யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/9/16

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அழைப்பு.

யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகையுடன் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2016ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவர் / மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் எண். 163/1, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, சென்னை – 28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலை நாட்களில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மொத்தம் 225 (SC-92, SC(A)-18, ST-03, MBC-40, BC-54, BC(M)-07, DA-07 மற்றும் OC-04)மாணக்கர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ / மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000/- உதவித் தொகை தமிழக அரசால் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
முதல்வர்
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை – 28.
தொலைபேசி எண் : 044 / 24261475

பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசின் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை

பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான இந்த வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலகச் சங்கம் தனது கருத்தை முதலாவதாகப் பதிவு செய்தது.
சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி, இணைச் செயலாளர் ஹரி சங்கர், பொருளாளர் மகேந்திரன் தலைமையிலான குழு நிபுணர் குழுவிடம் மனு அளித்தது.
பல்வேறு பிரிவினரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு ஒய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நலத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்கனவே பெற்று வந்த ஒய்வூதியத்தை, 1.4.2003 முதல் புதியதாகப் பணியில் சேர்பவர்களுக்கு வழங்க இயலாது என்பது முற்றிலும் சமூகப் பாதுகாப்பிற்கு எதிரானது. அரசு ஊழியருக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் திட்டமான பங்களிப்புடன் கூடிய புதிய ஒய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தினையே நடைமுறைப்படுத்த

வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டம் மாலை 5.30 வரை நடைபெற்றது.

TRB: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (செப்.17) நடைபெற உள்ளது.
டிஆர்பி சார்பில், 
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை, இளநிலை விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னை மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 2,443 பேர் பங்கேற்று தேர்வெழுத உள்ளனர்.
செல்லிடப்பேசி, மின்னணு கணக்கிடும் கருவி, மின்னணு கடிகாரம் ஆகிய சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது.
டிஆர்பி-யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையெனில், இணைப்புத்தாளில் புகைப்படம் ஒட்டி முழுமையாகப் பூர்த்தி செய்தோ அல்லது 2 புகைப்படங்களையோ எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தேர்வர்கள் மையத்துக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

17/9/16

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்க சில வழிகள்

சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்கள்

கோள்கள் பற்றிய சில தகவல்கள1

கோடை காலத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசை சருமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது

கொய்யாப்பழம்

கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்

கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள்

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள்

குடல் புண் _அல்சர்_

கல்வி என்றால் என்ன?

கம்யூனிஸ்ட்கள1

கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்

ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது