யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/9/16

மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வித் துறையில் ஆசிரியர்களாக பணிபுரிந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டாற்றுபவர்களின் ஆசிரியர் பணியைப் பாராட்டும் விதமாக தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2015-16ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆரணி வட்டம், சத்தியவிஜயநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன், செய்யாறு வட்டம், பல்லி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நாராயணன், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயக்குமாரி, சாணாப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாலமணி, கீழ்ப்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, புதுப்பாளையம் ஒன்றியம், நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சென்னம்மாள், துரிஞ்சாபுரம் வி.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆனக்காவூர் ஒன்றியம், ஆனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆரணி ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, செய்யாறு ஒன்றியம், வடதண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 39 பேருக்கு உடனடி ஆணை

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 39 பேருக்கு மாறுதல் நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 306 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதுவரை ஆன்-லைன் முறையில் நடைபெற்ற கலந்தாய்வு சனிக்கிழமை மட்டும் ஆப்-லைன் முறையில் நடைபெற்றது.

ஏனெனில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பணிநிரவல் முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததால் விடுபட்ட இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை மூலமே தயார் செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே, உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மட்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களைச் சேகரித்து அவர்களையே நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதியளித்திருந்தது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை சேகரித்து பட்டியல் தயார் செய்திட ஒவ்வொரு பாட வாரியாக தனியாகக் குழு அமைக்கப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இக் குழுவினர், காலிப் பணியிட விவரங்களைச் சேகரித்து அறிவிப்பு பலகையில் வெளியிட்டனர். இதில் ஆசிரியர்கள் தங்களுக்குரிய விருப்பப் பணியிடங்களைத் தேர்வு செய்தனர். ஆங்கிலம், கணிதப் பாடங்களைத் தவிர்த்து இதர பாட ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் இருந்தன. இதில் தமிழ் ஆசிரியர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். 14 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர்கள் 127 பேர் கலந்து கொண்டனர். 8 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர்கள் 49 பேர் கலந்து கொண்டதில் 11 பேர் பணிமாறுதல் உத்தரவு பெற்றனர்.

மனமொத்த மாறுதல் மூலம் 8 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் 39 பேருக்கு பணிநியமன மாறுதல் உத்தரவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வழங்கினார்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

ஆவணியில் சதுர்த்தி கொண்டாட காரணம்
ஒரு காலத்தில் ஆவணியே மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாக உள்ளது.
இம்மாதத்தில் தான் முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்தார் என்பதால் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான், நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.

இனி திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்பு படிக்கலாம்

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
 இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்பு களில் மற்ற முழுநேரப் பல்கலைக் கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள் ஆய்வு செய் யும் பாடங்களை ஒட்டி மூன்று யூனிட் அளவிலாக பாட வகுப்பு களும் அவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்தி அதில் வெற்றி பின்னரே ஆய்வு களை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக் படித்த மாணவர் களுக்கான ஆய்வு மற்றும் தொழில் வகுப்புகள் கொண்ட பாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல், மொழிப் பாடங்கள் மற்றும் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில் பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள் உள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும் மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போது திறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்திய தொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்து வந்தது. இந்தப் புகார் களை ஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு 2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப் படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப் படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டு ஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?

ஆழ்வார்கள்

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை

அர்த்த சாஸ்திரம்

Today useful news TET TNPSC

TNPSC STUDY MATERIAL

How to Improve Fath

Block list SMS

200 வருடத்துக்கு எந்த தேதிக்கும் நீங்களே எளிமையாக கிழமை காணலாம் தேதி எண்ணிக்கை

பொது அறிவு

தமிழக அரசு - விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அறிந்து கொள்ள...



பயனாளி விவரம் அறிய:-http://www.svnimaging.org/cooperative
தள்ளுபடி தொடர்பான அரசு ஆணைகள் :-http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_59_2016.pdf http://cms.tn.gov.in/sit…/default/files/…/cfcp_e_50_2016.pdf

'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை,www.tnhealth.orgஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..

ஒரு நாள் ஆசிரியராக பிரணாப்!

ஆசிரியர் தினத்தன்று (செப்.5) குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் நடத்த உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அந்த வேண்டுகோளை ஏற்று, அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்த சம்மதம் தெரிவித்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு "இந்திய அரசியலின் பரணாம வளர்ச்சி' என்ற தலைப்பில் அவர் பாடம் நடத்த உள்ளார் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார். மாணவர்களுக்கு பாடம் நடத்த ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Annamalai University Results DDE 2016 published