யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

ஆர்.டி.ஐ.,யில் தவறான தகவல் : 5 கிலோ 'பேப்பர் வேஸ்ட்

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல்,


தவறான ஆவணங்களை அனுப்பி, ஐந்து கிலோ பேப்பரை, உணவு பாதுகாப்புத்துறை வீணாக்கி உள்ளது. சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் காசிமயன். இவர், 2016 ஜூலையில், உணவு பாதுகாப்பு துறையில், ஏழு தகவல்கள் கேட்டிருந்தார். அவர் அனுப்பிய கடிதம், பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு, சமீபத்தில் அவருக்கு பதில் வந்துள்ளது. அதில், மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதில் தரப்பட்டுள்ளது. மற்ற நான்கு கேள்விகளுக்கு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறைகளுக்கிடையில் நடந்த கடித பரிமாற்றங்களின் நகல்களை அனுப்பி உள்ளனர். நகல்களின் எடை, ஐந்து கிலோ. மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை, ஐந்து கிலோ பேப்பரை வீணடித்ததுடன், பொது மக்களின் பணத்தையும் விரயம் செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த அலட்சிய போக்கு, ஆர்.டி.ஐ., ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக