஆசாத் 

14. கோத்தாரிக் கல்விக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு - 1966

15. இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1985

கற்றலும், அறிவும் பற்றிய சில குறிப்புகள் :

கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் :

🌟 முன்பு கற்ற ஒன்று தற்போது ஒன்றினில் மாற்றத்தை ஏற்படுத்துவது கற்றல் மாற்றம் எனப்படும்.

🌟 முன்பு கற்றலைத் தற்போது கற்றுக் கொள்வதிலும், தற்போது கற்கின்ற ஒன்று முன்பு கற்றதிலும் சில விளைவுகளை ஏற்படுத்துவது கற்றல் விளைவு எனப்படும்.

🌟 ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு, செயல்திறன், பழக்க வழக்கங்கள், மனப்பான்மை போன்ற எந்த அளவைக் கூறும் வேறொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றல் மாற்றம் எனப்படும்.
1.வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை? தாலமி
3..இயற்பியலின் தந்தை? நியூட்டன்
4..வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?பிளேட்டோ
12..மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை? யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை 
2. கோவை 
3. மதுரை 
4. திருச்சி 
5 தூத்துக்குடி 
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி 
2. சேலம் 
3. வேலூர் 
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர் 
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி 
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958 
ஆண் 36158871 
பெண் 35980087

Psychology - TET Exam ! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

1. அடைவு ஊக்கி (யுஉhநைஎநஅநவெ அழவiஎந) பற்றி ஆய்வு செய்த அறிஞர் யார்? - அட்கின்சன்

2. 'எல்லா கற்றல்களிலும் ஏதேனும் ஒருவகை ஊக்கி இருத்தல் அவசியம்" என்று கூறுபவர் - ஜார்ஜ் கெல்லி

3. வலிவு+ட்டல் என்பது ஒரு - தூண்டுகோல் 

4. ஊக்கிகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? - 3

5. அடைவு+க்கம் மிக்கவரிடம் காணப்படுவது? - உயர் அவாவு நிலை

6. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - சிக்மண்ட் பிராய்ட்

7. யுஉhநைஎiபெ ளுழஉநைவல எனும் நு}லை எழுதியவர் - டேவிட் மெக்லிலெண்டு

8. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்

9. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோவ்

10. ஒரு திறமையான ஆசிரியர் தனது மாணவர்கட்கு கல்வியின் நோக்கம் என எதைக் காட்டுவார்? - வெற்றி

11. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடையை நோக்கி குவிந்து செல்வது ......... எனப்படும் - குவி சிந்தனை

12. ஆக்கத்திறனுடன் தொடர்புடையது எது? - விரி சிந்தனை

13. ஆக்கத்திறனைக் கண்டறியும் புதுமை பயன் சோதனையைக் கண்டறிந்தவர் யார்? - மால்ட்ஸ்மேன்

14. கனவுகள் ஆய்வு என்ற நு}லை எழுதியவர் - சிக்மண்ட் பிராய்ட்

15. அடைவு ஊக்கிக்கு ஆதாரமாக அமைவது - தன் மதிப்பு

Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

1. அ, இ, உ மூன்றும் ....... எழுத்துக்கள் - சுட்டு எழுத்துக்கள்

2. தமிழின் மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? - 18

3. தனித்து இயங்கி, முதன்மை பெற்று வழங்கும் எழுத்துக்கள் யாவை? - முதலெழுத்துக்கள்

4. முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 30

5. சார்பெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 10

6. ஐகாரக்குறுக்கம், ஒளகார குறுக்கம் என்பது ....... சார்பெழுத்துகள்

7. உயிர்மெய் (நெடில்) எழுத்து பெறும் மாத்திரை? - 2 மாத்திரை

8. ஆசிரியர் வந்ததும் கேள்வி கேட்பார் என்பது எந்த காலத்தைக் குறிக்கும்? - எதிர்காலம்

9. தமிழ் இலக்கணத்தில் திணை என்னும் சொல் தரும் பொருள் - பிரிவு

10. கண் சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம் என்பது ....... ஆகும் - மாத்திரை

11. தமிழ் மொழியில் பால் எத்தனை வகைப்படும்? - 5

12. 'வண்டு" என்பது எந்த வகை குற்றியலுகரம்? - மென்தொடர் குற்றியலுகரம்

13. 'அஃது" என்பது ......... குற்றியலுகரம் - ஆய்தத்தொடர்

14. குறுகிய ஓசையுடைய இகரம் எது? - குற்றியலிகரம்

15. புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும்? - 7

Tamil Questions Only for You !! சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்கள்

1. தமிழ் முனிவன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - அகத்தியர்

2. ஐந்திரம் நிறைந்தவன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - தொல்காப்பியர்

3. தெய்வ மொழிப்பாவலர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருவள்ளுவர்

4. குறிஞ்சிக்கவி என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - கபிலர்

5. வரலாற்றுப் புலவர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - பரணர்

6. அருந்தமிழ்ச் செல்வி என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - ஒளவையார்

7. தண்டமிழ் ஆசான் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சீத்தலைச்சாத்தனார்

8. ஆளுடையப்பிள்ளை என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருஞானசம்மந்தர்

9. புனிதவதியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - காரைக்கால் அம்மையார்

10. மருள்நீக்கியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - திருநாவுக்கரசர்

11. வன்தொண்டர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சுந்தரர்

12. தென்னவன் பிரம்மராயன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - மாணிக்கவாசகர்

13. தொண்டர்சீர் பரவுவார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - சேக்கிழார்

14. சு+டிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;? - ஆண்டாள்

15. தமிழ்வியாசர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர;?- நம்பியாண்டார் நம்பி

General Tamil Questions with Answers !! செய்யுள் நு}ல்களைப் பற்றிய சிறப்பான தகவல்கள் !!

1. விருத்தம் என்னும் வெண்பாவில் புகழ்பெற்றவர்? - கம்பர்

2. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர்? - வரதநஞ்சையப்பிள்ளை

3. உமாமகேசுவரனார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வரதநஞ்சையப்பிள்ளை இயற்றிய நு}ல்? - தமிழரசி குறவஞ்சி

4. அகமும் புறமும் பற்றிய நு}ல்? - பரிபாடல்

5. புறம், புறப்பாட்டு என வழங்கப்பெறுவது? - புறநானு}று

6. புறநானு}ற்றிலுள்ள திணைகளின் எண்ணிக்கை? - 4

7. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை கருவு+லமாக கொண்டு விளங்கும் நு}ல்? - புறநானு}று

8. முனிவர் கண்ட பொருள் இது என்று உணர்த்துவது? - பொருண்மொழிக்காஞ்சி

9. அகநானு}ற்றைத் தொகுத்தவர்? - மதுரை உப்பு+ரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார்

10. எட்டுத்தொகை நு}ல்களுள் முதலாவதாக அமையப் பெற்றது? - நற்றிணை

11. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர்? - கபிலர்

12. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு? - காதை

13. நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று கூறியவர்? - இளங்கோவடிகள்

14. கம்பராமாயணம் எத்தகைய நு}ல்? - வழிநு}ல்

15. தேம்பாவணியில் இடம் பெற்றுள்ள காண்டங்கள்? - மூன்று





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

Tamil Questions Only for You !! செய்யுள் நு}ல் பற்றிய செய்திகள் !!

1. உமறுப்புலவர் எழுதிய மற்றொரு நு}ல்? - முதுமொழிமாலை

2. சின்னச்சீறா என்ற நு}லை எழுதியவர்? - பனு அகமது மரைக்காயர்

3. கிறித்துவக் கம்பர்? - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

4. இரட்சணிய யாத்திரிகத்துள் இடையிடையே அமைந்த இசைப்பாடல்களின் பெயர்? - தேவாரம்

5. தம்பிரான் தோழர் என்பவர்? - சுந்தரர்

6. தமிழ்ப் பல்கலைகழகத்தின் தமிழன்னை விருது பெற்றவர்? - அப்துல் ரகுமான்

7. பாக்களிலே பல சொல்லாய்வுகளுக்கு வித்திட்ட உவமைக் கவிஞர்? - சுரதா

8. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினை பெற்றவர்? - வாணிதாசன்

9. சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது? - பள்ளு

10. முப்பெரும் பாடல்களுள் ஒன்று? - பாஞ்சாலி சபதம்

11. மேக சந்தேசம் என்ற உலகப் புகழ்பெற்ற நு}லை இயற்றியவர்? - காளிதாசர்

12. அஷ்டபிரபந்தம் இயற்றியவர்? - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

13. சொற்றொடர் நிலை எனப்படுவது? - அந்தாதி

14. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்? - நந்திக்கலம்பகம்

15. பிரபந்தம் தொண்ணு}ற்றாறு என்று கூறிப் பெயர்களை வகைப்படுத்தியவர்? - வீரமாமுனிவர்





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

About Scholars and Inventions !! பொது அறிவு - அறிவியல் கண்டுபிடிப்புகளும் மற்றும் அறிஞர;களும்

1. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்

2. புரோட்டான் - ரூதர்போர்டு

3. நியு+ட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

4. தெர்மா மீட்டர் - கேப்ரியல் பாரன்ஹீட்

5. ரேடியோ - மார்க்கோனி

6. பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்

7. குளிர் சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹhரிசன்

8. அணுகுண்டு - ஆட்டோஹhன்

9. லாகரிதம் - ஜான் நேப்பியர்

10. பந்துமுனை பேனா - ஜான் ஜே. லவுட்

11. சைக்கிள் - கே. மெக் மிலன்

12. காம்பஸ் - எல்மர் ஸ்பேரி

13. சைக்கிள் டயர் - டன்லப்

14. செல்போன் - பிரண்டன் பெர்ஜர்

15. சிமெண்ட் - ஜோசப் ஆஸ்ப்தீன்

16. டீசல் - என்ஜின் ருடால்ப் டீசல்

17. மின்காந்தம் - வில்லியம் ஸ்டார்ஜியன்

18. ஜெனரேட்டர் - பிசியன்ட்டி

19. கண்ணாடி - ஆகஸ்பெர்க்

20. ரிவால்வர் - சாமுவேல் கோல்ட்





தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 

Psychology Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

1. கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி

2. கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி

3. பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்

4. மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்

5. குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்

6. புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்

7. புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்

8. திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை

9. சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்

10. செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி

11. அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்

12. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்

13. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்? - மெண்டல்

14. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்

15. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு

உளவியல் கோட்பாடு மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்தவர;கள் :

👉 மறத்தல் சோதனை - எபிங்காஸ் 

👉 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

👉 அடைவு+க்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

👉 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

👉 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்

👉 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

👉 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

👉 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

👉 குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹhல்

👉 கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யு+��

General Social Science Question and Answer for Teachers Exam..!! பொது அறிவு - 6 ஆம் வகுப்பு : முதல் பருவம் - சமூக அறிவியல்

1. 2004 இல் ஒரே இடத்தில் ------------------- க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன? - 160

2. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது? - நாய்

3. ஹரப்பா நாகரிகம் -------------- - நகர நாகரிகம்

4. அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் சு+ட்டப்பட்ட ஆண்டு எது? - 1967

5. தென்மதுரை மூழ்கியதால் எதனைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது? - கபாடபுரம்

6. மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் எது? - லெமூரியா

7. புதன், வெள்ளி, பு+மி, செவ்வாய் ஆகிய நான்கும் -------------- ஆகும் - திடக்கோள்கள்

8. செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே, புள+ட்டோ முதலியன எந்த ஆண்டு புதிதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? - 2006

9. இந்தியாவின் வானவியல் அறிஞர்? - வைணுபாப்பு

10. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களின் எண்ணிக்கை யாது? - 63

11. சனி, சு+ரியனைச் சுழன்றவாறு சுற்றி வரும் காலம் எது? - 29 ஆண்டுகள் 5 மாதங்கள்

12. சந்திரனின் மறுபக்கத்தை முதன் முதலில் புகைப்படம் எடுத்த செயற்கைக்கோள் எது? - லு}னா

13. சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முதலீடு எது? - கல்வி

14. சமுதாயத்தின் பொறுப்பிலிருந்த யாருடைய வருகைக்குப் பின் படிப்படியாக அரசின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது? - ஆங்கிலேயர்கள்

15. சு+ரியனிடமிருந்து பு+மியின் தொலைவு யாது? - 15 கோடி கி.மீ



தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர; காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு 


நல்ல பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும், பயிற்சி செய்ய போதுமான வசதி இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் தரமான தகவல்கள் காத்திருக்கிறது புதிய வுNPளுஊ வுயஅடை அப்ளிகேசனில் !

General Tamil Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதிதாசன் 


1. பாரதிதாசன் பிறந்த தினம் - ஏப்ரல் 29, 1891 

2. பாரதிதாசனின் புனைப்பெயர் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் 

3. பாரதிதாசனின் ஊர் - புதுச்சேரி 

4. பாரதிதாசனின் இயற்பெயர் - கனக சுப்பு இரத்தினம் 

5. பாரதிதாசன் ----------- எனும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார் - குயில் 

6. புரட்சிக்கவி என்று பாரதிதாசனை பாராட்டியவர் யார்? - அறிஞர் அண்ணா 

7. பிசிராந்தையார் என்ற நு}லுக்கு 1969-ல் ---------------- விருது கிடைத்தது - சாகித்ய அகாதமி

8. பாரதிதாசனின் பெற்றோர் - கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள் 

9. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பாரதிதாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1954 

10. பாரதிதாசனின் படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் ------------ இல் பொது உடைமையாக்கப்பட்டன. - 1990 

11. அகத்தியன் விட்ட புதுக்கரடி என்ற நு}லின் ஆசிரியர் - பாரதிதாசன் 

12. பாரதிதாசன் ----------- ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார் - 1920 

13. கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், நாடோடி என்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் - பாரதிதாசன் 

14. எந்த ஆண்டு புதுவையில் கவிஞரின் நினைவு மண்டபம் புதுவை நகரசபையால் கட்டப்பட்டது - 1965 

15. பாரதிதாசன் இறந்த தினம் - ஏப்ரல் 21, 1964 (அகவை 72) 


பாரதிதாசன் பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் :

📃 பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், 'புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவி என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

📃 1946 - அவரது 'அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் தங்கக் கிளி பரிசு வென்றார்