யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/8/16

DIET-SENIOR LECTURERS –PG-TRB-ENGLISH-IMPORTANT STUDY MATERIALS BY PART-1

எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்

புதுடில்லி: வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின்சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரிதொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ்மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம்
செய்யப்பட உள்ளது. 
வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையினரிடையேநல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும்இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம்செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும்ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார்செய்யப்பட்டு விடும் என மத்தியநேரடி வரித்துறை கழக தலைவர் ராணிசிங் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும்வருமான வரியை செலுத்துவதில்லை எனநிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரிசெய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும்முறை கொண்டு வரப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள்சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்வருமான வரித் தொகை, வருமானவரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையாஎன தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகைசெலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம்உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!!

1. நன்றாகயோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன்தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. முக்கியமானவிஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போதுநிறைய விஷயங்கள் தெரிய
வரும்.
2. உங்கள்மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றிதெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும்என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார்கெட்டவர் என்று ஆராயும்போது மகள்யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்றுதெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின்முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டுவிளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப்பற்றிசொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பதுஎன்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப்பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதைகேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள்அவருக்கு உதவுவது எப்படி என்றுதிட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்தஇடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைஅவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும்நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள்என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. பெண்களென்றால்வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம்உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம்உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8. நீங்கள்எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்குஎவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடிஉணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும்மன உறுதியையும் கொடுக்கும்.

9. குடும்பத்தைப்பற்றி உங்கள் மகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்துகொள்ளட்டும் .

10. உங்கள்வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள்எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள்இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்குவந்தீர்கள், உங்கள் குடும்பம் அடையவேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்குதெளிவாக சொல்லுங்கள்.

11. புத்தகங்கள்படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்துகொடுங்கள்.

12. உடலளவிலும்மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள்வெளியுலகில் வரும் அதை எப்படிசமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13. இன்றையஉலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம்எதிர் பார்க்க முடியாது. ஆண்கள்வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது போன்றசிறு சிறு வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்.


14. இவைஎல்லாவற்றையும் விட நீங்கள் ஒருஉதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள்பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களைநடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன்கணவனிடம் செயல்படுத்துவாள் !

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

'பாடம்நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்தியஅரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம்சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள்ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி
ஆசிரியர்கள்வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின்நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்றுவழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

'தேர்தல்சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்புமற்றும் பேரிடர் மீட்பு பணிகள்தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களைபயன்படுத்தக் கூடாது' என, கட்டாயகல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறைஇணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்து உள்ளார்.

DSE ; BT TO PG PANEL FINAL AS ON TODAY ( 20/08/2016) RELEASED

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

மின் வாரியம், உதவியாளர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின்
வாரிய செய்திக் குறிப்பு:


  இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்டபதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

பதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் : வரலாறு ஆசிரியர்கள் கொதிப்பு.

பதவி உயர்வு பட்டியல்வெளியிடாமல் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்பட்டதால் வரலாறுஆசிரியர்கள் குழப்பத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர்.தமிழகம் முழுவதும்அரசுப்பள்ளி ஆசிரியர்
இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங்நடந்து வருகிறது.

          ஒவ்வொரு பாடத்திற்கும் பதவிஉயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தைபுவியியல் மற்றும் வரலாறு ஆசிரியர்கள்நடத்துகின்றனர். இதில் புவியியல் ஆசிரியர்களின்பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வரலாறு ஆசிரியர்களின் பதவிஉயர்வு பட்டியல் மட்டும் வெளியிடப்படவில்லை. வரும்22ம் தேதி வரலாறு ஆசிரியர்பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளதையடுத்து இப்பிரிவுஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இளங்கலை வரலாறுமுடித்து ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரிஆசிரியர்கள், முதுகலை ஆசிரியராக பதவிஉயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவிஉயர்வு பணியிடங்களில் இளங்கலை, முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் பிற பாடங்கள் படித்து, முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு(கிராஸ் மேஜர்) 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது. இதனால் இளங்கலை, முதுகலையில்வரலாறை முதன்மை பாடமாக படித்தஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல்பாதிக்கப்பட்டனர். இந்த விகிதாச்சார முறையைஎதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில்கடந்த 2012ல் தொடரப்பட்ட வழக்குநிலுவையில் உள்ளது. இருப்பினும் கடந்தஆண்டுகளில் முந்தைய நிலையிலேயே பதவிஉயர்வுவழங்கப்பட்டது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்குமுன் பதவி உயர்வு பட்டியலைவெளியிடாமல் கல்வித்துறை தாமதம் செய்து வருகிறது.


இதுகுறித்துதமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகமாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ‘‘2012ல் தொடர்ந்த வழக்கில்பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வரலாறு முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு என்பது இந்தவழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதுஎன உத்தரவிட்டது. ஆனாலும், கடந்த 3 ஆண்டுகளாகமுந்தைய நிலைப்படியேபதவி உயர்வு அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு எந்த அடிப்படையில்பதவி உயர்வு வழங்கப்படும் என்பதுபட்டியல் வெளியிடப்பட்டால் மட்டுமே தெரியும். அவ்வாறுதெரிந்து அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதை தடுக்க வரலாறுஆசிரியர் பட்டியலை மட்டும் வெளியிடாமல் வைத்துள்ளனரோஎன சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பட்டியலை வெளியிட வேண்டும்,’’ என்றார்.

DSE PROCEEDING-2010-11 English Subject TRB Regularisation order

எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்




 வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரி தொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு விடும் என மத்திய நேரடி வரித்துறை கழக தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் வருமான வரியை செலுத்துவதில்லை என நிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரி செய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை, வருமான வரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையா என தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகை செலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம் உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.