யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/1/16

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா?---தகவல் துளிகள்

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி?---தகவல் துளிகள்

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்---தகவல் துளிகள்

பாட்டி வைத்தியம்---தகவல் துளிகள்

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்---தகவல் துளிகள்

பெண்களின் ஏழு பருவங்கள்----தகவல் துளிகள்

பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?---தகவல் துளிகள்

பேஸ்புக்கில் நண்பர்களை நீக்குவது எப்படி?----தகவல் துளிகள்

பொது அறிவு---தகவல் துளிகள்

மனதிற்கான மருந்துகள் அனுபவத்திலிருந்து மனவளக் கட்டுரை---தகவல் துளிகள்

மனித உடம்பின் 99 இரகசியங்கள்---தகவல் துளிகள்

மாடியில் போடும் தோட்டம் பற்றிய உங்களது அனைத்து சந்தேகங்களுக்கான பதில்களும் இனி ஒரே இடத்தில்---தகவல் துளிகள்

மூலிகை வளம் குப்பை மேனி---தகவல் துளிகள்

மொபைல் போன்---தகவல் துளிகள்,

வாழ்க்கை சொல்லும் பாடம்---தகவல் துளிகள்

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று---தகவல் துளிகள்

SBI - useful information---தகவல் துளிகள்,

பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்

தகவல் அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், 'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை, 'வாட்ஸ் ஆப்' ஏற்படுத்தித் தந்துள்ளது. மொபைல் போனில் தகவல் அனுப்ப உதவும், 'வாட்ஸ் ஆப்'புக்கு போட்டியாக, 'லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்' என, ஏராளமான, 'ஆப்'கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில், வாட்ஸ் ஆப் முன்னணியில் உள்ளது.


சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும், பேஸ்புக், 'வாட்ஸ் ஆப்'பை, பெருந்தொகைக்கு விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப்பில் பல்வேறு மாற்றங்களை, பேஸ்புக் புகுத்தி வருகிறது. தற்போது, பிற, 'ஆப்'களால் எழும் போட்டியை சமாளிக்கும் நோக்கில், 'வாட்ஸ் ஆப்'பில் புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
'வீடியோ' அழைப்பு, பேஸ்புக்குடன், தகவல் மற்றும் ஆவணங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல வசதிகள், வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி பயனாளிகள் மேற்கொள்ளும் அழைப்புகள் மற்றும், 'சாட்டிங்' பதிவுகளை, 'வாட்ஸ் ஆப்'போ, வேறு மூன்றாம் நபரோ, பயன்படுத்த முடியாதபடி, தடுக்கும், 'எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இண்டிகேட்டர்' வசதியும், புதிய அம்சமாக இணைக்கப்படுகிறது.

வாங்க பகிரலாம்!
புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனக்கு தெரிந்தவர்களுடன், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள, 'வாட்ஸ் ஆப்' பயன்படுகிறது. இந்தியாவில், பெரும்பாலானோர் பயன்படுத்தும், 'ஆப்'பாக வாட்ஸ் ஆப் திகழ்கிறது. இதன் மூலம், படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோக்கள் பகிரப்பட்டு, சில நிமிடங்களில் மக்களிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயங்களாக உருமாறுவது, சமீபத்திய, 'டிரெண்ட்' ஆக உள்ளது. வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் அனைத்தையும், பேஸ்புக்கிலும் பகிரும் வசதி சேர்க்கப்படுவதால், பிற, 'ஆப்'களை, ஓரங்கட்ட முடியும் என, பேஸ்புக் நிறுவனம் கருதுகிறது

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம் குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பெயரளவுக்கு வந்து விட்டு, ஒரு வாரம் வரை போராட்டபணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடாமல் மவுனமாக இருப்பதால், ஆசிரியர் சங்க போராட்டத்துக்கு, அதிகாரிகளும் துணை போவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோரிக்கைகள் என்ன?
* மத்திய அரசுஆசிரியர்களை போல், தமிழக ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தர ஊதியம் வழங்க வேண்டும்
* 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்* பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும்
* ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
* தமிழை முதல் பாடமாக்கி அரசாணை வெளியிட வேண்டும்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவின் படி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் உதவி ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஜாக்டோ போராட்டத்தின் 15 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் 3 நாட்கள் மறியல் போராட்டத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தினையும் திரட்டி மறியல் களத்தில் இறக்கிட வேண்டும்.27.01.2016 முதல் 29.01.2016 முடிய நடைபெறவுள்ள ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம் ஆசிரியர்கள் மத்தியில் உணர்வு தீயினை உருவாக்க வேண்டும்.
ஜனவரி 30,31 சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மறியல் போராட்டமென்பது நமக்கு நாமே எந்த அலுவலகத்தை மறிக்கப் போகிறோம் என்ற நகைச்சுவை உணர்வே மேலிடுகிறது. எப்படியோ ஜாக்டோ மாநில அமைப்பு முடிவு செய்துவிட்டது.திரும்பிப் பார்ப்பது போராட்ட வடிவத்தில் இலக்கணமாக இருக்காது.
தேர்தல் சமயத்தில் எந்த அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை பகைத்துக்கொள்ள விரும்பாது. ஜாக்டோ போராட்டம் , ஜாக்டோ ஜியோ போராட்டம் , டெஸ்மா போராட்டம் ஆகிய போராட்டங்களை நடத்திய போர்க்குண வரலாறு உடையது. இந்த மறியல் போராட்டத்தை பழைய போராட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அமைப்பிற்கு இந்த 3 நாள்கள் போராட்டத்தை போராட்டமாகவே கருத முடியாது.இந்த போராட்டத்தில் தேசியப் பணியே இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு கோரிக்கைகளுக்காக களம் காணுவதுதான் போர்க்குண உணர்வாகும். இருக்கிற ஆசிரியர்கள் எண்ணிக்கையில் முதல் இரண்டு நாள் சனி ஞாயிறில் பெருந்திரளாக கலந்துகொள்ளுங்கள்.காலையில் கைது மாலையில் விடுதலை சடங்காகவே முடியும். 
பிப்ரவரி 01 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம்தான் உண்மையான மறியல் போராட்டமாகும்.முதல் 2 நாள்கள் போராட்டத்தில் கைதாகி விடுதலையானவர்களும் , போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் காத்திருப்போரும் பிப்ரவரி 01 மறியல் போராட்டத்தில் பள்ளியில் எவரும் இல்லை அனைவரும் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள் என்ற நிலையை தமிழக அரசுக்கு உணர்த்துவோம். அரசு ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டத்தின் எண்ணிக்கை ஜேக்டோ அமைப்பின் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்தாலும் அவர்களின் பீரிட்ட எழுச்சியின் உணர்வுதான் தமிழக முதலமைச்சருக்கு அடுத்த அதிகாரத்தில் உள்ள தலைமைச் செயலாளரையே அழைத்துப்பேச செய்தது என்ற யதார்த்த நிலையை உணர வேண்டும்.
எனவே ஜாக்டோ மறியல் போராட்டத்தில் முழு சக்தியினையும் அரசுக்கு உணர்த்தினால்தான் 7-வது ஊதியக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை நெஞ்சத்தில் பதிவு செய்து போர்க்குண வரலாறு படைத்த ஜாக்டோ பெரும்படையே கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்கிற முழு நம்பிகையுடன் விளைவினை ஜாக்டோ அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு மறியல் களத்தில் வீறுநடை போட வாருங்கள் என அன்புடன் அழைகிறேன்.பாரதி கண்ட வீரம் செறிந்த பெண் ஆசிரிய சகோதரிகளே 3நாள் மறியல் போராட்டத்திலும் ’இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்று தலைமை வகுத்து முன்னணியில் செல்லுங்கள்.
ஜேக்டோ அமைப்பு என்றும் உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரு இரும்பு கவசமாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இமைகளாக இருந்து கண்ணின் கருவிழியாம் உங்களை பாதுகாப்போம். கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரட்டும் தொடரட்டும். வெற்றி நமதே