யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி

ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று முன்தினம், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று,
இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.
போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தாஸ் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை, 'கட்' அடிக்கவில்லை. சுழற்சி முறையில் விடுமுறை கேட்டு, போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அரசு பேச்சு நடத்தும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக