யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/6/17

கம்ப்யூட்டரை பார்க்காமலேயே வெளியேறும் பள்ளி மாணவர்கள்

சிவகங்கை: மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் காலாவதியானதால் செய்முறை கல்வி பயிலாமலேயே பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு
மாணவர்கள் வெளியேறி
வருகின்றனர்.

தமிழகத்தில் 3,560 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 2,600 பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. செய்முறை கல்வி கற்பிக்க, ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப யூ.பி.எஸ். வசதியுடன் 8 முதல் 12 கம்ப்யூட்டர்கள் வரை வழங்கப்பட்டன.ஏற்கனவே 1,400 பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அதேபோல் பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை கல்வி பயிற்றுவிப்பதில்லை. 'தியரி' மட்டும் கற்பிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கம்ப்யூட்டர் ஆய்வகம் பார்க்காமலேயே வெளியேறி வருகின்றனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் கூறியதாவது: 'எல்காட்' மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர்கள் வழங்கப்
பட்டன. வழங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே யு.பி.எஸ்.,கள் பழுதடைந்தன. அடுத்த சில ஆண்டுகளிலேயே கம்ப்யூட்டர்களும் பழுதடைந்துவிட்டன. இதனால் மாணவர்களுக்கு செய்முறை கல்வி பயிற்றுவிக்க முடியவில்லை. இதுகுறித்து கல்வித்துறை யிடம் பலமுறை தெரிவித்துவிட்டோம். இந்தபட்ஜெட்டிலும் அதற்கான அறிவிப்பு இல்லை, என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக