யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்

இந்திய
, 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை, அமெரிக்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என நகாய் அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, 'நகாய்' அதிகாரிகளுக்கு

கோவா மாநில பணிகள்

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில், சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கோவா மாநிலத்தில், 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, நெடுஞ்சாலை அமைப்பு, ஆய்வு பணி மேற்கொள்வது, குடிநீர் திட்டம் மேற்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற, நகாய் அதிகாரிக்கு 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு விசாரித்தது. அப்போது லஞ்சம் கொடுத்ததை சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளில் முறைகேடாக ஒப்பந்தங்கள் பெற்று லாபம் ஈட்டியதில், 25 கோடி ரூபாயை அமெரிக்க கருவூலத்தில் செலுத்தவும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த பிரச்னை குறித்து விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகாய் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக