யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/16

High School HM Promotion Case Details

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான
வழக்கு:
--------------------------------------------
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பானவழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இத்துணை நாட்களாகஎடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்றஅளவில் குறுகிய கால அளவில்ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டுவந்தது.
  

 ஆனால் இன்று நடந்தவிவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்டஅனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதிவிசாரணையாக விசாரிக்கப்படும்.

இறுதி விசாரணை வரை தற்போதுள்ளதடையாணை உள்ளபடியே தொடரும்.

இதற்குப்பெயர் Stay resolution order என்பதாகும்.

இதன் மூலம், புதிதாக தடையாணைஏதும் இவ்வழக்கில் பெற இயலாது.

அதே சமயம், இருக்கின்ற தடையாணையையாராலும் நீக்க முடியாது.

இனி ஒரே ஒரு விசாரணைமட்டும்தான். அது இறுதி விசாரணைமட்டுமே.

ஏற்கனவேஇருந்ததைப் போல் வார வாரம்லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்குவர சில மாதங்கள் ஆகும்.

இன்னும்சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல்கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை.

தங்கள்உண்மையுள்ள,

ப.நடராசன், மாநில தலைமை நிலையச்செயலாளர், பதவி உயர்வு பெற்றபட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,தருமபுரி மாவட்டம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக