யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/8/18

பள்ளிகளின் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பிய அவலம்: பொதுப்பணித்துறையில் சர்ச்சை:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூத்திற்கு திருப்பி அனுப்பியிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1289 உயர்நிலை பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ேதவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை, சுற்றுச்சுவர் கட்டுதல், குடிநீர் வசதிஉள்ளிட்ட பணிகளை 1257 கோடி செலவில் ேமற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, நிதி நபார்டு வங்கியின் கடனுதவியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக 100 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே டெண்டர் விட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு சில பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. அதே போன்று மற்ற 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதி கட்டமைப்பு டெண்டர் விட வேண்டிய நிலையில் இருந்தது.இதற்கிடையே ஜிஎஸ்டி காரணமாக மீண்டும் திட்ட அறிக்கை தயாரிப்பது மற்றும் ஏற்கனவே டெண்டர் விட்ட பணிகளுக்கு ஜிஎஸ்டியால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதால் பணிகள் நிறுத்தி வைப்பு, ஆளும் கட்சியின் வற்புறுத்தலின் பேரில் கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் 150 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.kaninikkalvi அந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் மேற்கொள்ளாததால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் கோட்ட செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்த ₹150 கோடி நிதியை சரண்டர் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, நடப்பாணடில் நிதியை பயன்படுத்த தவறியதால், அந்த நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில் மீண்டும் திட்ட அறிக்கை தயார் செய்து இதற்கான நிதியை பெற இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக