யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/15

காமராஜர் பல்கலை. பி.எட். படிப்புக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு: டிச.8-ல் கலந்தாய்வு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் பி.எட். படிப்புக்கான தகுதிப் பட்டியல் பல்கலை. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் வழங்கப்படும் பி.எட் (2015-2016) படிப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விபரம் காமராஜர் பல்கலைக்கழக இணையதளமான வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு டிச.8 முதல் டிச.10 ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூர கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.

முதல்வர் கணினித் தமிழ் விருது டிசம்பர் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்ததமிழ் மென்பொருள் உருவாக்கு பவர்களை ஊக்குவிக்கும் வகை யில் ‘முதலமைச்சர்கணினித் தமிழ் விருது’ ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. விருது பெறு பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப் படும்.இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கு ‘முதல்வர் கணினித் தமிழ் விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போட்டிக்குரிய மென் பொருள்கள் 2012,13 மற்றும் 2014-ம் ஆண்டுக்குள் தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.இவ்விருதுக்கு விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை ‘www.tamilvalarchithurai.org’ என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரிக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி,:பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 25 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


இந்தியாவிலேயே தமிழக ஆசிரியர்களே திறமையானவர்கள் : பள்ளி கல்வி இயக்குனர்

சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் கற்றலில் குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து அக்குழந்தைகளை குறைகளை போக்கு, அவர்களை நல்ல மதிப்பெண்கள் வாங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தை, பள்ளிக் கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.


பிறகு நிகழ்ச்சியில் பேசிய கண்ணப்பன், “கற்றலில் குறைபாடு என்பது மிகமிக குறைவாகவும், 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். அவர்களிடம் உள்ள குறைபாடுகளை களைய ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்.அந்த குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ அதுபற்றி கூறாமல் அவர்களை சரி செய்து மற்ற மாணவர்களை போல உருவாக்க வேண்டும்.இந்த பணிகளை மேற்கொள்வது தான் ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும். கற்றலில்குறைபாடு உள்ள மாணவர்களை முதலில் அடையாளம் கண்டு அவர்களுக்கேற்றவாறு பாடங்களை கற்று கொடுக்க வேண்டும். அது தான் இந்த பயிற்சி மையத்தின் நோக்கமாகும்.அந்த வகையில் கற்றல் குறைபாடுகளை போக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய மையத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

இதில் பயிற்சி பெற்ற25 ஆசிரியைகளும் மற்ற ஆசிரியர்களுக்கு தங்கள் அனுபவத்தை தெரிவிக்க வேண்டும்.ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர் பணியில் மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிக மனிதவளம் உள்ள நம் நாட்டில் அதனை உருவாக்கும் சக்தியாக ஆசிரியர் பெருமக்கள் திகழ வேண்டும். அந்த பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உள்ளது.இந்தியாவிலேயே தகுதியான ஆசிரியர்கள் நியமிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இங்குள்ள ஆசிரியர்கள் திறமையானவர்கள்” என்று தெரிவித்தார்.

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன.


இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின்நோக்கம்.ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒருதுறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.

தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 
* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி
* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ.,30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.

மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.


பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

சென்னை, டிச. 1–வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக செயல்படாமல்இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? தேர்தலுக்காக முன் கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் மாலைமலர் நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:–


தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 7–ந்தேதி பிளஸ்–2 மாணவர்களுக்கும், 9–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுதொடங்குவதற்கான அட்டவனை தயாரிக்கப்பட்டு அதற்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு முன்பே வினாத்தாள்கள் பள்ளிக்கல்வி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மழையால்அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தான் முறைசெய்ய வேண்டும். அரசு தேர்வுத்துறை அல்ல.

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் அட்டவணைஇந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். பிளஸ்–2 தேர்வுகள் 11 நாட்கள் நடைபெறும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத வசதியாக போதிய கால அவகாசம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தலுக்காக பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல மார்ச் முதல் வாரத்தில்பிளஸ்–2 தேர்வு தொடங்கி இறுதியில் முடிவடையும்.பொது தேர்வுக்கான கால அட்டவணைஅரசின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும். குறுகிய காலத்தில் தேர்வுகளை நடத்தஇயலாது. அதனால் ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்கும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசின் ஆலோசனைப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.முன்கூட்டியே தேர்வு நடைபெறும் கால அவகாசம் இல்லை என்று மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக பள்ளியின் மின் அமைப்புகள், பைப்லைன்கள், உட்பட பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்தை பராமரிக்கவும் சில செலவினங்கள் தனியார் பள்ளிகளுக்கு காத்திருக்கிறது.“அவ்வளவாக சேதமில்லாத பெரிய பள்ளிகள் ரூ.5 லட்சம் வரையில் செலவிட்டுள்ளது. எனவே சேதம் அதிகம் ஏற்பட்ட பள்ளிகள் மேலும் அதிக தொகை செலவிட வேண்டி வரும்” என்று பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.மாநில கல்வி ஆலோசகர் பி.புருஷோத்தமன் இது பற்றி கூறும்போது, “பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.

சேதத்துக்கு செலவிடப்பட்ட தொகைமற்றும் பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை பள்ளி நிர்வாகத்திடமிருந்து கேட்டுள்ளோம்” என்றார்.மற்றொரு மூத்த கல்வித்துறை அதிகாரி தெரிவிக்கும் போது, “பைப்லைன், கட்டிட சேத விவரம், மின் இணைப்பு பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளிடம் கேட்டுள்ளோம். சேதத்தை சரிசெய்ய சராசரியாக பள்ளிகள் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கோரியுள்ளன.மாநில அரசு மத்திய அரசுக்கு இந்த விவரங்களை அனுப்ப வேண்டியுள்ளது” என்றார்.

கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் அண்ணா பல்கலைக் கழக மற்றும்சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததோடு, இன்றும் கன மழை நீடித்து வருகிறது. 


இந்நிலையில் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.

FLASH NEWS : அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.


ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

1/12/15

7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’ஏழாவது ஊதியக்குழு 2014 பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை 19.11.2015 அன்று
மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி மத்திய அரசில் பணிபுரியும் பணியாளர்கள், முப்படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் சுமார் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள். இதனால் குறைந்த பட்சம் 15 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 23.55 சதவீதம் வரை ஊதியம் உயரலாம் என்று ஊதியக்குழு அறிவித்துள்ளது.

 கடந்த ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அளவை விட 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அளவு குறைவாக உள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையால் நிதிச்சுமையின் பங்கு 0.56 சதவீதம் மட்டுமே. ஆகவே அரசுப் பொருளாதாரத்தை இவ்வுயர்வு பாதிக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

15-வது தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 இருக்க வேண்டும். ஆனால் அது ரூ. 18,000 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது உயர்த்தப்பட வேண்டும்.


அடிப்படைச் சம்பளம் உயர்வு என்ற காரணம் காட்டி, வாடகைப் படி குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் வட்டியில்லா கடன் நிறுத்தப்பட உள்ளது. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு, 7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

காமராஜர் பல்கலை. பி.எட். படிப்புக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு: டிச.8-ல் கலந்தாய்வு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகதொலைதூர கல்விஇயக்கத்தின் பி.எட். படிப்புக்கான தகுதிப்பட்டியல் பல்கலை. இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

தொலைதூர கல்வி இயக்ககத்தின்கீழ் வழங்கப்படும்பி.எட்(2015-2016) படிப்பு சேர்க்கைக்கு தகுதிபெற்ற மாணவர்களின்விபரம் காமராஜர்பல்கலைக்கழக இணையதளமான  வெளியிடப்பட்டுள்ளது.


தகுதி பெற்ற மாணவர்களுக்கானகலந்தாய்வு டிச.8 முதல் டிச.10 ஆம்தேதி வரைபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூர கல்விஇயக்ககத்தில் நடைபெறும்.

5 நாள் கனமழை - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள, புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது:

இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை; மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மழை எச்சரிக்கை: டிச., 1, 2, - தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரியின் அனேக இடங்களில் மிக கனமழை; தென் மாவட்டங்களில், ஒருசில இடங்களில் கனமழை. டிச., 3, 4 - தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை.சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை, விட்டு விட்டு பெய்யும்.நேற்று காலை, 8:30 மணிவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டம், குடவாசல் - 12; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 10; சிவகங்கை மாவட்டம், திருபுவனம் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
அதிகம்:

இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றுடன் முடிந்த ஒரு வாரத்தில், இயல்பு அளவாக தமிழகத்தில், 3.6 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.1 செ.மீ., மழை பெய்துள்ளது. இதே கால கட்டத்தில், சென்னையில், 8.2 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், 30 மாவட்டங்களில் இயல்பு அளவை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில், இயல்பு அளவு மழை பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், இயல்பு அளவை விட, குறைவாக மழை பெய்துள்ளது.
மாவட்ட நிர்வாகங்கள் 'உஷார்':


தமிழகத்தில், ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்தால், அதை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்கள் உட்பட, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.* ஏற்கனவே பெய்த தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், துாத்துக்குடி மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன* கனமழை தொடரும் என்பதால், அனைத்து துறை அதிகாரிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்* தண்ணீர் தேங்கும் பகுதிகளில், உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும்* நீர்நிலைகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்*நீர் கசிவை நிறுத்த, மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்* நிவாரண முகாம் மற்றும் மருத்துவ குழுக்களை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.

இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களைப் படிக்க முடியாது- தொடக்கக்கல்வித் துறையின் RTI Letter.

RTI-யின் பதில் ஏற்படுத்திய நம்பிக்கையின்மை:

இளங்கலை பட்டம் பெற்றவர்கள்

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களை, வெவ்வேறு 
பல்கலைக்கழகங்களில் ,வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் 

(நேரத்தில்) தேர்வு எழுதி முடித்திருந்தால் அதை பணிப்பதிவேட்டில் 
பதிவு செய்து, பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் 
பள்ளிக்கல்வித்துறை பலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் பதில் அளித்துள்ளது..

ஆனால்,தொடக்கக்கல்வித் துறையோஒரே கல்வியாண்டில் இரண்டு
பட்டங்களை படிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது..

ஏன் இந்த முரண்பாடு..?
இது RTI-ல் கொடுக்கப்பட்ட தவறான தகவலினால் ஏற்பட்ட முரண்பாடா...?

இல்லை,இரு துறையிலும் உள்ள வேறுபட்ட விதிமுறையினால் ஏற்பட்ட
முரண்பாடா..?

எது உண்மை...தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த இந்த 
முரண்பாடான தகவலினால் RTI-ல் வழங்கப்படும் தகவல்களின் மீதும் 
ஆசிரியர்களின் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது..

இதில் நமக்கு ஒரு தெளிவு பிறக்க நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய
கட்டாயத்திற்க்குத் தள்ளப்பட்டுள்ளோம் தோழர்களே..

தோழமையுடன்,தேவராஐன், தஞ்சாவூர் 

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது.
 இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது. அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....: இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.
 சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.
 இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 அரையாண்டு தேர்வு மாற்றம்? அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 28 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் ஜனவரி 26-ஆம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.
 இந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிசம்பர் 4 (வெள்ளிக்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பிறகு, சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்

நேற்று(30.11.2015 கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி: நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்:  புதிய கல்விக் கொள்கை  மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி:  அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்துறை சார்ந்த ஆலோசனைகளுக்குப் பின் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் பாடத்திட்டத்திட்டுக்கும் சிறந்த ஒத்துழைப்பை அடுத்த ஆண்டு முதல் காண முடியும். மத்திய பாடத்திட்டத்திலும், மாநில பாடத்திட்டங்களிலும் வெவ்வேறு பாடத்திட்ட முறைகள் பின்பற்றப்படுவது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வரும் நிலையில் ஆசிரியர்களை, பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.
தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 
* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி
* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.- நமது நிருபர் -

கேட்' தேர்வு: பி.இ.,க்கள் ஆர்வம்

மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ., எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.


300 மையங்களில்...:வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., படிப்பதற்கான, கேட் எனப்படும், பொது மாணவர் சேர்க்கை தேர்வு,நாடு முழுவதும், 300 மையங் களில் நேற்று நடந்தது. 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். மூன்று தாள்கள், தலா ஒரு மணி நேர, 'ஆன்லைன்' தேர்வு நடந்தது.

தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில், 30 தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடந்தது. சென்னையில், 10 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

80 சதவீதம்இவர்களில், 80 சதவீதம் பேர், பி.இ., இறுதி ஆண்டில் படிக்கும் அல்லது கடந்த ஆண்டு, பி.இ., முடித்தவர்கள்.அதிகமானோர் எழுத காரணம்இந்த தேர்வு, 2007ல் துவங்கிய போது, 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பின், படிப்படியாகக் குறைந்தது. 2014ல், 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர்; இந்த ஆண்டு, 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து, ஐ.எம்.எஸ்., எனப்படும், முன்னணி தனியார் பயிற்சி மையம் ஒன்றின், சென்னை மைய இயக்குனர் டோனி சேவியர் கூறுகையில், ''ஐ.ஐ.எம்., எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளதால், இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது; தேர்வும் கொஞ்சம் எளிதாகியுள்ளது. இன்ஜி., மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வருவதால், எம்.பி.ஏ., படிக்க விரும்புகின்றனர். இந்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது,'' என்றார்.

வணிகவியல் படிப்புக்குஇன்ஜினியர்கள் ஆசை:எம்.பி.ஏ., எனப்படும் மேலாண் நிர்வாக படிப்பு, வெறும் வணிகவியல் தொடர்பான படிப்பாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் தேவையான படிப்பாக மாறி விட்டது. பி.இ., - பி.டெக்., மாணவர்கள், எம்.பி.ஏ., படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க, இன்ஜி., பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.எம்.பி.ஏ., படித்தால் தனியார் நிறுவனங்களில், ஆரம்பத்திலேயே அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதோடு, பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளதே காரணம்.

5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கோரிக்கை.

வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. 


கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.2ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம் கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து கூடுதலாக100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.