யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

உடல்நலம் மருத்துவம்,


இயற்கை வாழ்வியல் முறை
சுண்டைக்காய் மருத்துவம்
கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம்
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம்.
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப்
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில்
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி,
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம்
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும்
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன்
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள்
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம்
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய்
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.
எப்படி சுத்தப்படுத்துவது?
காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப்
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி,
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர்
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு
கைகளால் லேசாக அவற்றை அலசினால்,
விதைகள் அடியில் தங்கும். விதைகளை
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு,
சமையலுக்கு உபயோகிக்கலாம்.
உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து,
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும்
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு
விஷயங்களா என மலைக்க வைக்கிறது,
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி
சொல்கிற தகவல்கள்...
* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச்
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான
மருத்துவக் குணங்கள் கொண்ட
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண்
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம்
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல்
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின்
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக்
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா,
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில்
உண்டு.
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக்
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது
தெரியாது.
* சுண்டைக்காயை பச்சையாகவோ,
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும்
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில்
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம்
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன்,
காயங்களும் புண்களும் கூட ஆறும்.
* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின்
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும்
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ
தையும் தடுக்கக் கூடியது.
 நரம்பு மண்டலத்துக்கு சக்தி
கொடுக்கக்கூடியது
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும்
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.
* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத்
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம்
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ,
அத்தனையையும் சுண்டைக்காயிலும்
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான்
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல
மருந்துத் தயாரிப்புகளுக்கு
உபயோகிக்கிறார்கள்.
* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின்
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 🍃🍃🍃
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில்
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய்.
சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய
என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது,
எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்

உடல்நலம் மருத்துவம்,


இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..
இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:

ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
நாட்டு கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2

செய்முறை :

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.

தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்

1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு:

5 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.

குறிப்பு : காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்....