யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/8/16

ராணுவ தொழிற்சாலையில் வேலை

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் ராய்ப்பூரில் செயல்படும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் தற்போது செமிஸ்கில்டு டிரேட்ஸ்மேன் மற்றும் லேபரர் போன்ற 'குரூப்-சி'பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆப்டிக்கல் ஒர்க்கர்,டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர்,கிரைண்டர், எலக்ட்ரீசியன், கார்பெண்டர்,மில்ரைட், மாசன் போன்ற பணிகள் உள்ளன. மொத்தம் 122 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர லேபர் பணிக்கு 16 இடங்கள் உள்ளன.
மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன், பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, அடுத்த 7 நாட்களுக்குள் சென்றடையும்படி குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்டு 13-19தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. விரிவான விவரங்களை www.ofdun.asrb2014.orgஎன்ற இணையதள முகவரியில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி.யில் வேலை

புகழ்பெற்ற கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்ப மையம் (ஐ.ஐ.டி.) பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. கான்பூரில் செயல்படும் ஐ.ஐ.டி. மையத்தில் பதிவாளர், இணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, கவுன்சலர், ஜூனியர் டெக் சூப்பிரண்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 94 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

10-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு, முதுநிலை படிப்பு என அனைத்து தரப்பு படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.அந்தந்த பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் 30-8-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.7-9-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களைwww.iitk.ac.in/infocell/recruitment என்ற இணைய 'லிங்'கில் பார்க்கலாம்.

கப்பல் தளத்தில் 1125 பணியிடங்கள்டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு

கப்பல் தளத்தில் 1125 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்களுக்கும், 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் இந்த பணிகளில் வாய்ப்பு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-
மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல்தளம் மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட். கடற்படைக்குத் தேவையான கப்பல்களை கட்டுமானம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இங்கு நடைபெறுகின்றன. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் மற்றும் ஆபரேட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குறிப்பாக பிட்டர் பணிக்கு 158 இடங்கள்,பேப்ரிகேட்டர் பணிக்கு 133 இடங்கள்,பைப் பிட்டர் பணிக்கு 130 இடங்கள்,எலக்ட்ரீசியன் பணிக்கு 144 இடங்கள்,கம்போசிட் வெல்டர் பணிக்கு 138பணிகள், செமி ஸ்கில்டு பணிகளுக்கு168 இடங்கள் உள்ளன. ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் இன்ஸ்பெக்டர்,ஸ்டோர் கீப்பர், ரிகர், பெயிண்டர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 1-8-2016 தேதியில்33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 5ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கும் வயது வரம்பு தளர்வு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன்,இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் 3ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன்,தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வு இவற்றில் பணிக்கு அவசியமான தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஏ4காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் DGM (HR&Rec&NE), Recruitment Cell, Service Block 3rd Floor, Mazagon Dock Shipbuilders Limited, Dockyard Road, Mumbai 400010 என்ற முகவரிக்கு 1-9-2016-ந் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்பப்பட வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களைwww.mazagondock.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்..

சோர்வு ஏற்படுவது ஏன் தவிர்ப்பது எப்படி?

ஜன கண மன என சொல்லிடுவோம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV அறிவியல் வினா - விடை 22

டிஎன்பிஎஸ்சி குரூப் IV பொதுத் தமிழ் வினா

தகவல் துளி புயல்கள் எப்படி உருவாகின்றன

தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

நமது உடல்

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா?

பனிரெண்டா?

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

பாரதி பிறந்த தினம்

புதியதாக மொபைல் போன்

பெண்களின் பருவ மாற்றங்களும்

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

பேய் உண்டாஇல்லையா?