யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/10/17

லஞ்சம் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள்: சந்திரசேகர ராவ்!

                                               
சமீபத்தில் நடந்த தெலுங்கானாவில் சிங்கரனி கொலிரியஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) அமைப்பின் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தெலுங்கானா போகு கானி கர்மிகா சங்கம் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விழாவில் 
தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.
அப்போது அவர், எஸ்சிசிஎல்.,ல் லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள். யாரும் லஞ்சம் தராதீர்கள். ஒருவேளை எந்த அதிகாரியாவது, விடுமுறை, மருத்துவ பலன், வீடு கட்டுவதற்கான கடன் பெறுவது உள்ளிட்ட உங்களின் தொழிலாளர் பயன்களை பெற லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள். லஞ்சம் கேட்பவர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்.
தகுதி உடைய தொழிலாளர்கள் அனைவருக்கும் வட்டியில்லாத வீட்டு கடன் வழங்கப்படும். வாக்குதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எஸ்சிசிஎல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஐஐடி.,க்கள் மற்றும் ஐஐஎம்.,களில் படிக்க சீட் கிடைத்தால் அதற்கான கல்வி செலவை மாநில அரசே ஏற்கும்.
உங்களின் பிரச்னைகளை நேரடியாக கண்டிட விரைவில் சிங்கரனி யாத்திரை மேற்கொள்ள உள்ளேன். நீங்கள் மக்களுக்கு எப்படி மருத்துவ சேவை வழங்குகிறீர்கள் என்பதை கண்டறிய சிங்கரனி மருத்துவனையில் நான் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளேன் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக