யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/6/18

ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான அனைத்துப்பாடங்களையும் பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

 இதனால் கிராமப்புற மாணவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான உயர்நிலைக்கல்வியை எளிதாக பெற்று வருகின்றனர்.

RTE  சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களை அரசாங்கமே கல்விக்கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்பதால் பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 170க்கும் குறைவாகவே உள்ளது.

தற்போதுவரை இப்பள்ளிகளில் 6முதல் 8வகுப்புகளைக் கையாள 3பட்டதாரி ஆசிரியர்களும்,
9மற்றும் 10ஆம் வகுப்புகளைக் கையாள 5 பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உயர்நிலைப்பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 8பட்டதாரி ஆசிரியர்கள் என்ற ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் 6முதல்10 வகுப்புகளுக்கான குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கையை 8இலிருந்து குறைத்து பணிநிரவல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பள்ளிகளில் ஒரே ஒரு கணித ஆசிரியர் 6முதல்10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் கணிதப்பாடத்தை முழுமையாகக் கற்பித்து , மெல்லக் கற்கும் மாணவர்களையும் பொதுத்தேர்விற்கு தயார்செய்வது என்பது இயலாத காரியம். கணிதப்பாடத்தின் கடினமான புதிய பாடத்திட்டத்தின் காரணமாகவும் , வேலைப்பளு கூடுதலாக இருக்கும் என்பதாலும் கணிதப்பாடத்தைக் கூடுதலாகக் கையாள மற்ற பாட ஆசிரியர்கள் முன்வருவதில்லை.

போட்டித்தேர்வுகளையும், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளையும் மாணவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற கணிதப்பாட புரிதல் மிகவும் அவசியமானது என மதிப்பிற்குரிய கல்வித்துறை செயலாளர் அவர்களும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


*எனவே அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 6முதல்10 வகுப்புகளைக் கையாள குறைந்தபட்சம் இரண்டு கணிதப்பட்டதாரி ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

EMIS அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு 20.06.2018 தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.


🌷கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர் விவரங்களை வகுப்புவாரியாக வருகைப் பதிவேட்டில் உள்ளபடி EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கீழ்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*

*🌷கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களின் விவரங்களும் தற்போது பயிலும் மேல்வகுப்பிற்கு EMIS குழுவால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சரியாக செயல்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.*

*🌷2018-19 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் புதியதாக சேர்க்கை ஆன மாணவர் சார்ந்த அனைத்து விவரங்களையும் 20.06.2018 ம் தேதிக்குள் உள்ளீடு செய்து முடித்திடல் வேண்டும்.*

*🌷 *2017-18 ஆம் கல்வி யாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் (தற்போதைய 2 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு முடிய) ஏதேனும் தகவல் விடுபட்டிருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான Updating option வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விடுபட்ட விபரங்களை இவ்வாய்ப்பினைக்கொண்டு சரிசெய்திடல் வேண்டும்.*

🌷 *2017-18 ஆம் கல்வியாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் எவரேனும் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் நிகழ்வில் அம்மாணவர் சார்ந்த விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும். மேலும் பள்ளியில் பயிலாத மாணவர் விபரங்களையும் common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.*

*🌷EMIS எண்ணுடன் மாற்றுச்சான்றிதழ் பெற்று புதியதாக வேறு பள்ளிக்கு சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை common pool ல் இருந்து எடுத்து சார்ந்த பள்ளிகளில் சார்ந்த வகுப்புகளில் சார்ந்த தலைமை ஆசிரியர்களால் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*

*🌷இந்    நிகழ்வின் போது 2 முதல் 8 வகுப்புகளில் புதியதாக சேர்ந்த மாணவர் விபரங்களை common pool ல் இருந்து எடுக்க முடியாத நிலையில் மட்டும் அத்தகைய மாணவர் விபரங்களை சார்ந்த வகுப்புகளில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களால் புதிதாக பதிவு செய்திடல் வேண்டும்.*

*🌷5 மற்றும் 8 ம் வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளில் மாற்றுச்சான்றிதழ் வாங்கிய மாணவரின் விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.*

🌷 *நடப்பு கல்வியாண்டில் தினந்தோறும் நடைபெறும் சேர்க்கை/ நீக்கல் சார்ந்த விபரங்களை EMIS இணையதளத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் உடனுக்குடன் பதிவுகள் செய்து முடித்திடல் வேண்டும்.*

*🌷2018-19 ஆம் கல்வியாண்டில் EMIS இணையதளத்தில் அனைத்து வகுப்பு மாணவர் சார்ந்த அனைத்து விபரங்களையும் பதிவு செய்யும் பணியை 31.07.2018 ஆம் தேதிக்குள் முடித்திடல் வேண்டும்.*

*🌷எனவே சார்ந்த கல்வி மாவட்டம் வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இப்பணியை எவ்வித குறைகளுகு இடமின்றி காலதாமதம் ஏற்படாமல் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.*


முதல் வகுப்பு மாணவர்களுக்கான கையெழுத்துப் பயிற்சி கையேடு மற்றும் சொல்வது எழுதுதல் வார்த்தைகள்!!

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சென்னையில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போதுமான நிதி அரசிடம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் பாரதிய ஜனதா மற்றும் புதிய கட்சிகளுக்கு மக்கள் மனதில் இடம் கிடைக்காது என்றார்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் - மாணவர் விகிதம் அட்டவணை ( ந.க.எண் 055838 - நாள்: 18.04.2018-ன் படி )




மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? RTI Reply!

மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? RTI Reply! 1.    மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்

 விடுப்பை துய்க்கலாமா ?

2.    தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?

3.    தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும்
       ஏற்புடையதா?

High School HM Case Judgement Copy (04.06.2018)

12/6/18

சென்னை எழிலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் உண்ணாவிரதம் : இரவு முழுவதும் தங்கினர் : பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் சென்னையில் 
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 தமிழக அரசு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்  என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த 7 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இருப்பினும் தமிழக அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. கடந்தாண்டு முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

 இதை கண்டித்து கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனால், முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தடையை மீறி போராட்டம் நடந்தது.

இந்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

 அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள ஆவின் வளாகம் முன்பு நேற்று காலை 10 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

 முன்னதாக, தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருவதால் பிரச்னைகளை தடுக்க உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் எழிலக வளாகம் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
 இதேபோன்று பிற மாவட்டங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று மாலை வரை அரசு அழைத்து பேசாததால் நேற்றிரவும் உண்ணாவிரதம் நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய எழிலகம் வளாகத்தில் போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டம் குறித்து அமைப்பின் நிர்வாகி மாயவன் கூறுகையில், ‘‘பழைய ஓய்வூதியம் அமல்படுத்துவது, ஊதிய முரண்பாட்டை சரி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்க முடியாத நிலையில் திராணியற்ற அரசாக உள்ளது.

 அரசு துறைகளில் 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாமல் அந்த இடங்களை பறிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 அதை உடனே ரத்து செய்ய வேண்டும். தற்போது எங்கள் போராட்டம் நீடிக்கும். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நீடிக்கும்’’ என்றார்.

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், 12 சதவீதம், 'பாஸ்' 51வது இடம் பிடித்தார் தமிழக மாணவர்

ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஹரியானா மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றார். சென்னை தனியார் பள்ளி மாணவர், தேசிய அளவில், 51ம் இடம் பிடித்தார்.

