யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/16

தமிழக கல்வித்துறை வணிகமயமாக மாறி வருகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு !!

தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருவதாக தமிழககாங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டஅறிக்கையில், ''6 முதல் 14
வயது நிரம்பிய அனைவருக்கும்நாடு முழுவதும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும்சட்டத்தை கடந்த மத்திய  காங்கிரஸ் கூட்டணி அரசு 2006-ல்நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளும்ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழைமாணவர்களை சேர்க்க வேண்டுமென ஆணைபிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில்25 சதவீத ஒதுக்கீட்டின்படி, தமிழகத்தில் மொத்தம் ஒதுக்கப்பட வேண்டியஇடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால், 16 ஆயிரத்து194 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 25 சதவீத ஒதுக்கீடுவழங்க வேண்டிய தனியார் பள்ளிகள்8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருந்தன.
எல்லாவற்றையும்மிஞ்சுகிற கொடுமை என்னவெனில், தமிழகத்தில்உள்ள 10,758 தனியார் பள்ளிகளில் 25 சதவீதஒதுக்கீட்டின் படி சேர்க்க வேண்டியமாணவர்களில் ஒரே ஒரு மாணவர்தான்சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 2015-16-ம் கல்வியாண்டில் மாணவர்கள்சேர்க்கை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக கல்வியமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, கல்வி உரிமைச் சட்டப்படிஎவ்வளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்என்ற விவரத்தை கல்வியமைச்சர் வெளியிட வேண்டும்.
மேலும், தமிழகத்தில் படிக்கிற மாணவர்களின் தரம் குறித்து செய்யப்பட்டஆய்வறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தரும்வகையில் உள்ளது. இந்த அறிக்கையின்படிகிராமப்புற பள்ளிகளில் முதல் வகுப்பு முதல்எட்டாம் வகுப்புவரை படிக்கிற மாணவர்களில் 21 சதவீதத்தினர்தான் முதல் வகுப்பு பாடங்களையேபடிக்க திறனுள்ளவர்களாகவும், இரண்டாம் வகுப்பு பாடத்தை 30 சதவீதமாணவர்கள்தான் படிக்க முடிகிறது என்கிறஆய்வறிக்கையின் கூற்றை கண்டு அதிர்ச்சியடையாதவர்கள்இருக்க முடியாது.
ஆனால், மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களின் கல்வித்திறன், அரசு பள்ளிகளில் படிக்கிறமாணவர்களைவிட மிகுந்ததாக இருப்பதால், தமிழக மாணவர்களிடையே கல்வியறிவில்மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. இந்நிலையின்காரணமாக தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததால்தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதைஉடனடியாக தடுத்து நிறுத்த தமிழகஅரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் தரம்உயர்த்தப்பட்டு, கற்பிக்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

3/12/16

G.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்

கார்டுக்கு பதிலாக ஆதார் பரிவர்த்தனை.மத்திய அரசு தீவிரம்.

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆதார் எண்அடிப்படையில் பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம்காட்டி  வருகிறது.  டிஜிட்டல்பரிவர்த்தனையாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, இணைய
வங்கிசேவைகள், மொபைல் வாலட்கள் எனபின் நம்பர்  மற்றும்பாஸ்வேர்டு
அடிப்படையிலான
பரிவர்த்தனைகளுக்குமாற்றாக ஆதார் அடிப்படையில் கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளது.

  கடைக்காரரிடம் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, ரேகை வைத்தால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும்.  இதற்கானபொதுவான மொபைல் ஆப்  ஏற்படுத்தப்பட உள்ளது.

 இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாளஆணையத்தின் தலைமை செயல் அதிகாரிஅஜய் பூஷன் பாண்டே நேற்றுகூறுகையில், ‘‘ஆதார்  அடிப்படையிலானபரிவர்த்தனைகள் நேற்று மட்டும் 1.31 கோடிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை எண்ணிக்கையைபடிப்படியாக  அதிகரித்துநாள் ஒன்றுக்கு 40 கோடியாக்க தி்ட்டமிட்டுள்ளோம். தற்போது 10 கோடி பரிவர்த்தனைகளை இந்தஅடிப்படையில் மேற்கொள்ள  முடியும்’’ என்றார்.

 நிதி ஆயோக் தலைமைசெயல் அலுவலர் அமிதாப் காந்த்கூறுகையில், ‘‘பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கஉதவும் வகையில்,  கைரேகைஅல்லது கண் கருவிழியை அடையாளம்காணும் மொபைல் போன்களை உருவாக்ககேட்டுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.

* 108,39,95,782 பேருக்குஆதார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 சதவீதம் பேர் 18 வயதுக்குமேற்பட்டோர்.
* சுமார்36 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் ஆதார்எண் இணைக்கப்பட்டுள்ளது.

* ஆதார்பரிவர்த்தனைக்கு புதிதாக மொபைல் ஆப்ஏற்படுத்தப்பட உள்ளது.

DSE PROCEEDINGS- TRB Appointment 2011-12,2012-13 & 2014-15 -Social Science BT Regularization order

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு

TNPSC - VAO counselling shedule 19-12-16 to 23-12-16

தொடக்கக் கல்வி - சிறுபான்மையினர் நலம் - கிராமபுறங்களில் வசிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களின் விவரங்களை 06.12.2016க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

ஜனவரி 1 முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்

ஜனவரி 1ம் தேதிமுதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டைஅவசியமாகிறது.  2017 ஜூன்30ம் தேதிக்குள் ஆதார் வழி
பரிவர்த்தனைக்குஏற்பாடு செய்ய கால அவகாசம்தரப்பட்டுள்ளதாக  ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழிபண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமேபணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும்  பரிவர்த்தனைக்குஎலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசியஎண், பயோ மெட்ரிக் அடையாளம்ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதிசெய்யும் கருவிகளை வைத்து  இருக்கவும்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையைஎப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர்அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்

பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணிததிறன் தேர்வு, வரும், 18க்குமாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையசெயல் இயக்குனர், அய்யம் பெருமாள்
வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,

'பெரியார்அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளைகாலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணிததிறன் தேர்வு, மோசமான வானிலைகாரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசி என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
அறிவித்துள்ளது.
குரூப்1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டுபிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.
தேர்வுக்குவிண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசியாகும். வங்கி-அஞ்சலகத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 கடைசியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குவிண்ணப்பிக்க கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்கவேண்டும்.
கவனமாகபதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களைவிண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது.
எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ளவிவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்துசமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களைமாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

உண்மையைமறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்திதேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும்விண்ணப்பதாரர்களின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்து -வழிகாட்டும் நெறிமுறைகள்

எட்டாம் வகுப்பு-தனிதேர்வர்களுக்கான தக்கல் திட்டம்.விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு 7.12.2016 -கடைசி

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

SSA - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் NON - RESIDENTIAL TRAINING - இயக்குனர் செயல்முறைகள்












பாடத்திட்ட தரத்தை மேம்படுத்தக்கோரி வழக்கு:

பள்ளிக்கல்வி, உள்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகத்தில்1 முதல் 10-ம் வகுப்பு வரையிலானபாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தக்கோரிய வழக்கில்உள்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்
மனுத் தாக்கல்செய்த தலைமை நீதிபதி அமர்வுஉத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில்கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள்முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால மாற்றத்துக்கு ஏற்பபாடத்திட்டங்களில் உரிய மாற்றம் கொண்டுவரவேண்டும் என அண்மையில் ஊடகங்களில்செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில்உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்(ஜூடிசியல்) பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். அதில் தமிழகத்தில் 1 முதல்10-ம் வகுப்பு வரையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளஒரே மாதிரியான பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும், முறைப்படுத்தவும்தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதிஎஸ்.கே.கவுல், நீதிபதிஎஸ்.நாகமுத்து அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்குவந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்றஅமர்வு, உள்துறை, கல்வித்துறை முதன்மை செயலர்கள், தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வி துணைச் செயலர்கள், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி இயக்குனர்கள் ஆகியோர்4 வாரத்தில் பதில் மனுத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

'வாட்ஸ் ஆப்' வேணுமா போனை மாத்துங்க!

தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வாட்ஸ்ஆப்' அறிமுகமாகி, ஏழு ஆண்டுகளுக்குள், உலகெங்கும், 100 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இது, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறஉள்ளது. இதனால், பழைய மென்பொருட்களில்இயங்கும் மொபைல் போன்களில், இனி, வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது.முதல்கட்டமாக, பழைய விண்டோஸ், ஆண்ட்ராய், ஆப்பிள் மென்பொருட்களில் செயல்படும் போன்களில், வாட்ஸ் ஆப்பை இந்தஆண்டு இறுதி வரை மட்டுமேபயன்படுத்த முடியும்.

அடுத்தஆண்டு, ஜூன் வரை, பிளாக்பெரி, நோக்கியா ஏ - 40, நோக்கியா சிம்பியான்எஸ் - 60 மென்பொருள் உடைய போன்களில், வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டுமானால், மொபைல் போனை மாற்றுவதைதவிர வேறு வழி இல்லை.

2/12/16

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சம்பளம் எடுக்க கட்டுப்பாடு.!!!

THANJAI TAMIL UNIVERSITY B.ED (2017 -2019) APPLICATION SUBMISSION LAST DATE EXTENDED

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2016

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.