யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/4/18

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தினை கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான்
அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்*

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; ் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*

தமிழ் நாடு - 79 ; வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*

தமிழ் நாடு - 86.7%; வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

*கல்வி_விகிதாசாரம்*

தமிழ் நாடு - 80.33%; ் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; ் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

*மனித_வள_குறியீடு* (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ;  வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)

தமிழ் நாடு - 18%;  வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)
மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149;  வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36


உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*

2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
இருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 ஆயிரத்து 81 உயர்நிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 803 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. அதாவது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.

மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அரியலூர் 61, கோவை 3, கடலூர்82, தர்மபுரி11, ஈரோடு20, காஞ்சிபுரம்33, கரூர்3, கிருஷ்ணகிரி271, மதுரை2, நாகப்பட்டினம்145, பெரம்பலூர்19, புதுக்கோட்டை62, ராமநாதபுரம்8, சேலம்12, சிவகங்கை4, தஞ்சாவூர்33, நீலகிரி76, தூத்துக்குடி2, திருப்பூர்11, திருவள்ளூர்23, திருவண்ணாமலை381, திருவாரூர்70, திருச்சி3, வேலூர்335, விழுப்புரம்383, விருதுநகர்11 என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும், கணிதத்திற்கு 436 பணியிடங்களும், அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்

6/4/18

கல்வித்துறையில் உருவானது S.S.A.S திட்டம் (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் செயல்படுகின்றன.
இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.
இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார்.

ப்ளஸ் டூ முடித்ததுமே வேலைபெறும் வகையில் புதிய பாடத்திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை இன்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயல்வழி கற்றல்மூலம் அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வதுகுறித்து நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இவை உதவும் என்றார். 
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, "ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 1, 6,9,11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும். வர இருக்கிற புதிய பாடத்திட்டம், 12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் தரமான பாடத்திட்டமாக அமையும். இந்த ஆண்டு, தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என்றும், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி, நீட் தேர்வுக்குப் பயிற்சிபெற வழிவகை செய்துள்ளதாகவும் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது, "முறைகேடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

சென்னையில் ‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி கண்காட்சி 14, 15-ந் தேதிகளில் நடக்கிறது

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று தேர்வு செய்வதுதான் வாழ்க்கையின் திருப்பு முனையாகும்.

 அவர்களுக்கு உதவும் விதமாக, தினத்தந்தி வழங்கும் கல்வி கண்காட்சி-2018 நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 14, 15 ஆகிய தேதிகளில்நடைபெறுகிறது.

இந்த கல்வி கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 70-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு படிப்பிலும் இருக்கக்கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள், அவர்களது சிறப்பம்சங்கள், பயிற்றுவிக்கப்படும் படிப்புகள், அதற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்த அனைத்து விவரங்களையும் இந்த கண்காட்சியில் பெறுவதோடு, மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கட்டண விவரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை விபரங்கள் போன்றவற்றையும் கண்காட்சி அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய படிப்புகள்

காலத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் அறிமுகமாகி வரும்புதிய படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி இந்த கண்காட்சியின் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் பெற்றோர்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு, மாணவர்களின் விருப்ப பாடங்கள் பற்றியும், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். உடனடி வேலை வாய்ப்புகள் கொண்ட படிப்புகள் பற்றி அறிந்து, அவற்றை அருகில் உள்ள கல்வி நிறுவனத்திலேயே பெறுவதற்கும் இந்த கண்காட்சி ஒரு வாய்ப்பாகும்.இந்த கல்வி கண்காட்சியை சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், வேல்ஸ்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம், கலசலிங்கம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், செயிண்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மீனாட்சி கல்வி நிறுவனங்கள் மற்றும் ரெமோ சர்வதேச விமான கல்வி நிறுவனம் ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து நடத்துகின்றன. கண்காட்சியானது காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

டான்செட் 2018 விண்ணப்பங்கள் வரவேற்பு

10 ஆம் வகுப்பு ஆங்கிலம் 2 ம் தாள் ஈசி:

அரசு பெண் ஊழியருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட விவரம்

தனி ஊதியம் 750அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு திருப்பூர் Deeo- CM cell reply

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளில் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி-வேதியியல், சிறப்புத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. மே 16-ல் முடிவு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 7-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 18-ம் தேதியும், மார்ச் 16-ல் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வருகிற 20-ம் தேதியும் நிறைவடைகின்றன. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் Grade D மாணவர்களுக்கு "தமிழில் கற்பித்தல் சிறப்பு பயிற்சி முகாம்"-2 நாட்கள்:

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு??* *நல்ல வேலைக்கு போகவா??* *ஆங்கிலம் சரளமாக பேசவா??* *குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??* *எதற்கு? ? ஏன்? ? என்று சிந்தித்ததுண்டா??*

Pre kg 25000 ல் துவங்குகிறது*
*Lkg 40000*
*Ukg 50000*
*1st.60000*
*2ND 70000*
*3D. 80000*
*4TH 90000*
*5TH 100000*
*6TO8 1.20000*
*9TO10. 150000*
*11TO12 200000 லச்சம் ஆக மொத்தம்*
*9,85000 ரூபாய்  இது கிராமங்கள்ல இருக்கிற CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.*

*சரி இதெல்லாம் இருக்கட்டும் இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா???*

*உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள் அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்* . *மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.*

 *ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??*

*தமிழகத்தில் 9 ன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராக?? பொறியாளராக வரமுடியுமா??*

*உங்கள் பிள்ளையும் இவ்வாறு வரவேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தீர்கள்.  சரி இப்போது அவர்களால் மருத்துவராகவோ பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சென்று சேர்ப்பீர்கள்???*

*CBSE கல்லூரியிலா??*
*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??*

*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரிதான் இல்லையா???*

*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*
*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா???*

*இல்லை?? இல்லவே இல்லை ??இப்போது உங்கள் பிள்ளைகளோடு சாதாரண அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள்தான் படிப்பார்கள் என்பதை உணருங்கள்.???*

*பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் எங்கே? ?*

*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?? உங்கள் பிள்ளை சாதனையாளனா??*

 *இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா???*

*உங்களுக்கு தெரியுமா TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று? ??*

*TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று????*

 *இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பேரும் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று??*

*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்???*

*உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா?? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று? ?*

*அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??*

*இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே??*

 *அரசுப்பள்ளிகள் அடித்தளமான பள்ளிகள் என்று அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள் அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??*

*வாருங்கள் குரல் கொடுப்போம் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.*

*அப்படி சட்டம் இயற்றுவார்களா? ? அரசியல்வாதிகள்  இயற்றினால் என்ன நடக்கும்? ?அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடன் நம்பிள்ளை கலெக்டர் மகனுடன் நம்பிள்ளையும் படிப்பார்கள் கட்டட வசதிகள் அதிகமாகும்.* *சத்துணவு சத்தான உணவாகும். நவீன கருவிகள் முறையில் பாடம் கற்பிக்கப்படும் CBSE பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்படும்.*
*செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும். சிந்தித்து மற்றவரிடம் கொண்டு சேர்ப்போம்*

*என்றும் அன்புடன்*
*அரசு பள்ளி.*

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நீதிபதிக்கு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கடிதம் :

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கர்நாடக மாநிலம் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பினர். 
அதுபற்றிய விபரம் வருமாறு:-
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளில், மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் ஒன்று. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 80 மாணவர்கள், 90 மாணவிகள் என மொத்தம் 170 பேர் படித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் என மொத்தம் 10 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாணவ- மாணவிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு தங்கள் கைப்பட கடிதம் எழுதி அனுப்பினார்கள்.
அந்த கடிதத்தில், “தமிழகத்தில் விவசாயம் குறைந்துவிட்டது. காரணம் காவிரி நீர் போதிய அளவு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. காவிரி பிரச்சினை குறித்த தங்களின் மேலான உத்தரவை உறுதியாக அமல்படுத்தும்படி, கர்நாடக மாநிலத்திற்கு அறிவுரை வழங்க தங்களை தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள இந்த மாணவ-மாணவிகளின் செயல் பாராட்டுக்கு உரியதாக உள்ளது.

5/4/18

கணிதத்துக்கு மறுதேர்வு இல்லை : சி.பி.எஸ்.இ., மாணவர்கள் நிம்மதி

பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கு, மறுதேர்வு நடத்தப் போவதில்லை' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்ட, 10ம் வகுப்பு கணித வினாத்தாளும், பிளஸ் 2 பொருளா தார வினாத்தாளும்,முன் கூட்டியே, 'லீக்' ஆனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, பிளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. 'டில்லி, மற்றும் ஹரியானா மாநிலங்களில் மட்டும், 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதிபலிப்பு : இதையடுத்து, சி.பி.எஸ்.இ.,க்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மற்றும் கல்வி அமைச்சக அதிகாரிகள் கூட்டம், நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: வினாத்தாள் வெளியான விவகாரத்தில், போதிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை. ஒரு, இ - மெயில் புகாரின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் முடிவு எடுக்க விரும்பவில்லை.மேலும், வினாத்தாள் வெளியானதன் பிரதிபலிப்பு, மாணவர்களின் விடைத் தாள்களில் காணப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தேர்வு நடத்துவது சரியில்லை. எனவே, 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு முடிவு : இதற்கிடையே, 10ம் வகுப்பு கணித பாடத்தில், 'இன்டர்னல்' எனப்படும், உள்மதிப்பீட்டில் குறைவாகவும், பொதுத் தேர்வில் அதிகமாகவும் மதிப்பெண்பெறும் மாணவர்களின் தேர்வு முடிவு, கவனமுடன் ஆய்வு செய்யப்படவுள்ளதாக, சி.பி.எஸ்.இ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கூட்டுறவுச் சங்க தேர்தல்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26 -ஆம்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. முதல் கட்டத் தேர்தல் திங்கள்கிழமை (ஏப்.2) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அப்படியே மனுக்களை வாங்கினாலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. கூட்டுறவுச் சங்க விதிகளுக்குமுரணாக நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அசோக்குமார் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, 'திமுகவினரின் வேட்புமனுக்கள் எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு தேர்தல் அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்கதக்கதல்ல. தமிழகம் முழுவதும் உள்ள 4,698 கூட்டுறவுச் சங்கங்களில் 92 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாமல் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்ட 332 சங்கங்களில் 97 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இது கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக உள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட விரோதமானது' என வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், 'தேர்தலில் முறைகேடு இருந்தால் சங்கத்தின் பதிவாளரிடம்தான் முறையிட வேண்டும். நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் எஸ்.பழனிச்சாமியிடம், இந்தத் தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஆசிரியர்களுக்கு அரசு புதிய அனுமதி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத் துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஒருவருவாய் மாவட்டத்துக்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் மதிப்பீடு முகாம்களில், ஆசிரியர்கள் தங்களின் கல்வி மாவட்டத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கல்வி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தப்படலாம்.

அந்தக் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முகாமில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழல் ஏற்பட்டால், மதிப்பீட்டுப் பணி முடிவடைந்த கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது .

பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு.

அரசு நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: நாளை முதல் மீண்டும் தொடக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால் 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான இலவச சிறப்பு வகுப்புகள் வியாழக்கிழமை (ஏப்.5) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.

மத்திய அரசு நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக இலவசப் பயிற்சி மையங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு தொடங்கியது.
தொடக்கத்தில் 100 மையங்களில் 20,000 மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சி, பிப்ரவரி மாத இறுதியில் 70,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஒரு ஊராட்சிக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 மையங்களில் இந்த மையங்கள் செயல்பட்டுவந்தன.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியதால் பிப்ரவரி 3-ஆவது வாரம் முதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பிளஸ் 2 வகுப்பில் கணிதமும், அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு திங்கள்கிழமையுடன் (ஏப்.2) பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து 412 பயிற்சி மையங்களிலும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஸ்பீடு அகாதெமி நிர்வாகிகள் ஆகியோர் கூறியது:-
நாடு முழுவதும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மட்டுமே இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு 8,233 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு 412 மையங்களிலும் ஏப்.5 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அனைத்து நாள்களிலும் பயிற்சி வழங்கப்படும். ஏப்.20-ஆம் தேதிக்குப் பிறகு, தேர்வு மூலம் 2,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழகம் முழுவதும் 9 இடங்களில் விடுதியுடன் கூடிய இலவசப் பயிற்சி 15 நாள்கள் வழங்கப்படும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கும் வாய்ப்பு: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். அதேபோன்று அரசுப் பள்ளிகளைச்சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் ஏப்.9- ஆம் தேதி பொதுத்தேர்வு முடிந்ததும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றனர்.

திருச்சி மாவட்டம் - ஏப்ரல் 17 ம் தேதி உள்ளூர் விடுமுறை.

அரசுப்பள்ளியில் நடந்த சூரியன் FM ரேடியோ வின் "அச்சம் தவிர்" விழிப்புணர்வு நிகழ்ச்சி :

"அச்சம் தவிர்"சூரியன் FM ரேடியோ  வழங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (2/4/18  )திங்கள் மதியம் 2.00 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , இடைமலைப்பட்டிபுதூரில் நடைப்பெற்றது ......

ஐந்தில் ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைக்கு எதிராக சமுதாய அக்கறையோடு சூரியன் எப்.எம்.நடந்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அச்சம் தவிர் .இது குழந்தைகளுக்கு தொடுதல் பற்றிய சரியான புரிதலையும் தவறான தொடுதலின் போது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் முயற்சி......




குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் போது எவ்வாறு தடுப்பது , தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை அளித்தனர் .பாலியல் கொடுமை பற்றிய விழிப்புணர்வை  குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் ....ஏனென்றால்  இது எந்த வயதிலும் நிகழலாம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புரிந்துகொள்வதோடு அவர்களிடம்  ஏற்படும் மாற்றங்களை  உடனடியாக கண்டறிய வேண்டும்
குழந்தைகள் வெளிப்படையாக பேசும் போது அவர்களை பெற்றோர்கள்  குற்ற உணர்வோடு பார்க்காதீர்கள் .விழிப்பணர்வு நிகழ்ச்சியை அருமையாக நடத்திய  திருமதி ராகிணி (Associate professor in Bishop heber  college)
திரு முத்து மாணிக்கம் (child
Development centre Trichy) மற்றும் சூரியன் Fm ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் பள்ளியின் சார்பில் நன்றி ..... “அச்சம் தவிர் “ விருதினை எம் பள்ளிக்கு வழங்கிய   சூரியன் Fmக்கு நன்றி !





காவிரி போராட்டங்களால் நாளை 'நீட்' பயிற்சி மையங்களை துவக்குவதில் சிக்கல் :

திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரிய போராட்டங்களால் அரசின் 'நீட்' தேர்வு பயிற்சிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மருத்துவ கல்லுாரியில் சேர 'நீட்' தேர்வை வெற்றி பெறுவதை மத்தியரசு கட்டாயமாக்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு குறித்து தமிழ் வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, துாத்துக்குடி (கோவில்பட்டி), திருவள்ளூர் (கும்மிடிப்பூண்டி), கோயம்புத்துார், விருதுநகர், திருச்சி மாவட்டத்தில் இரண்டு மையங்கள் என 9 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. 


ஆங்கில வழி மாணவர்களுக்கு மட்டும் ஈரோட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இங்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்ட மாணவர்களுக்கு திண்டுக்கல் நீட் தேர்வு பயிற்சி மையம் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் செயல்பட உள்ளது.ஏப்., 5 ம் தேதி முதல் மே வரை நீட் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவிரி நதி நீர் பிரச்னைக்காக பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை ஏப்.5ம் தேதி வரை அறிவித்துஉள்ளன. இதனால் மாணவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் ஏப்.5ல் திட்டமிட்டபடி பயிற்சி துவங்குமா என்ற சந்தேகம் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது.

தேசிய தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு 10ஆம் இடம் :

பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசு சார்பில், 2016 முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தேசிய அளவில் முதலிடத்தை, பெங்களூரில் உள்ள, இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாம் இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.


தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, அரசு பல்கலையான, அண்ணா பல்கலை, தேசிய அளவில், 10ம் இடம் பெற்று, சாதித்துள்ளது. கோவை அம்ரிதா பல்கலை, 15; பாரதியார் பல்கலை, 20; வி.ஐ.டி., - 24; சென்னை பல்கலை, 29 மற்றும் திருச்சி, என்.ஐ.டி., நிறுவனம், 31ம் இடத்தையும் பிடித்துள்ளன.

பாரத் கல்வி நிறுவனம், 35; தமிழ்நாடு வேளாண் பல்கலை, 40; காரைக்குடி அழகப்பா பல்கலை, 43; சாஸ்த்ரா கல்வி நிறுவனம், 54; ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 62ம் இடங்களை பெற்றுள்ளன. எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், 63; கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 64; சத்யபாமா கல்வி நிறுவனம், 68; சவிதா கல்வி நிறுவனம், 70ம் இடங்களை பெற்றுள்ளன.

சென்னை, எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரி, 73; கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்வி நிறுவனம், 75; மதுரை காமராஜர் பல்கலை, 81; தமிழ்நாடு கால்நடை பல்கலை, 92ம் இடங்களை பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலை, 94; மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, 95 மற்றும் புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, 97ம் இடத்தை பெற்று, முதல், 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. இதில், இன்ஜி., கல்லுாரிகள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து முதல் இடம் பெற்று சாதித்துள்ளது. அண்ணா பல்கலை, 8; திருச்சி, என்.ஐ.டி., 11; வி.ஐ.டி., 16; பிட்ஸ் பிலானி பல்கலை, 17ம் இடங்களை பெற்றுள்ளன.

 கல்லுாரிகள் பிரிவில், திருச்சி பிஷப் ஹீபர், 3; சென்னை மாநில கல்லுாரி, 5; லயோலா கல்லுாரி, 6; சென்னை, எம்.சி.சி. கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 11; சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லுாரி, 22ம் இடங்களை பெற்றன

* மேலாண்மை, எம்.பி.ஏ., கல்லுாரிகள் பட்டியலில், திருச்சி, என்.ஐ.டி., 15; சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண் கல்வி நிறுவனம், 16; அண்ணா பல்கலை, 28; வி.ஐ.டி., 29; லயோலா கல்லுாரி, 32ம் இடங்களை பிடித்துள்ளன

* மருந்தியல் பிரிவில், நீலகிரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 15; அண்ணாமலை பல்கலை, 20, ராமச்சந்திரா கல்வி நிறுவனம், 21ம் இடங்களை பெற்றுள்ளன

* மருத்துவ கல்வி பிரிவில், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி, தேசிய அளவில், 3ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, ஜிப்மர், 6ம் இடம்; சென்னை ராமச்சந்திரா கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 21; எஸ்.ஆர்.எம்., 22ம் இடத்தை பெற்றுள்ளன.

* கட்டடவியல் கல்லுாரிகள் பிரிவில், அண்ணா பல்கலை, 6ம் இடம் பெற்றுள்ளது. வேளாண் பிரிவில், தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

11ம் வகுப்பு கணக்குப் பதிவியல் தேர்வு குறித்த கருத்து...

11 ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது ஏற்கனவே மொழி பாடமான தமிழ், ஆங்கிலம் முடிவடைந்த நிலையில் கலைப் பிரிவு மாணவர்களுக்கான முதன்மை பாடமான வணிகவியல் மற்றும்  பொருளாதாரம் ஆகிய தேர்வுகளும் முடிவடைந்தன. இந்நிலையில் நேற்று 3-4-2018 கணக்குப் பதிவியல் தேர்வு நடைப்பெற்றது அதில் 1மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையாகவும் நேர மேலாண்மையும் சரியாக இருந்ததாகவும் ஆனால் 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களில் அதிகமான நடவடிக்கைகள் கேட்கப்ப்ட்டதால்  போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் அணைத்து வினாக்களுக்கும் விடை தெரிந்திருந்தும்   விடையளிக்க நேரம் கிடைக்கவில்லை என்றும் மாணவர்கள் கூறினர். வினா அமைப்பு எளிமையாக இருந்தும் அணைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியவில்லை என்று  ஆதங்கத்துடன் மாணவர்கள் கூறினர்.

இத்தேர்வு பற்றி மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல்  ஆசிரியர் பலவேச கிருஷ்ணன் கூறுகையில் 11ம் வகுப்பு கலைப் பிரிவு மாணவர்களுக்கு வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆகிய  இரண்டு தேர்வு வினாக்களுமே மிகவும் எளிமையாக இருந்தது. கணக்குப் பதிவியல் பாடத்தை பொருத்த வகையில் மாணவர்கள் முன்கூட்டியே நேர மேலாண்மை பற்றி திட்டமிட்டிருந்தால் மாணவர்கள் எளிதாக அணைத்து வினாக்களுக்கும் விடையளித்திருக்கலாம்  என கூறினார்

அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத் துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஒரு வருவாய் மாவட்டத்துக்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் மதிப்பீடு முகாம்களில், ஆசிரியர்கள் தங்களின் கல்வி மாவட்டத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கல்வி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தப்படலாம்.
அந்தக் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முகாமில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழல் ஏற்பட்டால், மதிப்பீட்டுப் பணி முடிவடைந்த கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது .

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி? ஆலோசனை சொல்கிறது அரசு:

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
* வெயில் காலத்தில், அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படலாம்
* பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் காலை, 10:00 மணி முதல், 3:00 மணி வரை, வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
* தாகம் இல்லை என்றாலும், சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேற, தினமும், 2.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
* அதிகளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், பனைநுங்கு, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிக உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற பழச்சாறும் சாப்பிடலாம்
* வெளியே செல்லும் போது, குடிநீர் மற்றும் குடை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை எளிதாக வெளியேற, மிருதுவான தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது, தலையில் பருத்தி துணி, துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்
* ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதால், படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்படும். அப்போது, ஸ்டீராய்டு கலந்த களிம்புகளை தடவக்கூடாது; சுய வைத்தியமும் செய்யக்கூடாது. தோல்டாக்டர்கரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும்
* சூரிய ஒளி நேரடியாக படும், ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றை திரைச்சீலைகளால் மூடி வைக்கவும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வரும் வகையில், ஜன்னல்களை திறந்து வைக்கலாம். காலை, மாலை இருவேளையும் குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது
* வெயிலால் களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து, வெப்பம் குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும். தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, உப்பு சர்க்கரை கரைசல் பருக வேண்டும்
* மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்
* மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். கூடுதல் உதவிக்கு, 104; 044 - 2435 0496; 2433 4811; 94443 40496; 93614 82899 என்ற, எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டுறவுச் சங்க தேர்தல்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26 -ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. முதல் கட்டத் தேர்தல் திங்கள்கிழமை (ஏப்.2) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அப்படியே மனுக்களை வாங்கினாலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. 
கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர். 
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அசோக்குமார் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, 'திமுகவினரின் வேட்பு மனுக்கள் எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு தேர்தல் அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்கதக்கதல்ல. தமிழகம் முழுவதும் உள்ள 4,698 கூட்டுறவுச் சங்கங்களில் 92 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாமல் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்ட 332 சங்கங்களில் 97 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இது கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக உள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட விரோதமானது' என வாதிட்டார். 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், 'தேர்தலில் முறைகேடு இருந்தால் சங்கத்தின் பதிவாளரிடம்தான் முறையிட வேண்டும். நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் எஸ்.பழனிச்சாமியிடம், இந்தத் தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன்:

பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டெம் அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை இன்று நடத்தியது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் 3 ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்த நிலையில் 2 ஆண்டுகளில் கொண்டு வரப்படும். மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு சீருடை மாற்றப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதி நேரஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு இந்தாண்டு நடத்தப்படும். முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றார்.

அரசுப்பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது"- வைரலாகும் அரசுப்பள்ளி மாணவனின் பேச்சு

நான் சுமார் நான்கு மாதத்திற்கு முன் பஸ் அடிக்கடி வராத சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கும் சமயம் 8ஆம் வகுப்பு அரசுப்பள்ளி சீருடை அணிந்தமணவன் ஒருவன் லிப்ட் கேட்டான். நான் போகும் வழியிலே 10 கிமீ அவனது வீடும் இருந்ததால் அவனை ஏற்றிக்கொண்டு அவனிடம் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் (எனக்கு தெரிந்தவரை) பற்றி விசாரித்தேன். ஆனால் அவன் அவரைப்பற்றி எனக்கு தெரியாது, இப்போது வேறு ஒருவர் இருக்கிறார் என்றான்.

உடன் நான் சென்ற வருடம்வரை அவர்தானே இருந்தார் 8ம் வகுப்பு படிக்கும் உனக்கு எப்படி அவர் தெரியாமல் இருக்கும் எனக்கேட்டேன்..??

அதற்கு அனது பதில்தான் என்னை இந்த பதிவையே தொகுக்க வைத்தது...!

*இனி ஆங்கிலமும் தமிழும் கலந்த பதில் அவனது வார்த்தையிலே:*

Sir, நான் last year வரைக்கும் ******** Schoolல (சுமாராக பீஸ் வாங்கும் தனியார் பள்ளி) தான் படிச்சேன். என் Father ஒரு Private companyல contract labour ஆ Work செஞ்சிட்டு இருந்தாரு, அப்போ எங்க Fatherக்கு Salary ஜாஸ்தியா இருந்துச்சி. ஆன இப்ப BHELல order குறைஞ்சி போய் அவங்க Companyக்கும் Contract சரியா கிடைக்கல. எங்க அப்பாவுக்கும் Income கொறஞ்சிபோச்சி. அதுனால அந்த அளவு Fees கட்டமுடியாம, அந்த Scoolல Continue பண்ணமுடியல..!

*அதுனால நான் இப்ப அதுக்கு பக்கத்து Government schoolல English medium படிச்சிட்டு இருக்கேண்ணே."*

அதற்குள் நான் இடைமறித்து,  'என்னப்பா சொல்லுற நீ...!! ஏற்கனவே நீ படிச்ச உங்க ஸ்கூல்ல படிக்கும் பசங்க,  நீ இப்ப படிக்கும்  ஸ்கூலப்பத்தியும் அங்க படிக்கும் பசங்களைப்பத்தியும் கேவலமா பாப்பீங்களே என்று எனக்கு தெரிந்த  நிலவரத்தை கேட்டேன்..!

அதற்கான அவனது பதில்:

"அட போங்க Sir, அங்க இருந்த வரைக்கும் நானும் அப்படித்தான் Feel பண்ணேன், ஆனா *இங்க வந்ததுக்கப்புறம் எவ்வளவு Jollyயா இருக்கேன்னு* தெரியுமா Sir...??.

*இங்க படிக்கிற Maximum students எங்கள மாதிரி Average family தான். எல்லாரும் எவ்வளவு நல்லா பழகறாங்க. பழைய School ல பசங்க என்னையெல்லாம் ரொம்ப இளக்காரமா பாப்பாங்க,  எங்கள மாதிரி Poor family students ஐ எதுலயும் சேத்துக்க மாட்டாங்க...!*

இங்க பெரும்பாலும் என்னை மாதிரி Students படிக்கறதால எந்த Difference ம் இல்லாம confident ஆ இருக்கோம் Sir.

அதுமட்டும் இல்ல sir, நா, அங்க இருக்குற வரைக்கும் Average student தான் சார். Class ல Fifty students இருந்தோம், நான் Thirty rankக்கு மேல தான் எடுப்பேன். Tution ல சேந்து படிக்க சொல்லுவாங்க. Fees கட்டவே எங்க Father ரொம்ப கஷ்டப்படுறாரு...!!

*அங்க Class teacher, other subject எடுக்குறவங்க High level englishல தான் Class எடுப்பாங்க. பாதிக்கு மேல Understand ஆகாது. அவங்கல்லாம் எங்களைப்போல Average students ஐ கண்டுக்கவே மாட்டாங்க, எப்ப பாத்தாலும் English புரியாத நீங்கள்ளாம் ஏந்தான் இந்த Schoolக்கு வந்து எங்க உசுர வாங்குறீங்கன்னு  மட்டம் தட்டகிட்டே இருப்பாங்க.*

ஆனா இந்த School எல்லா Teachersம் எவ்வளவு Care எடுத்து Average students க்கும் புரியர மாதிரி Superஆ Class எடுக்குறாங்க தெரியுமா....??

அங்க இருந்த வரை எனக்கெல்லாம் Confidence ஏ இல்ல Sir. ஆனா இப்பல்லாம் இவங்க Care எடுக்கறதால நல்லா படிக்கிறேன்..! Startingல இருந்த பயம் போய் இப்பல்லாம் நல்லா படிக்கிறேன் Sir...!!

*இப்பல்லாம் Fifth rank குள்ள எடுக்குறேன். நல்லா புரிஞ்சி படிக்கறதால 10th standard க்குள்ல At least school firstஆவது வந்துடுவேன் Sir...!! Definitely வந்துடுவேன் Sir, இப்பல்லாம் எனக்கு அந்த Hope நெறயவே இருக்குது...!!!*


*Government scool Teachers பத்தி யாருக்கும் Proper ஆ தெரிய மாட்டேங்குது..!!இவங்கல்லாம் Full effort ஓட எல்லாத்துக்கும் எவ்வளவு நல்லா சொல்லி குடுக்குறாங்க தெரியுமா...???*

நான் கூட பழைய Friends கிட்ட சொல்றேன். பேசாம இந்த Schoolக்கு வந்துருங்கடா. இங்க எந்த குறையும் இல்ல, இங்க படிக்கிறது நமக்கு கேவலமும் இல்ல, நீங்களும் என்ன மாதிரியே நல்லா வந்துருவீங்கன்னு...!!!
But அவங்க Parents க்கு அது புரியமாட்டேங்குது.

*ஏன் Sir இந்த Parents இப்படி இருக்காங்க...?? Hard work பண்ணுண காசையும் செலவழிச்சி... அந்த School ல பசங்கலுக்கு Studies ம் சரியில்லைங்க...!!!*

*எங்களப்பாருங்க எங்க Father ரோட Income Sufficient ஆ இல்லாட்டியும் என்னோட Education  செலவு ரொம்ப கொறஞ்சி போனதால இப்பல்லாம் ரொம்ப Happy யாத்தான் இருக்கோம் "*

சரிண்ணே, நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சி. Okண்ணே.. ரொம்ப Thanksண்ணேன்னு சொல்லீட்டு.....

வண்டியை விட்டு இறங்கி புத்தக பைய தூக்கி தோள்ல போட்டுட்டு டாடா காமிச்சிட்டே நடந்து கிராமத்து குறுகலான சந்தில் மறைந்து போய் விட்டான்...!!!

*இன்று நாடே பேசிக்கொண்டிருக்கும் அரசுப்பள்ளிகளின் பெருமைகளையும் காசுமட்டுமே குறிக்கோளான தனியார் பள்ளிகளின்  அவலமான தரத்தையும் சிறுவன் ஒருவன் நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து விட்டான்...!!*

வாழ்க்கையில் இழந்ததை எண்ணி எந்தவித கவலையுமின்றி.... கிடைத்ததைக்கொண்டு வருத்தமேதுமில்லாமல்..... எளிமையாகவும்,  நிறைவாகவும் எதிர்கால லட்சியத்துடனும் வாழும் இவர்களிடமிருந்து நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று எண்ணியவாறு, நான் சிறிது நேரம் அங்கேயே சுயநினைவின்றி நின்று கொண்டிருந்தேன்...!!!
-நன்றி-யாரோ

ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவரா நீங்கள்..? 3,030 காலியிடங்களுக்கான அறிவிப்பு!

அண்மையில் ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு, கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3,030 காலி பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டுள்ளது.

1 பணி: வேளாண்மை பயிற்றுவிப்போர்
காலியிடங்கள்: 25
அறிவுப்பு வெளியாகும் தேதி: வரும் ஏப்ரல் முதல் வாரத்தில்.
எழுத்து தேர்வு: ஜூலை 14-ஆம் தேதி.
தேர்வு முடிவு: ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும்.

2. பணி: பாலிடெக்னிக் விரிவுரையாளர்.
காலியிடங்கள்: 1,065.
மறு தேர்வு: ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வு முடிவு: செப்டம்பரில் வெளியிடப்படும்.
தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி: வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.

3. பணி: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 1,883
தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி: மே முதல் வாரத்தில் அறிவிப்பு.
சான்றிதழ் சரிபார்ப்பு: ஜூன் 2-வது வாரத்தில்.
முடிவு: ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்.

4. பணி: உதவி தொடக்க கல்வி அதிகாரி
காலியிடங்கள்: 57
தேர்வுக்கான அறிவுப்பு: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.
எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 15-ஆம் தேதி தேர்வு நடக்கிறது.
தேர்வு முடிவு: அக்டோபரில் வெளியாகும்.

5. பணி: ஆசிரியர் தகுதி தேர்வு
தேர்வுக்கான அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
முதல் தாள் தேர்வு: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கானது.
இரண்டாம் தாள் தேர்வு: அக்டோபர் 7-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தேர்வு இளங்கலை, முதுகலை படிப்புகளுடன், B.Ed., முடித்தவர்களுக்கானது.
தேர்வு முடிவுகள்: முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான முடிவு நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு தொடர்பான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Madurai Kamaraj University (DDE). B.Ed Spot Admission - 2018 -2020​- No Entrance Examination

DSE PROC - 10,11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு "தொடுவானம்" சிறப்பு பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

காவிரி நதிநீர் கிடைத்த வரலாறு!!!

4/4/18

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு :

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு சென்னை: இளநிலை பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில், 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே, 19, 20ல், நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 23க்குள், விண்ணப்பிக்கலாம்.

இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

3 விதமான சீருடைகள்' கோபிசெட்டிப்பாளையம்: ''இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள்
வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே, நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு நாளும், ஒரு புதிய திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. தேர்வு முடிந்த பின், கோடை விடுமுறை விடப்படும். பள்ளி திறந்ததும், மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் நாளே, அந்த புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்!!

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.
பிளஸ் 2 வகுப்பில், கணிதமும், அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வு முடிந்தது. பொது தேர்வுக்கு முன், 100 மையங்களில், ஒரு மாதமாக, நீட் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தேர்வு முடிந்ததால், மீண்டும் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.அதன்படி, தமிழக அரசின், 412 பயிற்சி மையங்களில், வரும், 5ம் தேதி முதல், பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. இந்த வகுப்புகளை, சிறப்பு பயிற்சி பெற்ற, 150 அரசு பள்ளி ஆசிரியர்கள் நடத்த உள்ளனர்.இதற்கிடையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 9,000 மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 4,000 பேருக்கு, தமிழக அரசின் சார்பில், உணவு, இருப்பிட வசதியுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.சென்னையில், அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே. இன்ஜி., கல்லுாரி, செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்டவற்றில், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள், வரும், 9ம் தேதி துவங்க உள்ளன.வேறு எந்த மாநிலத்திலும், நீட் தேர்வுக்காக, அரசின் சார்பில் பயிற்சி வழங்கப்படாத நிலையில், தமிழகத்தில் தான் முதன்முதலாக, கட்டணமின்றி, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

பரீட்சையில பாஸ் பண்ணணுமா சூப்பர் டிப்ஸ்!! உ.பி.,யில், பிளஸ் 2 விடைத்தாளில், ரூபாய் நோட்டுகளை வைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, பல மாணவர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில், 'பிளஸ் 2 தேர்வின் போது, முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்; தேர்வுக்கு பயந்து 1.8 லட்சம் மாணவர்கள், முதல் நாள் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள், கடும் கண்காணிப்பின் கீழ் நடந்து முடிந்தன. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.
முறைகேடுகளில் ஈடுபட முடியாததால், பல மாணவர்கள், விடைத் தாள்களில், தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சிலர், தங்கள் குடும்ப சூழலை கூறி, உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். சில மாணவர்கள், தங்கள் காதல் கதைகளைக் கூட, விடைத்தாள்களில் எழுதி உள்ளனர்.
'நான் தேர்ச்சி அடையவில்லை என்றால், என் தந்தை என்னை கொன்று விடுவார்' என, ஒரு மாணவர் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள், 50, 100, 500 ரூபாய் நோட்டுகளை, விடைத்தாளுடன் இணைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு விடுதியில் தேர்தல் பணி:- அமைச்சர் அலுவலகம் சீல்!!!

                                      

தேர்வு எழுதியபோதே 50 பேர் கைது!!!

                                        

அறிவோம் சட்டம் - பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்!!!

அறிவோம் சட்டம் - விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய 
விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.

அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.


3. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக  நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப் படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத் திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.

1. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாது காத்தல் சட்டம், 2005,
2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
3. The Immoral Traffic (prevention) Act
4. Muslim Women Protection of Rights on Divorce Act 1986
5. Family Couts Act 1984
6. National commission for Women Act 1990
7. Commission of Sati (prevention) Act 1987
8. Human Rights Act 1993
9. Women's Rights to property Act 1937.
10. The Divorce Act 1869.

இந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.

1) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம் - 2005 ஒரு பெண்ணுடைய உடல் நலம், பாதுகாப்பு, உயிர், உடல், உறுப்பு அல்லது நல வாழ்வுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஊறு விளைவித்தல் அல்லது காயப்படுத்துதல் அல்லது அவ்வாறு செய்ய முயற்சித்தல், தகாத உடலுறுப்பு உணர்வுகளைப் புண்படுத்துதல், பொருளாதார ஊறு விளைவித்தல் அல்லது மதிப்புமிக்க காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் நோக்கத்தில் ஒரு பெண்ணை அல்லது அவரது உறவினரை மிரட்டும் வகையில் துன்புறத்துதல், தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல் ஆகியவை குடும்ப வன்முறையாகும்.

மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு அலுவலர்களை பணியமர்த்தும். அவர்கள் கூடுமானவரையில் பெண்களாக இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை செய்யப்பட்டால் அவர் இந்தப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரவேண்டும். அந்த தகவலைப் பெற்ற அலுவலர் ஒரு அறிக்கையினை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்ப வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒரு பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து அதன் விவரங் களை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை தரவேண்டும். அப் பெண் ணுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனையும் அந்த அலுவலர் செய்வார்.

இந்த பாதுகாப்பு அலுவலர் குற்றவியல் நடுவரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் பணிபுரிய வேண்டும். இந்தச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவம், நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்யலாம். அப்புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நாள்பற்றிய அறிவிப்பை பாதுகாப்பு அலுவலர் மூலமாக எதிர்வாதி மற்றும் பிற நபர்களுக்கு சார்வு செய்ய ஆணையிடலாம், குற்றவியல் நடுவர் இரு தரப்பாரையும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த உறுப்பினரிடம் ஆலோ சனை பெற உத்தரவிடலாம். வழக்கு விசாரணை குற்றவியல் நடுவரின் தனியறையில் நடத்தலாம்.

குடும்ப உறவு முறையிலுள்ள பெண் ஒருவருக்கு பங்கீடு செய்யப்பட்ட வீட்டில், உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்குவதற்கு உரிமை உண்டு. அவ்வீட்டிலிருந்து அவரை சட்டப்படியில் அல்லாது வெளியேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சீதனம் அடங்கிய சொத்துக் களை உரிமை மாற்றம் செய்ய, வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை வங்கி கணக்குகளை பயன்படுத்த குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.

குடும்ப வன்முறை தொடரவும் தடைவிதிக்கலாம். குடும்ப வன்முறை செய்யாமல் இருக்க எதிர்வாதியிடமிருந்து வாக்குறுதிப் பத்திரம் தருமாறு குற்றவியல் நடுவர் கோரலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உத்தரவிடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் இழப்பீடு தர எதிர்வாதிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரம், மன உளைச்சல், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய காயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கவும் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உண்டு, குற்றவியல் நடுவரின் ஆணைகளின் நகல்கள், புகார் கொடுத்தவர், எதிர்வாதி, காவல் நிலையம், தொண்டு நிறுவனம் ஆகிய வற்றிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை எதிர்வாதி மீறினால் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.

குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை நிறைவேற்றத் தவறும் பாதுகாப்பு அலுவலர் ஓராண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.    

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

தமிழகத்தில் கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பன்யிடங்கள்: 896

பணியின் தன்மை: ஊராட்சி செயலர்

சம்பளம்: மாதம் ரூ.7,700/-

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 21 - 35க்குள்ளும். மற்ற வகுப்பினருக்கான வயது வரம்பு 21-30 க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள, காஞ்சிபுரம் கடலூர் தேனி ஈரோடு திருவாரூர் திண்டுக்கல் பெரம்பலூர் கோவை திருவள்ளூர் கிருஷ்ணகிரி நீலகிரி அரியலூர் திருவண்ணாமலை தூத்துக்குடி விருதுநகர் வேலூர் திருநெல்வேலி கரூர் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு,அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த உடன் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப் படும்.

 நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாட்களிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள்
அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி.

இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்?

சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.

சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி


தி ஹிந்து

பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரம் பறிக்கப்படும் - மத்திய அரசு

சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகள் அதிக அளவில் 
நடமாடத் தொடங்கி விட்டன. சில பத்திரிக்கை நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளை பரப்பிவிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா போன்ற நிறுவனங்கள், மக்களின் பொழுதுபோக்குகள், அபிமானங்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு பிடித்தவாறு பொய்யான செய்திகளை பரப்பி தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்து வந்தது வெளித்திற்கு வந்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகமத் படேல்செய்தி ஊடகத்தில்  தவறான செய்திகளை சரிபார்க்கும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பினார்.

போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை நான் பாராட்டுகிறேன், ஆனால் என்னுடைய புரிதலுக்கான சில கேள்விகள்:

நேர்மையான நிருபர்களைத் துன்புறுத்துவதற்கு இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதற்கு உத்தரவாதம் என்ன?

யார் போலி செய்தி என்னவென்று தீர்மானிப்பவர்?  என்றெல்லாம் கேள்வி விடுத்து இருந்தார்.
I appreciate the attempt to control fake news but few questions for my understanding:
1.What is guarantee that these rules will not be misused to harass honest reporters?
2.Who is going to decide what constitutes fake news ?
1/2

— Ahmed Patel (@ahmedpatel) 2 April 2018
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் சும்ருதி இரானி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) ஆகியவை அரசின் கட்டுபாட்டில் இல்லை.
Glad to see you awake @ahmedpatel ji whether a News article / broadcast is fake or not will be determined by PCI & NBA; both of whom I’m sure you know are not controlled/ operated by GOI.

— Smriti Z Irani (@smritiirani) 2 April 2018
மத்திய அரசு பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி இதுகுறித்து விரைவில் விதிகளை வகுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் நிருபர்களை இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்யும் எனவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது ஒரு முறை விதிமீறினால் 6 மாத தடை, இரண்டு முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதிமீறயது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை தடுக்கவும், புதிய விதிகள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வருங்காலத்தில், பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சிக்கு என ஒரு தனி ஆணையம் உருவாகும் என தெரிவித்துள்ளது..

நடப்பு நிதி ஆண்டில் 6.8கோடி பேர் வருமானவரி அறிக்கை தாக்கல்!!!

                               

ஏப்ரல் 5-ம் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 5-ம் தேதி திமுக நடத்தும் போராட்டத்துக்கு 10 போக்குவரத்து
தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஏப். 5-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் நடைபெற்ற 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது*

டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.

தமிழக கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், எம்பிஏ, எம்சிஏ, போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், ’டான்செட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். டான்செட் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.




தேர்வு மையங்கள்

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே 19மற்றும் 20ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப் www.annauniv.edu/tancet2018 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலா

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

பொறியியல் பட்டப்படிப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது

“டிப்ளமோ முடித்துவிட்டு, தற்போது அரசு மற்றும் தனியார் பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில்  ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை உரிய நகல் எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் கோவை தொழில்நுட்ப கல்லூரிக்கு மே 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் 300ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் 600ரூபாய் செலுத்த வேண்டும். தரவரிசை பட்டியல் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் சென்னை ஐஐடி!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை இன்று (ஏப்ரல் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பை ஐஐடி இரண்டாம் இடமும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

மேலாண்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை அகமதாபாத் ஐஐஎம் முதலிடமும், பெங்களூர் ஐஐஎம் இரண்டாமிடமும், கொல்கத்தா ஐஐஎம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இரண்டாமிடமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைகழகம் எட்டாவது இடத்தையும், மும்பை கெமிக்கல் தொழில்நுப்ட நிறுவனம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரி மற்றும் பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி ஆகியவை அந்தந்த பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளன.

இந்திய கல்வி நிறுவனங்களுக்கான 2017ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது.

தமிழக அரசசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்...

நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள
நடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

தனியாக வகுப்பு நடத்துதல் :

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).

விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).

அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).