யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/6/18

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.அரசுத்துறையில், 2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, ஐந்து லட்சம் பேருக்கு, மாத ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை இல்லை. 

பணிக்காலம் முடிந்ததும், மொத்த, 'செட்டில்மென்டாக' பணப்பலன் வழங்கப்படுகிறது.இதன் காரணமாகவே, இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி, போராட்டங்கள் தொடர்கின்றன. 
இது குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெற்ற ஆசிரியர், பிரெட்ரிக் கூறுகையில், ''2003க்கு பின் பணியில் சேர்ந்து, மரணம், ஓய்வு, பணித்துறப்பு பிரிவுகளில், ஓய்வூதிய பலன்கள் கோரி, 8,323 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 6,478 பேருக்கு, 258.91 கோடி ரூபாய் ஓய்வூதிய பணப்பலன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஐ., மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன. 
''மேலும், கருவூலத் துறையில், துறைவாரியான தகவல்கள் இல்லை என்றும், மாதந்திர ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆணைகள் பெறப்படவில்லை என்றும், தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,'' என்றா

கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களில் அலுவலர்கள் மட்டுமே அடிக்கடி மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு கீழே பணிபுரியும் சிலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். 
அவர்கள் ஆசிரியர்கள் இடமாறுதல், பணப்பலன் வழங்குதல், நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், பள்ளி துணை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இருக்கைப் பணி கண்காணிப்பாளர், உதவியாளர், இளைநிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்கான பணியை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருவதால், பணியாளர்கள் கலக்கமடைந்தனர்.

ஜூன் 11ல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங் :

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங், வரும், 11ம் தேதி துவங்குகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கவுன்சிலிங், மே மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு, 15 நாட்கள் தாமதமாக, வரும், 11ல், துவங்க உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 11லும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 12ம் தேதியும், கவுன்சிலிங் துவங்கும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்த கவுன்சிலிங், ஜூன், 21 வரை நடத்தப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், அரசு பள்ளிகளிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கிற்கு முன்னும், பின்னும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ள, கல்வித்துறை இயக்குனர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணையில், வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

MBBS படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின், வினியோகிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,050 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 456 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதமுள்ள, 2,594 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு முடிவு, நாளை வெளியாக உள்ளது.இதனால், நடப்பாண்டு, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என்ற, எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் குறிப்பேடு, இதுவரை வழங்கப்படவில்லை; உடனே வழங்க, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓரிரு நாட்களில்,தகவல் குறிப்பேடு சமர்ப்பிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் அளித்தபின், ஒரு வாரத்தில், விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என்றனர்.

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள்

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்காக அனைத்து பாடங்களும்.
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி FA(a) and FA(b) செயல்பாடுகள் 
இவை அனைத்தும் ஒரே கிளிக்.


...CLICK HERE TO - DOWNLOAD

Rule 9 cannot be INVOKED to promoted PG's*. பட்டதாரி ஆசிரியர் மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வருவதற்கு தகுதி உண்டு .பழைய நிலையில் தொடர HIGH COURT ORDER RELEASED.


4/6/18

ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா?



தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?

நல்ல வேலைக்கு போவா?

ஆங்கிலம் சரளமாக பேசவா?

குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??

ஏன்?
எதற்கு?
என்று சிந்தித்ததுண்டா??

Pre kg 25000 ல் துவங்குகிறது 
Lkg 40000
Ukg 50000
1st.60000
2ND 70000
3D. 80000
4TH 90000
5TH 100000
6TO8 1.20000
9TO10. 150000
11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்
9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.

சரி!
இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?

உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்

அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?

 ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??

தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரமுடியுமா?
சரி!
இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?

CBSE கல்லூரியிலா??
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான் இல்லையா?

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?

இல்லை!
இல்லவே இல்லை!

இப்போது உங்கள் பிள்ளைகளோடு,அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?

பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் பிடிக்கவில்லையா?

இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?

 உங்கள் பிள்ளை சாதனையாளனா?

 இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்கு தெரியுமா?

 TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?

TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?

 இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?

ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?

உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??

இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?

அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??

வாருங்கள் குரல் கொடுப்போம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள்(உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை) அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.

அப்படி சட்டம் இயற்றுவார்களா?

இயற்றினால் என்ன நடக்கும்?

அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், கலெக்டர் மகனுடனும் நம்பிள்ளைகளும் படிப்பார்கள்.

கட்டட வசதிகள் அதிகமாகும்.

 சத்துணவு சத்தான உணவாகும்.

 நவீன  முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.

நம் செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும்.

சிந்திப்போம்!
மற்றவரின் சிந்தனையைத்தூண்டுவோம்! 

என்றும் அன்புடன்,

அரசு பள்ளி நலன் விரும்பி

உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??

கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்

புதிய பாடப்புத்தகங்கள் குறித்து திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள்
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..

தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் வித்தியாசமாகக் காட்சி தருகிறது முகப்பு வாசகம். புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, “நம் மாணவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து இந்த புத்தகங்களைச் செதுக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் பாருங்கள்... நம் மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளை தங்கள் வசமாக்க ஆரம்பிப்பார்கள்” எனப் பெருமிதத்துடன் ஒலிக்கிறது உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் குரல்.
“எந்த விதத்தில் தனித்தன்மையானவை இந்தப் புத்தகங்கள்?”
“அந்தந்தத் துறைகளில் உச்சத்தில் இருக்கும் சிந்தனையாளர்கள்தான் பாடத்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ, என்.சி.இ.ஆர்.டி அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். இந்தக் கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறோம்.
ஒரு நுழைவுத்தேர்வை எழுதுவதில் தொடங்கி, நேர்காணல், என்ன படிக்கலாம், எதைப் படிக்கலாம் என்று நம் மாணவர்களுக்கு இருக்கும் தலைவலிகள் பற்றி நிறையவே யோசித்தோம். வெறும் எழுத்தால் நிரப்பப்பட்ட புத்தகங்களாக இருக்கக் கூடாது என முடிவெடுத்ததால் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறோம். புத்தகங்கள் முழுக்க QR CODE இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ஸ்கேன் செய்தால் அனிமேட் செய்த வீடியோக்களுக்குச் செல்லும். ஆசிரியர்கள் நடத்துவதில் சந்தேகங்கள் இருந்தால் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை ஸ்கேன் செய்தால் விர்ச்சுவல் ஆசிரியர் இணையம் மூலம் பாடம் எடுப்பார். பாடங்கள் தொடர்பாக 5 நிமிட வீடியோக்களும் தயார் செய்யப் பட்டிருக்கின்றன.
ஐ.சி.டி கார்னர் என்று ஒரு பகுதி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நம் இந்தியப் பாடப்புத்தகங்களிலேயே இது புதிய வடிவம். பாடம் தொடர்புடைய இணையப் பயன் பாடுகளைக் கொடுத்திருப்போம். தொலைத்தொடர்பு அம்சங்கள் அத்தனையும் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும். ஆப் வடிவங்கள், விக்கிபீடியா பக்கங்கள், வெப்சைட்டுகள் எனப் பல்வேறு இணையத் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கூகுள் பாடி பிரவுசர் மூலம் மனித உடலியக்கத்தைப் பார்க்கலாம், தமிழ் விர்ச்சுவல் அகாடமியின் சொல் விளையாட்டுகள் இருக்கும், வரலாறு மற்றும் புவியியலுடன் கூகுள் எர்த் இணைக்கப்பட்டிருக்கும். ‘விர்ச்சுவல் டூர் ஆஃப் மியூசியம்ஸ்’ லிங்க் கொடுத்திருக்கிறோம், கணிதத்தில் ஜியோஜீப்ரா 360 டிகிரி படங்களுக்கான லிங்க் என மாணவர்களை அந்தத் தளத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் பாடப் புத்தகங்களை வடிவமைத்திருக்கிறோம்.
சின்னக் குழந்தைகள் ஆர்வமாகப் படிப்பதற்காக இசையமைப்பாளர்கள் மூலம் சில பாடல்களை இசையமைத்தி ருக்கிறோம். அனிமேஷன் வீடியோக்களையும் இணைத்தி ருக்கிறோம். ஸ்மார்ட்போனையும், டேப்லெட்களையும் ஏந்தியிருக்கும் மாணவர்களை இந்தப் புத்தகங்கள் நிச்சயம் கவரும்.
சோழர் காலத்துக் குமிழித் தூம்பு, கல்லணை கட்டப்பட்ட விதம், தஞ்சைப் பெரிய கோயில் வடிவமைப்பு என, படங்களாகவே விவரித்திருக்கிறோம். நம் ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகளின் விவரிப்புகளைக்கூடச் சேர்த்திருக்கிறோம்.
அழ.வள்ளியப்பா, ஈரோடு தமிழன்பன், பிரமிள், ஆத்மாநாம் கவிதைகள், நா.முத்துக் குமாரின் ‘மகனுக்கு எழுதிய கடிதம்’, பெரியார், ஜீவா தொடர்பான கட்டுரைகள், தாகூர் கடிதங்கள், நீலகேசி, இதழாளர் பாரதி, தாவோ சிந்தனைகள், யசோதர காவியம், கந்தர்வனின் ‘தண்ணீர்’, சுஜாதாவின் ‘தலைமைச் செயலகம்’, ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’, புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜா, பிரபஞ்சன். பிச்சமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அப்துல் ரகுமான், இன்குலாப், மீரா, வைரமுத்து, அ.முத்துலிங்கம், ரசூல் என பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகளையும், எண்ணங்களையும் நம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை, இசையமைப் பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்பான இசைக் கட்டுரைகளும் உண்டு. ஓவியர்கள் சில்பி, ஆதிமூலம், மருது, மணியம் செல்வன் போன்ற பலருடைய ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.”
“நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்தப் புத்தகங்கள் எந்தளவில் உதவும்?”
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு கேள்விகளுடன் நம் பாடப்புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் நம் புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பயாலஜியைப் பொறுத்தவரை 99% கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக் கேள்விகள் பலவும் இந்தப் புதிய பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய கடினமான நுழைவுத் தேர்வுகளை நம் மாணவர்கள் மாணவர்கள் எதிர்கொள்ள இந்தப் புதிய பாடத்திட்டம் நிச்சயம் உதவும். என்னுடைய கணிப்பின் படி அடுத்த ஐந்து வருடங்களில் நம் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் நாட்டிலேயே அதிக இடங்களைப் பெறுவார்கள். மற்ற மாநில இடங்களைக்கூடக் கைப்பற்ற ஆரம்பித்து நுழைவுத் தேர்வுகளில் அசைக்க முடியாத இடத்துக்குச் செல்வார்கள்.”
“தேர்வு முறைகளில் ஏதாவது மாற்றம் வர வாய்ப்பிருக்கிறதா?”
“நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இரவில் அதைக் கொண்டுவர முடியாது. நேற்று வரை மனப்பாடம் செய்துவந்த மாணவர்களின் கையிலிருந்து அடுத்த நாளே புத்தகத்தைப் பிடுங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதை நடைமுறைப் படுத்தமுடியும். இதை ஆசிரியர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களை வகுப்பறைகளில் கேள்விகளைக் கேட்கப் பழக்க வேண்டும்.”
“நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் போன்ற விவகாரங்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்தான் உரிய முடிவெடுக்க முடியும். இருந்தாலும் நாடு முழுக்க ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அந்தந்த மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார்படுத்திட குறைந்தது மூன்று அல்லது நான்கு கல்வியாண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசே கருத்து தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் இந்தக் கருத்து மிக முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.
-
நன்றி-விகடன்

50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி



50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,''  என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து, பேசியதாவது:ஒன்றாம் வகுப்புக்கு, 'க்யூ ஆர்க்' என்ற கோடு மூலம், மொபைல் போனில் இசையோடு கலந்த கல்வியை கற்றுத் தர, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
அரசு பள்ளியை தேடி வரும் அளவுக்கு, மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிறந்த கல்வியாளர்கள் மூலம், வெற்றிகரமாக எட்டு மாதத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது. மூன்றாண்டுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் அடுத்தாண்டே, 12 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
'நீட்' தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கையாகும். இக்கட்டான சூழ்நிலையிலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம்.இதற்காக பயிற்சி பெற்ற, 3,148 மாணவர்களில், 1,000 மாணவர்கள் மருத்துவராக வருவர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

TNPSC JOB | குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கு ஜூன் 15-க்குள் அறிவிப்புகள் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி அதிகாரி தகவல்

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

ஓராண்டில் என்னென்ன பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடக்கின்றன? அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும்? தேர்வுகள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்பன உள்ளிட்ட விவரங்களை கொண்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் வெளியிடப்படவில்லை. ஃபாரஸ்ட் அப்ரடண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், உதவி சிஸ்டம் என்ஜினியர், உதவி சிஸ்டம் அனலிஸ்ட் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் பணி தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்திலும், அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 3-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுவரையில் அந்த தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் ஜுன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்பட்டுவிடும். அதன்பிறகு இதர தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் உள்ளபடி குறித்த காலத்தில் வெளியிடப்படும்" என்றார்.

பள்ளி திறந்த நாளிலேயே புதியதாக 96 மாணவர்களை சேர்த்து சாதனை புரிந்த அரசு நடுநிலைப்பள்ளி

1வருட பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்!!!

முதல் வகுப்பு.... முதல்பருவம்.... ஆங்கிலம்..... Hello song.....


முதல் வகுப்பு தமிழ் பாடல் ஆலமரத்துல விளையாட்டு. QR CODE மூலம் பதிவிரக்கம் செய்யப்பட்டது!!!


32 மாவட்டங்களில் மாதிரி பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு :

தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,''  என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து, பேசியதாவது:ஒன்றாம் வகுப்புக்கு, 'க்யூ ஆர்க்' என்ற கோடு மூலம், மொபைல் போனில் இசையோடு கலந்த கல்வியை கற்றுத் தர, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
அரசு பள்ளியை தேடி வரும் அளவுக்கு, மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிறந்த கல்வியாளர்கள் மூலம், வெற்றிகரமாக எட்டு மாதத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது. மூன்றாண்டுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் அடுத்தாண்டே, 12 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
'நீட்' தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கையாகும். இக்கட்டான சூழ்நிலையிலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம்.இதற்காக பயிற்சி பெற்ற, 3,148 மாணவர்களில், 1,000 மாணவர்கள் மருத்துவராக வருவர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்

கால்நடை மருத்துவ படிப்பு (B.V.Sc.,) விண்ணப்பிக்க அவகாசம்

கால்நடை மருத்துவ படிப்புக்கான, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., என்ற, கால்நடை மருத்துவம்; ஏ.ஹெச்., என்ற, கால்நடை பராமரிப்பு படிப்புக்கு, 820 இடங்கள் உள்ளன. 

இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்பங்களை, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், மே, 21 முதல் பதிவிறக்கம் செய்யலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 11க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 
தற்போது, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, வரும், 11ம் தேதி வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும், 18ம் தேதி வரையும், அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.அதே போல, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் வெளி நாட்டினர், ஜூலை, 6 முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.ஜூலை, 20க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, கால்நடை மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் சுமார் 15000 ஆசிரியர் பணியிடங்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது :

உறுதியாகாத இ - டிக்கெட்தாரர் இனி ரயில்களில் பயணிக்கலாம்!

புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு பட்டியலில் உள்ளோர், ரயில்களில், டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியர் வராத பட்சத்தில், படுக்கை வசதி உள்ள, அவர்களின் இருக்கைகளை பயன்படுத்தலாம்'

என்ற, டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.பாரபட்சம்காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ - டிக்கெட் பயணியர், டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், ரயிலில் பயணிக்க முடியாது; அதேசமயம், ரயில்வே கவுன்டரில் டிக்கெட் பெற்று, காத்திருப்பு பட்டியலில் இருந்தால், அத்தகைய பயணியரை, ரயிலில் பயணிக்க அனுமதிக்கும் நிலை இருந்தது.இது தொடர்பான வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2014, ஜூலையில் அளித்த தீர்ப்பில், 'காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ - டிக்கெட் பயணியர், கவுன்டரில் டிக்கெட் பெற்ற பயணியர் இடையே, பாரபட்சம் பார்க்கக் கூடாது.'இரு வகை பயணியரும், ரயிலில், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்துள்ள பயணியர் வராத பட்சத்தில், அந்த இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்' எனக் கூறப்பட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ரயில்வே சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரு முறை விசாரணைக்கு வந்தபோதும், ரயில்வே சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.உத்தரவுஇதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நேற்று உத்தரவு பிறப்பித்தது. ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்வதாக, நீதிபதிகள் அறிவித்தனர்.

பி.இ. படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் பதிவு: ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சனிக்கிழமை இரவு வரை விண்ணப்பிக்கலாம் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும். கடந்த 2017-இல் 1,40,633 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 8-ஆம் தேதி முதல்...விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக கலந்தாய்வு ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். 
வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காகவும், அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1.52 லட்சம் பேர் விண்ணப்பப் பதிவு: பி.இ. படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்வதற்கான கால அவகாசம் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணி வரை 1,52,940 மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 2017-18 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 14-ஆம் தேதி வரை... பி.இ. படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.
நாளை முதல்...அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் லாகின் செய்து இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
சம வாய்ப்பு எண், தரவரிசைப் பட்டியல் எப்போது? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் ஜூன் 5 அல்லது ஜூன் 6-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்ட ஓரிரு நாள்களில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டு விடும்.
சம வாய்ப்பு எண் எதற்கு? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.
அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ் 2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.