யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/10/15

கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ளபள்ளி மேலாண்மைக்குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள்அவற்றுக்குத் தீர்வு காண
வேண்டும் என, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில்திருத்தம் செய்துமத்திய அரசுஅறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்குமுன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்கவேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில், பள்ளி அளவிலானகுறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களைஅமைக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில்தெரிவிக்க வேண்டும். வட்டார, மாவட்ட, மாநில அளவிலானகுறைதீர் குழுக்களையும்மாநில அரசுஅமைக்க வேண்டும்என விதிகளில்பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒவ்வொருகுழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வுகாண வேண்டும், இந்தக் குழுக்களில்யார் இடம்பெறவேண்டும் உள்ளிட்டவைதொடர்பாக மத்தியஅரசு இந்தச்சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
அதேநேரத்தில், பணி தொடர்பானவிவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப் பணியிடைநீக்கம், ஒழுங்குநடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள்விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகமத்திய அரசுவெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்: பள்ளி மேலாண்மைக்குழுக்கள் பள்ளிகள்அளவிலான முதல்குறைதீர் அமைப்பாகசெயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களதுபுகார்களை இந்தக்குழுவின் அமைப்பாளர்அல்லது உறுப்பினர்செயலரிடம் தெரிவிக்கவேண்டும். ஆசிரியர்களிடமிருந்துஎழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட15 நாள்களுக்குள் அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார்மீது நடவடிக்கைஇல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லைஎன்றாலோ வட்டாரஅளவிலான குறைதீர்குழுவிடம் ஆசிரியர்கள்புகார் தெரிவிக்கலாம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்குறைகளைத் தீர்ப்பதற்காகவட்டார வளர்ச்சிஅலுவலர் தலைமையிலானவட்டார குறைதீர்குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரகல்வி அதிகாரிஇந்தக் குழுவின்அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். புகார் பெற்ற30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வுகாண வேண்டும். இந்தக் குழுதேவையின் அடிப்படையில்கூட வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். மாவட்ட அளவிலானகுழு: மாவட்டஅளவிலான குறைதீர்குழுவின் தலைவராகமாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்விஅதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும் இருப்பார். நகராட்சிகளின் மூத்தஉறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். இந்தக் குழு3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காணவேண்டும்.

மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலானகுழுவில் திருப்தியில்லைஎன்றால் ஆசிரியர்கள்மாநில அளவிலானகுறைதீர் குழுவிடம்முறையிடலாம். இந்தக் குழுவுக்கு தொடக்கக் கல்விஇயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித்துறைச் செயலர்பரிந்துரை செய்யும்2 பேர் உறுப்பினர்களாகவும்இருப்பர். இந்தக்குழு 90 நாள்களுக்குள்புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக