யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/6/18

தனியார் பள்ளிகளுக்கு 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' ?

தமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக, மெட்ரிக் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மெட்ரிக் பள்ளிகளை, மெட்ரிக் இயக்குனரகத்தில் இருந்து மாற்ற, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. 
இதற்காக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆளுடைய பிள்ளை தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு அறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளையும் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. 
அதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கலைக்கப்பட்டு, 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இதன் கீழ், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., என, அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளும், இணைக்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக