யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/3/17

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சமஸ்கிருதம்: நிர்மலா சீதாராமன் !!

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் 
வலியுறுத்துவேன்,'' என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை கோரி மனு !

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழுத் தலைவரை நியமிக்காத பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவில் உரிய எதிர்மனுதாரரைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழு தலைவர் பதவி 9 மாதமாக காலியாக உள்ளது.

  இதனால் 2016-17 கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணம் அறிவிக்கப்படவில்லை. எனவே, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழு தலைவரை நியமித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்திக் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு ஏற்கனெவே விசாரணைக்கு வந்தபோது தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழுத் தலைவரை விரைவில் நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததால் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபிதா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் மனு செய்யப்பட்டது.

 இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் உரிய அதிகாரியைஎதிர்மனுதாரராகச் சேர்த்து புதிய மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்

தமிழக நிதிநிலை( பட்ஜெட் ) அறிக்கை மார்ச் 16ல் தாக்கல் !!

2017-2018ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 16ல் தாக்கல்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை

நிதி அமைச்சர் ஜெயக்குமார் 
பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் மார்ச் 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்கம்.

2017- 2018ம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை மார்ச் 23 இல் தாக்கல்.

150 ஆண்டு போராட்டத்தில் கிடைத்த மகளிர் தினம் !!

1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர்.

 *சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும்
*எட்டு மணி நேர வேலை, *வேலைக்கு ஏற்ற ஊதியம், *பெண்களுக்கு வாக்குரிமை,
*பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர்.


 அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான்.

அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது.

 இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8.
 அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.

பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது.

 சமீபகாலமாக ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.

பெண்களை போற்றுவோம்.
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

வாட்ஸ் ஆப்' -ஐ கண்காணிக்கும் சிஐஏ: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!!!

வாட்ஸ் ஆப்‛ மூலம் அனுப்பப்படும் செய்திகள் ரகசியமானது என பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில், அந்த செய்தியை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., படிக்க முடியும் என விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட 8.761 பக்க அறிக்கை: ‛வாட்ஸ் ஆப்'பை ஹாக் செய்து செய்தியை படிக்கும் வசதி சி.ஐ.ஏ.,விடம் உள்ளது. தன்னிடம் உள்ள தொழில்நுட்பங்கள் மூலம், ‛வாட்ஸ் ஆப்', ‛டெலிகிராம்' உள்ளிட்ட செயலிகளை ஸ்மார்ட் போனை ஹாக் செய்து, அதில் உள்ள செய்திகள், ஆடியோ செய்திகள் 'என்கிரிப்சன்' செய்வதற்கு முன்னர் அவற்றை சி.ஐ.ஏ.,வால் பார்க்க முடியும். 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பப்படும் செய்திகளை உளவாளிகள் பார்க்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

13வது ஊதிய ஒப்பந்த பேச்சு; 30 நிமிடங்களில் முடிந்தது!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதற்கட்ட பேச்சு, 30 நிமிடங்களில் முடிந்தது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களின் ஊதியத்திற்காக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய 
ஒப்பந்தம் செய்யப்படுகிறது. 2016 ஆகஸ்டுடன், 12வது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்தது. முன்னாள் முதல்வர், ஜெ., உடல்நலமின்மை, இறப்பு உள்ளிட்ட காரணங்களால், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு உரிய நேரத்தில் துவக்கப்படவில்லை. பேச்சை உடனே துவக்கக் கோரி, தொழிற்சங்கங்கத்தினர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், ஜன., 13ல், பேச்சுக்கான அதிகாரபூர்வ குழுவை, அரசு அமைத்தது.
அரசு நிதித் துறை துணை செயலர், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், அனைத்து கோட்ட நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட, 15 பேர், அக்குழுவில் இடம் பெற்றனர்.இந்நிலையில், நேற்று காலை, 11:50 மணிக்கு, குரோம்பேட்டையில் உள்ள, அரசு போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், பேச்சு குழுவினர் முன்னிலையில், தொழிற்சங்கத்தினருடன் பேச்சு துவங்கியது. 48 தொழிற்சங்கங்களில் இருந்து, தலா, இருவர் வீதம், பேச்சுக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல், 12:20 மணிக்கு, பேச்சு முடிவுற்றது.
இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை, பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கான நிலுவை தொகையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவற்றை செயல்படுத்தாமல், ஊதிய ஒப்பந்த பேச்சை தொடர்ந்தால், நிர்வாக செயல்பாடுகளில் சிக்கல் எழலாம் என, அனைத்து தொழிற்சங்கத்தினரும் வலியுறுத்தினர். 'பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்' என, அமைச்சர் உறுதி அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2,000 புதிய பேருந்துகள்

ஓய்வு பெற்றோருக்கான நிலுவை தொகை, 1,200 கோடி ரூபாய் உள்ளது. இது, 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கு, வரவுக்கும், செலவுக்கும் உள்ள பற்றாக்குறையே காரணம். இது தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், 2,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்.-விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர்.

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குழப்பம்!

பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு, வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதை சரிசெய்யும் வகையில், போனஸ் மதிப்பெண் தர, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில்
, நேற்று முன்தினம் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், ’பி’ பிரிவில், மூன்று மதிப்பெண்களுக்கான வினாக்கள், மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தின.



அதாவது, 61 முதல், 63 வரை, ஒரு மதிப்பெண் வினாக்கள் இருந்தன. ஒரு மூல வரியை கொடுத்து, அதன் உவமை மற்றும் உருவக வார்த்தையை சுட்டிக் காட்டும்படி கேட்கப்பட்டிருந்தது. இதில், 61 மற்றும், 62 ஆகிய இரு வினாக்களுக்கு இடையே, பெரிய இடைவெளி இருந்தது.



மேலும், 62வது வினாவை ஒட்டி, 63வது வினாவுக்கான மூல வரி இடம்பெற்றது. அதனால், எந்த மூல வரிகளுக்கு, எந்த பதில் எழுத வேண்டும் என, மாணவர்கள் குழப்பம் அடைந்து, விடைகளை மாற்றி எழுதி விட்டனர்.



இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:



வினாத்தாளில், இரண்டு வினாக்களுக்கு இடையில், தேவையற்ற இடைவெளி இருந்தது. அதனால், பல மாணவர்கள் குழம்பியதால், சரியான பதிலை எழுத முடியவில்லை. சிலர், 62வது வினாவுக்கு, 63வது வினாவுக்கான மூல வரியை பயன்படுத்தி, பதில் எழுதியுள்ளனர்.



இதுகுறித்து, ஆங்கில ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், 61வது கேள்வியில், உருவகம் என்பதற்கான, ’மெட்டபோர், பெர்சானிபிகேஷன்’ ஆகிய இரண்டு பதிலும் வர வாய்ப்புள்ளது.


இதில், மாணவர்கள் எதை எழுதியிருந்தாலும், பதில் அளிக்கலாம் என, ஆங்கில ஆசிரியர்கள் தெரிவித்தனர்.ஆங்கிலம் இரண்டாம் தாளில், ’சி’ பிரிவில், ஐந்து மதிப்பெண்களுக்கு, 100 வார்த்தைகளில் சுருக்கி, ஒரு கட்டுரை எழுதும் கேள்வி இடம் பெற்றுள்ளது.


அது, முந்தைய தேர்வுகளில், ’மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுது’ என, கேட்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் பலர், வினாத்தாளில் இருந்த கட்டுரையை, மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதியுள்ளனர். அவர்களுக்கும் முழுமையான மதிப்பெண் வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடா?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதி மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றில் முறைகேடாக உதவுவதாக புகார் உள்ளது.

இப்பகுதி மாணவர் ஒருவரின் தாய் ’தினமலர்’ அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசுகையில், ”கம்பத்தில் சில மெட்ரிக் பள்ளிகளில், நன்றாக படிக்கும் சில பிளஸ் 2 மாணவர்கள் மீது, நிர்வாகத்தினர் அதீத கவனம் செலுத்துகின்றனர்.

தமிழ், ஆங்கில தேர்வுகள் எழுதி வெளியே வந்த மாணவரின் வினாத்தாளை பெற்று, தவறான விடை ஏதும் எழுதியுள்ளாரா என விசாரிக்கின்றனர். ஒரு மார்க் வினா தவறு என மாணவர் குறிப்பிட்டால், மிக ரகசியமாக தேர்வு அறைக்கு உடனே சென்று விடைகள் திருத்தப்படுகிறது.

இதுபோன்ற முறைகேடால் எங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படுவர். கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வதில்லை,” என்றார்.

காரணம் என்ன

தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “மெட்ரிக் பள்ளிகளிடையே தொழில் போட்டி யால், இதுபோன்ற புகார்களை திட்டமிட்டு பரப்புகின்றனர். ஆனாலும் அவற்றின் தேர்வு அறை கண்காணிப்பாளரை தினமும் மாற்றுகிறோம்.

கலெக்டர், டி.எஸ்.பி., தலைமை யில் பறக்கும் படையினர் ஆய்வு செய்கின்றனர். மருத்துவ படிப்பிற்கான ’கட் ஆப்’ பெறும் தேர்வுகளின் போது, கம்பம் பகுதி பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர்களை மாவட்டத்தில் பிற பகுதியில் இருந்து அனுப்ப உள்ளோம்.

விடைத்தாளில் விடைகளை திருத்துவது உள்ளிட்ட தவறு நடக்க வாய்ப்பே இல்லை. எனினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.

நடுவானில் விமானப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இந்திய டாக்டர்!

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அன்சிதா மற்றும் அவரது கணவர் ஆக்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது,

விமானத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர் மயக்கம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவ உதவி தேவை என்று விமானத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த அன்சிதா, உடனடியாக அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்து, அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு விமான ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

சந்தையை கலக்க களமிறங்கியது ஐபோன் 6 32 GB..!!

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் என்றாலே தனி சிறப்பு உண்டு. ஐ போன் வைத்திருந்தாலே வசதி படைத்தவர்கள் தான் என கருத கூடும். அந்த அளவிற்கு அதிக விலையும் தரமும் மிக்கதாக இருக்கும்.

ஐ போன் மொபைல்


ஐபோன் 6 ஸ்மார்ட்போன் 16 gb, 64gb , 128 gb உள்ளிட்ட ஜிபி அளவை கொண்டு ,மூன்று விதங்களில் வெளிவந்தது .இந்நிலையில் தற்போது 32 ஜிபி அளவு கொண்ட, ஐபோன் 6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

ரூ.28,999 விலைக்கு விற்பனை

நிறம் : கிரே நிறம் கொண்டது

சிறப்பு சலுகை

ஐபோன் 6 ஸ்மார்ட்போன், தற்போதுதான் வெளிவர உள்ளதால், அறிமுக சலுகையாக ரூ.8550 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது என்பது கூடுதல் சலுகை. இச்சலுகையானது எக்சேஞ்ச் செய்யும் போது மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

4.7 இன்ச், 750x1334 பிக்சல் டிஸ்ப்ளே

ஐஓஎஸ் 10

ஏ8 பிராசஸர்

1 ஜிபி ரேம்

கேமரா :

பின்பக்க கேமரா : 8 எம்பி பிரைமரி கேமரா

முன்பக்க கேமரா : 1.2 எம்பி செல்ஃபி கேமரா

3௦ ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் ஐ போன் இது என்பதால் , விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.

மத்திய அமைச்சரவையிடம் ஜி.எஸ்.டி. மசோதா வரும் 22-ல் தாக்கல் !

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், வரும் 22-ந்தேதி ஜி.எஸ்.டி. மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

கவுன்சில்

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில்அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 11-வது கூட்டங்களில் 4 வகையான 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒப்புதல்

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை நடந்த 11 ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில், முக்கிய வரைவு சட்டங்களான மத்திய ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

16-ந்தேதி கூட்டம்

வரும் 16-ந்தேதி தொடங்கும் 12-வது கூட்டத்தில் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டத்துக்கும் ஒப்புதல் பெறப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை

இந்நிலையில்,ஜி.எஸ்.டி. துணைச் சட்டங்களான மாநில ஜி.எஸ்.டி. மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. ஆகியவை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வரும் 22-ந்தேதி நிதி அமைச்சகம் தாக்கல் ெசய்யும் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், மாநிலங்களுக்கான இழப்பீட்டுச் சட்டம், மத்திய ஜி.எஸ்.டி. சட்டம், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் ஆகியவை வரும் 27-ந்தேதி தாக்கல் ஆகும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள் ஜி.எஸ்.டி. மசோதாக்களை நிறைவேற்றி, ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு கொண்டு வருவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC: தமிழக அரசில் 333 உதவி வேளாண் அதிகாரி காலி பணியிடம் !!

தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் இன்று புதன்கிழமை (மார்ச்.8) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அறிக்கை எண்: 08/2017
விளம்பர எண்: 463

பணி: Assistant Agricultural Officer

காலியிடங்கள்: 326+7
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பதிவுக் கட்டணம்: ரூ.150
தேர்வுக் கட்டணம்: ரூ.150

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினர் 18 - 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.

தகுதி: +2 தேர்ச்சி பெற்று வேளாண் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், திருநெல்வேலி

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி விவரம்:
தாள்-I  02.07.2017 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை
தாள்-II 02.07.2017 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 04.03 மணி வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.04.2017

மேலும்  கூடுதல்  விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_8_not_eng_asst_agrl_officer.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu

நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி ??

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.



தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மசோதா மனிதவள மேம்பாடு, மருத்துவ நலம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இன்று தமிழக முதல்வர் அனுமதியுடன் நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் அரசு செயலாளர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அவரிடம் தமிழகத்திற்கு விலக்கு வேண்டி எடுத்துரைத்து வலியுறுத்தினோம். இதைப் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விஜயபாஸ்கர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான எங்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

மருத்துவத்தைப்போல், பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கும் தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நுழைவுத்தேர்வை நடத்தி தமிழகத்தின் பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை அமைச்சரிடம் எடுத்துக் கூறி எங்களுக்கு மற்றொரு நுழைவுத்தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தி உள்ளோம். இதையும் அவர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்" எனத் தெரிவித்தார்.

சென்னை குடிநீரில் கழிவுநீர் - பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!

கொரட்டூர் ஏரியின் எல்லையை வரையறுக்கவும், ஏரியில் கழிவுநீரை திறந்துவிட்ட லாரிகளை சிறை வைக்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரையொட்டி 850 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கொரட்டூர் ஏரி. 1970ஆம் ஆண்டுகளில் இந்த 
ஏரியை அப்பகுதியை சுற்றியுள்ள அக்ரகாரம், எல்லை அம்மன் நகர், சாரதா நகர், கண்டிகை, சீனிவாசபுரம், காந்தி நகர் உள்பட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஏரியில் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி குடியிருப்பு நல விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாகி சேகரன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இதுகுறித்து சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 21 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பதிலளிக்கவும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும் மேலும் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இப்படி தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையிலும், சில நாள்களுக்கு முன்பு டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட கழிவுநீர் ஏரியில் திறந்துவிடப்பட்டது.

இதற்கிடையில், இது தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வுமுன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனம் சார்பில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க புதிய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட டேங்கர் லாரியைப் பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முறையிடப்பட்டது.

கொரட்டூர் ஏரியின் பரப்பளவை கணக்கிட்டு, தமிழக பொதுப்பணித் துறை அறிக்கையளிக்க வேண்டும். அத்துடன், கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் திறந்துவிட்ட தனியார் லாரிகளை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சிறைப் பிடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குடிநீரில் கழிவுநீரை கலந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின்கீழ் கொரட்டூர், ரெட்டேரி, அம்பத்தூர் ஆகிய 3 ஏரிகளும் படகுசவாரி, நடைபயிற்சி வளாகத்துடன் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படும் என்று, கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஏரிகளிலும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. ஆனால் அந்த ஆண்டு ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை !!

இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

குறிப்பாக, *உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா* ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.