யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/8/16

புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.

பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.
இதன்மூலம் இதர ஆசிரியர்களும் இத்தகைய முறையைப் பின்பற்றி எளிமையான முறையில் பாடங்களைக் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறையில், மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் முறையைவிட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த புதிய முயற்சிகள் பலவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வீடியோவாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இதில் மிகவும் வித்தியாசமான முறையில் மற்றும் புதுமையாகக் கற்பித்த 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளை வீடியோவாக எடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது . இதில் 100 ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் முறையை ஆவணப் படம் போல மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணையதளத்தில் வீடி யோவாக பதிவேற்றம் செய்து வருகிறது. இதில் ஈரோடு மாவட் டத்தைச் சேர்ந்த 3 ஆசிரியர்களின் கற்பித்தல் முறை குறித்த வீடியோ இடம்பெற்றுள்ளது. ஈரோடுமாவட்டம் மொடக் குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்), பவானி ஒன்றியம் சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை எம்.சுதா (பழைய செயல்வழிக் கற்றல் அட்டை மூலம் வகுப்பறையை அழகுபடுத்துதல் மற்றும் கற்றல் பயிற்சியை மேம் படுத்துதல்), பவானி ஒன்றியத்தில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசி ரியை வாசுகி (வாழ்க்கைக் கல் வியை அனுபவ பயிற்சி மூலம் கற்பித்து மாணவர்களை உணரச் செய்தல்) ஆகியோரின் கல்வி கற் பித்தல் முறை குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோவால் மற்ற ஆசிரியர்களும் இந்த வீடியோவைப் பார்த்து புதுமையாகவும்எளிமையாகவும் கற்பிப்பார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த கற்பித்தல் முறையை அங்கீகரித்து இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரும் கல்வியாண்டி லும் தொடரும் என்றும் இதன் மூலம் புதிய முறையில் வித்தியாசமாக கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமைகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் எஸ்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது

தேர்வு கட்டணம் பாக்கி பி.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 571 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஆக., 4ம் தேதி; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு, 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 
இதில், தேர்வு கட்டணம் செலுத்தாத, சில கல்லுாரிகளின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டன; அந்த கல்லுாரிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒன்பது கல்லுாரிகள், கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டுள்ளன. 'பணம் கட்டிய கல்லுாரிகளின் முடிவுகள், திங்கட்கிழமை வெளியாகும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 
சட்டசபை தேர்தல் நடைபெறாமல் உள்ள, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது. வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட தொகுதிகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, செப்., 30 வரை, மனு அளிக்கலாம்; செப்., 10 மற்றும், 24ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் படித்து காட்டப்படும்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, செப்., 11 மற்றும், 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அளவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வரும், 2017 ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகிறவர்கள், பெயர் சேர்க்க மனு கொடுக்கலாம். வாக்காளர் இறுதி பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும்.

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு, பின் வெளியிடப்படும்.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சிமேற்கொள்ளலாம். 
அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம்.'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

TNPSC:குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு.

குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஜூன், 5, 6 மற்றும், 7ம் தேதிகளில் நடந்தது; 3,407பேர் பங்கேற்றனர். 
இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண், 'கட் - ஆப்' தரவரிசை போன்ற விவரங்கள், பதிவெண்களுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு, வரும், 19ம் தேதி முதல் நடக்க உள்ளது

தமிழில் பெயர் 'இனிஷியல்'

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தமிழில் பெயர் எழுதவேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபத்துரை என்ற தமிழ் ஆர்வலர், பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். 
அதில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிலர், தங்கள் பெயரை ஆங்கிலத்திலும், சிலர் முன்னெழுத்தான, 'இனிஷியலை' ஆங்கிலத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை அனைவரும்,தங்கள் பெயரை தமிழில் எழுதுவதுடன், இனிஷியலையும், தமிழிலேயே எழுத வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார். தமிழில் எழுதாதது, அரசு விதிகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது.
சென்னை மாவட்டத்தில், இந்த பதவிக்குவிண்ணப்பிக்க விரும்புவோர், சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, செப்., 7 வரை அனுப்பலாம் என, சென்னை கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்.

ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டுஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ளஇடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

எனவே 01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

கல்வி தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


மாநிலங்களவையில் இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை கல்வியில் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமையும் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இட ஒதுக்கீடு அல்லது சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான எந்த அரசமைப்புச் சட்ட விதிகளையும் திருத்தம் செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு குறித்து கருத்துகள் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கும்படி மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளை அரசு கேட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

Results of Departmental Examinations - MAY 2016 (Updated on 08 August 2016)

கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்.

தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்றுவேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில்புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம்அறிமுகப்படுத்தப்பட்டு
 பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம்மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்ததுஅதற்கக்குள் நான் போக விரும்பவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் அந்தப்பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினிஅறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல்பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும்39000பேர்கள்இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழகஅரசுக்குவேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -தங்கம் தென்னரசு.

பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி
நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்; அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.
மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கள்ளர் பள்ளி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஆக.18-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் (மதுரை) செல்வக்குமார் தெரிவித்துள்ளது: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2016- 17 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.26 மற்றும் 27 ஆகிய 2 நாள்கள் மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.  ஆக.26 ஆம் தேதி, மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோருக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். ஆக.27 ஆம் தேதி முற்பகல் தமிழாசிரியர் மாறுதல், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் மாறுதல், பிற்பகலில் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடைநிலை ஆசிரியர் (1 முதல் 5 ஆம் வகுப்பு) இடைநிலைக் காப்பாளர் மாறுதல் மற்றும் சிறப்பாசிரியர் மாறுதலும் நடைபெற உள்ளது.

 முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் ஆக.18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அதற்குரிய முன்னுரிமை வழங்கப்படும். அதன்பின்னர் வரும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

��சிறப்புச் செய்தி�� பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்துகொள்ளலாம்

காந்தியடிகள்

உடலோம்பலின் இன்றியமையாமை

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்க உங்கள் வாகனத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.
மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.
திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீதுமோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.
மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் போது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் அன்றும்-இன்றும்:

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...
- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...
- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...
- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...
- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...
- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...
- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...
- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...
- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...
- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...
- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...
- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...
- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...
- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...
- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...
- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...
- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...
- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...
- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...
- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...
- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...
- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...
- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...
- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...நன்றி மாலைமலர்

இன்று இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு பற்றிய தகவல்.

இன்று இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு பற்றிய தகவல்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது.

கோல்கத்தாவில் பார்சி பாகன்

 சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து, பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில் பட்டைகளில் வெண்தாமரை மலர்கள், வந்தேமாதரம் என்ற வார்த்தைகள், கதிர்வீசும் ஆதவன், பிறைசந்திரன், நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது.

பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. 8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக, வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு, அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.

1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை (5) பச்சைநிற பட்டை (4 ), அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும், வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும், நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை.

பின்னர் 1921 ம் ஆண்டு விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது, பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி, பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார். இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது.

ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.

பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.

அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது.. இரண்டாம் உலகப் போரின்போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை பயன்படுத்திய இந்தக் கொடி தேசியக் கொடியாக இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.

விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக் கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது.

அடர் காவி, அடர் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும், மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது.

இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது.

இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப் பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.

கொடித்துணி, காதி என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
நன்றி கார்த்தி

ஆசிரியர் தினம் -Asiriyar Kural

குழந்தைகளே... செப்டம்பர் 5-ம்தேதி என்ன தினம்னு உங்களுக்குத் தெரியும்தானே? ஆசிரியர் தினமான அன்னைக்கு உங்களுக்குப் பிடிச்ச ஆசிரியர்களுக்கு ரோஜாப்பூ கொடுப்பீங்க, பரிசு கொடுப்பீங்க, டான்ஸ் ஆடி அவங்களை மகிழ்விப்பீங்க.
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடுறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா? செப்டம்பர் 5-ம் தேதிதான் நம்மளோட முன்னள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தாரு. அவரோட பிறந்த தினத்தைத்தான் ஆசிரியர் தினமா கொண்டாடுறோம். இவரு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரா இருந்தவரு. சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் துணைத் தலைவரும்கூட.
இவரு குடியரசுத் தலைவரா இருந்தப்ப, சில மாணவர்களும் நண்பர்களும் அவரிடம் போய் அவரோட பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டாங்க. அப்போ அவரு என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதுக்கு பதிலா ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தற மாதிரி அன்றைய தினத்தை ஆசிரியர் தினமா கொண்டாடுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. அதனால 1962-ம் ஆண்டுல இருந்து இந்தத் தினத்தை ஆசிரியர் தினமா கொண்டாடுறோம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன், ஸ்கூல் டீச்சரா இருந்ததில்லை. கல்லூரி பேராசிரியராக இருந்தவரு. இருந்தாலும் ஸ்கூல், கல்லூரின்னு பேதம் இல்லாமல் ஆசிரியர் தினத்தை எல்லோருமே கொண்டாடுறாங்க.
மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்லுவாங்க இல்லையா? அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்துல இருக்கறது டீச்சர்ஸ்தான். வீட்டுல அம்மா நம்மளை எப்படி பாத்துக்குறாங்களோ, அதுபோல ஸ்கூல்ல டீச்சர்தான் அம்மா மாதிரி.
ஏற்றிவிடும் ஏணிகள்
புதுசா ஸ்கூலுக்குப் போகும் குழந்தைங்க அம்மாகிட்டே போகணும், அம்மாகிட்டே போகணும்னு அழுதுகிட்டே இருப்பாங்க. அப்போ அவங்களை சமாதானப்படுத்தி, சாக்லெட் எல்லாம் கொடுத்து, விளையாட்டு காட்டி அந்தக் குழந்தைகளுக்கு ஸ்கூல் மேலே இருக்குற பயத்தைப் போக்குறது யாரு? டீச்சர்ஸ் தானே?
அதே டீச்சர்ஸ் தான் அ, ஆ எப்படி எழுதணும்னு நம்ம கையைப் பிடிச்சு எழுதி காட்டுவாங்க. ஏ, பி, சி, டி சொல்லிக் கொடுத்து, ரைம்ஸ் பாட வைச்சு எல்லாமே கத்துக் கொடுப்பாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் நமக்கு புதுப்புது விஷயங்களைக் சொல்லிக்கொடுத்து நம்மை முன்னேத்துவாங்க. நாம படிச்சு முடிச்சு அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் போவோம். ஆனா நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சருங்க மட்டும் அதே வகுப்புல வேற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துட்டு இருப்பாங்க.
அதனாலதான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னும், ‘ஏற்றி விடும் ஏணி’ன்னும் பெருமையா சொல்லியிருக்காங்க. அம்மா, அப்பாவுக்கு அடுத்ததா நம்ம வாழ்க்கையை முன்னேற்றும் ஆசிரியர்களையும் நாம் எப்போதும் மறக்கவே கூடாது. இவ்வளவு செய்யும் ஆசிரியர்களுக்கு நாம செய்யும் கைமாறு என்னத் தெரியுமா? படிச்ச முடிச்சு பல ஆண்டுகள் கழிச்சு உங்க டீச்சரை நீங்க பார்க்குறீங்கன்னு வச்சுக்குங்க. அப்போ நீங்க பெயர் சொல்லுற அளவுக்கு பெரிய ஆளா இருந்தா, ‘என்னோட ஸ்டூடண்ட்’னு பெருமையா சொல்லுவாங்க பாருங்க. அது மட்டும்தான் ஆசிரியர்களுக்கு நம்மால் கிடைக்கிற ஒரே சந்தோஷம். அவங்க சொல்லிக் கொடுத்த நற்பண்புகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிச்சு, நல்ல குடிமகனா வாழறதும் அவங்களுக்கு நாம செலுத்தற நன்றிக்கடன்தான்.

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

 விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்

வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.
இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும் குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்துஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சிஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டிஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்தகொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?'என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்றுவ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையைவெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாகதன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமைநீங்காமலே வாழ்ந்து தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில் உயிர் துறந்தார்.

- பூ.கொ.சரவணன்

ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி

கற்பியுங்கள் ஆசிரியர்களே

சுதந்திரதின விழா கவிதைகள்---தகவல் துளிகள்

தமிழ் தாத்தா---பொதுஅறிவுகட்டுரை,

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்

திருவள்ளுவரும் திருக்குறளும்

பள்ளிக்கு செல்ல குழந்தைகளை பக்குவப்படுத்துவது எப்படி?

புதிய தலைமுறை வார இதழ்-பெண்களுக்கு உதவும் எண்கள்-----தகவல் துளிகள்,

வளர்த்து விட்ட விடுதலை

திருப்பூர் குமரன் ---பொதுஅறிவுகட்டுரை,


கொடிகாத்த குமரன காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன். 

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது. 

'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். 

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். 

1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்ரி குடும்பம் வறுமையில் வாடியது. எனினும் செம்மையாகவும், கவுரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். 

இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார். 

கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது. 

காவலர்கள் தடியடி நடத்தி, தூப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதியாகும். 

மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது. 

ஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை. 

நாடு சுதந்திரமடைந்ததன் 60ம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில், திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.


திருக்குறள் பற்றிய ஆச்சர்யமான செய்திகள்!!!---கட்டுரைகள், கல்விச் செய்திகள்,

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இருஎழுத்துக்கள்-ளீ,ங
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
*திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
*திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
*திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
*திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
தொகுப்பு : ஆசிரியர் கார்த்திகேயன்

13/8/16

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் (பணியிடங்களின் எண்ணிக்கை 842) அனைத்தும் இணையதளம் மூலம் கலந்தாய்வுமுறையில் முழுமையாக நிரப்பப்பட்டன.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
""2016-17ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வின்போதுஇணையதளம் மூலம் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 325 தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பொது மாறுதலுக்குப் பிறகு காலியாக இருந்த 517 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் விரும்பிய இடங்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சரியாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குநர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மேற்பார்வை செய்து வருகின்றனர் என்று பள்ளிக் கல்வி இயக்ககச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்து வதற்கான பேறுகால சலுகைகள் சட்டத் திருத்த மசோதா மாநிலங்கள வையில் நேற்றுநிறைவேறியது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து தயாரிக்கப் பட்ட இந்த மசோதாவை தொழி லாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்தார்.

பள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு.

பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்றஅனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: 
அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும்.மதிய உணவு சமைத்ததும், மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன் மூன்று பேர் சாப்பிட்டு பார்க்க வேண்டும்; கண்டிப்பாக, ஒரு ஆசிரியர் மதிய உணவு முழுவதையும் சுவைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு.

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. 
இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல் கவுன்சிலிங் நடக்கிறது.

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர் - மாணவர் விகிதத்திற்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும்பள்ளிக்கு மாற்றுவர்.இந்த கட்டாய இடமாற்றத்தில், ஒவ்வொரு ஆண்டும், பல தில்லுமுல்லுகள் நடப்பது உண்டு. அதனால், பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். இந்த ஆண்டு, எந்த பிரச்னைக்கும் வழியின்றி, பணி நிரவலை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும், என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முதல்எழுத்து உள்பட தங்களின் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். 
ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதனை சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முதல் எழுத்துடன் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். இதனைமாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

IGNOU B.Ed - June 2016 Term End Exam Result Published...

பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை

TNPSC : GROUP - II MAINS HALL- TICKET PUBLISHED

கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்.

தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்றுவேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில்புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம்அறிமுகப்படுத்தப்பட்டு பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம்மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்ததுஅதற்கக்குள் நான் போக விரும்பவில்லை. 
தற்போது தமிழ்நாட்டில் அந்தப்பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினிஅறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல்பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும்39000பேர்கள்இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழகஅரசுக்குவேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -தங்கம் தென்னரசு.

திரு.கார்த்திக் சண்முகம்
மாநில துணைத்தலைவர் ,
9789140822
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்

TNPSC:Department Exam may 2016 Result Released

விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ 75,000/- விண்ணப்பப் படிவம்





செட்' தேர்வு முடிவு தாமதம் : பாதிக்கப்படும் பட்டதாரிகள்.

உதவி பேராசிரியர் தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவுகள், இன்னும் வெளியிடப்படாததால், பேராசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் பட்ட தாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192உதவி பேராசிரியர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன; 
இதற்கு வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; செப்., 7க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பிக்க முடியாமல் இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காரணம், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, 'செட்' தகுதி தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது; 85 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தேர்வு நடந்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால், உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க முடியாமல், அவதிக்குஆளாகி உள்ளனர்.

அதேபோல், மனோன்மணியம், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைகளும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. பலருக்கு தகுதிஇருந்தும், செட் தேர்வு முடிவு தாமதத்தால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்; அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செப்., 2ல் வேலை நிறுத்தம் : மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு.

''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும், செப்., 2ம் தேதி, முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டியன் தெரிவித்தார். இச்சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு, ஆக., 15ல், சென்னையில் நடக்கிறது.
விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யா துவக்கி வைக்கிறார். ஆக., 16 முதல் 18ம் தேதிவரை அகில இந்திய மாநாடு நடத்தப்படுகிறது.சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என போராடி வருகிறோம். இது தொடர்பாக, மத்திய அமைச்சர்களுடன்பேச்சு நடத்தியும், இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து, வரும், செப்., 2ம் தேதி முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இது குறித்து, மாநாட்டில் பேசி முடிவு செய்வோம். அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள், 45க்கும் மேற்பட்ட அகில இந்திய சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் விரயமாகும் ஆசிரியர் ஊதியம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.அதேபோல், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார்; இல்லையென்றால், பணியில் இருக்கும் ஆசிரியரில் ஒருவர், தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்.
ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடக்கும் போது, ஆசிரியர் - மாணவர் விகிதப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர்களை, கட்டாய பணி மாற்றம் செய்வர்; இந்த பணி நிரவல், அரசு பள்ளிகளுக்கு மட்டும் உண்டு. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் ஊதியம் மற்றும் சலுகைகள் பெறும் ஆசிரியர்கள் பலர், மாணவர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர்; ஆனால், இவர்களுக்கு கட்டாய பணி மாறுதல் கிடையாது. எனவே, அரசின் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பலர், பணியில்லாமல், வெறுமனே பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. அரசு நிதி விரயமாவதை தடுக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும், கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது

தகுதியானோர் பட்டியல் வெளியிடாமல் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

வரலாறு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே, பதவி உயர்வு கவுன்சிலிங்கை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கு முன்பே ஒவ்வொரு பாடத்திலும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும். அதில் ஆட்சேபனை இருந்தால் பட்டியல் சரி செய்யப்படும். ஆக., 22 ல் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் நடப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் வரலாறு பாடத்திற்கான சீனியாரிட்டி பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'வரலாறு பாடத்தில் சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பட்டியலை வெளியிட கல்வித்துறை மறுத்துவருகிறது,' என்றனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகுதியான ஆசிரியர்கள் பட்டியலை இயக்குனரகத்திற்கு அனுப்பி விட்டோம். இயக்குனரகம் தான் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும்,' என்றார்.

B.Ed பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி

தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பல்கலைகளில் தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., படிக்கும்போது பள்ளியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற வேண்டும். தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளிகளில் பயிற்சி பெற வேண்டும். 
அதேபோல் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6 முதல் 8 ம் வகுப்புகளில் பயிற்சி பெறலாம் என, தொடக்கக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி பெறுவதால், அவற்றை பணிக்காலமாக கருத வேண்டு மென, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 'இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக விடுப்பு எடுத்தே பி.எட்., பயிற்சி பெற வேண்டும். அரசாணையில் குறிப்பிடாததால் பயிற்சியை பணிக்காலமாககருத முடியாது,' என தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம்உத்தரவிட்டுள்ளது.

திருக்குறள் பற்றிய ஆச்சர்யமான செய்திகள்!!!---கட்டுரைகள், கல்விச் செய்திகள்,

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330


* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.


* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இருஎழுத்துக்கள்-ளீ,ங

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

*திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

*திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

*திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

*திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

தொகுப்பு : ஆசிரியர் கார்த்திகேயன்

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு===கட்டுரைகள்,

மாணவர்களின் தரம் உயர..--கட்டுரைகள்,

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்---கட்டுரைகள், பொதுஅறிவு,

பசும்பொன் தேவர் வரலாறு----கட்டுரைகள், பொதுஅறிவு,

தாயின் மணிக்கொடி பாரீர்---கட்டுரைகள், பொதுஅறிவு,

சுதந்திரதின விழா கவிதைகள்---கட்டுரைகள், பொதுஅறிவு

சுதந்திர தினம்---கட்டுரைகள், பொதுஅறிவு,

கல்வி அழியாத செல்வம்---கட்டுரைகள், பொதுஅறிவு,

கற்பியுங்கள் ஆசிரியர்களே----கட்டுரைகள், பொதுஅறிவு,

குழந்தைகள் தினம் நவம்பர்-15 அன்றைய தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சிப்போட்டிக்கு உகந்த தலைப்புக்கள்:

பாரதி பிறந்த தினம்--கட்டுரைகள்

சுப்ரமணிய பாரதி எனும் ஒரு தமிழ் வேள்வி தீ---தகவல் துளிகள்,

தமிழ் வளர்த்த வீரமாமுனிவர் இறந்த தினம் இன்று:----பொதுஅறிவுகட்டுரை,

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே.
தோற்றம்: 08.11.1680
மறைவு: 04.02.1747
பிறப்பு: இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் பிறந்தார்.
இயற்பெயர்: கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி.
1709 - கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இயேசுசபை குருவானார்.
1710 - தமிழகம் வந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக் கொண்ட இவர். தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
இவர் தமிழகம் வந்தபின், சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகைளைப் பல இடங்களுக்குச் சென்று தேடி எடுத்ததால், சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.
தமிழ் கற்க எதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் "திருக்காவலூர் கலம்பகம்" பாடியுள்ளார்.
பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'.
ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்பட்டார்.
சதுரகாதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
அக்காலத்தில் சுவடிகளில் தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.
தமிழ் படைப்புகள்:
* தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார் .
* கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தார்.
* திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
* திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
* 1728 - புதுவையில் இவரின் பரமார்த்த குருவின் கதை என்ற நூல் முதல் முறையாக இவரால் அச்சியிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
* காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது.
* தேம்பாவணி மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது.
* முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822 இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840 இல் வெளியிட்டார்.
* தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
* 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
* 'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.
***
வீரமாமுனிவர் எழுதிய கதைகளுள் மிகவும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த பரமார்த்த குரு கதை இதோ உங்களின் பார்வைக்கு...
"குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?"
எனக் கேட்டான், முட்டாள்.
"அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார்.
"பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன்.
"அப்படியே செய்வோம்" என்றார் குரு.
"மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு.
"மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி.
பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.
காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான்.
"அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!"
என்றார் பரமார்த்தர்.
"அதற்கு என்ன செய்வது?" எனக் கேட்டான் முட்டாள்.
"இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ணீரில் அழுத்தி வையுங்கள்.
ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்" என்றார் குரு.
உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.
நோயாளியோ "ஐயோ, அம்மா!" என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். "கண் வலிக்கிறது" என்றாள்.
"இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!" என்றான் முட்டாள்.
கிழவியோ, "ஐயையோ" என்று கத்திக் கொண்டு ஓடினாள்.
சிறிது நேரம் சென்றது. "உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது
என்றபடி ஒருவன் வந்தான்.
"சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்றார் பரமார்த்தர்.
முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.
கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, "குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!" என்றான்.
அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.
வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.
"பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?" என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்
"வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்" என்றார் பரமார்த்தர்.
சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!
"இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!" என்றார் பரமார்த்தர்
சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.
"உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!" என்றார் பரமார்த்தர்
யானைக்கால் வியாதிக்காரனோ, "காலை விட்டால் போதும்" என்று தப்பினான்.
"ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறேன்" என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். "இவர் வாயை அடைத்து விடுங்கள்!"
என்று கட்டளை இட்டார்.
குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.
"என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது" என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, "தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்" என்றார்.
"வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்" என்றான் மடையன்.
கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.
அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.
பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப்
பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர்.
பஞ்சாயத்தார் ஒன்று கூடி, குருவும் சீடர்களும் "இனிமேல் இந்த ஊருக்குள்ளேயே நுழையக் கூடாது" என்ற தண்டனையை வழங்கினர்.

சுரேசுகுமார் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்'s photo.

சென்னை சாந்தோம் புனித தோமையார் பேராலயம் : வரலாறு---கட்டுரைகள்

தமிழ் வளர்த்த வீரமாமுனிவர்----கட்டுரைகள்

லூர்து அன்னை திருவிழா---கட்டுரைகள்

கணிதத்தில் மொத்தமாக மதிப்பெண் அள்ளுவது எப்படி? ---கட்டுரைகள்

சார்லஸ் டார்வின் பிறந்த தின - சிறப்பு பகிர்வு...கட்டுரைகள்

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)--பொதுஅறிவுகட்டுரை

பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29-ல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970-ல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-ல் பொது உடைமையாக்கப்பட்டன.

கவிஞர் 21.4.1964-ல் இயற்கை மரணம் எய்தினார்.

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு--கட்டுரைகள்,


கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்கிமு
900 - மகாபாரதப் போர்
கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்குஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்புகிமு
554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம்தோல்வி

கிபி1947 - இந்தியா விடுதலையானது.


நன்றி
Muthanna Brte

இந்தியா சுதந்திர போராட்ட வரலாறு---கட்டுரைகள்

13 ஆவது இந்திய குடியரசு தலைவர்---கட்டுரைகள் TNPSC

நம் சுதந்திரதின போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்---கட்டுரைகள், தகவல் துளிகள்

சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15---கட்டுரைகள், தகவல் துளிகள்,

பள்ளி மாணவர்களுக்கு - "கடமை வீரர்" , "பாரத ரத்னா " காமராசர் வாழ்க்கை வரலாறு ---கட்டுரைகள்

பெருந்தலைவர் காமராஜர் - அறிந்துகொள்வோம் !---கட்டுரைகள்,

நம் சுதந்திரதின போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்---கட்டுரைகள், தகவல் துளிகள்

சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15---கட்டுரைகள், தகவல் துளிகள்,

பள்ளி மாணவர்களுக்கு - கடமை வீரர் , பாரத ரத்னா காமராசர் வாழ்க்கை வரலாறு---கட்டுரைகள்