யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/16

சத்துணவு ஊழியர் சங்கம் ஜெ., மீது குற்றச்சாட்டு

தேனி:கடந்த சட்டசபை தேர்தலில் எங்களிடம் ஆதரவு கேட்ட முதல்வர் ஜெ., தற்போது கோரிக்கை தொடர்பாக சங்க பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார்என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதிய திட்டம் கோரி போராட வேண்டிய கட்டத்தில் உள்ளோம். எங்களின் கோரிக்கைகளை மாறி,மாறி வரும் இரு அரசுகளும் நிறைவேற்ற மறுக்கின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,
குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3, 050 வழங்க வேண்டும். 33 ஆண்டுகளில் சத்துணவு ஊழியர்களில் 40 ஆயிரம்பேர் வரை ஓய்வு பெற்றுள்ளனர். இன்னும் மூன்று ஆண்டுகளில் 60 சதவீதம் பேர் ஓய்வு பெற உள்ளனர். பணியாளர்களுக்கு ஒட்டு மொத்த
ஓய்வூதிய பலனாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம்.'2011 சட்டசபை தேர்தலில் மக்கள் பிரச்னை தீர, புதிய ஆட்சி அமைய அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வழங்குங்கள்,' எனக்கேட்டு எங்கள் சங்கத்திற்கு முதல்வர் ஜெ.,கடிதம் வழங்கினார். ஆனால் எங்களின் கோரிக்கை நிறைவேற்ற சங்க பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார். ஜன., 22ல் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் முதல்வரை சந்திக்கும் பெருந்திரள் முறையீட்டில் நாங்களும் பங்கேற்போம்,”என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக