யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

நாடா' புயல் வருவதனை முன்னிட்டுபுயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டியநடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை 15 அம்ச
அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


15 அறிவுறுத்தல்கள்

1. ரேடியோமற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளைஅறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோமற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.


3. புயல்காற்றுகதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தவாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடிவைக்கவும்.

4. கடற்கரைமற்றும் நீர் சூழ வாய்ப்புள்ளபகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாகவெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரேபாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

5. தங்கள்குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால்பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால்உடன் வெளியேறவும்.

6. நீர்நிலைகள்மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள்கன மழை காரணமாக நீர்சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7. சமைக்காமல்உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.


  8. நீர் சூழ்வதால் வெளியேறவேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களைதவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களைவீட்டில் உயரமான பகுதியில் வைத்துபாதுகாக்கவும்.

9. குழந்தைகள்மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும்முதியோருக்கு தேவையான உணவுப் பொருளைஇருப்பு வைக்கவும்.

10. மழைநீரில்செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினைவைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்கவாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11. மின்வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புஉள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12. அமைதியாகசூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாகஎதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும்பயன்படலாம்.

13. அதிகாரபூர்வமாகஅறிவிக்கும் வரை புயல் பாதுகாப்புமையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14. மின்கம்பங்களிலிருந்துதளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாகதவிர்க்கவும்.

15. பேரிடரால்பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல்வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில்மட்டுமே செல்லவும்.

இவ்வாறுவருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக