யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/9/16

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை

தமிழகத்தில்ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர்சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில்ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவதுகுறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொதுமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.
பணியிடங்கள்காலி
ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில்பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்றுநடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்குமுன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 எனவட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும்மேல் இடங்கள் காலியாக நீடிக்கவேவாய்ப்பு உள்ளது.
சங்கங்கள்எதிர்ப்பு
இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராகஉள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம்இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வுசெய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டுநிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும்நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போதுஇப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்தவேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்குகாரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுநடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2014-15 கலந்தாய்வுகாரணமா?

இப்பிரச்னைகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர்கூறியதாவது: 2014-15 கல்வியாண்டு நடந்த கலந்தாய்வில் தென்மாவட்ட அரசு பள்ளிகளில் பணியிடம்இல்லாத நிலையிலும் உருவாக்கப்பட்டு அரசியல், அதிகாரிகள் 'சிபாரிசு' அடிப்படையில் நுாற்றுக்கணக்கான இடமாற்றம் நடந்தன. அப்போது ஒருமாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய் வரைபேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.ஒரே பணியிடத்தில் இரண்டுஆசிரியர்களுக்கு கூட உத்தரவு வழங்கிகுழப்பம் ஏற்பட்டது. அதன் எதிரொலி தான்தென் மாவட்டங்களில் தற்போது 'சர்பிளஸ்' ஆசிரியர்அதிகரித்துள்ளது. அப்போது இருந்த அதிகாரிகள்சிலரின் நடவடிக்கையால் இப்போது வட மாவட்டங்களில்கல்வித்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, என்றனர்.

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வுசெய்ய தமிழக சீருடைப் பணியாளர்தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார்99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர்,
தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள்காலியாக உள்ளன.

 மேலும், மக்கள்தொகைக்கு ஏற்றப்படி, காவல் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைபல மடங்கு அதிகரித்துள்ளன.

 இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியனபாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணி நெருக்கடியால்காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது, உடல்நலம்பாதிக்கப்பட்டு விருப்ப ஓய்வில் செல்வதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறத் தொடங்கின.

  இந்த நிலையில், காவல்துறைக்கு 13,137 காவலர்களை தேர்வு செய்வதற்கும், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும்தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு காவலர்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.

 இதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு, சிறை, காவல் துறைகளில் சுமார்15 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்வதற்குரிய ஏற்பாடுகள்நடைபெறுவதாகவும், இதற்கான அறிவிப்பு ஒரிருநாள்களில் வெளியாகும் என்றும் காவல் துறைவட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்வுமுறை:
முதலில்நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம்வழங்கப்படுகிறது.

தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ள B .E d கல்லூரிகளின் பட்டியல்

ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்! -அதிகாரி விளக்கம்!

இந்தியாவில்5 லட்சத்து, 41 ஆயிரத்து, 632 கிராமங்களில், ஐந்து லட்சம் கிராமங்களில்பி.எஸ்.என்.எல். சேவை உள்ளது. தரைவழி போன், வில் போன், கைபேசி பயன்படுத்துபவர்கள்இந்தியாவில் 2.82 கோடிப்பேர். அதில், 1.62 கோடிப்பேர் பி.எஸ்.என்.எல். சேவையைப்
பயன்படுத்திவருகிறார்கள்.

டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம் வினியோகம்.

டிப்ளமோநர்சிங்' என்ற, இரு ஆண்டுகள்படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமைமருத்துவமனைகள் என, 27
இடங்களில், இருஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன.

இதற்கானவிண்ணப்ப வினியோகம், நேற்று, 27 இடங்களிலும் துவங்கியது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளில்சேர முடியாதோர், இந்த படிப்பில் சேரஆர்வம் காட்டி வருகின்றனர்.


முதல் நாளிலேயே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்கப்பட்டு உள்ளன. 'வரும், 15ம்தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 16ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில்இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்விஇயக்ககம் தெரிவித்துள்ளது.

CPS Account Slip 2015-2016

உறுப்புதான பதிவில் பிலிப்பைன்சை முந்தியது திண்டுக்கல் : ஒரு மணி நேரத்தில் 6,697 பேர் பதிவு

திண்டுக்கல்லில், ஒரு மணி நேரத்தில், 6, 697 பேர்உறுப்பு தான ஒப்புதல் கையெழுத்திட்டதன்மூலம், கின்னஸ் சாதனை பதிவில், பிலிப்பைன்ஸ்
நாட்டை பின்னுக்கு தள்ளினர்.

திண்டுக்கல்லில், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி - ரோட்டரி சங்கம் இணைந்துஉறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் கின்னஸ் சாதனையாகமாணவ, மாணவியர், பொதுமக்கள், அலுவலர்கள், கிராம மக்கள் எனஏராளமானோர் தங்கள் பெயரை உறுப்புதானம் செய்ய பதிவு செய்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு
துவங்கியபதிவு, 19 நிமிடங்களில் பிலிப்பைன்ஸ் கின்னஸ் சாதனையை சமன்செய்தது. அதற்கு மேல், 12:00 மணிவரைபதிவு நடந்தது. ஒரு மணி நேரத்தில், 6,697 பேர் உறுப்புத்தான படிவங்களில் கையெழுத்திட்டு தங்களை பதிவு செய்தனர்.
பின்தங்கியபிலிப்பைன்ஸ் : இதற்கு முன், பிலிப்பைன்ஸ்நாட்டில், ஒரு மணி நேரத்தில், 3,548 பேர் பதிவு செய்ததே சாதனையாககின்னசில் இடம் பெற்றிருந்தது. தற்போது

திண்டுக்கல்அந்த சாதனையை முறியடித்துள்ளது. நிகழ்ச்சியில்திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி., சரவணன், ரோட்டரி சங்க சிறப்புதிட்ட இயக்குனர் ஆனந்தஜோதி, கல்லுாரி நிர்வாகி ரகுராம் உள்பட பலர்பங்கேற்றனர். அரசின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்புதானபதிவு மையத்தின் சார்பில், 500 பேர் அடங்கிய குழுவினர்உறுப்புதான பதிவு பணியில் ஈடுபட்டனர். பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, 30 நாட்களுக்குள் அடையாள அட்டை வழங்கவும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- 2016-17 கல்வியாண்டிற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி நடத்துதல் சார்பு.(பயிற்சி நாள் மாவட்ட அளவில் - 1/11/2016 to 5/11/2016 & 7/11/2016 to 11/11/2016 வரை)நாள்:26/8/16



அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி வாசிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

NHIS 2016 - பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

8/9/16

ஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,


''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார் 99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள் காலியாக உள்ளன.


 மேலும், மக்கள்தொகைக்கு ஏற்றப்படி, காவல் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.

 இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணி நெருக்கடியால் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது, உடல்நலம் பாதிக்கப்பட்டு விருப்ப ஓய்வில் செல்வது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறத் தொடங்கின.

  இந்த நிலையில், காவல் துறைக்கு 13,137 காவலர்களை தேர்வு செய்வதற்கும், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு காவலர் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.

 இதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு, சிறை, காவல் துறைகளில் சுமார் 15 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், இதற்கான அறிவிப்பு ஒரிரு நாள்களில் வெளியாகும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்வு முறை:
முதலில் நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம் வழங்கப்படுகிறது.

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.

பணியிடங்கள் காலி

ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்று நடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு முன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 என வட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும் மேல் இடங்கள் காலியாக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.

சங்கங்கள் எதிர்ப்பு

இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராக உள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம் இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வு செய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டு நிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போது இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2014-15 கலந்தாய்வு காரணமா?

இப்பிரச்னை குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 2014-15 கல்வியாண்டு நடந்த கலந்தாய்வில் தென் மாவட்ட அரசு பள்ளிகளில் பணியிடம் இல்லாத நிலையிலும் உருவாக்கப்பட்டு அரசியல், அதிகாரிகள் 'சிபாரிசு' அடிப்படையில் நுாற்றுக்கணக்கான இடமாற்றம் நடந்தன. அப்போது ஒரு மாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.ஒரே பணியிடத்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு கூட உத்தரவு வழங்கி குழப்பம் ஏற்பட்டது. அதன் எதிரொலி தான் தென் மாவட்டங்களில் தற்போது 'சர்பிளஸ்' ஆசிரியர்அதிகரித்துள்ளது. அப்போது இருந்த அதிகாரிகள் சிலரின் நடவடிக்கையால் இப்போது வட மாவட்டங்களில் கல்வித்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, என்றனர்.
Related Posts Widget

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வு

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை. NOTIFICATION DOWNLOAD


List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationNotificationOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
1

01.09.2016
Deptl.Exam Dec '2016

7-வது சம்பள கமி‌ஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: !

சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.  அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,  ‘’கடந்த 25.7.16 அன்று சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுமுறை போக 22 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்திருக்கிறது. இதில்

மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் ,அரசு உத்தரவு !

TNPSC GROUP 4 - விண்ணப்பிப்பதில் சிக்கல் : முடங்கியது வெப்சைட்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க  8-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்வதால் இணையதளம் சரியாக வேலை செய்யாததால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு அலுவலகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு வாரியமம்மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது. தற்சமயம் அதே போல குரூப் 4 தேர்வை இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதம் முன்பு இந்த அறிவிப்பு வெளியானது.


இணையதளத்தில் தடை:

கடந்த ஒரு மாதமாக விண்ணப்பிக்க காலம் இருந்த போதிலும் கடைசி நாட்களில் விண்ணப்பிக்க காத்திருந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய செல்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில்லட்சக்கணக்காண இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய முயற்சி செய்வதால் சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் தடை ஏற்பட்டுசரிவர இயங்கவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாததால் தவிக்கின்றனர். அதனால் மாற்று இணையதள முகவரி கொடுத்தாலோ அல்லது விண்ணப்பம் செய்ய கால நீடிப்பு செய்தாலோ விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு

சென்னை: 'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கோட்டையில், பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, மனு அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:ஆசிரியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும். வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின்போது கடைபிடிக்கப்படும், 'கிராஸ் மேஜர்' முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரலாறு படித்தவர்களுக்கு மட்டுமே, பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதி போதனை வகுப்புகளை கொண்டு வர வேண்டும்.கடந்த, 1977 முதல், இடைநிலை ஆசிரியர்களாக இருப்போரை, பட்டதாரி ஆசிரியர்
களாக, பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில், மாணவர் நலன் பாதிக்காமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்துள்ளோம்; தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

7/9/16

TNPSC:குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி



டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப். 8) கடைசி நாளாகும். இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது. 

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

18 வயது பூர்த்தியந்தவர்கள் தேர்வை எழுதலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பிற வகுப்பைச் சேர்ந்தோர் 30 வயதுக்குள்ளும் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி அவசியம்: குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். அதில், தட்டச்சர் பதவிக்கு தமிழ்-ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை-ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வானது நவம்பர் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். அதில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்படும். தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் வியாழக்கிழமையாகும் (செப். 8). மேலும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப். 11 கடைசியாகும். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
"இன்னும் மூன்று நாள்கள் வரை அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழு அறிவிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் அதிக ஆர்வம் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும்' என டி.என்.பி.எஸ்.சி. அலுவலர்கள் தெரிவித்தனர்.
2016 - 17 SSA TRAINING Primary – CRC: 10 Days

Primary – CRC: 10 Days

• Strengthening of SABL  - 2 Days(1st Term – 1 day, 2nd Term – 1 day)

• Discussion on Children Achievement  – 1 Day


a) Achievement  Test

b) District initiatives

c) Grading of schools

d) Periodical Assessments            


• Discussion on Impact of Trainings – 1 Day

• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day

• Peace and Value Education & Puppetry and Storytelling – 1 Day

• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day

• Physical Education linked with CCE & Significance of Road Signs - 1 Day

• Effective Usage of Multimedia in classroom - 1 Day

• Inculcation of Positive Attitudes with Inspirational Activities- 1 Day


5.2) Upper primary – CRC :10 Days

• Discussion on Impact of Trainings- 1 Day

• Discussion on Children Achievement  – 1 Day

a) Achievement  Test

b) District initiatives

c) Grading of schools

d) Periodical Assessments    

• Adolescence and Stress Management- 1 Day

• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day

• Promoting Ethics and Moral Values- 1 Day

• Workshop on TLM Preparation- 1 Day

• CCE in ALM- 1 Day

• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day

• Preparation for Competitive examination - 2 Days


5.3) BRC – Primary :10 Days

• Enriching LSRW Skills in Tamil – 2 days

• Enhancing LSRW Skills in English - 4 days

• Mental arithmetic Skills and SLM Kit box- 2days

• Utilization of local environment resources in Science Teaching – 2 days



5.4) BRC – Upper Primary :10 Days

• Teaching of English Phonetics and Grammar – 2 days

• Building Maths Aptitude and usage of Maths kit – 3 days

• Utilization of local environment resources in Science Teaching - 3 days

• Understanding of History through mapping skills – 1 day


• Teaching of Tamil Grammar – 1 day