யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/6/17

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர்
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.


 இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.


இதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசுபள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286
பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர்


 தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.


'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற,
டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடைத்தாள் ஆய்வுக்கு, ஜூன், 5க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


 விடைத்தாள் ஆய்வில், மதிப்பெண் மாற்றம் இருந்தால், விண்ணப்பித்தோருக்கு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்தோர் தேவைப்பட்டால், விடைத்தாள் நகலை ஆன்லைனில் பெறலாம். இதற்கு, ஜூன் 14 முதல், 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகல் கிடைத்த பின், விடைத்தாளில் கூட்டல் பிழைகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி மதிப்பெண் கேட்கலாம்.


விடைகள் மதிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தாலும், விடைத்தாள் நகல் கிடைத்த ஏழு நாட்களில், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், 'திருத்தப்பட்ட விடைகளுக்கு, மறுமதிப்பீடு வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars கடந்த இரண்டு மாதாங்களாக Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பிய பின் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars நேற்று முதல் OPEN ஆகிறது. CM CELL மனுவின் விவரம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு LTC எனும் விடுப்பு பயணச் சலுகை வழங்கி வருகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி துறை இல்லையென்கிறது. ஆனால் நிதித் துறை ஆசிரியர்களுக்கு LTC உண்டு என்று சொல்கிறது.Cm cell அளித்த பதில் விவரம் பின்வருமாறு

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!! UGC Letter

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, எம்.பில்., படிப்புக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஆறு ஆண்டுகள் மட்டும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எம்.பில்., படிக்க, மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க, எட்டு பேருக்கு மட்டுமே, வழிகாட்டி பேராசிரியர் செயல்படலாம் என்பது உட்பட, பல நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பல்கலைகளில் விதிகளை மீறி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை, தொலைநிலையில் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில், ஏதாவது பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு அறிவிக்கப்பட்டால், அதில், மாணவர்கள் சேர வேண்டாம். இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மற்றும் சில பல்கலைகளுக்கு மட்டும், தொழில்நுட்பம் இல்லாத பாடப்பிரிவுகளில், 'ரெகுலர்' படிப்பில், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது:  தற்போது, மொபைல்
போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவைக்கு, வாடிக்கையாளர்கள் மாறும் வசதி உள்ளது. இதே போல, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்கி வாடிக்கையாளர்களும், அவர்களது கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு பொதுத் துறை வங்கிக்கோ அல்லது தனியார் வங்கிக்கோ மாற, வழிவகை செய்வது பற்றி, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. வங்கிகளில், தற்போது வாடிக்கையாளர் கணக்கு எண்ணுடன், 'ஆதார்' கார்டு எண் இணைக்கப்பட்டு வருகிறது. அதனாலும், மொபைல் போன் வழி பணப் பரிவர்த்தனை பிரபலமாகி வருவதாலும், இது சாத்தியமாகும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
  

பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளத்தில் முறைகேடு

ஜூன் 4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு !!!

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி 

நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, ‘டீன்’ சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு, 1.90 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். 74 நகரங்களில், 338 மையங்களில் தேர்வு நடக்கிறது.
நுழைவுத் தேர்வு, காலை, மாலை என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில், மாணவர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் எடுத்து வர வேண்டும்.

தேர்வு மையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள், அலைபேசியை செயல் இழக்கச் செய்யும் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு நாள் முன்னதாக தேர்வு மையங்களை உறுதி செய்து கொள்வது நல்லது. காலை, 8:00 மணியில் இருந்து தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். காலை, 9:30 மணிக்கு பிறகும், மதியம், 2:30 மணிக்கு பிறகும் தேர்வு அறையில் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வரும், 19ம் தேதிக்கு முன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., ‘ரிசல்ட்’ வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார் - புத்தகங்களை திருப்ப பெறக்கூடாது என உத்தரவு - செயல்முறைகள்

பள்ளிக்குச் செல்ல வேண்டுமா? ஆசிரியர்கள் குழப்பம்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று பரவிய தகவலால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
ஏற்பட்டது.



 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் எதிர்பார்த்த நிலையில், வெயில் காரணமாக ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


ஆனால், ஆசிரியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று தகவல் பரவியது. ஆனால், இதுபோன்று எந்த முறையான அறிவிப்பும் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.


நிகழ் கல்வியாண்டின் வேலைநாள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது; தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய மாணவர் சேர்க்கை, அரசின் இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு அளித்தல், பள்ளியில் சுகாதார நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது போன்றவற்றை தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.


ஆனால், கல்வித் துறையிலிருந்து உறுதியான தகவல் வராததால், ஆசிரியர்கள் மத்தியில் ஜூன் 1-ஆம் தேதி இந்த குழப்ப நிலை நீடித்தது.


பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு சில ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே வந்தனர். அவர்கள் மாணவர் வருகைப் பதிவேடு எழுதுவது உள்ளிட்ட பணிகளை முடித்து விட்டு சில மணி நேரங்களில் புறப்பட்டு விட்டனர்.


பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே வந்திருந்தனர். பிற ஆசிரியர்கள், ஊழியர்களும் வரவில்லை.


பணியிட மாறுதல் பெற்றவர்கள் அந்தந்த பள்ளிகளில் வியாழக்கிழமை (ஜூன் 1) பணியில் சேர்ந்தனர்.


இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, கல்வித் துறை சார்பில் எந்தத் தகவலும் வரவில்லை. அப்படியே வந்தாலும், மாணவர்கள் இல்லாமல் என்ன செய்யப் போகிறோம். அதேபோன்று, தலைமையாசிரியர்கள் மற்றும் சில மூத்த ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளுக்கு முன்னதாக ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவும் வராத நிலையில் எப்படி பள்ளிக்குச் செல்வது என்று எதிர்கேள்வி எழுப்பினர்.


இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமியிடம் கேட்ட போது, இது வழக்கமான நடைமுறை. வெயில் காரணமாக மாணவர்களுக்கு மட்டுமே ஜூன் 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்குச் சென்று நிகழ் கல்வியாண்டுக்கான அலுவல் பணிகளை தயார்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.



கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களும், பணியிட மாறுதல் ஆணையைப் பெற்று உரிய பள்ளிகளுக்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்றார்.

PAY COMMISSION|சம்பளம் மற்றும் படிகளுக்கான சீராய்வு 2017 - சம்பள ஏற்ற முறை / சிறப்பு சம்பளம் மற்றும் படிகள் - ஊதியக்குழுவிற்காக விவரம் கேட்டு பள்ளிக்கல்வி துறைச் செயலாளர் அனைத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம்

அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!

போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி
பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams

Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

21/5/17

பள்ளிகளிள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை - செங்கோட்டையன்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு
அளித்த பேட்டியில்,

தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கடந்த ஒரு மாதங்களாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வின் போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுபள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்

அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து,

1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை;


6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை;

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு,


தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை வழங்கப்படும்.

அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஜூன்மாதம் 6, ஜூலை மாதம் 6, ஆகஸ்ட் 6, செப்டம்பர் 2, அக்டோபர் 5, நவம்பர் 5, டிசம்பர் 2, ஜனவரி 4, பிப்ரவரி 2 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வின் போது, ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பள்ளியின் தளவாட பொருட்கள் கணினி, தொலைக்காட்சி மற்றும் நூலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்துள்ள கட்டிடங்கள் போன்றவை மாணவர்களுக்கு பாதுகாப்பற்றதாக ஆய்வின் போது கண்டறியப்பட்டால் அதனை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை பதிவேடு, ஆசிரியர் வருகைபதிவேடு, அரசு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் மானியங்கள் குறித்த பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வின் போது பரிசீலிக்க வேண்டும். ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அக்குறைபாடுகளை களைய சார்ந்த பள்ளிக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின் மீண்டும் ஒருமுறை அப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வின் போது குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நிறங்களில் சீருடைகள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 3 நிறங்களில் சீருடைகள் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 635 தனியார் மெட்ரிக். பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.இதற்கான சான்றிதழ்களை வழங்கி, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் மூன்று நிறங்களில் சீருடைகள் வழங்கப்படும். இதனால், அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்காது.

எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வுகள்: 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவு மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,
11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அரியர்ஸ் முறையில் 12-ஆம் வகுப்பில் தேர்வு எழுதலாம்.
ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி மையங்கள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி வழங்குவதற்காக மாவட்டங்கள்தோறும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல் கணினி வழியாக பாடங்கள் போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

"நீட்' தேர்வை தமிழகத்துக்குக் கொண்டு வரக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு நடத்தும் பல்வேறு தேர்வுகளைச் சந்திப்பதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி வல்லுநர்களைக் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் பயிற்சி வழங்கப்படும்.

கல்வித் துறையில் விரைவில் மாற்றம்: ஆசிரியர் பற்றாக்குறை என்பது இல்லை. தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதுகுறித்து பட்டியல் தயாரிக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து உயர்நிலைக் குழு கலந்து ஆலோசித்து, இன்னும் இரண்டு தினங்களில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, மின் துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பது குறித்து அவர் கூறியதாவது...

'தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் கடந்த ஒரு மாதமாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வின்போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


கோடைவிடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.' என்றார்.

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்

LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750
1-ம் வகுப்பு கட்டணம்       -  4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550

3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550

5-ம் வகுப்பு கட்டணம்       -  4550
6-ம் வகுப்பு கட்டணம்       -  5050
7-ம் வகுப்பு கட்டணம்       -  5050
8-ம் வகுப்பு கட்டணம்       -  5050
9-ம் வகுப்பு கட்டணம்       -  6300
10-ம் வகுப்பு கட்டணம்      -  6300

10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-

மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவிதொடக்கக் கல்வி அலுவலர்

மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.


மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்: செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்படும் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ம் வகுப்பு படிக்கும் போது எழுதலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.