யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/8/16

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்?

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச Wi-Fi

ஜன கண மன என சொல்லிடுவோம்!

டிரைவிங் லைசென்ஸ் அவசியத்தை புரிந்து கொள்வோம்

தந்தை மகனுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்

தன்னம்பிக்கை கதை

திருநீறு இட்டுக்கொள்வது ஏன்?

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி

18/8/16

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.
'தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் நவ., 6ல், இந்த தேர்வு நடக்க உள்ளது; அதற்கான விண்ணப்பங்களை, இன்று முதல் சமர்ப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 'விண்ணப்பங்களை, www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணம், 50 ரூபாயுடன், ஆக., 31க்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா?

மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் தனபால், உதவி இயக்குனர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சீருடை, கதர் ஆடையாக மாற்றப்பட உள்ளது; இதற்காக, 10 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
காதி வாரியம் தயாரித்த, 30 லட்சம் காகித கோப்புகளை, பிரதமர் அலுவலகம் வாங்கியுள்ளது. ரயில்வே ஊழியர்கள், கதர் ஆடைகள் வாங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; இதற்காக, அத்துறையுடன் பேச்சு நடக்கிறது. தனியார் ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் ஆடை விற்பனைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
கேரளாவில் பள்ளி மாணவர்கள், கதர் சீருடை அணிய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் செயல்படுத்த கோரி, பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
மேலும், அனைத்து அரசு ஊழியர்களும், வெள்ளிக்கிழமை மட்டும், கதர் ஆடை அணிய உத்தரவிட வேண்டும் என, முதல்வர், தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி

சென்னை: எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கல்வியாண்டின்

இறுதியிலும் தேர்வு நடத்தப்படும்.இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான உதவித்தொகை, இந்த ஆண்டு முதல், நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என, பள்ளிகளுக்கான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

செப்.,1 ல் வாக்காளர் பெயர் சேர்ப்பு

ராமநாதபுரம்: செப்.,1 முதல் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன. செப்.,10 மற்றும் 24ல் வாக்காளர் பட்டியல் கிராம சபை கூட்டங்களில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். இதே போல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ஓட்டுச்சாவடிகள் அளவில் செப்.,11, 25ல் சிறப்பு முகாம் நடக்கிறது. நவ., 11ல் புதிய பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஜன.,5ல் இறுதி சுருக்க திருத்தப் பட்டியல் வெளியிடப்படும்

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு

சென்னை: பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
கவுன்சிலிங்கில் பங்கேற்க, 3,736 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும், 22ம் தேதி முதல், கவுன்சிலிங் நடக்கிறது.
முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். 23 முதல், 30ம் தேதி வரை, பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான பட்டியலை, http://www.ladywillingdoniase.com என்ற, லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

குரூப் - 1 தேர்வு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

குரூப் - 1' பதவிக்கான தேர்வில், நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின், 'ரேங்க்' பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசுத் துறையில், சப் - கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித் துறை கமிஷனர் உள்ளிட்ட, குரூப் - 1 பதவியில், 79 காலியிடங்களுக்கு, ஜூன் மாதம் முதன்மை தேர்வு நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு, ஜூலையில்
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.நேர்முகத் தேர்வுக்கு, 163 பேர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலான, 'ரேங்க்' பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் நேற்று வெளியானது. இதில், 87 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன; இதற்கான கலந்தாய்வு,
ஜூலை, 26ம் தேதி நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வெளி மாநில டாக்டர்களும் முதல் முறையாக பங்கேற்றனர்; இதில், 155 இடங்கள் நிரம்பின. இதில், எம்.சி.எச்., படிப்பில், 30; டி.எம்., படிப்பில், நான்கு இடங்களும் மீதம் உள்ளன. இதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, மருத்துவக் கல்வி இயக்கத்தின், மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்தில், நாளை நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு

கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். இதனால், தமிழகத்தில் இந்த சட்டத்தில்
சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடமிருந்து முழுமையாக பெற முடியவில்லை. இதன்படி, 2014 - 15 மற்றும் 2015 - 16ம் நிதி ஆண்டுகளில், 2,179 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியுடன், தமிழக அரசு, 1,019 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து, இதுவரை இலவச கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கி உள்ளது. எனவே, வருங்காலத்தில், மத்திய அரசு நிதியை முழுமையாக பெறும் வகையில், கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது.