யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/8/16

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

'பாடம்நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்தியஅரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம்சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள்ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி
ஆசிரியர்கள்வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின்நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்றுவழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

'தேர்தல்சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்புமற்றும் பேரிடர் மீட்பு பணிகள்தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களைபயன்படுத்தக் கூடாது' என, கட்டாயகல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறைஇணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக