யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/17

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள்!

                                    
ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் 
இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது என்று பொது விநியோகத் துறை உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க `ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி 60 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.

இந்நிலையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொது விநியோகப் பொருட்கள் வழங்க வேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு பொது விநியோகத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

எனவே, ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை பெற முடியும். என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டனர். எனவே ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலமும், பொது விநியோகத் துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று (டிசம்பர் 08) தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது எனவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது. அத்துடன் டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் கொடுத்து முடிக்கப்படும் எனவும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓகி புயல் தாக்குதல் காரணமாக குமரியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

.கன்னியாகுமரி மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ம் தேதி
வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 16க்குள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், நுகர்வோர் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 18-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை மேலும் நீடித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.*_

STATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை!!!

 *தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை*-
வருகை பதிவேடு
AEEO.,BRTE,SUPERVISOR,VISIT NOTE,Time table,Action plan,Assesment Register,

வெற்றியின் விழுதுகள் , துளிரின் தொடக்கம், STEP INTO ENGLISH, PHONETICS BOOKS .

SG  ,MG செலவினம் தெளிவாக கூற வேண்டும்

அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்க பட்டிருக்க வேண்டும்

EER ,SMC பதிவேடு updatedவேண்டும்


2.பள்ளி வளாகம்,கழிப்பறை தூய்மை, water tank ,Toilet சுத்தமாகவும் தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.

3.கரும்பலகையில் நாள்,தேதி,வருகை,பதிவு எழுதி இருக்க வேண்டும்

4. *SABL*-ஆரோக்ய சக்கரம் காலநிலை, அட்டவணை,கீழ்மட்ட கரும்பலகை , TRAY,பாய்,KITBOX,புத்தக பூங்கொத்து, action plan assesment note , CCE records இருக்க வேண்டும்

5.periodical assesment results assessment registerல் ஒட்ட வேண்டும்
6.CAL CENTRE பள்ளிகளில் CAL  time  table ,syllabus மற்றும் கணினிகள் சுத்தமாக இருக்க வேண்டும் .

7.periodical test பற்றி அனைத்து ஆசிரியர் களும் தெரிந்து இருக்க வேண்டும்.

8.TV,  DVD, CD பயன்பாடு இருக்க வேண்டும் .

9.மதிய உணவு Hand washing solution இருக்க வேண்டும்.

10. C,D மாணவர் களுக்கான செயல் திட்டம்/test papers / பதிவேடுகள்

11.SALM,ALM- MIND MAP,தொகுத்தல் ALM படிநிலைகள் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

12.Class work note,home work,composition  note ,Test note , two ruled , four ruled திருத்தம் செய்து இருக்க வேண்டும் .


13.SLm kit box ,Science kitbox பயன்பாட்டில் இருக்க வேண்டும். மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து இருக்க வேண்டும்.

14.TLM PROJECT WORKS
 FA (a ) ,FA (b) ,files ,port folios காட்சி படுத்த வேண்டும்.

15.ICT வகுப்பறைக்கள் பாராட்டுக்குரியவை.

16. *சிறப்பான நிகழ்வுகள்*
மாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ,
பள்ளியில் செயல்படுத்தி வரும் புதுமைகள்மற்றும்  செயல்பாடுகளை பார்வை அதிகாரிகளிடம் முன்னிலைப்படுத்தலாம்.

*Important:* ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் பதில் கூறும் பொழுது நேர்மறையாக பதில் கூற வேண்டும்.

ஆதார் எண்னை இணைப்பதற்கு அனைத்துவகையான இணைப்புகள்(LINKS) கொடுக்கப்பட்டுள்ளது!!!

*Aadhaar Update Link*
https://ssup.uidai.gov.in/web/guest/update


*Link Aadhaar & Pan*
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html

*Link Aadhaar To Lic Policy*
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy


*Link Aadhaar With Indane Gas*
https://indane.co.in/aadhaar-seeding.php


*Link Aadhaar With HP Gas*
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx


*Link Aadhaar With Bharat Gas*
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp


*Link Aadhaar To SBI Bank*
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding


*Link Aadhaar To Indian Bank*
https://apps.indianbank.in/ekyc_otp/


*Aadhaar Official Website*
https://uidai.gov.in/


*Link To Download Aadhaar Card*
https://eaadhaar.uidai.gov.in/#/popup


*Official Notice To Link Aadhaar With Mobile Networks*
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1


*Link Aadhaar With Airtel Mobile Number*
https://www.airtel.in/link-aadhaar-mobile


*Link Aadhaar With India Post*
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf

https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding

மூத்த வழக்கறிஞர்களை எச்சரித்த தலைமை நீதிபதி!

வழக்கு விசாரணையின்போது சில மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன்பாகக் 
குரலை உயர்த்தி ஆவேசத்துடன் வாதிடுகின்றனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார்.

அயோத்தி நிலம் மற்றும் டில்லி முதல்வர் – துணைநிலை ஆளுநர் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பான விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்தன. இது தொடர்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதியை நோக்கிக் குரலை உயர்த்தியும் ஆவேசத்துடனும் வாதிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலுக்கு தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சில மூத்த வழக்கறிஞர்கள் வழக்கில் வெற்றி பெற வேண்டும், தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு நீதிபதி முன்பாக மிரட்டல் தொனியில் குரலை உயர்த்தி ஆவேசத்துடன் கூச்சலிடுகின்றனர்” என்று வழக்கு விசாரணை ஒன்றின்போது குறிப்பிட்ட தீபக் மிஸ்ரா, இது போன்ற செயல்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார்.

இப்படி ஆவேசப்படுவது அவர்கள் திறமையற்றவர்கள், மூத்த வழக்கறிஞர்களுக்கான தகுதியில்லாதவர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. மூத்த வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு மொழிக்கு எதிராக இவர்கள் வாதிடுவதை எத்தனை நாட்கள்தான் பொறுத்துக்கொள்ள முடியும் என்று கேள்வியெழுப்பிய அவர், “இவர்களை உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

8/12/17

பள்ளி மாணவர்களுக்கு, ‘ஹெல்ப்லைன்’ தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை!!!

பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, ‘ஹெல்ப்லைன்’ திட்டம், சில வாரங்களில் அறிமுகம்
ஆகிறது.

14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் பாராட்டும் பல திட்டங்கள்


அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், ‘ரேங்கிங்’ முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, ‘ஹெல்ப்லைன்’ திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களை தெரிவிக்கலாம்.அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இன்று 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

வணக்கம். ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம்
நடைபெற உள்ளது. எனவே அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ_ஜியோ

புத்தக பூங்கொத்து பதிவேடு - படிவம்

இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி?

உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லைஎன்றாலும்


பான்கார்டு வைத்திருப்பது நல்லது.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.
முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினைபெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டேநாட்களில் பான் கார்டு பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுஎப்படி என்று இங்குப் பார்ப்போம்.
1.என்எஸ்டிஎல் https://tin.tin.nsdl.com/ இணையதளத்தில் உள்நுழைக.

என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகுஉங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர்இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கவேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதுதேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும்
வழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத்தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப்படிவத்தில் உள்ளிடவும்.
3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது?
படிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையானஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம்விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தைஅச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர்தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக
விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண்ஒன்று கிடைக்கும், அதைவைத்துக்கொண்டுhttps://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள்விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்றுசரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்குஎப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரைஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்யவேண்டும்.
5. 48 மணி நேரத்தில் பான் கார்டு

படிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளைசெய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்குவருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பதுநல்லது.

அரசு ஊழியர்களுக்கு நிகராக ஓதுவார்களுக்கு சம்பளம் ஐக்கோர்ட் உத்தரவு!!!

தமிழாசிரியர் ஊக்க ஊதிய உயர்வு குறித்த CM CELL Reply




RTI-HRA-மாநகராட்சி வீட்டு வாடகைப்படியை 16 கி.மீ ஆர எல்லை பெற்று அரசாணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரே வழங்கலாம்




Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க

நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம்
தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன

👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .

👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா?

👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில்

1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%

2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%

3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%

4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத் வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும்.

👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல் வைக்கப்படுவோம்.

👉அதனால் என்ன விளைவு? நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும்.

👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.

👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு.

👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும் நாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்

👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம் அல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம். ஆக

👉விழிப்படைவோம்.


👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி அபராதம் மற்றும் irregular tax payer என்ற அப வாதத்தையும் தவிர்ப்போம்

EMIS NEWS

தற்போது  எமிஸ் வலைதளம் 
செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம்  மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம்  பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில்   ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன்  என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள்  முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும்  பதிவேற்றலாம்.

7/12/17

30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!

தொலைநிலை கல்வி திட்டம் மூலம் பொறியியலபடித்த 30,000 பட்டதாரிகள் பட்டத்தை செல்லுபடியாக்க, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பை தொலைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால், சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தொலைதூர கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள் தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், பட்டங்களை வழங்கியுள்ளன. அது செல்லாது வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல் இவ்வகை கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அக்ரிகல்ச்சரல் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் உள்ள விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன் ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக பெறப்பட்ட தொகையை 2018 மே 31 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். 2018 அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகளையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என அவர்கள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தொலைநிலை கல்வி திட்டத்தில் வழங்கிய பொறியியல் பட்டங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களின் வாயிலாக பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 30,000 பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களுக்கான ஒரே தீர்வாக மே அல்லது ஜூன் மாதத்தில் ஒரு தேர்வு நடத்தப்படவுள்ளது. அதை எழுதுவதற்கு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்கள் பட்டங்களை செல்லுபடி ஆக்க அவர்களுக்கு இதுவே ஒரே வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். 
மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்வு பயிற்சி: ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., படிக்கவும், தேசிய உயர் கல்வி நிறுவனத்தில் சேரவும், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 
தமிழகம் முழுவதும், 100 மையங்களில், இலவச பயிற்சி துவங்கப்பட்டது.
இந்த மையங்களின் எண்ணிக்கை, 500 ஆக உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. அதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு, பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், போட்டி தேர்வு பயிற்சி மையம், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் இருந்து, வெகு தொலைவில் உள்ளது.
அதனால், மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே, போட்டி தேர்வு பயிற்சி திட்டம், கண்துடைப்பாக இல்லாமல், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். எனவே, கூடுதலாக பயிற்சி மையங்களை துவங்க வேண்டும் என்றும், அவை, பள்ளிக்கு அருகில் அமைய வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

தனியார் பள்ளி முதல்வர்களுக்கு கருத்தரங்கம் : அமெரிக்க கல்வி முறையை அறிய வாய்ப்பு

சென்னை: அமெரிக்காவில் கிடைக்கும் செயல்முறை கல்வி பயிற்சி வாய்ப்புகள் குறித்து, தனியார் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கம், வரும், 9ல், சென்னையில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, இதை நடத்துகின்றன.
அமெரிக்காவில் உள்ள கல்வி வாய்ப்பு, பள்ளி மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி மற்றும் மாணவர் கல்வி பரிமாற்ற வாய்ப்புகள் குறித்து, சென்னையில், வரும், 9ம் தேதி, கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
தாஜ் கோரமண்டல் ஓட்டலில், காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, 'எஜு கனெக்ட்' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடக்கிறது.
இதில், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., - ஐ.ஜி.சி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள் பங்கேற்கலாம்.
'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள்... 
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, தமிழக பள்ளி, கல்லுாரி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும், 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகின்றன.
அமெரிக்க துாதரகத்தின் கல்வி அதிகாரிகள், 'கோ பார் குரு' நிறுவன, சி.இ.ஓ., காயம்பூ ராமலிங்கம், மதுரை விஸ்வ வித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் முதல்வர், பி.சந்திரசேகரன் ஆகியோர் விளக்கம் தர உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயர்களை, EDUCONNECT@GO4GURU.com என்ற இ - மெயிலிலும், 87542 55117, 99523 53851 என்ற தொலைபேசி எண்ணிலும், முன்பதிவு செய்து கொள்ளலாம். 
முன்பதிவு கட்டாயம்; அதேநேரம் அனுமதி கட்டணம் எதுவும் இல்லை.

மழை வெள்ளத்தால் திறன் தேர்வு ஒத்திவைப்பு

திண்டுக்கல்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மழையால் டிச., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்துகிறது. இத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ரூ.500 வீதம் அரசு வழங்கும்.இத் தேர்வினை எழுதுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை ஆன்-லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இத் தேர்வு டிச., 9 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒக்கி புயல் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத் தேர்வு தேர்வு டிச., 16 ம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் 21ல் அரசு விடுமுறை

இடைத்தேர்தலை ஒட்டி, டிச., 21ல், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதையொட்டி அன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் வாக்காளர் கள், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தால், அவர்களுக்கு ஓட்டுப்பதிவு தினமான, டிச., 21 அன்று, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.