யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/12/18

அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை...

ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத அளவுக்கு, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர் சங்கத்தின் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம், திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் எம். அதியமான்முத்து தலைமை வகித்தார்.


இக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீதத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்க வேண்டும். உயர்கல்வி பயின்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணி விதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக