யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/9/16

மும்பை பள்ளிகளில் யோகா: தடை விதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகாமற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை கோர்ட் மறுத்துள்ளது.மும்பை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா மற்றும் சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை அளிக்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதனை எதிர்த்து மசூத் அன்சாரி என்பவர் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

மேலும் மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.அந்த மனு மீது நேற்று நடந்த விசாரணையில், சூரிய நமஸ்காரம் என்பது வெறும் பெயர்தான் எனவும், அதனை உடற்பயிற்சியாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்தது. வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக