யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/8/16

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் ஓராண்டிற்கு பின் விடுவிப்பு

குரூப் 4 தேர்வு அறிவிப்பு .-காலியிடங்கள் - 5451 -GROUP - IV NOTIFICATION 2016

காலியிடங்கள் - 5451 
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532 
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8 
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6

பணிமாறுதல் கேட்டு ஆசிரியை தீக்குளிக்க முயற்சி

வேலூர் மாவட்டம், கான்குப்பத்தை சேர்ந்தவர் மிஸ்லா (30). இவர், வேலூரில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் இளநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பணி மாறுதல் கேட்டு வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்ைல. 

இதையடுத்து மிஸ்லா நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது அதிகாரிகள் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மிஸ்லா ஏற்கனவே தனது பையில் தயாராக எடுத்து வந்த 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து அலுவலகம் எதிரே தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியையை மீட்டனர். 

மேலும் இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் ஆசிரியை மிஸ்லாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.தமிழக முதல்வர் செல்லும் பாதையில் உள்ள அரசு அலுவலத்தில் இளநிலை ஆசிரியை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குரூப் 4 தேர்வு  அறிவிப்பு .

காலியிடங்கள் - 5451 

இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532 
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404

விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8 

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11

தேர்வு நாள் - நவம்பர் 6

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் எப்போது?

அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசிரியர்களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். 
அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம். தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர். அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்சஓய்வூதியம் ரூ.9,000

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல், மத்திய அரசுப் பணியாளர்கள், தங்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அளிக்கப்படும்பணிக்கொடையும் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு, பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும், பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இதுகுறித்து மத்தியப் பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் துறை அமைச்சகம், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசில் பணிபுரிந்து நிகழாண்டு முதல் ஓய்வுபெற்றவர்களுக்காக அளிக்கப்பட்ட 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.

அதன்படி, இதுவரை குறைந்தபட்சமாக மாதம் ரூ.3,500 ஓய்வூதியமாக பெற்றுவந்த மத்திய அரசின் முன்னாள் பணியாளர்கள், தற்போது, ரூ.9,000 வரை பெறுவார்கள்.அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1,25,000 ஆகும். இது கடந்த முறை இருந்ததைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம்.அதேபோல், பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, விபத்து நேர்ந்து இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு,இனி அதுபோன்று உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.ஒருவேளை பயங்கரவாதிகளுடன் சண்டையிடும்போது பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழக்க நேரிட்டாலோ அல்லது இயற்கைப் பேரிடர்களில் சிக்கி உயிரிழக்க நேரிட்டாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். இதுபோன்று உயிரிழப்பவர்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதவிர, தினமும் தவறாமல் அலுவலகம் வருபவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டுவரும்அகவிலைப்படியையும், மருத்துவ அகவிலைப்படியையும் உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை முன்பு வழங்கப்பட்ட அகவிலைப்படியே தொடரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.58 லட்சம் பேர் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம்

நல்லாசிரியர் விருது வழங்குவதில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை அடுத்து நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு ஆண்டும்500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெறுபவர்களுக்கு ரொக்கத் தொகை, பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, நல்லாசிரியர் விருதுக்குதகுதியுள்ளவர்கள் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கியதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் விதியைமீறி கல்வி அலுவலர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் மேற்கண்ட இரண்டு மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர், அரசு செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய பதில் வழங்காமல் மவுனம் காத்துவருவதால் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கலை ஆசிரியர் சங்கம் வழக்குதொடர்ந்துள்ளது. இதன் மீது வீசாரணை நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 22 ஆசிரியர்கள் மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீலகிரிமாவட்டத்தில் 3 பேருக்கு மேல் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நாளை மறுநாளுக்குள் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பள்ளி தவிர வீட்டில் தனி வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், பள்ளியில் பிற பணியில் வெளியே செல்லும் ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரை செய்யக்கூடாது, விதிமுறைகளை மீறும் தேர்வுக்குழு உறுப்பினர் மீது நடவடிக்கை பாயும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு போட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கம் காட்டி வருகின்றனர்

அரசு பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்

அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல்ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.
மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும்,அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பதுஉளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. மாவட்ட கல்விஅதிகாரிகள், தங்கள்கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில், இந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது

தொடக்க கல்வி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள்


பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)---பொதுஅறிவுகட்டுரை,


பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29-ல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970-ல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-ல் பொது உடைமையாக்கப்பட்டன.
கவிஞர் 21.4.1964-ல் இயற்கை மரணம் எய்தினார்.

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு--கட்டுரைகள்,---பொதுஅறிவுகட்டுரை,


கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்கிமு
900 - மகாபாரதப் போர்
கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்குஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்புகிமு
554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம்தோல்வி

கிபி1947 - இந்தியா விடுதலையானது.


நன்றி
Muthanna Brte

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!===பொதுஅறிவுகட்டுரை


இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

ஏ.பி.ஜே அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு :---பொதுஅறிவுகட்டுரை




இந்தியாவின் தலைசிறந்தவிஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்,இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும்
Image result for abdul kalam quotes
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு) பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15

ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில்பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக  வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். கல்லூரி வாழ்க்கை: தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி
பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில்
(DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக  வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில்
(ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய  பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல்,இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார். குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று,
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002
ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு
இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான்
விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார்
விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய
நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு
புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின்
எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்”
என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும்,கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

குடியரசு என்றால் என்ன?---பொதுஅறிவுகட்டுரை,


இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும்,
தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.

ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.இந்தியா சுதந்திரம் அடைதல்ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் ட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.குடியரசு தினக் கொண்டாட்டம்இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்---தகவல் துளிகள்,

வற்றிப் போகும் வாத்தியார்----தகவல் துளிகள்,

8/8/16

நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.



இந்த வரிசையில், நான்கு பரிமாணங்களில் படங்களை காட்டும்,மொபைல் போன் ஆப் மற்றும் காணொலி காட்சி குறுந்தகடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆப், ஆண்ட்ராய்ட் போனில், tnschools live என்ற பெயரில், கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம். இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:இந்த மொபைல் போன், 'அப்ளிகேஷனை' கேமரா மொபைல் போனில் பயன்படுத்தும் போது, அந்த கேமரா மூலம் புத்தகத்தில் உள்ள அறிவியல் பாட படங்கள் நான்கு பரிமாணமாக தெரியும்.

10ம் வகுப்பில் அறிவியல், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், 141 படங்கள் இந்த தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், 13 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.இது தொடர்பான, காணொலி காட்சி குறுந்தகடுகள், 6,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.


           
தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர்.

அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.

பணி விடுவிப்பு சான்றிதழ்



மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745 இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற,
பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று வித படிப்புகளுக்கு, 7,190 இடங்கள் என, 7,745 இடங்கள் உள்ளன. 20 ஆயிரத்து, 247 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, நேற்று முன்தினம் கடைசி நாள். மொத்தம், 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 'அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்; இம்மாத இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது