யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/8/17

போர்க்கொடி..! கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு -சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி

பள்ளிக் கல்வி துறையில், 155 நாட்களில், எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள, செயலர் உதயசந்திரனை மாற்றினால், அது, 1.5 கோடி மாணவர்களை பாதிக்கும்' என, கல்வியாளர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து உள்ளனர்; 'அவரை மாற்றக் கூடாது' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு - சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி
தமிழக பள்ளிக் கல்வி துறை, பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றாமலும், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறாமலும், தடுமாறி வந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தும், எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தது.
பாராட்டு :
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையனும், செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற பின், தேசிய அளவில், தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு, புதிய பிம்பம் கிடைத்து உள்ளது. 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமே, தமிழக அரசின் முயற்சியை பாராட்டி உள்ளது. மார்ச், 6ல், பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயசந்திரன்,அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை படி, நேற்று வரையிலான,155 நாட்களில், எண்ணற்ற பணிகளை துறையில் செய்துள்ளார்.இந்நிலையில், பெற்றோர், மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், செயலர் உதயசந்திரனை இடம் மாற்றம் செய்ய, முதல்வர் பழனிசாமி அரசிடம், சிலர் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பல்கலை துணைவேந்தர்கள், பள்ளி தாளாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் பேரவையினர் என, அனைத்து தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'செயலர் உதயசந்திரனை மாற்றக்கூடாது' என, அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்; இதுதொடர்பாக, அரசுக்கு கடிதங்களும் எழுதி வருகின்றனர்.

துவக்கம்:

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய அளவில், 'கோமா' நிலையில் இருந்த, தமிழக பள்ளிக் கல்வி துறை, அதிலிருந்து மீண்டு, நாட்டிற்கு முன்மாதிரியாக மாறுவதற்கான பயணத்தை துவக்கி உள்ளது. தற்போது, நடுவழியில் கப்பலை கவிழ்த்து விடுவது போல, பள்ளிக்கல்வி செயலரை மாற்றும் முயற்சியில், அரசியல்வாதிகளும், வணிக நோக்கில் செயல்படும் ஏஜென்டுகளும், அரசுக்கு அழுத்தம் தருவது தெரிய வந்துள்ளது. அவர் மாற்றப்பட்டாலோ அல்லது அவரதுசெயல்பாடுகளை முடக்கினாலோ, தமிழகத்தில் படிக்கும், 1.5 கோடி மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இது போன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். மாறாக, சுய கவுரவம், லஞ்சம், ஊழலில்ஈடுபடுவதற்காகவும், யாரையாவது திருப்திபடுத்தவும், அவரை மாற்ற முயற்சித்தால், முதல்வர் பழனிசாமியின் அரசு, மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாகி விடும். எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரனின் கூட்டுப் பணி, துறையில் தொடர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டணியின் 155 நாள் சாதனைகள் :

* பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தனியார் பள்ளிகள், வியாபார பொருளாக பயன்படுத்திய, மாநில, மாவட்ட, 'ரேங்க்' முறை, அதிரடியாக ஒழிக்கப்பட்டது.
* மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார்பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவச இடம் பெற, 'ஆன்லைன் அட்மிஷன்' முறை கொண்டு வரப்பட்டது.
* புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து, பாதி பாடம் முடிந்த பின், ஆகஸ்டில் ஆசிரியர்களை இட மாற்றம் செய்யும் கவுன்சிலிங் முறை ஒழிக்கப்பட்டு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே, வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
* 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும்; 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், ஆன்லைன் விண்ணப்ப முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு முறையும், விரைவில், 'ஆன் லைன்' மயமாகிறது.
* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், பள்ளி திறக்கும் நாளிலேயே, பொது தேர்வு நடக்கும் தேதியும், தேர்வு முடிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மதிப்பெண் சான்றிதழ்களின் விபரங்கள், தமிழில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்களை, மத்திய அரசின் டிஜிட்டல் இணையதளத்தில்,பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா நுாலக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதல் முறையாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடிப்பிடித்து, விருதுக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிடப்பில் போடப்பட்ட, சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராமதாஸ் வலியுறுத்தல்

 'நேர்மையாக செயல்படும் கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றம் செய்யும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலராக, உதயசந்திரன், மார்ச்சில் நியமிக்கப்பட்டார். அதன்பின், அத்துறை, புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியது. பொதுத் தேர்வுகளில், தர வரிசையை ஒழித்தது; பிளஸ் 1க்கும், பொதுத் தேர்வை அறிமுகம் செய்தது; பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட, உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவர். அவர் பொறுப்பேற்று, ஐந்து மாதங்களே முடிந்துள்ள நிலையில், அவரை, அத்துறையிலிருந்து மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை,தமிழக அரசு துவங்கி உள்ளது. இதற்கு காரணம், ஆட்சியாளர்களின் ஊழலுக்கு, உதயசந்திரன் ஒத்துழைக்க வில்லை என்பது தான்.ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் எழுந்த சிபாரிசு பிரச்னையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.பாரதியார் பல்கலையில் நடந்த ஊழல்கள் தொடர்பாக, துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த, உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார். பெரியார் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து, விசாரணை கமிஷன் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும், அவர் செய்து வருகிறார். அவரையும் மாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை தேவை, தரமான கல்வி வழங்குவது தான். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள, இரு அதிகாரிகளை மாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட, கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை

தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு, 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு உதவும்வகையில், 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி, கருத்துரு ஒன்றை உருவாக்கி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து, புதிய பாடத்திட்ட கருத்துருவை வழங்கினார். இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனையும், பாடத்திட்ட கலைத்திட்டக்குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணனையும் சந்தித்து, ஆலோசனை தெரிவித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மேற்பார்வையில், கல்லுாரிகள் அளவில், 25 ஆண்டுகளாக தன்னாட்சி முறை சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வியிலும், தன்னாட்சி முறை கொண்டு வந்தால், கல்வி முறையை இன்னும் மேம்படுத்தலாம்

* கல்வித் தரம் உயர, கல்வி நிறுவனங்களுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் சுதந்திரம் தர வேண்டும் என, 1986 மற்றும், 1992ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்ட உள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம்

* கல்லுாரிக்கு தன்னாட்சி தர, யு.ஜி.சி., சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. ஒரு கல்லுாரி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகளாவது தொடர்ந்து இயங்க வேண்டும்; மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக, நுாலக, விடுதி வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற தகுதிகள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக் கல்விக்கும் விதிகள் கொண்டு வரலாம்

* தன்னாட்சிக்கு விரும்பும் பள்ளிகளின் விண்ணப்பத்தை, நிபுணர் குழு, 30 நாட்களில் பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி, தன்னாட்சி குறித்து, அரசு முடிவு எடுக்கலாம்

* தன்னாட்சி அந்தஸ்து பெறும் பள்ளிகள், தனியாக நிர்வாக குழு, நிதிக்குழு, கல்விக்குழு, பாடத்திட்ட குழு, தேர்வு மற்றும் மதிப்பீட்டுக்குழு போன்றவற்றை உருவாக்கி கொள்ள வேண்டும்

* பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட கல்வியை, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் போது தான், அது பெரும் சுமையாகவோ, திறமைக்கு அப்பாற்பட்டதாகவோ இருக்காது

* பாடத்திட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறையினர் சேர்ந்து, அவ்வப்போது, பாடத்திட்டத்தை புதுப்பித்து கொள்ளலாம்

* தரமான பாடத்திட்டம், மாணவர்களின் செயல்திறன் பரிசோதனை, தேர்வு முறையில் மேம்பாடு போன்ற அனைத்திலும், பள்ளிகளுக்கும், அரசுக்கும் உரிய ஒத்துழைப்பு இருந்தால், சாதாரண பள்ளியையும், தரம் மிக்க பள்ளியாக மாற்றலாம்

* பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள,உயர்மட்டக் குழுவையே தன்னாட்சி முறைக்கான நடைமுறைகளை வகுக்கச் செய்யலாம். அதற்கான விதிகளை, இந்த ஆண்டு, டிச.,க்குள் முடித்தால், 2018 ஜன., யில் விண்ணப்பங்கள் பெறலாம். 2018, ஜூன் முதல் தன்னாட்சி வழங்கலாம்

* இந்த திட்டத்தின் மூலம், சி.பி.எஸ்.இ., மற்றும் சர்வதேச பாடத்திட்டம் மீதுள்ள மோகம் குறைந்து விடும். ஜே.இ.இ., - நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு, நாமே பாடத்திட்டம் உருவாக்கலாம். இதன்மூலம், கல்விப்புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக மாறும்.இவ்வாறு,அந்த கருத்துருவில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தையும் பகிரலாம்! :
* பள்ளிகளுக்கான தன்னாட்சி குறித்த கருத்துரு மற்றும் பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, 'தினமலர்' வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். தங்களின் எண்ணங்கள், கருத்துகளை, rlp@dinamalar.in என்ற,'இ - மெயில்' முகவரியில் தெரிவிக்கலாம்.

கல்வித்துறை செயல்பாடுகள்' சவாலுக்கு 12-ந் தேதி நான் தயார்: அன்புமணி

இதுகுறித்து பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது:
பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், 
அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர் அதை விடுத்து விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன் தான். அவரது சவாலை நான் ஏற்றுக் கொண்ட நிலையில் அதற்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர் தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பது பெருந்தன்மையா... பயமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்திற்கான ஏற்பாடுகளை பாமக மேற்கொள்ளும்.

பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற பதத்தையே மருத்துவர் அய்யா அவர்கள் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, அதில் 24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது. அதுமட்டுமின்றி ‘பள்ளிக்கல்வி: இன்றையத் தேவைக்கேற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.

ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியை கடைச்சரக்காகவும், தரமற்றதாகவும் மாற்றியது அதிமுக தான். இப்போதும் கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றவுடன், சொந்த வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக நடத்திய ஆசிரியர்கள் இடமாற்ற ஊழலால் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

எனினும், செங்கோட்டையனும், அவருக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் ரூ. 5 லட்சத்தை அளவீடாகக் கொண்டு இடமாற்ற ஆணைகளை வழங்கியதால் இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 60% காலியாக உள்ளன. அதேநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவை குறித்து விவாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விவாதத்தை ஆக்கப்பூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12.08.2017 மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். செங்கோட்டையன் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றிருந்தது.

11th Public Exam ஐ எதிர்த்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது.

11th Public Exam ஐ எதிர்த்து மதுரை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.வாதம் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு  ஒத்தி வைக்கப் பட்டது.11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு பிறப்பித்துள்ள அரசாணையைய ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அடுத்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அப்போது அரசு சாார்பில் தாக்கல் செய்த மனுவில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம்.பல பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடத்தை கற்றுக்கொடுக்காமல், பிளஸ் டூ பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்கள்.பொதுத்தேர்வுஅறிமுகமானால்தான் 11வது வகுப்பு பாடத்தை கற்பிப்பார்கள்.11வது வகுப்பு பாடத்தை கற்காததால் போட்டித்தேர்வுகளின்போது மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இவ்வாறு வாதிடப்பட்டது.இதனிடையே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையாக நியமிக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்



2013 TET TEACHERS RELATED NEWS:

2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் தங்களுக்கு பணி வழங்கவேண்டும் என திருச்சி   முதன்மை கல்வி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் செய்து சாலையை மறித்து சாலையில் தங்களது கோரிக்கைகளை எழுதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.*

8/8/17

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இணையதளங்கள் பற்றிய தகவல்.

பள்ளிக்கல்வி இயக்குநரக இணையதளம் http://dse.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இயக்குனரக இணையதளத்தில் இருந்து
32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணையதளம் மற்றும் உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக முதன்மை கல்வி அலுவலக இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/districtname என்ற URL பயன்படுத்தலாம். District name  டைப் செய்யும் போது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும். நேரடியாக பள்ளிகளின் இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/udisecode என்ற URL பயன்படுத்தலாம். இங்கு udisecode என்பது பள்ளியின் 11 இலக்க Udise எண்  ஆகும். இணையதளத்தில் தெரிய வேண்டிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை Login செய்து பதிவேற்றிக்கொள்ளலாம். 
இதேபோன்ற அமைப்பு தொடக்கக்கல்வி இயக்குரகத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

http://dee.tnschools.gov.in என்ற URL பயன்படுத்தலாம்.

நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி
கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
 முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்தஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத் திய, முன்மாதிரியான ஆசிரியர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.'அவர்கள் விண்ணபிக்க வில்லை என, விட்டு விடக்கூடாது. புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது' என, தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, நல்லாசிரியர் விருது வழங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. அதிகாரிகளின் உறவினர்கள், மேல் அதி காரிகளுக்கு வேண்டியவர்கள், ஆசிரியர் சங்கத் தினருக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு, இந்த விருது வழங்க, சிபாரிசு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்தநடைமுறை, பள்ளிக்கல்வி செயலர், உதய சந்திரன், இயக்குனர், இளங்கோவன் கூட்டணி யில், மாற்றப்படும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ள னர். அதேபோல, 2016 குழுவில் இடம் பெற்ற அதி காரிகளே, தங்கள் பெயரை சிபாரிசு செய்த

சம்பவங்களும் நடக்காது என, நம்பிக்கையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரி யர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகை யில், ''பாடம் நடத்துவதிலும், மாணவர்கள் மீதும், பள்ளிக்கல்வியின் உண்மையான வளர்ச் சியில் அக்கறை காட்டுவோருக்கும் நல்லா சிரியர் விருது, வழங்கப்பட வேண்டும். ''எனவே, இதற்கான விதிகளை, பொதுமக்களின் கருத்து கேட்டு மாற்றுவது அவசியம்,'' என்றார்.

நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்.

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும்,பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு)பி.எஸ்சி ரேடியோலஜி, இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய படிப்புகளில் இந்த ஆண்டு மாணவ மாணவியரை சேர்க்கை நடக்க உள்ளது.இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி 22 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 24ம் தேதிக்குள் வரை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரில் பெற விரும்புவோர் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு விண்ணப்ப மனுவுடன்விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டுக்கு கட்டணம் ரூ. 400க்கான டிடி கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ‘‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10’’ என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்ப்பட்டோர்(்அருந்ததியர்), பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்ப படிவக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.

TNPSC Group 2A 2017 Exam Level Analysis / Cut off Marks :

Today GROUP-2A Question Scenario

*.TAMIL– Normal Paper, Without careless mistakes one Can score 95+.
*.GENERAL ENGLISH– Similar to Tamil Paper, One Can score 95+.
*.GMA(MATHS)– Standard Paper can score 22+.
*.CURRENT AFFAIRS– 2016 to Very Recent like President Election. (very factual)
*.GENERAL STUDIES– Good Paper as many Qns were Tricky and outside School Text Books-Good Trend.
#155_Plus seems to a good score.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு

புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவைஉட்பட, நான்கு இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என, இரு குழுக்களை, தமிழக அரசு அமைத்துள்ளது.இந்தக் குழுக்களின் ஆலோசனை கூட்டம், ஜூலையில் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாவது முறையாக, டி.பி.ஐ., வளாகத்தில், கலைத்திட்டக்குழு கூடி ஆலோசித்தது.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடமும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வரும், 9ல், மதுரை; 11ல், கோவை; 22ல், சென்னை; 24ல், தஞ்சாவூர் என, நான்கு இடங்களில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி விபரம் பெறலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, பாடத்திட்டம் குறித்து, கருத்துக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: | உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?


மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.
ஒரு நபரின் பெயரிலேயே பலபான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில், 

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

என்ற Link-ஐ Click  செய்யுங்கள். அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்

7/8/17

PGT,HSHM TO HSSHM PROMOTION COUNSELLING ANNOUNCED - அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது.


2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில்   நடைபெற உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 120  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால்,  இந்த சுழற்சி   பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை  இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? என்பது குறித்து கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த 
கிருஷ்ணன் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் வடிவமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்ததும் கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு பாகம், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மற்றொரு பாகமாக பிரித்து பாடத்திட்டங்கள் தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் அடிப்படை மாற்றங்கள் கொண்டுவர வேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும் என்பதை எதிர்கால திட்டத்துடன் மாணவர்களுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

பாடத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாகவும் ஆலோசனை கேட்க இருக்கிறோம். இந்த ஆலோசனை கூட்டம் 9-ந்தேதி மதுரையிலும், 11-ந்தேதி கோவையிலும், 22-ந்தேதி சென்னையிலும், 24-ந்தேதி தஞ்சாவூரிலும் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து பேச வேண்டும்.

இதில் பொதுமக்கள் மட்டுமல்லாது மாணவர்களும் கலந்துகொள்ளலாம். அவர்கள் கூறும் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நாங்களும் சில பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடமும் கருத்து கேட்க இருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

எல்லா பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றுலா அமைத்து செல்ல தடை , பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

27/7/17

உயர்நிலைத் தரம் உயர்வு : விருப்ப அடிப்படையில் வட்டார அளவில் பட்டதாரிகளை ஈர்க்க கோரிக்கை

Flash News:பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 28.07.2017 அன்று இணையதளம் வழியாக நடத்துதல் சார்ந்து - இயக்கநரின் செயல்முறைகள்



Jactto - Geo சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!!

05.08.2017 CRC ரத்து செய்ய கோரி பள்ளிக்கல்வி துறை செயலாளர் அவர்களுக்கு JACTTO -GEO கடிதம்

தனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்ளி

பூம்புகாரில், கிராம மக்களின் முயற்சியால், அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நாகை மாவட்டம்,
பூம்புகாரில், 1949ல், ஆரம்பிக்கப்பட்ட துவக்க பள்ளி, 2004ல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அருகில் உள்ள ஊர்களில், தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டதால், அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைய துவங்கியது. கடந்தாண்டு, மூன்று மாணவர்கள் மட்டுமே, புதிதாக சேர்ந்தனர்.

இதனால், நடுநிலை பள்ளி என்ற அந்தஸ்தை இழக்கும் சூழல் உருவானது. தலைமையாசிரியர் அன்பழகன் முயற்சியில், பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார் சார்பில், கல்விக்குழு உருவாக்கப்பட்டு, பள்ளியின் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளை போல, யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள், ஆங்கிலப் பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, சுத்தமான கழிப்பறை, சுற்றுச்சுவர், குழந்தைகளை வீடுகளில் இருந்து அழைத்து வர வாகன வசதி என, கிராம பொது நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், பள்ளி நவீனமாக மாற்றி அமைக்கப்பட்டது.அது மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித் தொகை, கிராமம் சார்பில் வழங்கப்படுகிறது.

அரசைமட்டும் நம்பியிராமல், பொதுமக்கள் இணைந்து, மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, இந்தாண்டு, 57 பேராக அதிகரித்து, மொத்த மாணவர்களின்

எண்ணிக்கை, 145 ஆகியுள்ளது.

உடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

அரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம், புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல்,
போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்
அரசுபள்ளிகளின் முன்னேற்றத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், உடற்கல்வி பிரிவுக்கு, எந்தவித முன்னேற்ற பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளிலும், உடற்கல்வி பயிற்சி நடக்கும் நாளில், சிறப்பு சீருடை, 'கேன்வாஸ், சாக்ஸ்' அணிய வேண்டும்.

ஆனால், தமிழகத்தில், இலவச சீருடையில், விளையாட்டு பிரிவுக்கு என, தனியாக சீருடை வழங்கவில்லை. அரசு பள்ளிகளில் விளையாட்டு பிரிவுக்கு உபகரணங்கள் வாங்க, நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை, உபகரணம் வாங்க பயன்படுத்துவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. விளையாட்டு பிரிவுக்கு தனி இணை இயக்குனர், மாவட்ட அளவில் தலைமை உடற்கல்வி ஆய்வாளர் போன்ற பதவிகள், பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

மேலும், உடற்கல்விக்கான பாடத்திட்டம் வழங்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உடற்கல்விக்கு புத்தகம் தயாரித்தும், அதை வழங்கவில்லை. 6 - 9ம் வகுப்பு வரை, உடற்கல்விக்கு கட்டாய தேர்வு உள்ளது. ஆனால், பாடத்திட்டமும், புத்தகமும் இல்லாமல், தேர்வு நடத்தியது போல், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இந்தகுளறுபடிகளை போக்கவும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை நிறுத்தாமல் வழங்கவும் கோரி, வரும், 29ல், உடற்கல்வி ஆசிரியர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், போராட்டம் நடத்த உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு?

நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.
இதனால், மருத்துவ படிப்புகளில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85
சதவீதமும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப்பித்தது.இதற்கு சென்னை உயர் நீதிமன்றம்தடை விதித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், 'நீட்' தேர்வில் விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

நிரந்தர விலக்கு அளிக்கும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசு முன் வந்துஉள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: 'இந்தாண்டு மட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, சட்டத்தில்வாய்ப் புள்ளதா என, பரிசீலிக்கப்படும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.


இதற்காக, சட்ட நிபுணர்களுடன், தமிழக அதிகாரிகள், ஆலோசித்து வருகின்றனர். அத்துடன், குறைந்தது இரண்டு ஆண்டுகள் விலக்கு பெறும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற
உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.
பொறியியல் பட்டம்

"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.

"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.

இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்

"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.

Posted Date : 21:34 (26/07/2017) Last updated : 21:34 (26/07/2017)
அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!
ஞா. சக்திவேல் முருகன் ஞா. சக்திவேல் முருகன்

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.

பொறியியல் பட்டம்

"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.

"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.

இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்

"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.



இதுவரை பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமே மாற்றங்கள் குறித்த செய்தியை அறிந்த கல்வியாளர்கள், முதல்முறையாக உயர்கல்வி துறையில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

கலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம், நான்கு புறமும் 50க்கு 50 மீட்டர் அளவில் சதுர வடிவில் அமைந்துள்ளது. நினைவகத்தை சுற்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கொண்டு வரப்பட்ட அழகு செடிகள்,
நிழல் தரும் மரக்கன்றுகள் ஊன்றி அழகுபடுத்தி உள்ளனர்.

நினைவகத்தின் பின்புறத்தில் கலாம் கண்டு பிடித்த அக்னி ஏவுகணை, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி வைக்கப்பட்டும், நினைவகத்திற்குள் நான்கு பக்கங்களிலும் மின் ஒளியில் கலாமின் ஓவியங்கள், சிலைகள் உள்ளன. ஒரு மூலையில் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், கலாம் நிற்பது, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரியை கலாம் அறிமுகப்படுத்துவது, ராணுவ வீரர்கள் அணிவகுப்பை கலாம் ஏற்பது போன்ற தத்ரூபமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.மற்றொரு புறத்தில் கலாம் ஐ.நா., சபையில் பேசுவது, ஜனாதிபதி மாளிகையில் கலாம் நிற்பது, குழந்தைகளிடம் கலாம் கைகொடுத்து சிரித்து பேசுவது போல் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளனர்.

95 ஓவிய படங்கள் : கலாம் குழந்தை பருவம் முதல் ஜனாதிபதி வரை பல முகபாவனையுடன் கூடிய 95 ஓவியம் 4 முதல் 15 அடி உயரமும், ஜனாதிபதியாக கலாம் அமர்ந்திருப்பது போல் சிலிக்கானில் உருவான கலாம் சிலையும் உள்ளது.


மேலும் கலாமின் 700 புகைப்படங்கள் உள்ளன. கலாம் சமாதி முன் சுவரில் 15 அடி உயரத்தில் சிறுவயதில் கலாம் பேப்பர் விற்பது, கோயில், கடற்கரை, படகுகள் நிறைந்த அழகிய ஓவியம் இடம் பெற்றுள்ளது. நினைவகம் மேற்கூரையில் புகழ் பெற்ற ராஜஸ்தான் ஓவியம் வரைந்து, கலாம் நினைவகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நீ.. நீயாக இரு...! இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு

Image result for apj abdul kalam thoughts in tamilஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும்
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

��இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:   

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம்ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:   

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.


 விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2020எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.


உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொடக்கக்கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக்கொள்வது தொடர்பாக இயக்குநர் அவர்களின் புதிய அறிவிப்பு

உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துக்கொள்வதை விரும்பாத நிலை ஏற்படுமானால் அந்த ஒன்றியத்தில் உள்ள மற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் அவர்களை
ஈர்த்துக்கொள்ள  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவினை அனுப்பியுள்ளார்கள். ஒரு பணியிடத்திற்கு பலர் விரும்பினால் பணிமூப்பு அடிப்படையில் பணியில் மூத்தோரை ஈர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.

Syllabus of Special Teachers

பிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுக் கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவால் தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த
கூட்டத்தில் 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், முதலாம் ஆண்டு பிஇ படிப்பவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அண்ணா பல்கலைக் கழக கல்வி மன்ற இயக்குநர் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான கீதா கூறியதாவது:
அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில் 41 பிரிவுக்கும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 57 பாடப்பிரிவுக்கும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புதிய பாடத்திட்ட குழு தயாரித்துள்ள புதிய பாடத்திட்டம் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மேலும், கலைத் திட்டம், அடிப்படை அறிவியல், பொறியியல் அறிவியல், தொழில் கல்வி தொடர்பான பாடங்கள், தற்போது பிஇ, பிடெக் பட்டப்படிப்புடன் கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிக்கும் மானவர்கள் தொழில்நுட்ப பாடங் களைவிருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம்.
அதேப்போல் பிடெக் படிப்பவர்கள் கலை அறிவியல் பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். இதனால் மாணவர்களுக்கு வேலைத் திறன் பெற வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் அளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வியுற்றால், அது மதிப்பெண் பட்டியலில் தோல்வி என்று இடம் பெறாது. ஆனால் அவர்கள் தோல்வி அடைந்த அந்த பாடத்தை அடுத்த முறை எழுதும் போது அகமதிப்பீடு மற்றும் எழுத்து தேர்வும் சேர்த்து எழுத வேண்டும். மாணவர்–்கள் படிக்கும் போது இடையில் விட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பட்டப் படிப்பை செமஸ்டர் முறையில் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒருபட்டப் படிப்பை முடிப்பதற்கான காலக் கெடு முடிந்த பிறகும் அடுத்த 3 ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில்(Lateral Entry) 12 செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேர்வோருக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்

26/7/17

இன்ஜி., பொது கவுன்சிலிங்: கம்ப்யூ., சயின்சுக்கு கிராக்கி 'நீட்' தேர்வால் காலியிடம் குறைய வாய்ப்பு

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 1.75 லட்சம் இடங்களுக்கு பொது கவுன்சிலிங் நேற்று துவங்கியது. 
முதல் நாளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவுகளுக்கு, மாணவர்கள் முன்னுரிமை கொடுத்தனர்.

அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரி களில், இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங், ஜூலை, 17ல் துவங்கியது. முதலில் தொழிற் கல்வி, மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டு பிரிவுக்கு, மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்று முதல் கவுன்சிலிங் துவங்கியது. மொத்தம், 518 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 339 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதில், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 197 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.நேற்று முதல் நாளில், 2,898 பேர் அழைக்கப்பட்டனர்.

முதல் அமர்வுக்கு அழைக்கப்பட்ட, 162 பேரில், 116 பேர் பங்கேற்றனர். பெரும்பாலானோர்,
அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி, கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லுாரிகளையும் தேர்வு செய்தனர்.

பெரும்பாலான, 'டாப்பர்ஸ்' மாணவர்கள், மெக்கா னிக் படிப்பை விட, கம்ப்யூ., சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்கம்யூனிகேஷன்ஸ் படிப்புகளையும், சிலர், சிவில் இன்ஜி., படிப்புகளையும் தேர்வு செய்தனர்.

கிண்டி இன்ஜி., கல்லுாரியில் முதல் நாளே, இந்த நான்கு பிரிவுகளிலும், பெரும்பாலான இடங்கள் நிரம்பின.இந்த ஆண்டு, மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வால், மருத்துவ கவுன்சிலிங் எப்போது என, தெரியாத நிலை உள்ளது. அது போல், மருத்துவத் துக்கான, 'நீட்' தேர்வில், பெரும்பாலான மாணவர் கள், போதிய மதிப்பெண் பெறவில்லை.அதனால், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற, கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள், பெரும் பாலும், இன்ஜி.,படிப்பை தேர்வு செய்கின்றனர்.

இது குறித்து, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் கூறுகையில், ''மருத்துவ படிப்பில், 'நீட்' பிரச்னை இருப்பதால், இந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள், இன்ஜி.,படிப்பை நம்பிக்கையாக எடுத்துள்ளனர். அதனால், முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது,'' என்றார்.

'டாப்பர்ஸ் சாய்ஸ்'

இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற, முதல் மாணவர்களில் நேற்று, நான்கு பேர் இன்ஜி., கவுன்சிலிங்கில் இடம் தேர்வு செய்யவில்லை. நேற்றைய கவுன்சிலிங் கில் முதல், 10 இடங்களில், முன்னேறிய பிரிவை சேர்ந்த இரண்டு பேர், பிற்படுத்தப்பட் டோர் வகுப்பில், ஏழு பேர் மற்றும் ஒரு முஸ்லிம் மாணவர் இடம் பெற்றனர்.இவர்கள், 200க்கு, 200, 'கட் ஆப்' மதிப்பெண் எடுத்ததால், ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இல்லாத, பொதுப்பிரிவில் இடங்களை பெற்றனர்.

அவர்களில், ஒன்பது பேர், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி யையும், ஒருவர், கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியையும் தேர்வு செய்தனர். பாடப் பிரிவை பொறுத்தவரை, ஐந்து பேர், கம்ப்யூ., சயின்ஸ்; மூன்று பேர், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்; ஒருவர், எலக்ட்ரிகல்; ஒருவர், சிவில் பிரிவுகளையும் தேர்வு செய்தனர்

2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதிவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு !!

தற்போது எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ இல்லையோ, வங்கிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக வங்கித்துறை மாறியுள்ளது இதற்கு வங்கிகள் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை அதிகரித்தும்
எளிதானதாக மாற்றம் செய்து வருவதே காரணம் என கூறலாம். வங்கிகள் துறைகளில் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் இன்றைய இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற அரிய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து ஆறாவது முறையாக 2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதிவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: இந்தியாவில் உள்ள 56 கிராம வங்கிகளில் காலியாக உள்ள 15332 ஆயிரம் காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்லவன் கிராம வங்கி, பாண்டியன் கிராம வங்கி என இரண்டு வங்கிகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 590 இடங்கள் உள்ளன.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி, கல்லூரிகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
Office Assistant (Multipurpose) பணிக்கு தோராயமாக மாதம் ரூ.19000-22000
Officer Scale - I பணிக்கு தோராயமாக மாதம் ரூ.30000-36000
Officer Scale - II பணிக்கு தோராயமாக மாதம் ரூ.36000-42000
Officer Scale - III பணிக்கு தோராயமாக மாதம் ரூ.41000-47000

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: 600 ரூபாய் (எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாய்). இதனை ஆன்லைன், வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம். ஜூலை 12 முதல் ஆக., 1 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான முதல்நிலை தேர்வு (பிரிலிமினரி) மற்றும் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) என இரு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரி பதவிக்கு எழுத்துத்தேர்வு 2017 செப்டம்பர் 9, 10 மற்றும் 16 ஆம் தேதி நடைபெறும். உதவியாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு 2017 செப்டம்பர் 17, 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை இன்று முதல் 24.07.2017 முதல் 14.08.2017 வரை திருத்தம் செய்துகொள்ளலாம்.

மேலும் வயதுவரம்பு, தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/30/IBPS-RRB-VI-Recruitment-2017-14192-Officers-Office-Assistant-Posts.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து தெரி்ந்து விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு உண்டா?நாளை தெரியும்.. திமுக எம்பி திருச்சி சிவா!

நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புகேள்விக் குறியாகியுள்ளது.
இதையடுத்து நீட் தேர்வில்தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஆளும் கட்சி அமைச்சர்கள் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தனர். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.மேலும் பதவிப் போராட்டத்தால் அதிமுகவினர் கடமையை மறந்து விட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தேவையில்லை என்பதே திமுகவின் நிலை என்றும் திருச்சி சிவா கூறினார்.மேலும் வட இந்திய மாணவர்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலைஎன்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜே.பி.நட்டா கூறினார் என்றும் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறினார்.

NEET EXAM : முதல்வர் நம்பிக்கை

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது,'' என, தமிழக முதல்வர், பழனிசாமி கூறினார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக,டில்லி வந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம்கூறியதாவது: 'நீட் நுழைவுத் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்

அரசு பள்ளிகள் தரம் உயர்வு: கோட்டை விட்டது மதுரை : முதல்வர் தொகுதி முதலிடம்

தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதில், மதுரையில் ஒரு பள்ளிக்கு மட்டும்வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
அதேநேரம் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில்,ஏழு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 150 நடுநிலை, உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

 மேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில், 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும். இதில், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக, 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.மூன்று ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படாத நிலையில், இக்கல்வியாண்டு, அறிவிப்பு மட்டும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பெயர் பட்டியல் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கு காரணம், 'தகுதி இல்லாத பள்ளிகளையும் தரம் உயர்த்த ஆளும் கட்சியினர் கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தியது தான்,' என தகவல் வெளியாகியது. ஆனாலும் கல்வி செயலாளர் உதயசந்திரன், தகுதியான பள்ளிகளை மட்டுமே தரம் உயர்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.தற்போது 100 மேல்நிலை பள்ளிகள் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், மதுரையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பல பள்ளிகளுக்கு வாய்ப்பு இருந்தும், கொட்டாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளி மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இத்துடன் பரிந்துரைக்கப் பட்ட களிமங்கலம், அவனியாபுரம் அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் சேலம் -7, திருவள்ளூர் - 7, வேலுார் - 6, விழுப்புரம் -6, காஞ்சிபுரம் -5, விருதுநகர் -6 என பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளிகளுக்கு இடையே, மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் இருக்க வேண்டும், மாணவர் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன. செயலாளர்உதயச்சந்திரனும் இதை கண்டிப்பாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.ஆனால், அரசியல் குறுக்கீடால் பள்ளிகளை தேர்வு செய்ய கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியின்றி தகுதியில்லாத பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று. குறிப்பாக ஊமச்சிகுளம், வண்டியூர், ஆனையூர் பகுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

 இப்பகுதிகள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வின்தொகுதிக்குள் வருவதால் இவை பரிசீலிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் மூன்று பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால், 30 ஆசிரியர் பணியிடங்கள் மதுரைக்கு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை மதுரை கோட்டை விட்டது, என்றனர்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மேலும், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தும் பாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலை எப்படியாகினும் வாரத்தில் ஒரு நாள் அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாரத்தில் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையன்று வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில்மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்றும், வந்தே மாதம் பாடலை பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில்நீதிபதி குறிப்பிட்டார்.ஆசிரியர் வாரியம் நடத்திய தேர்வில் வந்தே மாதம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு வங்கமொழி என பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.அப்போது, அந்த கேள்விக்கு மதிப்பெண் அளித்து, வீரமணிக்கு ஆசிரியர் பணி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதிய கே.வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' வகை வினாத்தாளில் கேள்வி எண் 107 இல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? எனக் கேட்கப்பட்டு இருந்தது.அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. ஆனால், அனைத்து பிஎட் பாடப் புத்தகங்களிலும் 'வந்தேமாதரம்' வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், இந்த குழப்பத்தை தீர்க்க 'வந்தே மாதரம்' எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, 'வந்தே மாதரம்' சமஸ்கிருத வாய் மொழி பாடல் என்றும், ஆனால் முதலில் எழுதப்பட்டது வங்க மொழியில்தான் என்றும் விளக்கம் அளித்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வழக்கின் தீர்ப்பை இன்று அளித்துள்ளார்

Flash News - NEET தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு.

நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு.

*சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு.

*2 அமைச்சங்களின் ஒப்புதலுக்கு பிறகு உள்துறைஅமைச்சகம் மூலமாக குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற திட்டம்.

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?

இதை புரிந்துக் கொள்ளுங்கள்!!!!!

9300 grade pay 4200 வாங்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்கள்
5200-2800 என்ற பத்தாம்வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் வைக்கப்பட்ட தேதி
1-06-2009.

ஆனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்டவர்களும் இதே ஊதியத்தில் வைக்கப்பட்ட போதும் அவர்களின் ஊதிய விகிதம் 1.86 ஆல் பெருக்கித்தரப்பட்டது.
இதனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியம் 9300-4200 என்ற நிலையை கடந்தது ஆனால் அவர்களின் தற்போதைய கிரேடு பேவும் 2800 தான்.
அதற்கு பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதாவது 2009 ஜீனில் 5200-2800 பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதியத்தில் வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டார்கள்.அவர்களின் கிரேடு பத்தாம் வகுப்புக்கான கிரேடு ஆகும்.

இதுமட்டுமின்றி 2008 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் 12000
( DA இல்லாமல்)
2009 ல் பணிநியமனம் பெற்றவர்களின் அடிப்படை ஊதியம் வெறும் 5200+2800= 8000
ஆகவே அடிப்படை ஊதியத்திலேயே இழப்பு கிட்டதட்ட
ரூ 4000...
இதற்கான அகவிலைப்படியோடு சேர்த்து 2009  இடைநிலை  ஆசிரியர்களின் மொத்த ஊதிய இழப்பு அதே 2009 ல் 8000.
தற்போதைய  முரண்பாடு( 2008 க்கும் 2009 க்கும் இடையே)
11000 க்கும் மேல்...
பிறகு பணிநியமனம் பெற்ற 2012 ,2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு 13000 ஊதிய இழப்பு.
இது தான் ஊதிய முரண்பாடு.
இந்த ஊதிய இழப்புக்கான முக்கிய காரணம்

1) டிப்ளோமா கல்வித்தகுதிக்கான 9300-4200 என்ற ஊதிய கட்டில் இடைநிலை ஆசிரியர்கள் வைக்கப்படாமல் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் 5200-2800 வைக்கப்பட்டது
( பத்தாம் வகுப்பு கல்வித்தகுக்கான சில பணியிடங்களும் அதன் ஊதியமும்
இரண்டாம் நிலை காவலர் கிரேடு 1900, பள்ளி இரவு காவலர் 1900,இளநிலை உதவியாளர் 2400,
ஆய்வக உதவியாளர் 2400)
அப்போது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 5200-2400 வரை ஊதியம் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் படித்த
+2 க்கு ,டிப்ளோமாவிற்கு ஊதியம் எங்கே???
அல்லது அவர்கள் டிப்ளோமா படிக்கவே இல்லையா????
இது அரசுக்கு தெரியாதா?
தமிழ்நாட்டில் டிப்ளோமா முடித்துள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் தற்போது 9300-4200 கொடுக்கப்படுக்கிறது .
Diploma in teacher education படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு?

25/7/17

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.          தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு மாணவர் சேர்க்கை மத்திய அரசின் நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா  பல்கலைகழக தரப்பில் அறிவிக்கப்பட்டது. 
பி.ஆர்க் கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு  தரப்பில் அறிவிக்கப்பட்டது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க்  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ள  இடங்கள் நீங்கலாக மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி பி.ஆர்க் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இதற்காக  எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்கள் 1,000 பிற பிரிவு மாணவர்கள் 2,000 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 

இதுதொடர்பாக  அறிவிக்கை ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். ஜூலை 31ம் தேதி, ஆன்லைன் பதிவு செய்ய கடைசி  நாளாகும். ஆகஸ்ட் 7ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 12ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும். ஆகஸ்ட் 18ம் தேதி  நுழைவுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

வாட்ஆப் முலமாக தவறான தகவல் பரப்பியதற்காக ஆசிரியருக்கு விசாரணைக் கடிதம் - நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றத் திட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாக உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் அளித்த பேட்டி:
அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பிறகு, அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள், அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மாற்றப்படுபவர்கள், 3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி அடிப்படையிலேயே மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதனால், கடும் நிதி நெருக்கடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது. எனவே, அந்த மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ்வாறு அந்தக் கல்லூரி நேரடி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டாலும், பிற அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோன்ற கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படமாட்டாது. இப்போது அந்தக் கல்லூரியில் என்னவிதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றார்.
ரூ. 80 கோடி நஷ்டத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரி: இதற்கிடையே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியானது கடந்த 2016-17 கல்வியாண்டில் ரூ. 63 கோடி நஷ்டத்திலும், நிகழாண்டில் ரூ. 80 கோடி நஷ்டத்திலும் இயங்கி வருகிறது என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

இதில் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்மும், பிடிஎஸ் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பிற செலவுகளுக்கென ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை மருத்துவக் கல்லூரிக்குச் செலவாகிறது. இதனால், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுசெல்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
TNTET : புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
புதிதாக துவங்கப்படவுள்ள 250 அரசுப் பள்ளிகளுக்கு,ரூ7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாகபகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஊழியர்கள் தவிர அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தினக்கூலி, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளிகளை வைத்தே பணிகளை நிறைவேற்ற அரசு முயன்று வருகின்றது.இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்16549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு மாதம் ரூ.5000/- தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.பிறகு இரண்டு ஆண்டுகள் முடிந்து தொகுப்பூதியம் ரூ.2000/- உயர்த்தி 2014ம் ஆண்டு முதல் ரூ.7000/-ஆக சம்பளம் தரப்படுகிறது. ஆண்டு வாரியாக ஊதிய உயர்வை அரசிடம் இருந்து கேட்டு வாங்க முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நடந்து முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15000/- தொகுப்பூதியம், அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலை தரவேண்டி கேட்டதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.700/- உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7700/-வழங்கிவருவதாக பதிலளித்துள்ளார். ஆனால் ஊதிய உயர்வுக்கான அரசாணை எதுவும் இதுவரை அரசு வெளியிடவில்லை. சமவேலை, சமஊதியம் என்ற சமநீதியை அரசு அமுல் செய்தால் ஒழிய, ஒப்பந்தப் பணி செய்பவர்களின் வாழ்வு ஒருபோதும் முன்னேறாது.அது போல ஒப்பந்த பணி செய்பவர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச சம்பளம், மருத்துவ வசதி, குடும்பநலநிதி, இன்சூரன்ஸ் வழங்க அரசு முன்வரவேண்டும்.

ஒப்பந்த பணிசெய்பவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் விதமாக வருங்கால வைப்புநிதி பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்து அதற்கான தொகையை அளித்து பணி ஓய்வுபெறும் போது பென்சன் வழங்கவேண்டும். 58வயது முடிந்து பணிஓய்வில் சென்றவர்களுக்கும், பணியில் சேர்ந்து இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கும், அரசு மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்சமாக ரூ.3 இலட்சம் உடினடியாக வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IGNOU B.ED ENTRANCE EXAM 2017 FULL DETAILS:

2,200 ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!

Inauguration Ceremony of New Academic Curriculum by SCERT:

புதிய பாடத்திட்டம் உருவாக்குதல் சம்மந்தமாக சென்னையில்மூன்று நாள் கருத்தரங்கு நடைபெற்றது . தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை புதியதாக மெருகூட்டவும், ஆறாம் வகுப்பு முதல் ICT மூலம் கற்றுக்கொடுக்க புதிய பாடத்திட்டம் அமைக்கவும் இந்த கருந்தரங்கை அமைத்திருந்தனர்.
முதல் நாள் கருத்தரங்கு கல்வித்துறை செயலர் வரவேற்புரையோடு ஆரம்பித்தது. தமிழ்நாடு புதிய பாடத்திட்ட குழுவின் தலைவர் புதிய பாடத்திட்ட தேவையினை விளக்கினார். NCERT இயக்குநர் தேசிய கலைத்திட்டத்தை சார்ந்து தமிழக பாடத்திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்று தன் கருத்தை பகிர்ந்து கொண்டார். 
மெரூசியஸ் முன்னாள் கல்வி அமைச்சர் Armogum Parasurament மெரூசியஸ் நாட்டில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் தன்னுடைய வாழ்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை கூறி அதன்மூலம் பாடத்திட்டம் எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதை விளக்கினார். Consule Genral of Germany அவர்கள் புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்கு சில கருத்துக்களை கூறினார். கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் புதிய பாடத்திட்டம் சிறந்த பாடதிட்டமாக உருவாக வாழ்த்துக் கூறினார். SCERT இயக்குநர் விழாவுக்கு நன்றி சொன்னார்.
முதல் நாள் மதியம் கல்வித்துறை செயலரின் மென்மையான உணர்வுமிக்க பேச்சோடு ஆரம்பித்தது. எனக்கு மிகவும் பிடித்த இறையன்பு அவர்களின் நேர்மறையான சிந்தனைச் சிதறல்கள் அந்த அரங்கை அலங்கரித்தது. தொடர்ந்து பேராசிரியர் ராமானுஜம், டாக்டர்.பாலகுருசுவாமி, தியோடர் பாஸ்கரன், ஆஸ்திரேலிய ஆராய்ச்சிக் கல்வி கவுன்சிலில் இருக்கும் சாரா , பேராசிரியர் காமகோட்டி ஆகியோர் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டிய முக்கியமான கூறுகளை தங்களுடைய அனுபவங்களுடம் பகிர்ந்து கொண்டனர்.
கலைவாணர் அரங்கில் முதல் நாள் நிகழ்வு நடைபெற்றது. அடுத்த இரண்டு நாள் நிகழ்வுகள் பாடவாரியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. தமிழ் பாடத்திற்கு அண்ணா நூலகத்திலும் மற்ற பாடப்பிரிவினருக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடை பெற்றது.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அந்த பாடப்பிரிவில் மிகச்சிறந்த ஒரு வல்லுநர், இரண்டு முதன்மை கருத்தாளர்கள் அமர்த்தப்பட்டனர். மேலும் நிஜமான கழத்தில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பாடமும் பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஐந்து பிரிவுகள் முதல் நாளும் ஐந்து பிரிவுகள் இரண்டாம் நாளும் நடத்தப்பட்டன. ஒவ்வெரு பிரிவிலும் இரண்டரை மணிநேரம் விவாதிக்கப்பட்டு கருத்துக்கள் தொகுக்கப்பட்டன.
நான் ICT மூலம் கற்றுக்கொடுக்க புதிய பாடத்திட்டம் அமைக்கும் குழுவில் அங்கு விவாதிக்கும் கருத்துக்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். இரண்டாம் நாள் முதல் அமர்வில் அறிவியல் பாடத்திட்டக் குழுவில் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். நான் அங்கு பகிர்ந்துகொண்ட கருத்துக்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
1. தற்போதய அறிவியல் பாடப்புத்தகம் கற்றுக்கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கிறது. கற்றுக்கொள்ள உகந்ததாக இல்லை. பாடப்புத்தகம் ஆசிரியர் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கிறது. மாணவர்கள் பயன்படுத்த இடம் குறைவாக இருக்கிறது.
2. புத்தகம் ஆசிரியருக்கு தனியாகவும் மாணவர்களுக்கு தனியாகவும் இருந்தால் நல்லது. மாணவர் பாடப்புத்தகத்தில் மாணவர் செயல்பாடு அதிகமாகவும், ஆசிரியர் பாடப்புத்தகத்தில் பாடத்திற்கான விளக்கம் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
3. அறிவியல் செயல்பாடுகளும் அறிவியல் சோதனைகளும் ஏராளமாக புத்தகத்தில் கொட்டிக்கிடக்குது. ஆனால் அதை செய்து பார்த்து எழுதுவதற்கு புத்தகத்தில் இடம் எதுவும் ஒதுக்கவில்லை. தனி நோட்டுப்புத்தகத்தில் எழுதலாம். ஆனால் புத்தகத்திலேயே அதற்கான இடத்தை ஒதுக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
4. ”வரையறை” களை குறைத்து செயல்பாடுகளை அதிகரிக்கவேண்டும். உதாரணமாக திசைவேகத்தை இடப்பெயற்சி / காலம் என வரையறுப்பதை விட மாணவன் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடக்க வைத்து அந்த தூரம் எவ்வளவு மணிநேரத்தில் கடக்கப்பட்டது என்பதையும் கண்டு பிடித்து திசைவேகத்தை கண்டுபிடித்து அதை புத்தகத்தில் ஒவ்வொரு மாணவர்களும் எழுதவேண்டும். அப்போது அவர்களுடைய திசைவேகம் தெரிந்து கொள்வதோடு திசைவேகத்தை அவர்களாகவே வரையறுப்பார்கள்.
5. தமிழ் கதைகள் படிக்கும் போது ஒவ்வொரு வரியாக படிக்கும் போதும் அந்த வரி காட்சியாக மனதில் ஓடும். குதிரை ஒன்றின் மேல் அரசர் ஒருவர் விரைந்து செல்கிறார் என்று வரிகளை படிக்கும் போது மனத்திரையில் அந்த காட்சி ஓடும். ஆனால் அறிவியல் பாடத்தை படிக்கும் போது அந்த காட்சியமைப்பு மனதில் வருவதில்லை. அந்த காட்சிப்படுத்தல் மனதில் தோன்றும் விதமாக சில விளக்கப்படங்கள் கொடுக்கப்படவேண்டும்.
6. அறிவியல் சோதனைகள் வகுப்பறையில் செய்யும் போது குழுவாகவே மாணவர்கள் செய்கிறார்கள். தனித் தனியாக அறிவியல் செய்முறைகளை செய்யும் போது தான் உண்மையான அறிவியல் கற்றல் நடக்கும். தினம் வீட்டில் ஒரு அறிவியல் சோதனை என்ற பகுதியை புத்தகத்தில் சேர்க்கலாம். வீட்டில் அன்றாடம் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி சோதனை செய்யும் வகையில் அவை அமைந்திருக்க வேண்டும்.
7. அறிவியல் பயிற்சிப் புத்தகம் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும். மாணவர்களுக்கென்றே தனியாக பாடப்புத்தகம் வழங்கினால் பயிற்சி புத்தகம் தேவையில்லை. அதிலுள்ள செயல்பாடுகளை மாணவர்களே செய்யவேண்டும். பதில்கள் திறந்த பதில்களாக இருக்க வேண்டும்.
8. புத்தகங்களில் பெறும் மாற்றத்தை விட கேள்வித்தாள்களில் மாற்றம் வேண்டும். மனப்பாடம் செய்து எழுதும் கேள்விகளை குறைந்து புரிந்து திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான கோள்விகளை குறைக்கவேண்டும்.
9. புத்தகத்திற்கு பின்னால் கேட்கப்படும் கேல்விகளை தவிர்க்கலாம்.
10. அறிவியல் பாடங்களில் வரும் நிகழ்வுகளை நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தக்கூடிய சம்பவங்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.
இந்த புதிய முயற்சி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் ஐயம் இல்லை வாழ்த்துக்களுடன் கல்விக்குரல் ..
Thanks to Bergin G Kadayal FB friend:

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை: மத்திய அரசு!

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை
என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதில் தொடர்ந்து பலருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டுவருகின்றன. அதில், பிறப்புச் சான்றிதழும் ஒன்று. இதுகுறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்வகையில், இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.ஏ.சிங், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை என அறிவித்துள்ளார். மேலும், பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக, ஆதார் கார்டு அல்லது பான் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக இருப்பின், அவர்களைப் பராமரித்த காப்பகத்திடமிருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை அளிக்கலாம். மேலும், புதிய பாஸ்போர்ட்டில் தனிநபர் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். எட்டு வயதுக்குக் கீழ் மற்றும் 60 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தில் பத்து சதவிகிதம் சலுகை அளிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது, தாய் அல்லது தந்தையில் யாராவது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டால் போதும். திருமணம் ஆனோர் திருமணச் சான்றிதழ்களைச் சமர்பிக்கத் தேவையில்லை'' எனவும் அமைச்சர் வி.ஏ.சிங் தெரிவித்திருக்கிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக CM CELLக்கு அனுப்பட்ட மனுவின் விவரம்!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


G.O.No.220, Dated , Dated , Dated 20thJuly2017 -Tamil Nadu Pension Rules, 1978 – Proviso to Rule 9 (1) (b) – Omitted - Orders – Issued.

21/7/17

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு?

வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்


அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன் அடிப்படையில் கட்டாய பணிவிடுப்பையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தான் அதிகளவில் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் 4,29,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 6.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 3,28,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 4.7 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,800,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 7.4 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. அதேபோல உத்திரகாண்ட் மாநிலத்தில் 2,00,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 7.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது.



இந்தியாவில் மாதந்தோறும் மில்லியன் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. குறைந்த அளவில் தான் தொழில்கள் தொடங்கப்படுகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசுகள் சில வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 50 ஆகக் குறைக்கவும் திட்டமிட்டு வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து குறைக்க திட்டமிட்டுள்ளன. உத்திரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராமசாமி அரசின் எல்லாத் துறைகளிலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கூடுதாலாக பணி வழங்க முடியும் என்று மாநில அரசுகள் கருதுகின்றன.




இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில அரசைப் போல மத்திய அரசும் வேலையின்மையைப் போக்குவதில் சரிவையே கண்டு வருகிறது. பாரதிய ஜனதா பொறுப்பேற்பதற்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்
குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு கடந்த ஜூன் 30-ம் தேதி அறிக்கைஅளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்காத நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புதிய ஊதியம் அமலாகுமா என்ற சந்தேகம் உள்ளது.

லோக்பால் சட்டப்படி தமிழகத் தில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. நாடாளு மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அங்கு சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தாவை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ''லோக்பால் சட்டத்தை அமல்படுத்த எந்தப்பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டுவர உள்ளது.


 திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், தமிழகத்தில் லோக்பால் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய வரையறையை நிர்ணயித்த மத்திய அரசு, படிகள் தொடர்பான தெளிவான வரையறையை அளிக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்'' என்றார்

FLASH NEWS : 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!

ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது:
அமைச்சர் செங்கோட்டையன்

*9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை:
அமைச்சர் செங்கோட்டையன்.

புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.சிறப் பாசிரியர்கள் முன்பு வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் தேர்வு
செய்யப்பட்டு வந்தனர்.
கடந்த 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பள்ளி ஆசிரியர்களைப் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை பின் பற்றத் தொடங்கியது. அந்த அடிப் படையில், சிறப்பாசிரியர்களையும்ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வுசெய்ய முடிவு செய்தது.

இதுதொடர்பாக கடந்த 17.11.2014 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம் நேர்முகத்தேர்வு போன்ற வற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 100மதிப்பெண் களில் எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப் பெண்கள் ஒதுக்கப்பட்டன.

எஞ்சிய 5 மதிப்பெண்ணில் உயர் கல்வித் தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளி அனுபவம் இருந்தால் 1 மதிப்பெண், தனியார் பள்ளி அனுபவம் எனில் அரைமதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (ஃபைன் ஆர்ட்ஸ்) சாதனை உள்ளிட்ட கல்வி அல்லாத இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு ஒன்றரை மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1,188 காலியிடங்கள்

எழுத்துத் தேர்வு நீங்கலாக மற்ற பிரிவுகளுக்கான 5 மதிப்பெண்களில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியிருந்தால் பல் வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகலாம். எனவே, அரை மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைப் போன்று வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு, பதிவுசெய்து காத்திருக்கும் ஆண்டுக்கு தகுந் தாற்போல் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கலாம் என்றும் அரசுக்கு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தசூழ்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அண் மையில் வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் நியமனம் தொடர் பான அறிவிப்பும் இடம்பெற்றது. 1,188 சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய ஜூலை 3-வது வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு 19-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

நேர்முகத் தேர்வு நீக்கம்

இந்தநிலையில், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிட்டது. ஏற்கெனவே வெளி யிடப்பட்ட அரசாணையில் குறிப் பிடப்பட்டுள்ளவாறு, சிறப்பாசிரியர் நியமன முறை அமைந்திருக்குமா அல்லது புதிய முறை கொண்டு வரப்படுமா என்று தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் தொழிலாசிரியர் பயிற்சியை முடித்த சுமார் 2 லட்சம் பேர் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.

உயர்அதிகாரி விளக்கம்


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “எழுத்துத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட அரை மதிப் பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றவும், ஓவியம், இசை, உடற்கல்வி, தையல் பாட ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அவசியமில்லை என்பதால்நேர்முகத் தேர்வை நீக்கிவிடவும் முடிவுசெய்துள்ளோம். சிறப்பாசி ரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.