யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/9/16

ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:


ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிடவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உரிமம் பெற்றுள்ள 960 ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தாட்கோ சிறப்பு மையத் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் பாரம்பரிய வேளாண்மை தொழிலைத் தொடரும் வகையில், அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையைப் பதப்படுத்த, கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள கோழித்துறையில் பசுந்தேயிலை தயாரிக்கும் இயந்திர அலகு அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.80 லட்சம் ஒதுக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்காக, 10,299 மாணவர்களுக்கு 11 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக, மத்திய சிறப்புத் திட்ட நிதியிலிருந்து ரூ.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக