யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/18

உயர் நீதிமன்றம் மதுரை கிளை யில்4-12-2018 மற்றும் 10-12-2018 வழக்கு நடந்த நிகழ்வுகள் பற்றி ஜாக்டோ ஜியோ விளக்கக் கூட்டம்*

காலை 10  மணி முதல் மதியம் 1 மணிவரை*
*இடம்:- பெரியார் மன்றம் தருமபுரி*
*அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்*
*தருமபுரி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் Cpsஐ இரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருதல் உள்ளிட்டு 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  4-12-18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 12 இலட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்புடன் மிகவும் சக்தியாகவும் எழுச்சியாகவும் நடத்த திட்டமிடபட்டிருந்தது.*



*நாம் நடத்த இருந்த ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக  மீண்டும்  பொது நல வழக்கு மதுரை  உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு  வழக்கு நடைபெற்று வருகிறது இது சம்மந்தமான நிகழ்வுகளை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில்  விளக்கக் கூட்டதத்தினை மாநிலம் முழுக்க மாவட்டட தலைநகரில் 16-12-18 அன்று   நடத்துவது என ஜாக்டோ ஜியோ  முடிவு செய்துள்ளது.*

 *ஜாக்டோ ஜியோ மாநில முடிவின்படி தருமபுரி மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான  ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம் 16-12-18 அன்று காலை 10  மணியளவில் தருமபுரி  பெரியார் மன்றத்தில் எழுச்சியாக நடைபெறவுள்ளது*

 *இந்த மாவட்ட அளவிலான விளக்கக் கூட்டத்தில்  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். மு.அன்பரசு (மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.*


*தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலையிலான ஆசிரியர்கள்  ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைப்பிலுள்ள அனைத்து துறை சங்கங்களின் மாநில மாவட்ட,வட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்டு அனைத்து அரசு ஊழியர்கள்,தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து  பணியாளர்கள் அனைவரும் 100%  தருமபுரியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டத்தில் பங்கேற்குமாறு  கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றிபெறுவோம் இறுதி வெற்றி நமதே*



*நம்மால் முடியாதது வேறுயாராலும் முடியாது*


*வேறுயாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்*




இவண்
 B.M.கௌரன்
 *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ*
*தருமபுரி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக