யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/15

ஓ.பி.சி., மாணவர்களுக்கு உ.பி., சலுகையோ சலுகை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு என வகைபடுத்தப்பட்டுள்ள, ஓ.பி.சி., மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது. 

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் ஓட்டு, 52 சதவீதம் உள்ளது. ஓ.பி.சி., மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற, அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 30 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என உள்ளது. 

வரும், 2017ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள இந்த மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவினரின் ஓட்டுகளை குறிவைத்து, அந்தப் பிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான உச்ச வரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, மாநில சமூக நலத்துறை, நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்.

.*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்

.*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம்

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்

.*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிப்பு

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் ஏ,கே., மாத்தூர் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் 900 பக்க அறி்க்கையை சமர்பித்தார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 18, ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ 2. 25 லட்சம் வரை வழங்கவும், ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், வீ்ட்டு வசதி கடனை 25 லட்சம் வரையில் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்கவும், அடிப்படை சம்பளாக 16 சதவீதமாகவும், இதர படிகள் 63 சதவீதமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனை 24 சதவீதம் வரையில் உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி முதல் தனது அறிக்கையை அமல்படுத்தும் படியும்
தற்போது வழங்கப்பட்டு வரும் 52 வகையான படிகளையும் ரத்து செய்யும்படியும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grade pay விற்கு பதிலாக புதிய முறை அறிமுகம்
இடைநிலை ஆசிரியர் new level will b 5
B.T Asst level 7
P.G level 8
For BT entry level pay 53600
Sec.Grade 32900
P.G. 58600

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.

7வது ஊதியக் குழுவின் அறிக்கை முழு விவரம்

19/11/15

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு

ஒர பளளிககடததகக ஆயவாள ஒரதத வநதார

மீன் உணவு சாப்பிட்டு வாழ்க நலமுடன் நண்பர்களே

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது:

சந்தனம், குங்குமம் மற்றும் திருநீறு இடுவதின் உண்மையான பயன்கள்:-

அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்...

ஆன்லைனில் ஈசியாக "பான் கார்ட்" பெற வேண்டுமா? - கட்டணம் வெறும் ரூ.106:

உங்கள் செல்போன் எண் மறந்துவிட்டதா ..!

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

கணிணி உபயோகிப்பாளர்களுக்கு பயனுள்ள எளிய வழிகள்!

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்