ஐ.ஐ.டி., மற்றும், என்.ஐ.டி.,யில், மாணவர்கள் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வு முடிவை, தேர்வை நடத்திய, கான்பூர் ஐ.ஐ.டி., நேற்று வெளியிட்டது. இதில், மொத்தம், 360 மதிப்பெண்களுக்கு, 337 மதிப்பெண் பெற்று, ஹரியானா மாணவர், பிரணவ் கோயல், தேசிய, 'ரேங்க்' பட்டியலில் முதலிடம் பெற்றார். இவர், ஐ.ஐ.டி., ரூர்க்கி மண்டலத்தில், பதிவு செய்து தேர்வு எழுதியவர்.தமிழகத்தில், சென்னை மண்டலத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த, விஜயவாடாவைச் சேர்ந்த மாணவர், மவுரிசிவ கிருஷ்ண மனோகர், அகில இந்திய அளவில், ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில், 'பிட்ஜீ' பயிற்சி மைய மாணவர், கிரிநாத், 285 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், 51ம் இடம் பிடித்துள்ளார். இவர், சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் படித்து, பயிற்சி மையத்தில், நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர். அதேபோல, பல மாணவர்கள், பிட்ஜீ மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த விழாவில், பாராட்டும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தேசிய அளவில், 23 ஐ.ஐ.டி.,க்களில், 11 ஆயிரத்து, 279 இடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,076 மாணவியர் உட்பட, 18 ஆயிரத்து, 138 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், 8,794 பேர்; பிற்படுத்தப்பட்ட பிரிவில், 3,140; தலித் மாணவர்களில், 4,709 மற்றும் பழங்குடியினர் பிரிவில், 1,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐ.ஐ.டி.,க்களில், மாணவியரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, இந்த ஆண்டு முதல், மாணவியருக்கு தனி இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, 800 இடங்கள் மாணவியருக்கு மட்டும், தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்க்க அவகாசம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங், சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம் தவறியவர்களுக்கு, சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜி., 
கல்லுாரிகளில் சேர்வதற்கான, ஆன்லைன் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த கவுன்சிலிங்குக்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, இம்மாதம், 8ம் தேதி துவங்கியது. 42 உதவி மையங்களில் நேரம் ஒதுக்கி, விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களுடன் வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாதவர்களுக்கு, புதிய சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வர முடியாதவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கான கடைசி நாளான, ஜூன், 14க்கு முன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்திற்கு, எந்த நேரத்திலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரலாம்.அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு முறை தான் அனுமதிக்கப்படுவர். எனவே, வரும்போது, விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து, அதில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி வர வேண்டும். விண்ணப்பத்தின், மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களின், நகல்களையும் எடுத்து வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 புத்தகம் விற்க சிறப்பு கவுன்டர்கள்

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கான, புதிய பாடப் புத்தகங்கள் 
வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வகுப்புகளில், புதிய பாடத்திட்ட பயிற்சிகளும் துவங்கியுள்ளன.பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட, பிளஸ் 1க்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்படுவது தாமதமானது. முடிந்த கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்களின் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புகள், முன்கூட்டியே துவங்கியுள்ளன. ஆனால், புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், பிளஸ் 1 புத்தகங்கள், டிஜிட்டல் வடிவில், தமிழக பாடநுால் கழக இணையதளத்தில், சில தினங்களுக்கு முன் வெளியாகின. இதை தொடர்ந்து, புதிய புத்தகங்கள், இன்று விற்பனைக்கு வருகின்றன. தமிழக பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகங்கள் கிடைக்கும். சென்னை, டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் உள்ள, தமிழக பாடநுால் கழக விற்பனை மையத்தில், சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், https://textbookcorp.in என்ற இணையதளத்தில், ஆன்லைனிலும், 'புக்கிங்' செய்து, புத்தகங்களை வீட்டிலேயே, 'டெலிவரி' பெறலாம்.

மருத்துவ படிப்பு சேர்க்கை இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம். மேலும், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்செய்தும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்காக, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 18ம் தேதிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

'ஜூலை முதல் 'நீட்' பயிற்சி' பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,

நடப்பு கல்வி ஆண்டுக்கு, ஜூலை முதல், 'நீட்' பயிற்சி துவக்கப்படும்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: கடந்தாண்டு, அரசு வழங்கிய, நீட் தேர்வு பயிற்சியில், ௧,402 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவ கல்வி, 'கட் ஆப்' மார்க், நாளை வெளியிடப்படுகிறது. இதன் பிறகே, இம்மாணவர்களில் எத்தனை பேர், மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர், என்பது தெரியும். அரசின் பயிற்சியால், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், மருத்துவ கல்லுாரி செல்லும் மாணவர்களுக்கும், விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும் ஜூலை முதல், நீட் தேர்வு பயிற்சி துவக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும், எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள, 412 மையங்களிலும், நீட் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி : திருப்பூரில் அமைச்சர் செங் கோட்டையன் பேசியதாவது: புதிய பாடத்திட்டத்தை நடத்துவதற்கு, ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் லேப்-டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கல்வித்தரத்தை மேம்படுத்த, 'ரோபோ கிளாஸ்' வகுப்பறையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கல்வித்தரத்தை, தேசிய அளவில் உயர்த்தும் நோக்கத்தில் தான் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன, என்றார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 11.6.18 முதல் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு மொழிப்பாட தேர்வுகளை ஒரே பாடமாக்கி அரசாணை வெளியீடு




9/6/18

சட்டம்

சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்

சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும்

சில உளவியல் உண்மைகள்