யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/7/18

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்

குழந்தைகளை எந்த முறையில் கண்டித்து வளர்க்கலாம்

கண் இமைகள் அடர்த்தியாக வளர 5 டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை

குழந்தைகளின் முரட்டுத்தனத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு

உடல் ரீதியான துன்பங்களை போக்கும் துளசி

கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையை தவிர்க்க வழிகள்

தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி

மாணவர்கள் தேர்வின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதற்கான மனநல ஆலோசனைகள்

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்

கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்

பெண்களுக்கு முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்கான முக்கியமான காரணம்… சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். அவை என்னவென்று பார்க்கலாம்

நல்லா படிக்கணுமா?

தேன்கூடு SCi 11

தேன்கூடு உளவியல் New

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

நமது ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாமே அறிந்துகொள்ளலாம் - YouTube

7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நடவடிக்கை கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் புகார்!!!

தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு TAB பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Welfare Schemes for students: 20 J-directors in field work:

மாணவர்களுக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய 20 இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ள அரசாணை: பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்களை மாவட்டங்களுக்குச் சென்று களப்பணியை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கோரியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாகப் பரிசீலித்து அதை ஏற்கலாம் என முடிவு செய்து பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து இணை இயக்குநர்களையும் களப்பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் விற்பனையா போலீசில் அரசு தேர்வுத் துறை புகார்

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள், 'லீக்' ஆனது குறித்து, விசாரணை நடத்தும்படி, சென்னை போலீசில், அரசு தேர்வுத் துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ., 
மாணவர்களின், தனிப்பட்ட விபரங்கள், தனியார், 'டேட்டா பேஸ்' நிறுவனங்களின் வழியாக, லீக் ஆனதாக, இணையதளம் ஒன்றில், சில தினங்களுக்கு முன், செய்தி வெளியானது. இதற்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம்மறுப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறையில் படித்த, பிளஸ் 2 மாணவர்களின் தனிப்பட்ட விபரங்கள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, மாவட்டத்துக்கு, 2,000 ரூபாய்; ஒரு மாணவர் விபரத்துக்கு, ஒரு ரூபாய் என விற்கப்படுகின்றன.இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன், செய்தி வெளியானது.எனவே, இதுபற்றி விசாரணை நடத்தும்படி, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதில், 'மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் முகவரியுடன், தனிப்பட்ட விபரங்களை, 'மார்கெட்டிங்' நிறுவனங்கள் விற்று வருகின்றன.'இந்த தகவல்கள், எங்கிருந்து பெறப்பட்டன; திருடப்பட்டதா அல்லது வேறு யாரிடமும், அதிகாரப்பூர்வமாக வாங்கப்பட்டதா என, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில், மார்கெட்டிங் நிறுவனங்கள் விற்கும் தகவல்கள், தேர்வுத் துறையிடம் உள்ள தகவல்கள் இல்லை என, தெரிய வந்துள்ளது. ஆனால், அவை, பள்ளி மாணவர்களின் விபரங்கள் என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.பல்வேறு வழிகளில், இந்த விபரங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்பதால், எங்கிருந்து பெறப்பட்டது என, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசின் தேர்வுத் துறை நடத்தும், அனைத்து தேர்வுகளின், 'டிஜிட்டல்' விபரங்கள் மற்றும், 'ஆன்லைன்' நடவடிக்கைகள், சென்னையில் உள்ள, 'கே லேப்ஸ்' என்ற நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.தேர்வுக்கான மதிப்பெண் பதிவு விபரங்கள், தமிழக அரசின் தகவல் தொகுப்பு மையம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன், அவர்களது விபரங்கள், 'நாமினல் ரோல் என்ட்ரி' என்ற வகையில், ஒவ்வொரு பள்ளி வாரியாக, தேர்வுத்துறை வழங்கியுள்ள, 'சாப்ட்வேரில்' பதிவு செய்யப்படுகின்றன.இந்த தளங்களை செயல்படுத்தும் உரிமை மற்றும் கட்டுப்பாடுகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வுத்துறை மண்டல அலுவலகம், இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றுக்கு உள்ளன.தேர்வு முடிவுகள் அனைத்தும், தனியார் நிறுவனம் வழியே, 'பல்க் எஸ்.எம்.எஸ்.,' என்ற, ஒட்டுமொத்த குறுஞ்செய்தியாக, தேர்வுத்துறை சார்பில், மாணவர்களுக்கு அனுப்பப்படும்.அந்த தனியார் நிறுவனத்துக்கு, மாணவர்களின் பெயர், பள்ளி, பதிவு எண், மொபைல் போன் விபரங்கள் வழங்கப்படும்.மேலும், அரசின் பல்வேறு துறைகளின் உதவி தொகைக்காக, மாணவர் விபரங்கள், அந்த துறைகளுக்கு, முழுமையாக வழங்கப்படுகின்றன.மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, தமிழக அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு, 'பவர் பைனான்ஸ்' நிறுவனத்துக்கு, வங்கி கணக்கு எண்ணுடன், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.'பஸ் பாஸ்' வழங்குவதற்காக, மாணவர்களின் வீட்டு முகவரி உள்பட அனைத்து விபரங்களும், போக்குவரத்து துறைக்கு தரப்படுகின்றன.தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி மையங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், இலவச பயிற்சி நிகழ்ச்சி, இலவச நீட் தேர்வு பயிற்சி, பல்வேறு அமைப்புகள் சார்பில், பரிசு, உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.பல்வேறு கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்றவை, மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி தருவதாக கூறி, தகவல் திரட்டை பெறுகின்றனர்.பல்கலைகள், மத்திய அரசின் பல்வேறு உதவி தொகை வழங்கும் நிறுவனங்கள், மாணவர் தகவல் திரட்டை, பள்ளிக் கல்வித் துறையில் பெறுகின்றன.இவற்றிற்கு எல்லாம் மேலாக, அந்தந்த தனியார் பள்ளிகளிடம், அவரவர் மாணவர் விபரங்கள் உள்ளன. மேலும், பல்வேறு தனியார் மாணவர் நிகழ்ச்சிகளில், மாணவர்களே தங்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை தருகின்றனர்.இவற்றை எல்லாம் நிறுத்தி, ரகசியம் காப்பாற்றினால் மட்டுமே, மாணவர் விபரங்கள் ரகசியமாக இருக்கும். தற்போதைய நிலையில், தகவல் திரட்டு என்பது, வெளிப்படையானதாகவே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி

அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 
அமைக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும். மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.சென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.இந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாக வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான, செப்.,5ல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை, தமிழகத்தில், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்ற பெயரில், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கான விண்ணப்பம், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தினத்துக்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்ப வினியோகம் தாமதம் ஆகியுள்ளது. விருது வழங்குவதற்கான விதிகள், பெரிய அளவில் மாற்றப்படுவதாகவும், அதனால் தான், விண்ணப்ப அறிவிப்பு தாமதம் ஆவதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன.ஏற்கனவே, தேசிய அளவில் ஆசிரியர் விருதுக்கு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், நேரடியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில் தனியாக, 'கனவு ஆசிரியர் விருது' அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நல்லாசிரியர் விருதை, பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வெறும் அனுபவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களை உருவாக்கிய விதம், ஒழுக்க நடைமுறைகள், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய விதம் போன்றவற்றையும், ஆய்வு செய்ய உள்ளனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் சிபாரிசுகளுக்கு இடம் தராமல், தகுதி அடிப்படையில், விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை புகுத்துவதுடன், விண்ணப்ப பரிசீலனையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி, பட்டியல் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

Special Teachers TRB Exam 2012-2016 C V List Published by TRB

27/7/18

Kalvi Sevai

மனிதராக பிறந்து.. மேதையாக உயர்ந்து.. மறக்க முடியாத மகானாக மறைந்த டாக்டர் கலாம்!

Abdulkalam death anniversary today
சென்னை: மறைந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் - குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் கலாம். சிறந்த விஞ்ஞானியாக - அதிலும் குறிப்பாக அணுசக்தி துறையின் ஆற்றல் மிக்க வல்லுனராக - தேசத்தின் திறமைமிக்க நிர்வாகியாக - எதிர்காலத்தின் எழிலார்ந்த இந்தியாவிற்காக தினம் தினம் கனவு காணும் தேசபக்தராக திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக - ஜனாதிபதியாக - பதவி வகித்த 5 ஆண்டுகளும் மறக்க முடியாதவை. குடியரசு தலைவர் மாளிகையை "மக்கள் மாளிகை"யாக மாற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கலாம். ஜாதீய பலமோ - மதத்தின் பின்பலமோ - கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் வரை சொந்த உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர் டாக்டர் கலாம். விடியற்காலையில் விழித்தெழுந்து, வீடு வீடாக செய்தித்தாள்களை விநியோகித்து - தமிழ்மொழியில் பயின்று - விஞ்ஞான மேதையாக வளர்ந்தவர் டாக்டர் கலாம். குடியரசு தலைவராய் திகழ்ந்த காலத்தில் உலக நாடுகளிலும், அனைத்துலக அமைப்புகளிலும் அபாரமான சிந்தனைகளுடன் அற்புதமாய் உரையாற்றி அறிஞர் பெருமக்களையே அசத்தியவர் டாக்டர் அப்துல் கலாம். தனது ஆற்றல் மிக்க உரைகளால் மறைந்த வி.கே.கிருஷ்ணமேனனுக்குப் பிறகு உலக நாடுகளை தனது சிந்தனை மிக்க உரைகளால் இந்தியாவையே நிமிர வைத்தவர் அப்துல்கலாம். பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தன் கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து பாடுபட்டவர் டாக்டர் அப்துல் கலாம். நாட்டை பற்றியும், எதிர்காலம் குறித்தும் இளைஞர்களுக்கு ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், வழங்கியவர் டாக்டர் அப்துல்கலாம். இதுவரை எல்லா குடியரசு தலைவர்களும் ஓய்வுபெற்ற பிறகு, உண்மையாகவே ஓய்வு பெற்று பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியே வாழ்ந்தாலும் ஓய்வு பெறாமல் பொதுவாழ்விற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் கலாம். தேசத்தின் மிக முக்கிய இரண்டு பிரச்சனையான முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனைக்கு மிக முக்கிய ஆலோசனைகளையும் மகத்தான தீர்வுகளையும் முன்வைத்தவர் டாக்டர் கலாம். 100 கோடி மக்களின் அதிகாரப்பூர்வ அதிபர் என்ற உயர் பதவியில் இருந்தும் கூட சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடிய உயர்ந்த உள்ளம் உடையவர் டாக்டர் கலாம். உடம்பில் ஓடும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் தேசபக்த உணர்வை இழைத்து கொண்டு மக்கள் ஜனாதிபதியாக மலர்ந்தவர் டாக்டர் கலாம். இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவர்களை தன் பொன்மொழிகளால் இன்றுவரைதாங்கி பிடித்து வரச் செய்பவர் டாக்டர் கலாம் குழந்தைகளுக்கு நேருவாகவும், பெரியவர்களுக்கு நவீன காந்தியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இப்படிப்பட்ட மகான்மேல் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒரு துரும்பளவுகூட ஒருவரும் எக்காலமும் மீது சுமத்த முடியாது. ஏனெனில் இவர் அரசியல்வாதி இல்லை!

SCERT - 2 Days Training For PG Teachers - Dir Proc

ஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியர்களின் -கல்விப்பணி திருப்திகரமாக இல்லை யெனில் ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தம் -முதன்மைக் கல்வி அதிகாரி எச்சரிக்கை

No automatic alt text available.

இனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை??? அரசாணைவெளியிட்ட தமிழக அரசு!

ஆங்கில வழி கல்வி என்ற முறையை தனியார் பள்ளிகள் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுகொண்டு இருந்தன. இதனால் தமிழக அரசு பள்ளிகளின், தமிழ் வழி கல்வி முறையை புறக்கணித்து, தமிழக மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். 


இதனை பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள்,அதிகபட்ச கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்தது.இதனை அடுத்து தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்வழி கல்விமுறையில் நிறைய மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதற்க்கு நல்ல வரவேற்பு பெருகவே, அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்கஅனுமதி கோரி விண்ணப்பித்தது.

இதற்கிடையே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்தார்.இந்நிலையில், நேற்று அதற்கான அரசாணையை தமிழக அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

 அந்த அரசாணையில், ''ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ''ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதைஉறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும்''. உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.

 இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.இ., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள்,  'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாகச் சீரமைப்பா ? கூடுதல் பணிச்சுமையா ? ஓர் விரிவான பார்வை

வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை

வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலர், அஜய் பிரகாஷ் சாஹ்னியை, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மாத்யூ ஐடிமா, நேற்று சந்தித்து பேசினார்.வாட்ஸ் ஆப் வாயிலாக வதந்திகள் பரவுவதை, உடனடியாக கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து, இருவரும் விவாதித்தனர்.அப்போது, வாட்ஸ் ஆப் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், வாட்ஸ் ஆப் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள், எங்கு பாதுகாக்கப்படும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டியதாக கூறப்படுகிறது.தகவல்கள் அனைத்தும், இந்தியாவில் தான்பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை, மத்திய அரசு முன் வைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

26/7/18

ஜூலை 27 இரவில் எப்போது தொடங்கும் சந்திர கிரகணம்?



வெள்ளி இரவு தொடங்கி சனிக்கிழமை காலை 4 மணி வரை நீடிக்கும் இரட்டை சந்திர கிரகணங்கள்

Lunar Eclipse 2018 Date and Time: இந்த நூற்றாண்டின் அதிசய நிகழ்வான மிக நீளமான சந்திர கிரகணம் வரும் வெள்ளிக் கிழமை இரவு நடைபெற இருக்கிறது.

வெள்ளி இரவும் சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் முதல் சந்திர கிரகணம் முழுதாக 103 நிமிடங்கள் வரை நிகழும்.

இந்த நிகழ்வின் போது, ப்ளட் மூன் என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது. அதாவது சூரியனுக்கும், நிலவிற்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும்.

Chandra Grahan 2018 Date, Timing in India and Significance of The Lunar Eclipse

பிளட் மூன் என்றால் என்ன? 

இந்தியாவில் இந்த அதிசய நிகழ்வினை பார்ப்பதற்கான நேரம் எது?

நிலவின் மீது பூமியின் நிழல் விழும் நிகழ்வினை அம்புரா என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வு வரும் வெள்ளி இரவு, இந்திய நேரப்படி, சரியாக 11.44 நிமிடங்களுக்கு நிகழ ஆரம்பிக்கும்.

இந்தியாவில் எங்கிருந்து இந்த சந்திர கிரகண நிகழ்வினை காணலாம்?

இந்தியாவில் இந்த நிகழ்வினை டெல்லி, புனே, மும்பை, மற்றும் இதர நகரங்களிலும் காண இயலும். ஆனால், இது பருவமழை காலம் என்பதால் மழை பெருவதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம். சனிக்கிழமை அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு பின்னர், மெதுவாக புவியின் நிழலில் இருந்து வெளிவர ஆரம்பிக்கும்.

இரண்டு சந்திர கிரகணங்கள்

இந்த நிகழ்வில் எக்கச்சக்க அதிசயங்கள் நிகழ உள்ளன. மிக நீளமான சந்திர கிரகணம், ப்ளட் மூன், தொடர்ச்சியாக இரண்டு சந்திர கிரகணங்கள் நடைபெற இருக்கிறது.

இரண்டாவது சந்திர கிரகணம் அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு ஆரம்பித்து 3.49 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு




🏀அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன


 🏀தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது


🏀பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது


🏀இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகளும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன


🏀நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் தேதி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன


இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் கையேட்டை அனுப்பியுள்ளார்


 இதில், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன


தேர்வு கால அட்டவணைவகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு


1 முதல் 8 வரை செப்.17 - 22 டிச.17 - 22 ஏப்., 10 - 18


9 முதல் பிளஸ் 2 வரை செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18


தேர்வு விடுமுறை

செப்.23-அக்.2

 டிச.23 - ஜன.1

 ஏப்., 19 - ஜூன் 2

மாணவர் தன் விவரப்படிவம் 2018-19:

மாணவர்களின் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான தேர்வு கால அட்டவணை (மாறுதலுக்குட்பட்டது)

மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள்:

மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய 20 வழிமுறைகள்


ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும்
எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.


ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்'  தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதி தேர்வான, 'டெட்' கட்டாயம் ஆகியுள்ளது.தமிழகத்தில், 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பள்ளி, கல்லுாரி கல்வி சான்றிதழ் அடிப்படையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது.எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய அரசாணை

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டி தேர்வும் நடத்தப் படும். போட்டி தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த அரசாணையை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.அதன் விபரம்:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, டெட் தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களையே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.டெட் தேர்வில், அதிக தரம் பெற்றவர்களை, இனவாரி சுழற்சியில், ஆசிரியர் பணிக்கு நியமிக்கும்போது, அதே தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு ஆசிரியர் பணி வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, டெட் தேர்வு என்பதை தகுதி தேர்வாக நடத்தி விட்டு, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியாக போட்டி தேர்வு நடத்தலாம்.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், இந்த தேர்வில் பங்கேற்க நிபந்தனை விதிக்கலாம் என, பொதுப்பள்ளி கல்வி வாரியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரைகளை, அரசு ஆய்வு செய்ததில், சில விபரங்கள் பரிசீலிக்கப் பட்டன.டெட் தேர்வின் தேர்ச்சி என்பது, ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்ற நிலையில், வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி யவர்கள், டெட் தேர்விலா வது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, மீண்டும் மீண்டும், டெட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதனால், தேர்வர் களுக்கு சிரமம் ஏற்படுகிறது.விண்ணப்பதாரர்களின் கல்விசான்றிதழ் அடிப்படையில், வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பின்பற்றுவதால், பல ஆண்டுகளுக்கு முன், அடிப்படை கல்வித் தகுதி பெற்றவர்கள், சமீபத்தில் படித்தவர்களை விட, வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக பெறும், முரண்பாடான நிலை ஏற்படுகிறது.மேலும், ஆண்டுதோறும் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் வேறுபடுவதால், வெயிட்டேஜ் முறையின் படி,தரவரிசை பட்டியல்
தயாரிப்பதில், தேர்வு நடத்தும் அமைப்புக்கும், இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

