யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/5/17

ஏழை மாணவர்களுக்கு இலவச ’அட்மிஷன்’;அலட்சியத்தால் ரூ.320 கோடி நஷ்டம்

இலவச மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு உத்தரவை, தனியார் பள்ளிகள் பின்பற்றாததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2010 ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள், தனியார் பள்ளிகளில்,கட்டணமின்றி சேர்க்கப்பட வேண்டும்.


தனியார் பள்ளியில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை, இத்தகைய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டியது கட்டாயம். ஐந்து வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணமின்றி கல்வி வழங்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கும். 

தமிழக அரசு, அந்த நிதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும். மத்திய அரசு சட்டப்படி, ஐந்து வயது முடிந்த குழந்தைகள், ஒன்றாம் வகுப்பில், இலவசமாக சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த சட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகத்தில் மட்டும் குளறுபடியான நடைமுறை உள்ளது.

அதாவது, தமிழக தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு என்ற பெயரில், எல்.கே.ஜி.,யில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதிலும், மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் தான் சேர்க்கப்படுகின்றனர். 

இது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சகம், பலமுறை எச்சரித்துள்ளது. ஆனாலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை கண்டுகொள்ளவில்லை. அதனால், 2011 முதல், மத்திய அரசு நிதி வழங்கு வதை நிறுத்தியது. எனவே, ஒவ்வொரு ஆண்டும், இலவச மாணவர் சேர்க்கைக்காக, தமிழக அரசுக்கு, 120 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. 

இது குறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது

மத்திய சட்டப்படி, ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன்பின், இலவச மாணவர்சேர்க்கைக்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். ஆனால், தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. அதனால், இதுவரை, 320 கோடி ரூபாயை இழந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி!

நான்காக பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு கை காட்டி நான்கு திசைகளையும் காட்டிக் கொண்டு நிற்கும்! இந்த திசையில் போனால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் போனால் அந்த ஊருக்குப் போகலாம் என்று, நமக்கு நான்கு திசைகளில் எங்கு, எங்கு போக முடியும் என்று நமக்கு வழி காட்டும்!


அது ஒரு தகவல் பலகை... நமக்கு வழி காட்டுவது தான் அதன் வேலை!  அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக்கொண்டு போய் விடாது; அது போல் தான் புத்தகமும்!  நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி! அதுவும் ஒரு தகவல் பலகை தான்!

மனிதன் சுயமாக எப்படி முன்னேறுவது என்று ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டன. பல வீடுகளில் அலமாரி நிறைய இது போன்ற புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பார்கள்.

கோடீஸ்வரன் ஆவது எப்படி?
சுலபமாக தொழிலதிபர் ஆக வேண்டுமா?
ஆட்சியைப் பிடிப்பது எப்படி?
நீங்கள் டாக்டர் ஆக வேண்டுமா?
என்ற பல தலைப்புகளில் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தப் புத்தகங்களில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் பட்ட அனுபவங்களை, நமக்கு வழி காட்ட எழுதி வைத்திருப்பார்கள். அது நிச்சயம் நமக்குப் பயன்படும்!

எவ்வளவு நல்ல புத்தகமாக இருந்தாலும், நாம் அதைப்  படிப்பதினால் மட்டும் எந்த பயனும் இல்லை. அந்த புத்தகத்தில், அறிஞர்கள் சொன்ன, நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே, அது நமக்கு பலன் தரும்!

அதில் சொல்லப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்த தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும். கோடிஸ்வரன் ஆக வேண்டுமா? என்ற புத்தகத்தை வாங்கி, அதைப்படித்து விட்டு அட்டை போட்டு புத்தக அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் ஏ.டி.எம்., மிஷினில் போய் கார்டை சொருகி பணத்தை அள்ளிக் கொண்டு வந்து விட முடியாது!

அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழி முறைகளை கடைப் பிடிப்பதற்காக, நம்மையே நாம் அர்ப்பணிக்க வேண்டும். ‘ஏட்டுச் சுரைக் காய் கறிக்கு உதவாது’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதைப் பலர் தவறாக இன்று வரை பொருள் கொண்டிருக்கிறார்கள். ‘இது போன்ற புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்க்கைக்கு உதவாது’ என்ற அர்த்தத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான சுரைக்காய் மட்டும் கறி ஆகி விடுமா? அதே பொரியலாக மாறி உங்கள் தட்டிற்கு வந்து விடுமா? நிச்சயம் வராது. அதை சுத்தம் செய்து பொடிப் பொடியாக அரிந்து அதற்கு தேவையான பொருட்களைச் சேர்த்து அடுப்பில் வைத்து சமைத்தால் மட்டுமே அதை கறியாக, நம்மால் சாப்பிட முடியும்!

அது போல் தான் இந்த வகை புத்தகங்களும், நிச்சயம் கறிக்கு உதவும்! எப்பொழுது? அதைப் படித்தவுடன், அதில் சொன்ன விஷயங்களை, புரிந்து கொண்டு, செயல்படுத்தி பாருங்கள்! நிச்சயம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமையும்! 

-துடுப்பதி ரகுநாதன்

இடைநின்ற குழந்தைகள் அதிகாரிகள் கள ஆய்வு

அருப்புக்கோட்டை வட்டார வளமையத்தில், 6-14 வயதுள்ள இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் கள ஆய்வு நடந்தது. 


பாலவநத்தம், குல்லுர்சந்தை, செம்பட்டி, பாலையம்பட்டி, பந்தல்குடி, சுக்கிலநத்தம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு திட்டம், சைல்டு லைன் (1098), உமன் தொண்டு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தியது.

இதுவரை 45 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திட்ட அலுவலர் நல்லதம்பி, ஒருங்கிணைப்பாளர் ஜெயஅனிட்டா ஆலோசனை வழங்கினர். 

ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், சைல்டு லைன், உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சங்கீதா செய்தனர்.

முதுகலை மருத்துவ வழக்கு; 3வது நீதிபதி இன்று உத்தரவு

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர, அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் நடைமுறை குறித்த வழக்கில், மூன்றாவது நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கிறார்.


இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிகளின்படி, முதுகலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களை சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, ’சிறப்பு பெஞ்ச்’ மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. அதனால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது.

நீதிபதி சத்தியநாராயணன், இந்த வழக்கை விசாரித்தார். நேற்று, மருத்துவப் கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடினார். அனைத்து தரப்பு வழக்கறி ஞர்களின் வாதங்களும் நேற்று முடிந்தது. 

இதையடுத்து, மனுக்கள் மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக, நீதிபதி சத்திய நாராயணன் தெரிவித்தார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரையில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் திவ்யநாதன் தலைமையில் நடந்தது.


செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் கணேசன், ஜான்சிராணி, ஜெசின்தாமேரி முன்னிலை வகித்தனர். 
தலைவர் பொன்செல்வராஜ், துணை தலைவர் முகிலன், பொருளாளர் தமிழ்மணியன் பேசினர். 

கூட்டத்தில், பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் உள்ள சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும், அரசாணை 720ல் மாற்றமோ, திருத்தமோ செய்யக் கூடாது, ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள தன் பங்களிப்பு திட்டத்திற்கு (சி.பி.எஸ்.,) பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஜி.பி.எஸ்.,) அமல்படுத்த வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதுகலை பட்ட படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு

மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்,‘ என பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள முதுகலை பட்டப் படிப்புகளில், சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.எஸ்.சி., பயோ டெக்னாலஜி, மரபணுவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்படுகிறது. திறமையான மாணவரை தேர்வு செய்யும் வகையில், 
அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மே 27, 28 ல் தேர்வு நடக்கும். மே 15க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுபோல் எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் உட்பட சில படிப்புகளுக்கு மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும். 

இதற்கான தேர்வு ஜூன் 18 ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள படிப்புகளுக்கு நுழைவு தேர்வு இல்லை, என்றார்.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நாளை மாலை தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை வழக்கில் பின்பற்றும் விதிமுறை குறித்து நாளை (மே -6 ) மாலை 4.30 தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 


இதில் எம்.சி.ஐ விதிகளா ? தமிழக அரசு விதிகளா என்பது குறித்து நாளை மே 6 மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கிராமப்புற பள்ளி அசத்தல்மே 06,2017,10:29 IST

அவிநாசி அருகே கிராமப்புற அரசு பள்ளி நிர்வாகத்தினர், அதிகளவில், மாணவரை பள்ளியில் சேர்க்க, ‘பிளக்ஸ்’ வைத்து, விளம்பரம் செய்து அசத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பஞ்சலிங்கம்பாளையத்தில், அரசு துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. கிராமப்புற பள்ளியாக உள்ளதால், குறைந்தளவிலேயே மாணவர் எண்ணிக்கை உள்ளது. 


இதை அதிகரிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக்குழு, மேலாண்மை மற்றும் கிராமக்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டனர்.

அதற்காக, பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை குறித்து, ‘பிளக்ஸ்’ பேனர் அச்சடித்து, அருகிலுள்ள கிராமங்களில் வைத்துள்ளனர். 

அதில், ‘திறமையான, கனிவான ஆசிரிய, ஆசிரியைகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி, தமிழக அரசின், 14 நலத்திட்டங்கள், முற்றிலும் இலவச கல்வி, மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி வகுப்பு.

புரொஜெக்டர் முறையில் கற்றல் செயல்பாடு, யோகா மற்றும் கணிப்பொறி கல்வி, சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள், அறிவியல் அரங்கம், தரமான மதிய உணவு, குழந்தை நேயப்பள்ளி,’ உள்பட பல வசதிகள் குறி த்து விளக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ‘கல்வித்துறையின் அறிவுரைப்படி, எங்களது பள்ளியில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதற்காக, அனைத்து வசதிகள் குறித்து, பேனரில் அச்சடித்து, பல இடங்களில் வைத்துள்ளோம். 

ஊர் மக்களின் ஒத்துழைப்போடு, சிறந்த முறையில் பள்ளியை செயல்படுத்தி வருகிறோம். பொதுத்தேர்விலும், 100 சதவீத தேர்ச்சி, நல்ல மதிப்பெண் பெற்று வருகிறோம்,’ என்றார்.

25/4/17

ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.

ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அதில் ஏற்படக்கூடிய தாமதம், ரயில் டிக்கெட் ரத்து, நடைமேடை எண், குறிப்பிட்ட ஒரு ரயிலின் தற்போதைய நிலை, ரயிலில், துாங்கும் வசதி இருக்கைக்கு வாய்ப்பு உள்ளதா, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இந்த ஆப் அளிக்கும்.டாக்சி சேவையை பதிவு செய்தல், போர்டர் சேவை,ஓய்வு அறை, ஓட்டல், சுற்றுலா பேக்கேஜ், இ - கேட்டரிங் போன்ற, சுற்றுலா தொடர்பான சேவைகளை, புதிய ஆப் மூலம் பெற முடியும். இந்த ஆப் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்களுடன், அதில் கிடைக்கும் வருவாயை, ரயில்வே பகிர்ந்து கொள்ளும்.

இதனால், ஆண்டுதோறும், ரயில்வேக்கு, 100 கோடி ரூபாய்வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ரயில்கள் தாமதமாக வருவது பற்றி, பயணிகளுக்கு தகவல் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபோன்ற குறைபாடுகள், புதிய ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.இந்த புதிய ஆப், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்.

அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.எம்.பி.பி.எஸ்., மாணவி உமா ரவிச்சந்திரனுக்கு, சிறப்பாகதேறியதற்காக, ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல்கலையின் வேந்தர், பட்டம் பெற்ற, 365 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.

பதக்கங்களை வழங்கி, வெங்கையா நாயுடு பேசியதாவது:அரசு மருத்துவமனை இணையதளங்களின் வழியாக, மருத்துவர்களின் சந்திப்பு, மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்த வகைகளை அறிந்து கொள்ள, விரைவில் புதிய வசதிகள் செய்யப்படும். மேலும், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை, தொலைபேசி வழியாக, டாக்டர்களிடம் தெரிந்து கொள்ளவுமான வசதிகளும், விரைவில் துவக்கப்படும். நம் மருத்துவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும், மனிதாபிமானத்துடனும், மருத்துவம் செய்கின்றனர். அதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், மருத்துவ சுற்றுலாவுக்காக, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்கு வருகின்றனர்.ஆனாலும், நாட்டில், 1,668 பேருக்கு, ஒரு அலோபதி மருத்துவர் தான் உள்ளார். அதில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பல்கலை துணைவேந்தர் மூர்த்தி பேசுகையில், ''இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், 39வது இடம்; தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் தேர்வில், 3.62 புள்ளிகளுடன், 'ஏ கிரேடு' பெற்று, ராமச்சந்திரா பல்கலை முன்னிலையில் உள்ளது,'' என்றார்.

NEET' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில்,நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

Download Admit  Card ::http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx

எனவே, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள், 'நீட்' தேர்வை ஏற்று கொண்டுள்ளன. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. விண்ணப்ப எண்,பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடு மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அறைக்கு வருவது குறித்த விபரங்களும், ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டு உள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு தேதி மாற்றம்.

மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள் ஏப்.,22ல் துவங்கின.இந்நிலையில் ஏப்.,29, 30ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) நடக்க உள்ளது.
இதனால் ஏப்.,29ல் நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அத்தேர்வுகள் ஜூன் ௨ அன்று நடத்தப்பட உள்ளது.மேலும், 'ஏப்.,25ல் அனைத்துக் கட்சி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, வினாத்தாள்களை முன்கூட்டியே மையங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என தேர்வாணையர் முத்துச்செழியன் தெரிவித்தார்.

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 
ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநில கல்வியியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது; ஆசிரியர்களும் அனைத்து பாடங்களையும் நடத்துவதில்லை; நேரமின்மையால், சில பாடங்களை விட்டு விடுகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், மாணவர்கள், வீடியோ காட்சியுடன் பாடத்தை கற்கலாம். அத்தகைய மாணவர்களுக்கான, சிறப்பு புத்தகமாக,இந்த வீடியோ பதிவுகள் இருக்கும். கோடை விடுமுறைக்கு பின், வீடியோ தயாரிப்பு பணி துவங்கி, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை பாடத்திட்டம் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Teachers General Transfer 2017-18 :தொடக்கக்கல்வி இயக்குநரின் மூன்றாவது சுற்றறிக்கை

EMIS CORRECTION WORK - Announcement

*EMIS CORRECTION WORK*

வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும் EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில்

> இனம்
> பாட மொழி
> பஸ் பாஸ்
> சத்துணவு
> ஆதார் எண்போன்ற விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- இணை இயக்குனர்  ( நிர்வாகம்)

பல்கலை.கள், உயர் கல்வி நிலையங்களில் விரைவில் ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் அமல்.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன. அத்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்தளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து விட்டார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக பொதுச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதோடு, அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கான துறைகள் இல்லை என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிய வேண்டும். அங்கு ஹிந்தி மொழிக்கான துறைகளை உருவாக்குமாறு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

மேலும், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் குறைந்தபட்ச ஹிந்தி மொழி வழிக் கல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் ஹிந்தி மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் தங்களின் தாய் மொழியில்

இத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையில் தன்னாட்சி அளிப்பதற்காக சில சட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் வகுத்து வந்தன. அவற்றின்படி சில பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது.

இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதற்காக சமச்சீரான ஒரு கொள்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து எதிர்ப்பும், விமர்சனமும் எழலாம் என்று தெரிகிறது.

ஏற்கெனவே, கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன காப்பீடு பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன, அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.

விரிவான காப்பீட்டுத் திட்டம்
ஒரு இரு சக்கர வாகன விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒருவேளை பின்வரும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தால் காப்பளிக்கிறது:
1. விபத்து அல்லது தீ விபத்து, மின்னல் வெட்டு, வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.
2. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தீவைக்கப்படுதல் அல்லது அந்நியர்களால் வன்முறையில் அழிக்கப்படுதல் அல்லது திருட்டு அல்லது கொள்ளை ஆகிய காரணங்களால் வாகனத்தை இழத்தல் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.

விபத்து
3. விபத்துக் காரணமாக மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடளிக்கிறது.
4. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.

இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டம் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக்களுக்கு மட்டும் காப்புறுதி அளித்தால், பின்பு காப்பீட்டு நிறுவனர், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் செலுத்தவும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பணம் செலுத்தவும் மட்டுமே பொறுப்புடையவராகிறார்.
  
உதிரிப் பாகங்கள்
மேலும் சில இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.
  
கணக்கீடு
காப்பீட்டுத் திட்டத்திற்கான முனைமத் தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
  
இணையச் சேவை
இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் சிக்கல்களில்லாதது மேலும் இப்போதெல்லாம் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை இணையத்திலேயே வாங்கிக் கொள்ளவும் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்.

G.O MS : 96 - தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம் -ஆணை வெளியீடு.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

1.பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குநராக மாற்றம்

2.தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குநராக மாற்றம்

3.ஆர்.எம.எஸ்.ஏ இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக மாற்றம்

4.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குநராக மாற்றம்

5.முறைசாரா கல்வி இயக்குநர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாற்றம்

6.பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குநராக மாற்றம்.

24/4/17

பள்ளிப் பாடத்தில் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்க்கை வரலாறு: வெங்கய்ய நாயுடு யோசனை

தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் படைத்த கீர்த்தனைகள் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு யோசனை கூறினார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா அறக்கட்டளை மற்றும் சேவா சமிதி சார்பில் கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ சுவாமிகளின் 250-ஆவது ஜயந்தி விழா மற்றும் மும்மூர்த்திகள் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியது: இளம் தலைமுறையினர் சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல விதமான பாரம்பரியங்களைக் கொண்ட நாம் இந்தியர்களாக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஆனால் அந்நியர்களின் படையெடுப்பு, சுரண்டல் காரணமாக நமது பாரம்பரியத்தை இழந்திருந்தோம். தற்போது அதிலிருந்து மீண்டு பாரம்பரியத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

குற்றமாகப் பார்க்கப்படும் பாரம்பரியம்: நாட்டிலேயே தமிழகம் மட்டும்தான் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. ஹிந்து என்ற சொல் நமது பாரம்பரியத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான சொல். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வார்த்தை அரசியலுக்காக குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இசை மனதுக்கு ஆத்ம திருப்தியை வழங்குவதோடு, சாந்தம், பரவசம், ஆன்மிகம் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தை தியாகராஜர், சியமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் நமக்கு வழங்கியுள்ளனர். இத்தகைய பாரம்பரிய சிறப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தியாகராஜ சுவாமியின் அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு ஆவன செய்யும் என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழா மலரையும் வெளியிட்டார்.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் ஆகியோர், இசை பாரம்பரியமாக இருந்து வருகிறது. வட மாநிலத்தவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தைப் பரப்ப வேண்டும். அத்துடன் பக்தி மார்க்கங்கள் வளர வேண்டும் என்றனர்.

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது.

என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம்.
இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம்.

எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும்.
இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.