யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/16

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார். "ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/- "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/- ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.326.85 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.


பேராசிரியர் நியமன விதிமீறல் யு.ஜி.சி., எச்சரிக்கையால் மாணவர்கள் அச்சம்

விதியை மீறிய பேராசிரியர் நியமனத்தை பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அங்கீகரிக்காது' என, பல்கலைகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவுகளின் சான்றிதழ் செல்லுபடியாகுமா என, மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு பல்கலையிலும், யு.ஜி.சி., மூலம், கல்வி நிறுவனத்துக்கும், பாடப்பிரிவுகள், உள் கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும். யு.ஜி.சி., விதிகளின் படி, பேராசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு வைக்க வேண்டும். அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்.இதன்பின், ஆசிரியர்களின் விவரங்களை யு.ஜி.சி.,க்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட பல்கலைகளுக்குட்பட்ட கல்லுாரிகளில் ஆசிரியர் நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
திருவள்ளுவர் பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் நடந்த விதிமீறல் புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 
தொடரப்பட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த யு.ஜி.சி., 'திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில், மொத்தமுள்ள, 4,240 ஆசிரியர்களில், 1,970 பேருக்கு மட்டுமே, யு.ஜி.சி.,யின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 
'மற்றவர்களை விதிகளின் படி நியமிக்காத நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுத்து, பல்கலையில் இருந்து அறிக்கை தர வேண்டும்' என, தெரிவித்தது. நீதிமன்றமும் இதே உத்தரவை பிறப்பித்தது.
ஆனால், இதுவரை திருவள்ளுவர் பல்கலை உள்ளிட்ட பல்கலைகள் பேராசிரியர் பட்டியலை, யு.ஜி.சி.,யிடம் அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பிரிவுக்கு யு.ஜி.சி., அனுமதி உள்ளதா என அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, யு.ஜி.சி., தலைவர் தேவராஜ் கூறும் போது, ''பேராசிரியர் நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி.,யிடம் பல்கலைகள் அனுமதி வாங்குவது கட்டாயம். அதில் சலுகைக்கு இடமில்லை. ''எந்தெந்த கல்லுாரிகளில் விதிகளை மீறி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை, யு.ஜி.சி., சேகரித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்

உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ், 7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன. 

பற்றாக்குறைஉள்ளாட்சி அமைப்புக்களில் உள்ள துப்புரவு பணியாளர்களே இப்பள்ளிகளின், கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர்.'உள்ளாட்சி அமைப்பில் உள்ள, 24 ஆயிரத்து, 928 முழுநேர துப்புரவு பணியாளர்கள், பிற துப்புரவு பணிகளுக்கு மத்தியில், பள்ளிக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடியாமல்உள்ளனர். எனவே, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தனியாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என, திடக்கழிவு மேலாண்மை மற்றும் துாய்மை இந்தியா திட்ட விதிகள் வலியுறுத்துகின்றன.
இதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புக்களின் பராமரிப்பில் உள்ள பள்ளிகளுக்கு, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது குறித்து, தமிழக அரசின், 
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை, தனியார் முகமைகளிடம் ஒப்படைக்கலாம். அல்லது, முழுநேரம் மற்றும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உள்ளாட்சி அமைப்புகள் நியமிக்கலாம்.
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை, உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்யலாம். துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.சுகாதார உத்தரவாதம்இதற்கான செலவை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக் கழிவு மேலாண்மை திட்ட நிதியில் இருந்தும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி வரி மூலமும் ஈடுகட்டலாம். 2015 - 16ல், 
கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க, 17 கோடி ரூபாயும், துப்புரவுப் பணியாளர் ஊதியத்துக்காக, 40 கோடி ரூபாயும் என ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, உள்ளாட்சி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி கழிப்பறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல நேரங்களில், பள்ளி கழிப்பறைகளிலிருந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்பில் போதிய, துப்புரவுப் பணியாளர் இல்லாத நிலையில், துாய்மைப் பணியை தனியாரிடம் அளிக்க அரசு முன் வந்துள்ளது. இத்திட்டம் மூலம், குழந்தைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு ஊழியர் பிரச்னை தீரவில்லை உணவு வழங்குவதை நிறுத்த முடிவு

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சத்துணவு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறாததால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர்.
இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளரை (சத்துணவு) இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.பின் நிர்வாகிகளுடன் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. இதுவரை உறுதியளித்தப்படி கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன் கூறியதாவது: நான்கு பேருக்கு 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின் இடமாறுதல் உத்தரவும் ரத்து செய்யப்படவில்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இல்லாவிட்டால் மாநாட்டில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தும் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும், என்றார்

சத்துணவு ஊழியர் சங்கம் ஜெ., மீது குற்றச்சாட்டு

தேனி:கடந்த சட்டசபை தேர்தலில் எங்களிடம் ஆதரவு கேட்ட முதல்வர் ஜெ., தற்போது கோரிக்கை தொடர்பாக சங்க பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார்என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதிய திட்டம் கோரி போராட வேண்டிய கட்டத்தில் உள்ளோம். எங்களின் கோரிக்கைகளை மாறி,மாறி வரும் இரு அரசுகளும் நிறைவேற்ற மறுக்கின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,
குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3, 050 வழங்க வேண்டும். 33 ஆண்டுகளில் சத்துணவு ஊழியர்களில் 40 ஆயிரம்பேர் வரை ஓய்வு பெற்றுள்ளனர். இன்னும் மூன்று ஆண்டுகளில் 60 சதவீதம் பேர் ஓய்வு பெற உள்ளனர். பணியாளர்களுக்கு ஒட்டு மொத்த
ஓய்வூதிய பலனாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம்.'2011 சட்டசபை தேர்தலில் மக்கள் பிரச்னை தீர, புதிய ஆட்சி அமைய அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வழங்குங்கள்,' எனக்கேட்டு எங்கள் சங்கத்திற்கு முதல்வர் ஜெ.,கடிதம் வழங்கினார். ஆனால் எங்களின் கோரிக்கை நிறைவேற்ற சங்க பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார். ஜன., 22ல் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் முதல்வரை சந்திக்கும் பெருந்திரள் முறையீட்டில் நாங்களும் பங்கேற்போம்,”என்றார்.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிப்பு

புதுடில்லி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு மார்ச்1ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி முடிவடைகிறது. சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது

செய்முறை தேர்வை ஒத்தி வைத்தால் தேர்ச்சி அதிகரிக்கும்

பிளஸ் 2 தேர்வு முடிந்த பின், விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, 15 நாள் வரை ஆசிரியர்களுக்கு இடைவெளி கிடைக்கிறது. அந்த இடைவெளியில், நடப்பு கல்வியாண்டுக்கான செய்முறை தேர்வை ஒத்தி வைக்கும் பட்சத்தில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் 
தெரிவித்தனர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்னதாக, பிப்ரவரி முதல்வாரத்தில் துவங்கி, நான்காவது வாரம் வரை, செய்முறை தேர்வு நடத்தப்படும்.

நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 'ரிவிஷன்' செய்வதற்கான கால அவகாசம் மாணவர்களுக்கு இல்லை. இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
நன்மைகள் பிளஸ் 2 வகுப்பின் முதன்மை தேர்வுகள், மார்ச், 23 தேதிக்குள் முடிந்துவிடுகின்றன. அதன் பின், முதுநிலை ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் மதிப்பீட்டு முகாம், ஏப்ரல் மூன்றாம் வாரத்தில்தான் 
நடத்தப்படுகிறது. இந்த இடைவெளியில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை நடத்துவதன் மூலம், மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன், தேர்ச்சி விகிதமும் 
அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பதற்றம் பொதுத்தேர்வுக்கு தயராகும் பதற்றத்தில் மாணவன் உள்ள சமயத்தில் செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், அவனது கவனம் இரண்டும் கெட்டானாய் அலைபாயும். அதிலும், நடப்பு கல்வியாண்டில், ரிவிஷன் செய்ய நேரம் இல்லாததால், செய்முறை தேர்வின் போது, பதற்றம் அதிகரிக்கும்.
இதை தவிர்க்க, எழுத்துத்தேர்வு முடிந்த பின், மார்ச் 25ம் தேதி முதல், ஏப்ரல், 10ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தலாம். இதன் மூலம், பிப்ரவரி மாதம் முழுவதும் ரிவிஷன் செய்ய முடியும். மேலும் செய்முறை தேர்வு மதிப்பெண் குறைத்துவிடுவர் என்ற பயத்தில், மாணவர்கள், சிறப்பு வகுப்புகளுக்கும், ரிவிஷன் வகுப்புகளுக்கும் தவறாமல் வர வாய்ப்புள்ளது. 
விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு, 15 நாள் இடைவெளி உள்ளதால், அப்பணிகளும் செய்முறை தேர்வினை ஒத்தி வைப்பதால் பாதிக்கப்படாது. செய்முறை தேர்வினை, பொதுத்தேர்வுக்கு பின் நடத்துவதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு

ராமநாதபுரம்: முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.
அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயில ஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர்.

முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது. 
இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு கற்றல் கையேடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தேர்வுக்கு தயாராகும் வகையில் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் ஆர்எம்ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி அந்தோணி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மோகன சந்திரன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சீதாலட்சுமி பங்கேற்று 10, 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் கற்றல் கையேட்டை வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்கள் தைரியமாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இந்த கற்றல் கையேடு வழங்கப்படுகிறது. மாணவர்கள் இந்தக் கையேட்டை முழுமையாகப் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளிகளின் துணை ஆய்வாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கே.சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு அன்று விடுப்பு எடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பலன்கள் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அன்று பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே அக்குழு அளித்த ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஒருவேளை புத்தாண்டு அன்று பணிக்கு வர ஊழியர்கள் தவறும் பட்சத்தில் அன்றிலிருந்து அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் தள்ளிப்போகலாம்.

முன்னதாக, துணை ராணுவப் படையும் தங்களது அதிகாரிகளிடம், புத்தாண்டு தினத்தில்

விடுப்பு எடுத்தால், மீண்டும் பணியில் சேரும் நாளில் இருந்தே ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவித்திருந்தது

புதிய ஓய்வூதிய திட்டம் கிளம்பும் புது பூதம் - என் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் எங்கே போச்சு?

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் அறிவிப்பு

சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.