'வெயிட்டேஜ்' இனி இல்லை


எனவே, ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

விதிமுறை


போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

ஆதார் எண்ணை குறிப்பிடாமல்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரித்துறை அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை குறிப்பிடாமல் 2018-2019-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

செய்முறை பயிற்சி அளிக்காத அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை நேற்று முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர். செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆய்வின்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இயற்பியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சிகள் அளிக்காதது தெரியவந்தது. அதேபோல், பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள 2.50 லட்சம் மதிப்பிலான கருவிகளை பயன்படுத்தி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ நடத்தாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இயற்பியல் பாட முதுகலை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, கட்டாயம் செய்முறை வகுப்புகளை நடத்தவும், அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்

இலவச கல்வித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி டி.ராஜூ, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அவரது மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்க்க அவர்களது பெற்றோர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது என நாளிதழ்களில் செய்தி வெளியானது. மேலும், இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தவிர புத்தகம், சீருடை உள்ளிட்ட செலவினங்களை பெற்றோர்கள் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனால் ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இலவச கல்வித் திட்டத்தில் சேருபவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பது இத்திட்டத்திற்கு எதிரானது. இலவச கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இலவச கல்வித் திட்டத்தில் சேரும் மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இலவச கட்டாயக் கல்வித் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்வது அவசியம். இதில் முறைகேடுகள் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று தொடக்கம்

தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் முதல் சுற்று கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கியது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வுப் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 1,06,105 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
கலந்தாய்வு அட்டவணை: கலந்தாய்வுக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டிய தேதி, கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டிய தேதிகள், தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரி ஒதுக்கீட்டை இறுதியாக உறுதி செய்யும் தேதி, தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்குச் சென்று சேர வேண்டிய தேதி ஆகியவை அண்ணா பல்கைலக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை 8,000 மாணவர்கள்: கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்புள்ள 10,000 மாணவர்களில், 8,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
நள்ளிரவு முதல் கல்லூரி தேர்வு: பிளஸ் 2 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-இல் தொடங்கி, 200-க்கு 190 வரை எடுத்து முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பொறியியல் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை ஆன்லைனில் தேர்வு செய்யத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஜூலை 27) மாலை 5 மணி வரை தேர்வு செய்யலாம்.
உதவி மையங்களிலும்...இணையதள வசதியுடன் கணினி இல்லாத மாணவர்கள், புதன்கிழமை (ஜூலை 25) முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) வரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொறியியல் கல்லூரிகள், பாடப் பிரிவைத் தேர்வு செய்யலாம்.
தொடர்ந்து தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை ஜூலை 28, 29 தேதிகளில் தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரியை ஜூலை 30-இல் இறுதி செய்தல், தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்கு ஆக. 3-ஆம் தேதிக்குள் சென்று சேருதல் ஆகியவை முதல் சுற்று கலந்தாய்வு நடைமுறைகள்.
கவனமாகத் தேர்வு செய்வது நல்லது: ஆன்லைன் மூலம் அல்லது உதவி மையங்களுக்குச் சென்று பொறியியல் கல்லூரி, பாடப் பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்கள் அதிக பொறியியல் கல்லூரிகளையும், பாடப் பிரிவுகளையும் தேர்வு செய்வது நல்லது. இவ்வாறு தேர்வு செய்யும்போது, தங்களது தேர்வுக்கான வரிசைப்படுத்துதலில் உரிய கவனத்தைச் செலுத்துவது அவசியம்'' என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
2-ஆவது சுற்று முன்வைப்புத் தொகை: இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ள 20,000 மாணவர்கள் புதன்கிழமை (ஜூலை 25) முதல் முன்வைப்புத் தொகையை வரும் 29-ஆம் தேதி வரை செலுத்தலாம். கட்-ஆஃப் மதிப்பெண் 190-க்குக் கீழ் 175 வரை உள்ள மாணவர்களுக்கு, பி.இ. ஆன்லைன் இரண்டாவது சுற்று கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு?



சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

Published :  24 Jul 2018   09:21 IST
Updated :  24 Jul 2018   09:21 IST
செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை யில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலை. தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலை. சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர் களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட் டது. மேலும், ஒவ்வொரு துறை யிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா கூறும் போது, “மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தகுதித் தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண் டில், அதாவது 2019 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்.

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி!

அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.


 தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.

சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆடி-18 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. ஆசிரியர்,

அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

25/7/18

வனப் பயிற்சியாளர் பதவி: தேர்வு தள்ளிவைப்பு



வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:-

வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற தேர்வு நடத்தும் அமைப்புகள் பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளன.

எனவே, வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதிகளை மாற்றியமைப்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்தது.

இதையடுத்து, வனப் பயிற்சியாளர் பதவிக்குரிய தேர்வு தேதிகள் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை:



ஜூன்:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,15,16,17,23,24,30 (10 நாட்கள்)

வேலை நாட்கள் 20

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

ஜூலை:

விடுமுறை நாட்கள்

1,7,8,14,15,22,29 (7 நாட்கள்)

சனி வேலை நாள் 21,28

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 20+24=44

ஆகஸ்ட் :

விடுமுறை நாட்கள்

4,5,11,12,15,18,19,22,25,26 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி ஆகஸ்ட் 4

வேலை நாட்கள் 44+21=65 நாட்கள்

செப்டம்பர்:

விடுமுறை நாட்கள்

1,2,9,13,15,16,21 மற்றும் 23 முதல் 30 வரை (15 நாட்கள்)

சனி வேலை நாள் செப்டம்பர் 8

CRC பயிற்சி நாள் செப்டம்பர் 15

முதல் பருவத் தேர்வு

செப்டம்பர் 17 முதல் 22 வரை

முதல் பருவத் தேர்வு விடுமுறை

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை

 (10 நாட்கள்)

வேலை நாட்கள் 65+15=80

அக்டோபர்:

விடுமுறை நாட்கள்

1,2,6,7,13,14,18,19,20,21,28 (11 நாட்கள்)

சனி வேலை நாள் அக்டோபர் 27

CRC பயிற்சி 
அக்டோபர் 6

வேலை நாட்கள் 80+20=100

நவம்பர்:

விடுமுறை நாட்கள்
3,4,6,10,11,17,18,21,24,25 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 100+20=120 நாட்கள்

டிசம்பர்:

விடுமுறை நாட்கள்

1,2,8,9,15,16, 23 முதல் 31 வரை (15 நாட்கள்)

இரண்டாம் பருவத் தேர்வு நாட்கள்

டிசம்பர் 17 முதல் 22 வரை

இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை நாட்கள்

டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை.

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 120+16=136 நாட்கள்

ஜனவரி:

விடுமுறை நாட்கள்

1,5,6,12,13,15,16,17,19,20,26,27 (12 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 136+19=155 

பிப்ரவரி:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,16,17,23,24 (8 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 155+20=175 நாட்கள்

மார்ச்:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,16,17,23,24,30,31 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 175+21=196

ஏப்ரல்:

விடுமுறை நாட்கள்

6,7,13,14,17,19 மற்றும் 21 முதல் 30 வரை (16 நாட்கள்)

மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 18 வரை

கடைசி வேலை நாள் ஏப்ரல் 20

கோடை விடுமுறை

ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

சனி வேலை நாள் ஏப்ரல் 20

CRC பயிற்சி நாட்கள்

ஏப்ரல்22,23,24,25,26, மற்றும் 29,30 (7 நாட்கள்)

பள்ளி வேலை நாட்கள் 196+14=210 நாட்கள்

ஆசிரியர் வேலை நாட்கள்


210+10 ( பயிற்சி) = 220 நாட்கள்

சனி வேலை நாட்கள்:

🌷ஜூலை 21,28

🌷செப்டம்பர் 8

🌷அக்டோபர் 27

🌷ஏப்ரல் 20

CRC பயிற்சி நாட்கள்:

🌷ஆகஸ்ட் 4

🌷செப்டம்பர் 15

🌷அக்டோபர் 6

ஏப்ரல் 22,23,24,25,26 மற்றும் 29,30

மொத்த பயிற்சி நாட்கள்
 10

பருவத் தேர்வுகள் விவரம்:

முதல் பருவத் தேர்வு

செப்டம்பர் 17 முதல் 22 வரை

விடுமுறை

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை (10 நாட்கள்)

இரண்டாம் பருவத் தேர்வு

டிசம்பர் 17 முதல் 22 வரை

விடுமுறை

 டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

மூன்றாம் பருவத் தேர்வு

ஏப்ரல் 10 முதல் 18 வரை

கோடை விடுமுறை

ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

பள்ளி இறுதி வேலை

நாள் ஏப்ரல் 20.

10 std மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கான வழிகாட்டி!

SSA சார்பில் மாவட்ட திட்ட அலுவலகத்தில் District Co-Ordinator தேர்வு செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது:

ஒரே வங்கி கணக்கிற்குள் இனி "பீம்" மூலம் பணம் அனுப்ப முடியாது:-வரும் 1- ந்தேதி முதல் கெடுபிடி!

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு

சென்னை : தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம்,முழுவதும்,சொத்து வரி,50 - 100 சதவீதம்,உயர்வு
இடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. முறைப்படி 2008க்கு பின் சொத்து வரி ஏற்றப்படவில்லை. சிலஉள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரிஅவ்வப்போது உயர்த்தப்பட்டது. பல பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குபெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு சார்பில்அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி, குடியிருப்பு அல்லாத பகுதி என மூன்று விதமாக சொத்து வரி விதிக்கப்படஉள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம்; வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்; குடியிருப்புஅல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் 'ஏ, பி, சி' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சதுர அடி முறையில் தனித்தனியே சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது.அவை அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி நடப்பு ஆண்டு முதல் வசூலிக்கப்படும்.
தி.மு.க.எதிர்ப்பு
வரி உயர்வுக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3,500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை ஊழல்கள் அனைத்து துறைகளையும் விஞ்சி நிற்கிறது. அதை தடுக்க முடியாத அமைச்சரும் முதல்வரும் சொத்து வரியை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை. சொத்து வரி உயர்த்தப்பட்டதும் உடனடியாக பாதிக்கப்படுவோர் வாடகை குடியிருப்புதாரர்கள் தான். 
மாநகராட்சி பகுதிகளோடு புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த விதமான புதிய வசதிகளையும் ஏற்படுத்தாமல் மாநகர் பகுதிகளுக்கு இணையாக சொத்து வரியை மட்டும் உயர்த்தியது கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2017அன்றையநிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணநிரவல் செய்யப்பட்டமைபணியிலிருந்து விடுவித்த மற்றும் சேர்ந்த அறிக்கை பெறாப்படாதவர்கள்பட்டியல் அனுப்புதல் சார்பு CEO - செயல்முறைகள்!!

தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வழியாகவோ அல்லது தனியாகவோ எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தகுதியான படிப்புதான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ராஜி உள்ளிட்ட சட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில பாடத் திட்டத்தின்படி 10 அல்லது பிளஸ் 2 தேர்வுகளை எங்களில் சிலர் தனித் தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு சிலர் 10-ஆம் வகுப்பை முடித்த பிறகு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள என்ஐஓஎஸ்' எனும் தேசிய திறந்தவெளி பள்ளியில் 2 ஆண்டு படிப்பை முடித்துள்ளோம். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் மூலமாக 3 ஆண்டு சட்டப்படிப்பையும் படித்து முடித்துள்ளோம். நாங்கள் 10 அல்லது பிளஸ் 2 தேர்வை தனியாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால், எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மறுக்கிறது.

எனவே, எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.தலைமை நீதிபதி விசாரணை: இந்த மனு மீதான விசாரணை தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முழுஅமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதே போன்று 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழியாகப் பெற்றிருக்க வேண்டும். அந்த படிப்புகளை அவர்கள் தொலைதூரக்கல்வி வழியாகவோ அல்லது தனியாக எழுதியோ தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்யத் தகுதியான படிப்புதான்.

10, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை உரிய வழிகளில் இல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழங்கள் மூலமாகவோ நேரடியாகவோ படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய முடியாது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தனியாகத் தேர்வு எழுதி தற்போது சட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ள, மனுதாரர்களான இந்த மாணவர்களை வழக்குரைஞர்களாக 3 மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டுகளில் இல்லாத புது முயற்சி

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல, தமிழக பள்ளி கல்வியிலும், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, 10 வகுப்புக்கும், தொழிற்கல்வி, விருப்ப பாடமாக நடத்தப்படுகிறது.

ஒப்புதல்
இதை பின்பற்றி, தமிழ கத்திலும், இடைநிலை கல்வியில் முதன்முதலாக, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,வின் முன்னாள் இயக்குனருமான, ராமேஸ்வர முருகன், இந்த திட்டத்துக்கான கோப்பை தயாரித்து, மாநில அரசிடம் தாக்கல் செய்திருந்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது.

இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், முதற்கட்டமாக, 67 பள்ளிகளில், 9ம்வகுப்பிற்கு மட்டும், தொழிற்கல்வி பாடம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பள்ளி அளவிலான தேர்வாக அல்லாமல், அரசின் பொது தேர்வுத்துறை வழியாக, தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பின், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது:தமிழகத்தில், 1978 - 79ல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, அவை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அமலுக்கு வந்தன.
வேலை வாய்ப்பு

ஆனால், இடைநிலைமாணவர்களுக்கும், தொழிற்கல்வி துவங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவு செய்யும் வகையில், 9ம் வகுப்பில், தொழிற்கல்வி பாடம் அமலுக்கு வந்துள்ளது.இதில், தானியங்கி ஊர்தி பொறியியல், வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம், அழகு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

இந்த நடவடிக்கையால், உயர்கல்விக்கு செல்லாமல், பள்ளிப்படிப்பை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கும், தொழில் திறனும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய திட்டத்தை பின்பற்ற உத்தரவுதொழிற்கல்வி பாடத்தை, சி.பி.எஸ்.இ.,யை போல, தமிழக மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ., பின்பற்றும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் பாடத்திட்டப்படி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த மத்திய பாடத்திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வின் முடிவு, இன்று வெளியாகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. 
இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு பயணமாகும் சேலம் அரசு பள்ளி மாணவர்

அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,745 மாணவ - மாணவியர்
படிக்கின்றனர். இப்பள்ளியில், அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, ஒன்பதாம் வகுப்பு மாணவர் மேகநாதன். சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி ராகவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக, தானியங்கி வேகத்தடை கட்டுப்பாட்டு கருவியை, மாணவர் மேகநாதன் கண்டுபிடித்துள்ளார். ஆம்புலன்ஸ் வேகமாக வரும் போது, வேகத்தடை, தானாக, சமமான சாலையாக மாறி விடும். பின், மீண்டும், வேகத்தடையாக மாறிவிடும்.போக்குவரத்து சிக்னலும், பச்சை விளக்குக்கு மாறி, மற்ற சிக்னல்கள் சிவப்பு விளக்குக்கு மாறிவிடும். மேலும், செல்லக்கூடிய மருத்துவமனைக்கு, முன்னதாகவே அலாரம் அடிக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளார்.பண்ணப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ''பல்வேறு அறிவியல் கண் காட்சியில், மேகநாதன் வெற்றி பெற்றுஉள்ளார். ''சேலம் மாவட்டம், பெருமை கொள்ளும் வகையில், அவர் வெளிநாடு செல்ல தேர்வு பெற்றது, மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.மாணவர், எந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

அரசாணை (நிலை) எண். 149 Dt: July 20, 2018 -பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது


12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்- அடுத்த ஆண்டு முதல் புதிய கல்வித் திட்டம்

தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில 
திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்

பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்

 ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

24/7/18

முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும்-. தலைமையாசிரியர்கள் தவிப்பு

கடையநல்லூர்: அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக 28 பாட வேளைகளை ஒதுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பல பள்ளிகளில் இந்த அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
 போதிய பாடவேளைகள் இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருவதாக மாநில கணக்காயர் தணிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதி இழப்பை சரி செய்யும் நோக்கில், கல்வித் துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டது.
 இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (ந.க.எண்.055838-நாள் 18-4-2018) சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள், மேல்நிலை வகுப்புகளில் 28 பாடவேளைகள் போதிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் போதிய பாட வேளை இல்லை என்றால் அந்த முதுகலை ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு, அதாவது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்க வேண்டும்.
 மேல்நிலைப் பிரிவுகளை பொருத்தவரை, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி அமைந்திருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, அதில் பயின்று வரும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 ஆங்கிலவழிப் பிரிவுகள்
 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவது போன்றே, ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியே ஆசிரியர்கள் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆங்கிலவழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கிலப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 60 மாணவர்கள் இருப்பின் இரண்டு ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை இருப்பின் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை இருந்தால் 4 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் அதை ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஐம்பதுக்கு மேல் மாணவர்கள் இருந்தால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து, கூடுதல் பிரிவை ஏற்படுத்தலாம்.
 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை 60க்கு மேல் கூடினால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
 வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளைகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 காற்றில் பறக்கும் அறிவிப்புகள்
 நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் கல்வித் துறை எடுத்துள்ள முடிவை பொதுமக்கள் வரவேற்று வரும் நிலையில், பல பள்ளிகளில் இத்தகைய அறிவிப்புகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் பலர் மேல்நிலை வகுப்புகளில் போதிய பாடவேளைகள் இல்லாதபோதும், கீழ் வகுப்புகளுக்கு செல்வதை கெüரவக் குறைச்சலாக பார்க்கும் நிலை உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களே வழக்கம் போல் அந்தப் பாட வகுப்புகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால், குறைந்தபட்சமாக 28 பாடவேளைகள் கூட இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையே பல பள்ளிகளிலும் தொடருகிறது. சில பள்ளிகளில் கண்துடைப்பாக நீதி போதனை வகுப்புகள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
 கல்வித் துறையில் உயரிய அதிகாரியான இயக்குநரின் உத்தரவைக் கூட செயல்படுத்த முடியாமல் சில தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
 ஏற்கெனவே, நிதி நெருக்கடியில் தவித்துவரும் அரசு, நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 - வி. குமாரமுருகன்

சொத்து வரி, குடிநீர் வினியோகம் உயர்வு-மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட சொத்து வரி மற்றும் குடிநீர் வினியோகம் உயர்வுக்காண ஆணை



பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு

அனைத்து வகை பள்ளிகளும்,வரும், 31க்குள், எமிஸ் பதிவு பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் (எமிஸ்), பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் மாணவர்களின் பதிவு, புதிய மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், இதில் ஆண்டுதோறும் பதிவேற்றம்

செய்யப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல், தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளும், எமிஸ் பதிவு அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, முறையான, முழுமையான பதிவுகளை, பள்ளி தலைமையாசிரியர்கள் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016

பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ளஇணைப்பில் புதிய   அடையாள அட்டையைத் தரவிறக்கம்செய்து கொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD THE NHIS CARD

அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி

இழப்பைக் கருத்தில் கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக 28 பாட வேளைகளை ஒதுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பல பள்ளிகளில் இந்த அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
 போதிய பாடவேளைகள் இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருவதாக மாநில கணக்காயர் தணிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதி இழப்பை சரி செய்யும் நோக்கில், கல்வித் துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டது.
 இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (ந.க.எண்.055838-நாள் 18-4-2018) சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள், மேல்நிலை வகுப்புகளில் 28 பாடவேளைகள் போதிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் போதிய பாட வேளை இல்லை என்றால் அந்த முதுகலை ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு, அதாவது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்க வேண்டும்.
 மேல்நிலைப் பிரிவுகளை பொருத்தவரை, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி அமைந்திருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, அதில் பயின்று வரும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 ஆங்கிலவழிப் பிரிவுகள்
 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவது போன்றே, ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியே ஆசிரியர்கள் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆங்கிலவழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கிலப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 60 மாணவர்கள் இருப்பின் இரண்டு ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை இருப்பின் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை இருந்தால் 4 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் அதை ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஐம்பதுக்கு மேல் மாணவர்கள் இருந்தால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து, கூடுதல் பிரிவை ஏற்படுத்தலாம்.
 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை 60க்கு மேல் கூடினால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
 வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளைகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 காற்றில் பறக்கும் அறிவிப்புகள்
 நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் கல்வித் துறை எடுத்துள்ள முடிவை பொதுமக்கள் வரவேற்று வரும் நிலையில், பல பள்ளிகளில் இத்தகைய அறிவிப்புகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் பலர் மேல்நிலை வகுப்புகளில் போதிய பாடவேளைகள் இல்லாதபோதும், கீழ் வகுப்புகளுக்கு செல்வதை கெüரவக் குறைச்சலாக பார்க்கும் நிலை உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களே வழக்கம் போல் அந்தப் பாட வகுப்புகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால், குறைந்தபட்சமாக 28 பாடவேளைகள் கூட இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையே பல பள்ளிகளிலும் தொடருகிறது. சில பள்ளிகளில் கண்துடைப்பாக நீதி போதனை வகுப்புகள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
 கல்வித் துறையில் உயரிய அதிகாரியான இயக்குநரின் உத்தரவைக் கூட செயல்படுத்த முடியாமல் சில தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
 ஏற்கெனவே, நிதி நெருக்கடியில் தவித்துவரும் அரசு, நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 - வி. குமாரமுருகன்

கால்நடை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு நாளை தொடக்கம்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ

அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) தொடங்க உள்ளது.

மொத்தம் 460 இடங்கள்: இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக். உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

ஜூலை 24 முதல் கலந்தாய்வு: இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வு ஜூலை 24-ஆம் தேதி தொடங்குகிறது.

சிறப்புப் பிரிவினருக்கு...முதல் நாளான செவ்வாய்க்கிழமை பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பு மற்றும் பி.டெக் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். காலை 11.30 மணிக்கு பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் தொழில்கல்வி பிரிவினருக்கான ஒதுக்கீடு நடைபெறும். இந்த ஒதுக்கீட்டுக்கு 18 இடங்கள் உள்ளன.

பொதுப் பிரிவினருக்கு...

பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும். பி.டெக் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்புக் கடிதம்: சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in  ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்புக் கடிதம்: சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,

2017ல் வழங்கப்பட்ட, தேர்ச்சி மதிப்பெண் சலுகை, இந்த ஆண்டு கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, 2 011 முதல், பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்பட்டது. இந்த நடைமுறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்தது. அதனால், 2017 - 18ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்புக்கு மீண்டும் பொது தேர்வு கட்டாயமானது. அப்போது, மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு பாடத்திலும், அகமதிப்பீடாக, 20 மதிப்பெண்ணும், தேர்வில், 80 மதிப்பெண்ணும் பெற வேண்டும். இவை ஒவ்வொன்றிலும், குறைந்தபட்சம், 33 சதவீதம் மதிப்பெண்பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. பின், இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, இரண்டிலும் சேர்த்து, 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என, சலுகை வழங்கப்பட்டது.
இந்த சலுகை, ஓராண்டுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டதால், நடப்பு கல்வி ஆண்டில், குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை கிடையாது என, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. எனவே, இதுபற்றிய விபரத்தை மாணவர்களுக்கு தெரிவித்து, அகமதிப்பீட்டிலும், தேர்விலும் குறைந்த பட்சம், 33 சதவீதம் மதிப்பெண் பெற வைக்க முயற்சிக்க வேண்டும் என,ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் CPS கணக்கு சீட்டு ஆன்லைனில் வழங்கப்படும்:

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இடம்
பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான, பழைய ஓய்வூதிய திட்டம், 2004ல் நிறுத்தப்பட்டு, புதிதாக சேர்வோருக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.
இத்திட்டத்தில், இடம் பெற்றவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்ததற்கு ரசீது வழங் கா மலும், பணப்பயன் கிடைக்காமலும் இருந்தது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய, ஆசிரி யர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், பங்களிப்பு திட்ட விபரங்கள் அனைத்தும், தமிழக அரசின் கருவூலத்துறை சார்பில், ஆன்லைனில் இணைக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, வரும், 23ம் தேதி முதல், ஆன்லைனில் ரசீது வழங்கப்படும் என, கருவூலத்துறை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Click Here & Download Your CPS Account Slip

ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை!

புதிய பாடத்திட்டம் பற்றி ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் “மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 11ஆம் வகுப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் அவற்றை மாணவர்கள் புரிந்துகொள்வதில் பல தடைகள் உள்ளன. பெரும்பாலான ஆசிரியர்களால் முற்றிலும் புதிதாகத் தோன்றும் இப்பாடங்களை நடத்த முடியவில்லை. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது இத்தகைய சிக்கல்கள் எழுவது இயல்புதான்.

இந்த நிலையில், பல மாணவர்கள் கடினமான பாடங்களை படிக்கத் தயங்கி வேறு படிப்புகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் இருந்து விலகி, வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். வேறு பலர் 11ஆம் வகுப்பிலிருந்து விலகி பல தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பாடத்திட்ட பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற இயலாது என்ற அச்சம்தான் மாணவர்கள் வேறு படிப்புகளில் சேருவதற்குக் காரணம் ஆகும். புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, புதிய பாடங்களை மாணவர்களுக்குப் புரியும் வகையில் நடத்துவதற்கு வசதியாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய கல்வியாண்டு தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்னும் நிறைவடையவில்லை.

செப்டம்பர் முதல் வாரத்தில் 11ஆம் வகுப்புக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு இன்னும் பயிற்சியளித்து முடிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித் துறை எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பல இடங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக் கூட பாடங்களில் ஐயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, புதிய பாடத்தின் மீதான புரிதல் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்றவாறு ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்A

23/7/18

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?

டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசு அண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.
தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும் ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது

 நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று இனி மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது. கணினி சாப்ட்வேர் உதவியுடன் புதிய வடிவிலான கேள்வித்தாள் வரும் டிசம்பரில் நடக்கும் ‘நெட்’ தேர்வில் அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதற்கான தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அண்மையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டது.
இதில் நீட், ஜெஇஇ மெயின், யுஜிசி மெயின், ஜிமாட், ஜிபாட், ஜிமெயின், நெட் உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும். நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே என ஆண்டுக்கு இரண்டுமுறை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது. பயிற்சி மையங்கள், பழைய கேள்வித்தாள்களை கொண்டும், கேள்வி-பதில்களை மட்டும் மனப்பாடம் செய்தும் படிக்கின்றவர்களுக்கு புதிய தேர்வு முறை பயன்தராது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நெட் தேர்வில் புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன் சிறப்புகள் தொடர்பாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
* மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு (நீட்), பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு (ஜெஇஇ), கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வு (நெட்) ஆகியவற்றை எழுதுகின்ற மாணவ மாணவியருக்கு இனி தனித்தனி கேள்வித்தாள் இடம்பெறும். ஒன்று போல் மற்றொன்று அமையாது.
* தேசிய தேர்வு முகமை வரும் டிசம்பரில் நடத்துகின்ற ‘நெட்’ தேர்வில் இந்த புதிய முறையை கொண்டுவர உள்ளது. இந்த தேர்வு எழுதுவோருக்கு தனித்தனி கேள்வித்தாள் கிடைக்க செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
* பொதுவாக ஒன்று முதல் நான்கு வரையான கேள்வித்தாள் தயார் செய்து மாற்றி மாற்றி வழங்குவதை விட்டுவிட்டு லட்சக்கணக்கில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு இதில் இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உதவியுடன் ஒவ்வொரு தேர்வருக்கும் தனித்தனி கேள்வித்தாள் தயார் செய்து வழங்கப்படும்.
* கேள்வித்தாள் தயார் செய்யப்படுவதற்காக ஓராண்டுகாலம் வரை செலவிடப்படும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சாப்ட்வேர், வினாத்தாளில் ரகசிய குறியீடுகள் போன்றவையும் வினாத்தாள் வெளியாவதை தடுக்கும் வகையில் இருக்கும்.
* கேள்விகள், பதில்கள் தயார் செய்ய சாப்ட்வேர் உதவி நாடப்படும். சிலபஸ் முழுவதும் படிக்காமல் கேள்வி பதில்களை மட்டும் படிக்கின்ற மாணவர்கள், தேர்வு மையங்களின் தீவிர பயிற்சியை மட்டும் நம்பியுள்ள மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை பெரும் சவாலாக அமையும்.
* தேர்வர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கேள்விக்கு ஒன்றுபோல் உள்ள பல விடைகள் வழங்கப்படும். அவற்றின் இருந்து சரியானதை தேர்ந்ெதடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் முழுமையான சிலபஸ் படித்த மாணவர்கள் மட்டுமே தேர்வுகளில் ஜொலிக்க இயலும். இவ்வாறு உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு :

ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி தமிழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்து, சென்னை மாநகராட்சி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இக்கல்வியாண்டில் (2018-19) குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு தமிழ் கற்றலை இனிமையுடன் கற்கும் பொருட்டு, ‘’தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மண்டலம் வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இடைவெளிவிட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பானது, பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 21 ஆண்டுகள் அனுபவமிக்க இடைநிலை ஆசிரியரான டாக்டர் கனகலட்சுமியால் நடத்தப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘’தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையினை ஒப்படைப்பு செய்துள்ளார்.  மேலும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் முழுமையும் 2,198 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, கடந்த ஏப்ரல் 19ம் நாள் உலக சாதனைக்காக 1,56,170 குழந்தைகளை ஒரே நேரத்தில் செய்தித்தாள்களை வாசிக்கவும், எழுதவும் செய்துள்ளார்.   அவரை கருத்தாளராக தேர்வு செய்து இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
இப்பயிற்சியானது, பெருநகர சென்னை மாநகராட்சி கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது மட்டுமின்றி,  கற்கும் மாணவ/மாணவியர்கள் தமிழை எளிமையாக கற்பது மட்டுமின்றி, தமிழ் வாசிப்புத் திறனும் மேம்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.