யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/12/18

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1⃣8⃣ வயதிற்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் இருந்து வந்தது. இந்நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதெல்லாம் நடக்கும் என்று 100,101 G.O வெளிவந்த போதே யூகித்தோம். அதனால் தான் அதனை எதிர்த்தோம்.அடுத்து...........நடுநிலைப்பள்ளிகளை இணைத்தால் ஆசிரியர் பற்றாக்குறையே இருக்காது.போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.BEO அலுவலகங்களையும் மூடி விட்டால் ஊழியர் பற்றாக்குறையும் இருக்காது. பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு போடுவார்,Ceo,Deo க்கள் Mail ல் போடுவர்.தலைமை ஆசிரியர்கள் Mail பார்த்து Particulars அனுப்புவர். நிர்வாகம் சுலபம்,நிர்வாக செலவுகள் மிகவும் குறையும்.ஆசிரியர், ஆசிரியரல்லா பணியாளர் நியமனமே குறைந்தது 10 ஆண்டுகளுக்கு செய்யப்போவதில்லை.(மாணவர்கள் இருந்தால் Appointment செய்வோம் என மக்களை ஏமாற்றலாம்) சீர்திருத்தம் என்ற பெயரில் இலவசக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து கல்வித்துறையை படிப்படியாக தனியாருக்கு முற்றிலும் தாரை வார்ப்பதுதான் Plan. வழக்கம்போல இது அரசின் முடிவு.நாமென்ன செய்ய முடியும்?என ஆசிரிய சமூகம் வாளாயிருந்தால் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல நமது தலைமுறையினர் அனைவரும் என்பதை உணர்வீர்.

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்(28.12.2018) மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.



கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக இயற்றப்பட்டது.

1. 07.01.2018   அன்று அரசு வழியிலோ அல்லது உயர் நீதிமன்றம் வழியிலோ இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்காவிடில் 07.01.2018 அன்று மதுரை மாநகரில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு கூடி போராட்டத்தை அறிவிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

2. பள்ளிகள் இணைப்பு என்ற போர்வையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை ஒன்றிணைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.

மேலும் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தொலைநிலைக் கல்விக் கட்டணம்: அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலை. முடிவு


தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் கல்விக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது


தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை இப்போது உள்ளதைக் காட்டிலும் பன்மடங்கு உயர்த்தப்பட உள்ளது


குறிப்பாக ரூ. 100க்கும் குறைவாக இருந்த கட்டணங்கள் ரூ. 500 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்


இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறுகையில், மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ளதைப் போல, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்றார்