யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/8/16

எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்

புதுடில்லி: வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின்சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரிதொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ்மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம்
செய்யப்பட உள்ளது. 
வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையினரிடையேநல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும்இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம்செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும்ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார்செய்யப்பட்டு விடும் என மத்தியநேரடி வரித்துறை கழக தலைவர் ராணிசிங் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும்வருமான வரியை செலுத்துவதில்லை எனநிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரிசெய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும்முறை கொண்டு வரப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள்சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்வருமான வரித் தொகை, வருமானவரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையாஎன தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகைசெலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம்உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக