யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/6/17

ரேஷன் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை... நுகர்வோர்கள் புகார் அளிக்க தமிழக அரசின் ஆப்!

ரேஷன் கடைகள் முதல் பேருந்து பயணங்களின் போது உணவருந்தும் மோட்டல்கள் வரை, ஒவ்வோர் இடங்களிலும் நுகர்வோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு பொருள்களின்
மீது
அச்சடிக்கப்பட்டிருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் நுகர்வோர்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழக அரசின் TN-LMCTS மொபைல் ஆப். இதனை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். எந்தப் புகார்களையும் சில நிமிடங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடியும். தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவு பிரிவுதான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது.
TN-LMCTS நுகர்வோர் ஆப்
TN-LMCTS நுகர்வோர் ஆப்
எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் போனில் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அவற்றைக் கொடுத்த பின்னர் உங்களுடைய அலைபேசி எண் OTP மூலம் சோதிக்கப்படும். சோதனை முடிந்துவிட்டால், புகார்களுக்கு உங்கள் ஆப் தயார். உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து எப்போது வேண்டுமானாலும் லாக்-இன் செய்ய முடியும். ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது.

நீங்கள் செய்த புகார்களின் பட்டியல், புதிய புகார்களுக்கான ஆப்ஷன், விரைவான புகார்கள் என மூன்று மெனுக்கள் இருக்கின்றன. விரைவான புகார்களுக்கு என்ன புகார், எந்த இடம் என்பதை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான சாட்சிகளாகப் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை உடன் இணைக்க வேண்டும். புதிய புகார்கள் என்ற மெனுவில், புகார் பற்றிய குறிப்பு, புகைப்படங்கள் / வீடியோ/ ஆடியோ இணைப்பு, எது தொடர்பான புகார் என்ற விவரம், கடையின் முழு முகவரி போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் புகாரினைப் பதிவு செய்துவிட்டால், அதற்கு புகார் எண் கொடுக்கப்பட்டு உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். நீங்கள் கொடுத்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களும் ஆப்-ல் காட்டப்படுகின்றன.
TN-LMCTS ஆப்
TN-LMCTS ஆப்


பொருள் வாங்கியதற்கான ரசீது, கடையின் போட்டோ, பொருள் வாங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் போன்ற ஆதாரங்களை அனுப்புவது எளிதாக இருக்கிறது. தாமதமின்றி உடனே புகார்களைப் பதிவு செய்துவிடவும் முடிகிறது. ஆனால் புதிய புகார்களைப் பதிவு செய்யும் போது, கடைகளின் தன்மை, முகவரி போன்றவற்றைக் குறிப்பிடும் போது நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க தமிழ் மொழியையும் இதில் இணைக்கலாம்.  ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் உங்களுடைய புகார்களைப் பதிவு செய்யமுடியும்.  http://tnlegalmetrology.in/ என்ற முகவரியில் உங்கள் ஆப்பில் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம். எனவே மக்கள் தங்கள் புகார்களை இணையம் மற்றும் மொபைல் மூலமாகப் பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் முடியும்.
ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்: 

https://play.google.com/store/apps/details?id=com.mslabs.lmctspublic&hl=en

இந்த ஆப்- உருவாக்கிசெயல்படுத்திவரும் தமிழகதொழிலாளர்துறையின் செயலாளர் அமுதா ..எஸ்இதுபற்றிக் கூறும்போது,"மார்ச் மாதம் இந்த ஆப் அறிமுகம்செய்யப்பட்டதுஇணையம் மற்றும் ஆப் இரண்டின்மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத்தெரிவிப்பதற்காகத்தான் இந்தச் சேவை அறிமுகம்செய்யப்பட்டுள்ளதுஇதில் புகார் தெரிவித்தால்அடுத்த 48 மணிநேரத்திற்குள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்எடை அளவுசட்டம் மற்றும் பொட்டலப் பொருள்களுக்கான விதிகள் எனஇரண்டு சட்டங்கள் இருக்கின்றனஅவற்றின் கீழ் வரும்புகார்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படும்
கடைகளில் நீங்கள் வாங்கும் பொருள்களின் எடைஅளவுபோன்றவற்றில் தவறு இருந்தாலோ அல்லது MRP விலையைவிடவும் அதிகமாக விற்றாலோ இதில் புகார் செய்யலாம்.பொட்டலப் பொருள்களுக்கான விதிகளைப் பொறுத்தவரை,ஒரு பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டால் அந்தப் பாக்கெட்டின் மீதுயார்அதைப் பாக்கெட்டில் அடைத்தார்யார் அதைத் தயாரித்தார்,யார் அதை இறக்குமதி செய்தார்எப்போது பேக் செய்யப்பட்டது,அதன் எடை எவ்வளவுஅதன் அதிகபட்ச விலைநுகர்வோர்புகார் செய்வதற்கான எண்கள் என விவரங்கள் அனைத்தும்இருக்க வேண்டும்ஒரு நுகர்வோர் பாக்கெட்டில்அடைக்கப்பட்ட பொருள் ஒன்றை வாங்கும்போதுஅதனைப்பிரித்துப்பார்த்து வாங்குவது இல்லைஎனவே அந்தப்பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது என்பது குறித்த தெளிவானவிளக்கங்கள் பாக்கெட்டில் இருக்க வேண்டும்இதில் ஏதேனும்ஒரு விஷயம் இல்லை என்றாலோ அல்லது அதில்குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றாக விற்பனைசெய்யப்பட்டாலோ அது சட்டப்படி குற்றம்அதுமாதிரியானசமயங்களில் நுகர்வோர்கள் புகார் செய்ய வேண்டும். 
அப்படி மக்கள் பாதிக்கப்படும் போது ஆடியோவீடியோ,எழுத்துரசீதுகள் என ஏதாவதொரு வகையில் இந்த ஆப் மூலம்புகார் செய்யலாம்தகுந்த ஆதாரங்களையும் உடன்இணைக்கலாம்ஒருவேளை ஆதாரங்கள் எதுவும் இல்லைஎன்றால் கூட பிரச்னை இல்லைநுகர்வோர் தங்கள்குறைகளைத் தெளிவாகப் பதிவு செய்தால் கூட போதும்;நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்இந்த ஆப் மூலம் பதிவுசெய்யப்படும் அனைத்து புகார்களும் அந்தந்த ஏரியாவின் எடை,அளவு சட்ட அதிகாரிகளுக்குச் சென்று சேர்ந்துவிடும்.தமிழகத்தில் மொத்தம் 433 எடைஅளவு சட்ட அதிகாரிகள்இருக்கிறார்கள்அவர்கள் உடனே அடுத்த 48 மணிநேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுப்பார்கள்அதேபோல புகார்கொடுத்தவரின் விவரங்கள் எதுவுமேஅதிகாரிகளுக்குத் தெரியாதுஎனவே புகார் கொடுப்பவர்களின்விவரங்கள் எதுவும் வெளியே தெரியாதுஅதே சமயம் புகார்அளித்தவர்களுக்குபுகார் பதிவான எண்எப்போதுநடவடிக்கை எடுப்பார்கள்அதன் மீது எடுக்கப்பட்டநடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும்எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்இதுவரை இந்த ஆப் மூலம்வந்த அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதுதற்போது இதுபற்றிய விழிப்புஉணர்வுகுறைவாக உள்ளதால்குறைவான புகார்களே வருகிறது.எனவே வருகின்ற ஒவ்வொரு புகார்களையும் தீவிரமாகக்கவனித்து வருகிறோம்உதாரணமாக ஒரு மார்க்கெட்டில்இருக்கும் ஒரு கடையில் விலை அதிகமாக வைக்கப்பட்டுபொருள்கள் விற்கப்படுகிறது எனப் புகார் வந்தால்அந்த ஒருகடை மட்டுமின்றி அந்த மார்க்கெட்டில் இருக்கும் மற்றகடைகளையும் சோதனை செய்கிறோம்நேரடியாக சென்றுசோதனை செய்வதால்குற்றங்கள் குறைகின்றனசிலநாள்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும்மோட்டல்கள் குறித்து புகார்கள் வந்தனஉடனே தமிழகம்முழுவதும் இருக்கும் அனைத்து மோட்டல்களும் சோதனைசெய்யப்பட்டுகுற்றம் செய்தவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டதுஒரு கடையில் முதலில் தவறுகண்டுபிடிக்கப்பட்டால் உடனே சட்டப்படி அபராதம்விதிக்கப்படும்அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் அதேகடையில் தவறு நடப்பது கண்டறியப்பட்டால்குற்றம்செய்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்குஅனுப்பப்படுவார்.
TN-LMCTS நுகர்வோர் புகார் அளிப்பதற்கான ஆப்
இந்தஆப்பின் இன்னொரு சிறப்பம்சம், இதன் மூலம் ஆன்லைனில் பொருள் வாங்கினாலும் கூட புகார் செய்யலாம். எடை அளவு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம். எனவே வெளிமாநிலங்களில் பொருள்கள் வாங்கியிருந்தாலும் கூட, அந்தந்த மாநிலங்களைத் தொடர்பு கொண்டு, விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்திற்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக