யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/4/18

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன்!!!

www.kalvikural.com

ஐதராபாத், தெலுங்கானாவை சேர்ந்த, 7 வயது சிறுவன், ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஐதராபாதை சேர்ந்த சிறுவன், சமன்யூ பெத்துராஜு, 7. மலையேற்றத்தில் ஆர்வம் உடைய, இந்த சிறுவனை, அவனது பெற்றோர், ஊக்குவித்து வந்தனர்.மலைச்சிகரங்களில் ஏற, அவன் பயிற்சி பெற்றான். 


கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏற, முடிவு செய்தான்; இது ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த மலைச்சிகரம்.கடல் மட்டத்தில் இருந்து, 5,895 மீட்டர் உயரம் உடைய இந்த சிகரத்தில், சமீபத்தில், சிறுவன் ஏறினான். அவனுடன், அவனது தாயார், லாவண்யா, பயிற்சியாளர், உள்ளூர் மருத்துவர் மற்றும் மேலும் இரண்டு பேர் இணைந்தனர்.இந்த மலையேற்றம், மார்ச், 29ல் துவங்கி, ஏப்ரல், 2ல் முடிந்தது. உடல் நிலை காரணமாக, லாவண்யா, பாதியிலேயே விலகினார். சிறுவன் சமன்யூ, சற்றும் மனம் தளராமல், கிளிமஞ்சாரோவின் உச்சியான, உஹூரூ சிகரத்தில் ஏறி, இந்திய கொடியை நாட்டினான்.''அடுத்த மாதம், ஆஸ்திரேலியாவில் உள்ள மலை சிகரத்தில் ஏறி, உலக சாதனை படைப்பதே, சமன்யூவின் லட்சியம்,'' என, அவனது தாயார், லாவண்யா தெரிவித்தார்.

வெப்பத்தாக்கம் காரணமாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து "தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு!

வருங்கால வைப்புநிதி வட்டியை குறைப்பதா?:-தொழிலாளர்கள் குமுறல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் குறித்த நாளிதழ் செய்தி!!!

விடைத்தாள் திருத்தும்போது மாரடைப்பால் உயிரிழந்த தலைமையாசிரியர்! - ஈரோடு அருகே சோகம்

                                        

கோபிசெட்டிபாளையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவை அடுத்த புஞ்சை புளியம்பட்டி காயிதே மில்லத் வீதியைச் சேர்ந்தவர், ஏசுராஜா (53). இவர், புஞ்சை புளியம்பட்டியிலுள்ள கே.வி.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தற்போது +2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டுவரும் நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில், மதிப்பெண் சரிபார்க்கும் அதிகாரியாக ஏசுராஜா இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் சுமார் 4.15 மணியளவில் மதிப்பெண் சரிபார்க்கும்போது திடீரென ஏசுராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட, வலியால் துடித்துச் சரிந்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுசெய்யும்போதே ஏசுராஜாவின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஏசுராஜாவின் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்ல, அவர்கள் உடலை அவர்களது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர். உயிரிழந்த ஏசுராஜாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். இன்னொரு மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணியின்போது பள்ளிக்கூடத்திலேயே, தலைமையாசிரியர் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Breaking News மெட்ரிக் பள்ளிகளுக்கு தேர்வுத் துறை எச்சரிக்கை. விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பா தனியார் பள்ளி தேர்வுகள் நிருத்தம்:


17/4/18

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை அறிந்து கொள்ளுங்கள்.




1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200

5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500

7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500

10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

13. Tamilnau Teacher Education University -350

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்-275

நாட்டில் 24 போலி பல்கலைகள் யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு :

நாடு முழுவதும் செயல்படும், போலி பல்கலைகளின் பெயர் பட்டியல், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில்,24,போலி பல்கலைகள்,யு.ஜி.சி.,பட்டியல்,வெளியீடு

,UGCகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், கட்டமைப்பு, ஆராய்ச்சி நிதிகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு மேற்கொள்கிறது. யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும், 'நாக்' அமைப்பு,பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பு அந்தஸ்தை தருகிறது.இதுபோன்ற, அங்கீகாரம், அந்தஸ்து, கட்டமைப்பு ஏதும் இல்லாத போலி கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சேர்க்கையை நடத்துகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், எந்த வகையிலும் பயனளிக்காது.இதனால், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை பணிகள் துவங்கும் முன், போலி பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம்.

தற்போது, நாடு முழுவதும், 24 பல்கலைகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஒரு பல்கலையும் இடம் பெறவில்லை.டில்லியில் 7 பல்கலைகள், உத்தரபிரதேசத்தில், 8; மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா, 2; பீஹார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று, இடம் பெற்றுள்ளன. வெளி மாநிலங்களில் கல்வி பயில செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை கவனித்து செயல்பட வேண்டியது அவசியம்.

நீதிமன்றம் மூலம் புதிய காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கு முழு பணமும் நஷ்ட ஈடும் பெற்ற ஆசிரியர்!

விடாமுயற்சியின் வெற்றி......
நீதியின் குரலும் புதிய காப்பீடு திட்டமும்.....

அன்பார்ந்த ஆசிரியர்களே , கரூர் மாவட்டம்-கடவூர் ஒன்றியம் இயக்க முன்னோடியும், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம்  அவர்களுடைய துணை வியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 . இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் அனுமதித்தது. அதற்குமேல் தர மறுத்து  விட்டது.
எங்கெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கே நானே தோன்றுவேன் என பகவான் கிருஷ்ணர் கூறுவதாக படித்திருப்போம்அந்த வகையில் நமது மாணிக்கம் சார் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் கடந்த வாரம் தீர்ப்பு பெறப்பட்டது. தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும் மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன் நகல் இணைத்து அனுப்பப்பட்டு உள்ளது அவசியம் முழுமையாக படிக்கவும். நமது மருத்துவ செலவுகள்,அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS  ஏற்கவேண்டும்.ரூ.4,00,000க்குள் அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்து எனவே விழிப்புடன் இருக்கவும். மேலும்  இவ்வழக்கில் உதவிய முன்னாள் பொருளர் திரு.செங்குட்டுவன் மற்றும் TNTF வட்டாரச் செயலர் திரு.இராஜ்குமார் ஆகியோர்க்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு நமக்கு பெருமையும்,மகிழ்ச்சியும் அளிக்கிறது.இது போன்ற தீர்ப்பினை இதுவரை அரசூழியரும் ஆசிரியர்களும் எங்கும் பெற்றதாக செய்தி இல்லை. இது முன்னுதாரனமாக திகழும் என்பதில் ஐயமில்லை.aa

பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் | பகுதிநேர பி.இ., பி.டெக் படிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு பகுதிநேர பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை மைய செயலாளர் வி.செல்லதுரை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வருகிற 2018-19-ம் கல்வி ஆண்டில், பகுதி நேர பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி கோவை அரசு பொறியியல் கல்லூரி (ஜி.சி.டி.), சேலம் அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, கோவை தொழில்நுட்ப கல்லூரி (சி.ஐ.டி.), மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதிநேர பி.இ., பி.டெக் ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த படிப்புகளில் சேர டிப்ளமோ படிப்புகளை முடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள். இதன்படி பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்புபவர்கள் கடந்த 5-ந் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அடுத்த மாதம் 10-ந் தேதி 4 மணிக்குள் www.ptp-et-n-ea.com என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விஜயா வங்கியில் அதிகாரி பணிகள் :

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று விஜயா வங்கி. 2135 கிளைகள் மற்றும் 16 ஆயிரத்து 138 பணியாளர்களுடன் செயல்படும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகும்.
தற்போது இந்த வங்கியில் மேலாளர்( சார்ட்டடு அக்கவுண்டன்ட்), மேலாளர் (சட்டம்), மேலாளர் (பாதுகாப்பு) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சி.ஏ. பணிகளுக்கு 32 இடங்களும், சட்ட அதிகாரி பணிக்கு 21 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்க முடியும். 1-3-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது. சி.ஏ. இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சட்ட பட்டதாரிகள் அந்தந்த பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து துணை ராணுவம் அல்லது ராணுவம் அல்லது காவல் துறை போன்றவற்றில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம்செலுத்தினால் போதுமானது. 27-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்ப நகலை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 4-5-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.vijayabank.com

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

சிறப்பு ஆசிரியர் தேர்வு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதன் முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தனர். அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளாளபாளையம் பிரிவில் நின்றிருந்தனர்.

பேச்சுவார்த்தை இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும்படியும் அங்கு வந்து நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர். காலை 7 மணி அளவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மண்டபத்திற்குசென்று அவர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்தனர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 அடுத்த மாதம்

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் கூறும்போது, “அடுத்த மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நேர்மையான முறையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை” என்றார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நாளை 3 மணி நேரம் நிறுத்தம்

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை (ஏப். 17) கேபிள் டிவி ஒளிபரப்பை மாலை 3 மணி முதல் 6 மணி வரை நிறுத்த தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம், மதுரையில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.

1-8 மாணவர்களுக்கு பழைய சீருடைதான் வழங்கப்படும்!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய &'லைட்பிரவுன்&' மற்றும் &'மெரூன்&' நிற சீருடையில் மாற்றம் இல்லை; மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாற்றப்பட்ட சீருடை விபரம் சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன், &'நடப்பு கல்வியாண்டு (2017--18) பயன்படுத்த வேண்டிய சீருடை குறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், &'அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்தில் பேண்ட், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட சட்டை, சட்டை மேல் மாணவியருக்கு சாம்பல் நிறத்தில் ஒரு கோட் சீருடையாக அணிய வேண்டும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கருநீல நிறத்தில் கோடிட்ட மேல்சட்டை, மாணவியர் கருநீல கோட்டு சீருடையாக அணிய வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் போட்டோவுடன் சி.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்துள்ளது.

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிடப்படியே மே 16 ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23 ம் தேதி வெளியிடப்படும் :




1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம்

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் புத்தகங்களின் விலை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த நான்கு வகுப்புகளுக்கான பாடப்புத்தக விலையை 20% உயர்த்த பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வு அரசுப்பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் அவர்களுக்கு வழக்கம் போல் விலையில்லா புத்தகம் தமிழக அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விலை உயர்வு காரணம்

தரமான தாளில் பாடப்புத்தகங்கள் அச்சிடுவது, அதிக அளவில் வண்ணப்படங்களை சேர்ப்பது, புத்தகத்தின் முதல் மற்றும் பின் பக்க அட்டைகள் சேதம் அடையாமல் இருக்க லெமினேஷன் செய்வது உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது என்றும் இதனால் விலை உயர்த்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.a

16/4/18

15 நாட்களில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக்கல்வி அமைச்சர்.

தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர்
அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு

15 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக மனு அளித்த ஆசிரியர்கள் பேட்டி.

சரியும் மாணவர் சேர்க்கை குறையும் அரசுப்பள்ளிகள்!

அரசுப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பெற்றோர் தயக்கம்

தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.

இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

TET Results | TETதேர்வு வெளியிடப்படாதது குறித்து கேள்வி, முறைகேடு நடப்பதாக புகார் |SunNews